வெள்ளாளர் யார் யார் ? எப்படி உருவானர்கள்? அனைவரும் படிக்க….

604

மரபாளர் மகத்துவம் 1முதல் நாகரிகத்தை தோற்றுவித்த வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்)  வேளாண்மைக்கு உரிமை பூண்டவர்கள், காவலுரிமை உடையவர்கள், முதன்முதலில் நிழங்களை உழுதும், உழுவித்தும் வேளாண்மை தொழில் செய்ததனால், காடுகெடுத்து நாடாக்கி வேளாண்மைக்கு தலைமை ஏற்று உழுவித்தவர்கள் என்பதனாலும், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் என்பத னாலும், ஈகையுடையார் எனும் இவர்களின் பண்பின் படியும், வேளாளர் குலத்தவர் என்று திராவிட சிந்து சமவெளி நாகரிக காலம் முன் தொட்டே தங்களை அடையாள மிட்டும். பிறராலும் இவர்கள் (பிள்ளைமார், முதலியார்) வேளாளர்கள் என அழைக்கப்பட்டும். மேலோர் என மதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். மதிக்கப்படுகின்றனர்.



அருளொழுக்கம் உடைய இக்குடியினர் போற்றப்படு கின்றனர். எனவே முதல் நாகரிக காலத்திலிருந்து தொன்று தொட்டு இன்றுவரை வேளாளர் சாதியார் பிள்ளைமார், முதலியார் என அழைக்கப்படும் இவர்களே. வேளாளர் (பிள்ளைமார்,முதலி யார்)களுக்கு  கடமைப்பட்டும், கூலிக்காகவும் விவசாய பணிசெய்தவர் எல்லாம், தற்சமயம் விவசாய தொழில் செய்பவர் எல்லாம் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) அல்ல.  மேலும் தமிழ்க்கடவுளான விநாயகர், முருகப்பெருமான் பரம்பொரு ளான சிவபெருமானின் பிள்ளை கள் என்பதனால்  பிள்ளையார் எனகுறிப்பிடப்பட்டனர். தற்போது  இப்பெயர் விநாயகருக்கு மட்டும் உரியதாக காணப்படுகிறது. இதன் படியே வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் சக்தியின் மைந்தர்கள் என பிள்ளையார் என குறிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். பின்னர் அரசின் உயர்பதவிப் பட்டமாக வேளாளர்களுக்கு பிள்ளை, முதலி என்பது வழங்கப்பட்டிருக்கிறது. முதலி – முதலியார் என்றும் பிள்ளையார் என்பதே பிள்ளைமார் என்றாகி யிருக்கிறது. வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் கங்கை மைந்தர்கள் என குறிப்பிடப்படுவதைப் போல முருகப்பெருமானும் கங்கை மைந்தர் என குறிப்பிடப்படு கிறார் வேள் – மண், நிலம்  ஆளர் – ஆள்பவர்   வேள் – மன்னன், தலைவனாக ஆள்பவர் (முருகப்பெருமான் திருப்பெயர்களில் ஒன்று) நீண்ட புகழுடையவன், யாவருக்கும் பிடித்தமானவர், மதிப்பிற்குரியவர்,  என்பதே வேளாளர் குலப்பொருள். எனவே தொழில் முறையைக் கொண்டு மட்டும் வேளாளர் இனத்தோர் என அழைக்கப்படவில்லை என்பது விளங்கும். மேலும் இவ்வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்)கள் அரசராவதற்கும், அரசாங்கத்தை வழி நடத்தவும் தகுதி படைத்தவர்,  அரசாளும் உரிமை பூண்டவர்கள் என இலக்கியங்களில் வேளாளர் வரலாறு குறித்த நூட்களில் கூறப்பட்டிருப்பதனிலும் காணலாம். பழைய ஷத்திரிய வகுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதனையும் காணலாம்.

வஉசி பாடல்கள் DOWNLOAD செய்ய

வேளாண்மைக்கென பாய்ந்து வரும் வெள்ளத்தை அடக்கியாண்டதனால் வெள்ளாளர் என்ற சிறப்பு பெயர் பெற்றனர். வெள்ளாளர் எனும் சிறப்பு பெயர் வார்த்தை திரிபு தான் பட்டப் பெயரல்ல  மற்றவரெல்லாம் பெற்ற தாக பயன்படுத்த. வேளாண்மை என்பதனை சில பகுதிகளில் வார்த்தை திரிபாக வெள்ளாண்மை என்பர் இரண்டிற்கும் அர்த்தம் ஒன்று தான். இது போல வேளாளர் என்பதன் திரிபே வெள்ளாளர் இவ்விரண்டிற் கும் பொருள் ஒன்றே. அன்றைய காலங்களில் வேளாளர் இனகுழு தலைவர்கள்  (பிள்ளைமார், முதலியார்) உழுவிப்போர்  என்றும் அவர்களின் ஆலோசனையின் படி உழவுத்தொழில் மேற்கொண்ட வேளாளர் (பிள்ளை மார்,முதலியார்)கள் உழுதுன்போர் என்றும் அழைக்கப் பட்டனர். பிள்ளைமார், முதலியார் என்று தங்களுக்கே உரிய குலவிருது பெயர்களுடன் மேலும் ஓரிரு பட்டப்பெயர் கொண்ட வீரக்குடியினமான வேளாளர்கள், கிழவன், கிழார், கிழான், வேளார், வேளிர், வேள், வேண்மார், குட்டுவன், கோன், வர்மன்,தேவர், நாகர், மார்தாண்டன், பிள்ளை, உடையார் இது போன்ற பட்டங்களை தரித்து அரசர்களாக, குறுநில மன்னர்களாக ஆட்சிசெய்துள்ளனர்.  இவை வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களுக்கே உரியன. வேள், வேளிர், என்பன வேளாளர் என்பதன் திரிபே. இது வேளாளர்கள் தங்களுக்கு தாங்களே தரித்துக் கொண்ட பட்டங்கள்.ஈசனின் நெற்றிகண் தீப்பொறியினில் தோன்றியவரான வேலவர் வழிவந்தவர்கள் என வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) களுக்கு வேலவ வம்சத்தினர், வேலன் வம்சத்தினர், அக்னி குலத்தவர் என்றும் பெயருண்டு எனக்கூறப்படுகிறது. முருகப் பெருமான் வேளாள (பிள்ளைமார், முதலியார்)குலத்தவரும் இக்குலத்தின் வேளிர் தலைவனுமான உப்பூரிகுடி கிழார் மகனாய் தோன்றினார் எனவும் கூறப்பட்டுள்ளது. சிலர் வேளாளர்(பிள்ளைமார், முதலி யார்) என்பதனை மனுதர்மம் எனும் ஆரிய நூலில் செட்டியார் என தவறாக குறிக்கப்பட்டிருப்பதை கொண்டு பெரும்பிழையாக  முகப்பெருமான் செட்டியார் குலத்தில் தோன்றியவர் என உண்மைக்கு புறம்பாக எழுதி வருகின்றனர். இவ்வாறே இவ்வேளாளர்கள் துளுவ எனும் மொழி பேசுவோர்  என தவறாக கூறப்படுகிறது.



துளுவ என்பது மொழியல்ல ஓர் நாடு துளுவ நாட்டின் மீது வேளாளர்கள் படையெடுத்து வெற்றிக்கொண்டு தாய்நாடு(செந்தமிழ்நாடு) திரும்பிய வேளாளர் (பிள்ளை மார், முதலியார்)கள் துளுவ நாடு வென்ற வேளாளர் என்றவாறு துளுவவேளாளர்(பிள்ளைமார்,முதலியார்) என்றழைக்கப்பட்டனர்.நாகரிக வாழ்க்கையில் சிறந்த தமிழ் மக்களில் முதன்மையானவர்களான இவ்வேளாளர்கள் (பிள்ளை மார், முதலியார்)  தென்னாட்டின் கண் மட்டுங்குடியாண்டு  வாழ்ந்தவர்கள் அல்ல.  இவர்கள்  தமிழ் நாட்டின் மேல்கடற்கரைப் பக்கமாக வடக்கு நோக்கியும்,  அதே போல் குமரிமுனையை கடந்து (கடல் சீற்றத்திற்கு முன்பும் பின்பும்) கடற்சீற்றத்தில் மூழ்கி தனி தீவாகிய இலங்கை முதல் இமயமலைச்சாரல் வரையிலுள்ள வடநாடெங்கும் பரவி ஆங்காங்கு நாடுநகரங்கள் அமைத்து தமது நாகரிகத்தைப் பெருக்கி வந்தனர். தம்மை சார்ந்த பிற சமுதாய தமிழ் மக்களையும் வாழ்வித்தனர். இதனால் தமிழினத்தைச் சார்ந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) அல்லாத மற்றோர் இவர்களை மரியாதை நிமித்தமாக ஆண்டை என்றழைத்தனர்.  வடக்கே  மேல்கடற்கரையைச் சார்ந்த பல ஊர்களும், நகர்களும், கீழ் கடற்கரையைச் சார்ந்த தெலுங்கு நாட்டு ஊர்களும்  அங்கு அரசாண்ட ஆந்திர சாளுக்கிய அரசர்களும் வேள்புலம், வேளாபுரம், வேளகம், வேள்காம், வேள்பட்டி, எனவும் வேளிர், வேண்மார் எனவும் முறையே வழங்கப்பட்டு வந்தமையே இதற்கு சான்று. வடக்கே கீழ்கடற்கரையிலுள்ள நாடுகளை அரசாண்ட சாளுக்கியர்களும் வேளாளர்களே (பிள்ளைமார், முதலியார்) ஆவர்.இவ்வாறு வடநாடுகளில் அரசாண்ட வேளாளர்குல வேளிர்களும் அவரினத்தவரான வேளாளர் (பிள்ளைமார் முதலியார்) கள் தென்னாட்டிலிருந்து தம்முன்னோரின் பிறப்பிடமான தமிழ் நாட்டையும், முன்னோரையும் பிரிந்து போனவரேனும் மறந்தவரல்லர். காலம் வாய்த்து ழியெல்லாம் அவர்கள் தென்னாட்டிலுள்ள தம் உறவினரோடு உறவுகலந்தும், நேரிமலைக்கு தெற்கேயுள்ள காடுகளையழித்து அவற்றின் கண் நாடுநகரங்கள் அமைத்து அரசுபுரிந்தும் வந்தனர். நடுநாடாகிய மைசூரில் இப்போது துவார சமுத்திரம் என வழங்கும் துவரை நகரை வேளாளர் வேளிர் அரசர் நாற்பத்தொன்பது தலைமுறை செங்கோல் செலுத்தி வந்தனரென்பது கபிலர் புறநானூற்றில் கூறுவதனை வைத்தும் அறியலாம். இதனைக் கொண்டு பண்டைய நாளில் தென்னாட்டிலும், வடநாட்டிலும் பரவியிருந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களும், அவர்களில் அரசராக இருந்த வேளாளர் குல வேளிரும், நாகரிகத்திற் தலைச்சிறந்தவரா இருந்தமையால், தாம் ஒருவரை யொருவர் மறவாது, வடநாட்டிலுள்ளார் தென்னாடுவந்தும், தென்னாட்டிலுள்ளார் வடநாடு சென்றும் இடையே உறவு கலந்து வந்தமை என்றென விளங்கும்.சிலரால் இவ்வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் கங்கை நதிகரையிலிருந்தும், 15 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு தேசத்திலிருந்தும் வந்தவர்கள் எனவும், வட நாட்டிலுள்ள பண்டிட் என்னும் ஆரிய சாதியினர் தமிழகம் வந்து வேளாளர் என்றாயினர். என்றெல்லாம் ஆராய்ச்சி நோக்கமின்றி எந்த சாட்சியமும் இல்லாமல் கூறப்பட்டுள் ளது. உண்மையில் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் செந்தமிழ் நாட்டின் பூர்வக்குடிகள், தமிழை தாய் மொழியாக கொண்டவர்களில் தொன்மையானவர்கள். தமிழக மண்ணின் மைந்தர்கள், மரபாளர்கள். இதற்கு வரலாற்று மூலங்களான சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. சங்க கால, இடை கால இலக்கி யங்கள் இலக்கியச் சுவையுடன் உண்மை நிகழ்ச்சிகளை, வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளவாறு படம் பிடித்துக்காட்டியுள்ளன. தொல்காப்பியம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்கிறார்கள். அதில் மக்கள் வாழ்வியலுக்கு இலக்கணம் கூறப்பட்டுள் ளது. அதற்கு இலக்கியமாக திகழ்ந்தவர்கள் வேளாளர்(பிள்ளைமார், முதலியார்)கள் தாம். வேளாளர்  களின் குடியியல், வாழ்வியல், மொழியியல், செல்வாக்கு, அதிகாரம், பண்பாடு, மருத்துவ அடிப்படையிலான சடங் குகள், குணவியல் பண்புகள், ஆகியவற்றை கூறு கின்றன.தொல்காப்பியம் தமிழர்களின்  வரலாற்றைப் பிரதி பலிப்பதாகும். வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) கள் தொல்காப்பிய காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே பாரம்பரியம்மிக்கவர்களாக, நாகரிக வாழ்விலும் அருளொழுக்கத்திலும் சிறந்தவர்களாக,  தமிழினத்தின் முதன்மையானவர்களாக திகழ்ந்ததனால் வேளாளர்களுக்கு தொல்காப்பியத்தில் முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் தமிழினத்தின் தொன்மை யானவர்கள் என்பதுடன் முதன்மையானவர்கள் எனவும்  விளங்கும். எனவே பண்டிட் எனும் ஆரிய சாதியினர் தமிழகம் வந்து வேளாளர் என்றாயினர். என்பதும் தமிழகத்தின் பிறபகுதியிலிருந்து தமிழகத்திற்குள் வந்து குடியேறியவர்கள் என்பதும் ஆராய்வு நேக்கமின்றி சொல்லப்படும் பொய்யான செய்திகளாகும். ஏரெழு பதில் வேளாளரை (பிள்ளைமார், முதலியார்) கங்கை குலத்தவர் என கம்பர் குறிப்பிட்டுள்ளாரே என கேள்வி எழும்பலாம். கங்கைகுலத்தவர் என்பது கங்கை நதிகரையில் தோன்றிவளர்ந்தவர்கள் என்றோ கங்கை நதிகரையிலிருந்து வந்தவர்கள் என்றோ பொருள்படாது. வேளாள அரசர்கள் வடக்கே கங்கையாறு பாயும் இடங்களிற் பெருந்தொகையினராகிய தம்மினத்தவர் ஒருபகுதியினரோடு அரணமைத்து அதிகாரம் செலுத்தி வாழ்ந்து வந்தமை பற்றியும் கங்கை மிக புனிதமானதாக கருதப்படுகிறது. வேளாளர்கள் புனிதமானவர்களாகவும், உயர்வானவர்களாக மதிக்கப்பட்டு வந்ததனைப் பற்றியும் கம்பர் வேளாளரை கங்கை குலத்தவர் எனகூறியிருக்கலாம். கங்கை மைந்தர்கள் என்பதனையே கங்கை குலத்தவர் என கம்பர் குறிப்பிட்டுள்ளார்.அன்று இந்தியா முழுவதும் தமிழர்கள் அவர்களுள் தொன்மையானவர்களும்  முதன்மையானவர்களுமான வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) குலத்தவரைப் பின்தொடர்ந்து அவர்களைச் சார்ந்து இந்தியா முழுவதும் பரவி நாகரிக வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது புலப்படுகிறது. இந்திய நாட்டின் வட எல்லையாய் உள்ள இமயமலைக்கும் வடக்கே நெடுந்தொலைவில்  இருந்த ஆரியர் அந்நாடுகளில் வரவரக்குளிர் மிகுந்து உயிர் வாழ்வதற்கு ஏற்றதன்றாய் மாற அவர்களுட் பலர் தாம் இருந்த இடத்தை விட்டு தெற்கு நோக்கி வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையிலுள்ள பெலுசித்தானத் தின் வழிபுகுந்து பஞ்சாபிலுள்ள சிந்து நதிகரையிற் குடியேறினார்கள். அப்போது அங்கு அரசாண்ட தமிழர்களான வேளாளர்  (பிள்ளைமார், முதலியார்) குல வேளிர்கள் பல நகரங்கள் அமைத்து வலியக் கோட்டை கள் கட்டி வலிமையும் நாகரிகமும்உடையவர்களாக விளங்கினர். என்பதனை இங்கு குடியேறிய ஆரியரே தம்முடைய ரிக்வேத பாட்டுகளில் கூறியிருக்கின்றனர். ஆய்வுகளும் அவ்வாறே தெளிவுபடுத்தியுள்ளன. மேலும் குடியேறிப் பிழைக்க வந்த ஆரியரை அன்பாக வரவேற்று அவர்கள் இருக்க இடங்கொடுத்து, பலன்பாராது அவர்கள் உண்ணச்சோறும், உடுக்கவுடையும் வழங்கி, நூல்கற்க உதவிகள் புரிந்தும் வந்த தமிழ் நன்மக்களில் முதன்மையானவர்களாக வேளாளர்களுக்கு திரும்ப நன்றி செய்தற்கு மாறாக தீட்டின மரத்திற் கூர்பார்த்த செயலை செய்தனர். இவர்களின் வேண்டுதல் பாட்களாக ரிக்வேதத்தில் வேளாளர்களின் அரச வாழ்வினையும், செல்வாக்கினை, செல்வச்செழிப்பினையும் உயர்வாக மதிக்கப்படுவதனையும் கண்டு பொறாமை கொண்டு வயிற்றெரிச்சலாக வேளாளர்களை பலித்தே இயற்றப்பட்டுள்ளது.



பண்டைய நாளிலிருந்தே ஆரியர் முழுமுதற்கடவுளின் (சிவபெருமான்) உண்மையை உணர்ந்தவரல்லஅதனை உணராமையினால் அம்முதற்பொருளை வழிபடுமாறும் உணராது  ஆயினர். தமக்காக தம்பகைவரோடு போர் இயற்றவும், மழை பெய்வித்து தமக்கு உணவுப் பண்டங்களை விளைவித்து தரவும் தம்மால் வல்லவனாக கருதப்பட்ட இந்திரன், வருணன், உள்ளிட்டோரையே பெருங்கடவுள் என்றனர் பெரிதும் வேண்டி வணங்கினர். சோமப்பூண்டின் சாற்றினாற் சமைத்த களிப்பான பானகத்தை (மது) ஆரியர் தெய்வமாக கருதிய இந்திரன், வருணன், மித்திரன் ஆகியோருக்கு பருக கொடுத்தலாலும், ஆடு,மாடு, குதிரை முதலிய விலங்கினங்கினங்களை வெட்டி அவற்றின் இறைச்சியை உணவாகக் கொடுத்துத் தாமும் உண்பதாலும் தாம் இந்நிலவுலகத்திற் பெற வேண்டிய எல்லாச் செல்வங்களை பிழையாமல் எளிதில் பெறலாம். என்று நம்பி வந்தார்கள். இந்நம்பிக்கையாற் சோமபானத்தையும் விலங்கினிறையையும் ஆவியாகக் கொடுக்கும் பொருட்டு அளவிறந்த வேள்விகளையும், வேள்விச்சடங்குகளையும், நாடோறும் பெருக்கி வந்தனர். இக்கொலை வெறி வேள்விகளால் தம்மை தேவர்கள், சுரர், ரிஷிகள் என்று கூறிக்கொண்டனர். வெள்ளாடுக ளும், செம்மறிகிடாய்களும், எருதுகளும், ஆக்களும், குதிரைகளும், ஆரியரால் அளவின்றிக் கொல்லப்பட்டன. தம்மையொத்த மக்களையும் கூட ஆரியர் கொலை புரிந்தனர். கொலை புலை தவித்த அருளொழுக்கத்தில் நிலை பெற்று நிற்கும் வேளாளர்(பிள்ளைமார், முதலி யார்) கள் கொலைபுலை கட்குடி முதலிய தீவினைகளைப் பெருக்கி ஆரியர் கொண்டாடிய வெறியாட்ட வேள்விகளில் மிக வெறுப்பு கொண்டு அவ்வேள்விகளை அழித்தும், இக்கொலை வெறி வேள்விகளை செய்வதனில் முனைப்பாயிருந்த ஆரியர்களை அடக்கி ஒடுக்கினர். இதனால் ஆரியர் பெரிதும் சினம் கொண்டு வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) களையும் இக்குடியினரான வேளிர் அரசர்களையும் அசுரர், இராஷசர், இராக்கதர், அரக்கர்கள், தாசியர் என்று இகழ்ந்து கூறி வேளாளர்களை தாழ்த்தும் பொருட்டுப் பொய்யான பல புராணக்கதைகளையும் எழுதி வைப்பாராயினர். அத்தோடு மட்டுமல்லாமல் தொன்று தொட்டு வேளாளர்களுக்கு (பிள்ளைமார், முதலியார்) உரித்தான சிவ வழிபாட்டையும் இகழ்ந்துரைத்தனர். அசுரர்கள் வணங்கும் கடவுள் என்றனர்.  இந்திரன், வருணன் உள்ளிட்டோரே பெருங்கடவுள் என்று நம்பியும், பரப்பியும் வந்தனர்.ஆரியர்களின் பொருந்தாச் செயலும், ஆரிய நூட்களின் பொய்மையையும், எல்லோர்க்கும் விளக்க வேண்டி அவர்களுக்குரிய ஆரிய மொழியை தமிழர்களான வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் தாமுங் கற்றுக் கொலை புலை கட்குடி மறுத்த தமதுயர்வை, தாம் வழிபடும் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் அருட்சிறப்பும், அவனையடைவ தற்குரிய  மெய்யுணர்வின் மாட்சியும் தெளித்து வேதப்பாட்டுகள் சிலவும், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், யோகம், வேதாந்தம் முதலிய ஐந்து மெய்யுணர்வு ஆராய்ச்சி  நூல்களும் இதிகாசங்கள், புராணங்கள், சிலவும் இயற்றயிட்டார்கள். (தமிழரும் வேளாளர் குலத்தில் தோன்றியவருமான அகத்திய மகரிஷி வடமொழிகளையும் அறிந்திருந்தார் என்பது இதற்கு சான்றாகும் ) இதனை உணரா ஆரியர் அருட்பெருஞ்ஜோதியான சிவத்தை இகழ்ந்தனர். பிற்காலத்தில் வேளாளர்கள் (பிள்ளைமார்,முதலியார்) இயற்றிய உபநிடதம் நூட்களை தாங்கள் இயற்றிய தாகவும், நாம் கற்று தந்த இறைவழிபாட்டு முறைகளை தங்களுக்குரியது என்றும் கொலை புலை கட்குடி மறுத்த அருளொழுக்கத்தை வேளாளர்களுக்கு ஆரியர்கள் கற்று தந்ததாக கூறிக்கொண்டனர். பண்டைய காலங்களில் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) வீட்டில் யாவரும் உணவுண்பர் (பிராமணர்களையும் சேர்ந்து) ஆனால் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்) கள் தம் குலத்தவர் தவிர யார் வீட்டிலும் உணவுண்ணவோ, நீரோ அருந்தமாட்டார். மேலும் பிராமணர்களை தமது குரவர்களாக கொண்டு சடங்குகள் நடத்துவது தவறானது எனவும் தீட்டு என்றும் தவிர்த்து வந்தனர். ஆரியரின், பிராமணர்களின், வருகைக்கு முன்னரே வேளாளார்(பிள்ளைமார்,முதலியார்)கள் இறைவழி பாட்டு ஆராதனையினை தாங்களே நடத்தி வந்தனர். மேலும் தங்களிலிருந்து ஓர் பிராமண அங்கத்தினரை வகுத்திருந்தனர். இதனை திருஞானசம்பந்தர் திருவாக்கூர் தேவாரத்திருப்பதிகத்தில் குறிப்பிட் டுள்ளார். அவர்களேகுருக்கள், ஆதிசைவர், பட்டர், நம்பியார், வேதியர், என அழைக்கப்படும் வேளாளர் குல அங்கத்தினர். இவர்களில் சிலர் ஆரிய பார்ப்பனர்க ளோடு உறவுகலந்து திரிந்து போயினர். இன்றைய காலங்களில் வேளாளர்களும், பிராமணர்களும்  சம அந்தஸ்துடைய ஒரே சமூக தட்டுமக்களாக காணப்படு கின்றனர்.சிவபெருமானும், திருமாலும் பண்தொட்டுத் தமிழ்மக்களால் வணங்கப்பட்டு வந்த தமிழ் தெய்வங்களாவர் முழுமுதற்கடவுளே தந்தை வடிவிற் சிவபெருமான், தாயுள்ளம் உடையோன் வடிவில் திருமால் எனவும் வைத்து வணங்கப்பட்டது. இவ்விரு தெய்வங்களும் பிறவாதவர், இறவாதவர், இத்தெய் வங்களைவயும் பழைய ஆரியர் சிறிதும் அறியார்.  ஆரியரால் ரிக்வேதத்தில் வணங்கப்பட்ட விஷ்ணுவோ ஆரியர்களின் தலைவனே தவிர உலகங்களைப் படைத்துக் காக்கும் எல்லாவல்ல தாயுள்ளம் கொண்ட திருமால் அல்ல. தமிழர்களின் வழிபாட்டு ஆராதனை யினை ஓரளவு பின்பற்ற ஆரம்பித்த பின்னாளில் ஆரியர் தமிழர்களின் சமய அமைப்புகளிலிருந்து புதிய வகுப்பினை புகுத்தினர் தாயுள்ளம் வடிவாகிய தமிழர்கள் வணங்கிய திருமாலை அவ்வகுப்பின் இறைவனாக கொண்டு  வைணவம் என பெயர்வைத்து   பிற்காலத்தில் தெற்கு நோக்கி நகர்ந்த ஆரியர்கள் தங்கள் கொலை வெறி வேள்விகளை தடுத்து வந்த வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களையும் இக்குடியி னரானவேளிர் அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட ஆரிய தலைவர்களை எல்லாம் திருமாலின் பல்வேறு பிறவிகளாகக் கொண்டு பொய்புராணக்கதைகளை வடமொழியில் கற்பணைக் கலந்தெழுதுப் பரப்பினர். இவ்வாறு நூட்களின் வாயிலாக வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களை அசுரர்கள், பயங்கரமானவர்கள் என்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை  தாழ்த்தியும் பல கயமத்தனத்தை செய்தனர் ஆரியர்கள். கி.பி470 தையடுத்து  தங்களை உயர்நிலைக்குரியவர்களாக கற்பித்து ஆரிய பிராமணர்கள் வைணவம் எனும் புதிய சமய முறை மூலம் அவர்களின் வரணாசிரம தர்மம் கற்பிக்கப்பட்டது. நால்வகை வருண பாகு பாட்டினை புகுத்தினர். ஆனால் இவர்களின் நால்வகை வருணபாகு பட்டிற்குள் வேளாளர்(பிள்ளைமார்,முதலியார்) அடங்கார்.திராவிட நாகரிக தொடக்க காலத்திற்கு முற்பட்டேவேளாளர் (பிள்ளைமார், முதலியார்) குலத்தவர் எனத் தங்களை தனித்துக் குறிப்பிட்டும், பிறராலும் அவ்வாறே அடையாளம் காணப்பட்டு வந்துள்ள வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் மனுநூல் கூறும் நால்வகை வருணப்பாகுப்பாட்டின் வகைப்பாடுகளுக்குள் அடங்கார். சூத்திரர்கள் அல்ல வேளாளர்கள் மேலானோர்கள் ஆவர். ஆனால்எந்த சாட்சியமும் இல்லாது 19 நூற்றாண்டு இறுதியில் நீண்ட நெடிய பாரம்பரியமிக்க  வரலாறும் பண்பாடும் உடையவர்களான வேளாளர்களை இழிவுப் படுத்தும் நோக்கிலும், உயர்குடியான வேளாளர்களின் நிலைக்கு தங்கள் சமுதாய அந்தஸ்தினை மிகைபடுத்தி, தமிழகத்தின்  முதன் மக்கள் அவர்கள் தான் என யாவரும் கொள்ள வேண்டுமென்ற சாதிய உணர்வினில் கள்ளர், மரவன்(பிற்கால திரிபு மறவன்) கணத்தொரு அகமுடையார்(அகம்படியார்) பின் மெல்ல மெல்ல பிள்ளை என முக்குலத்து மக்களில் சிலர் கூறினர். அவர்களில் சிலர் அவ்வாறு  எழுதியும் வந்தனர். அதாவது மெல்ல மெல்ல தமிழகம் வந்தவர்கள், முக்குலத்து சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என இருவேறாக கூறினர். இதனை தற்சமயம் நவீனப் படுத்தி மெல்ல மெல்ல வேளாளர், வெள்ளாளர் என்கின்றனர். முதலில் பிள்ளை என்பதனை சாதி பெயர் என அவர்கள்  நினைத்திருக்கலாம். இது கல்வெட்டுகளிலோ, பட்டயங் களிலோ, முக்கால இலக்கியங்களிலோ, காணப்பட வில்லை. மேலும் இதனை கம்பர் கூறினாரா, திருவள்ளுவர் கூறினாரா, அல்லது  கபிலர் கூறி யிருக்கிறாரா. இல்லவே இல்லை. அச்சமுதாய மக்களில் சிலர் மாத்திரம்  தமிழக சாதிய அமைப்பு இப்படி தான் என அவர்களாக நினைத்துக் கொண்டு சொல்லியும் எழுதியும் வந்தனர்.இவ்வாறு கூறிவருகின்றனர்.  இது வேளாளர் அடக்கு முறைச் சட்டம் செயல்படுத் தப்பட்டிருந்த காலத்தில் நிகழ்ந்தது. எனவே இம்மடமை பேச்சுகளுக்கு சாதிய வெறியாளர்களின் பொய்யான கூற்றுகளுக்கு செவி சாய்க்க வேண்டாம். முக்குலத்தோருக்கும், வேளாளர்களுக்கும் தமிழினத் தவர் என்பதனை தவிர வேறு சாதிய ரீதியான தொடர்புகள் ஏதுமில்லை. சங்க காலம் முதற்கொண்டு முதற்குடியாக உயர்குடியாக காணப்படுபவர்கள் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள்,  அவர்கள் கடைச்சாதியாளராக காணப்பட்டவர்கள் என்பதனை நினைவில் கொள்க.சேர்வை என்பதற்கு வேலை செய்வோன், சேவை புரிபவன், சேர்வைகாரன் என்றால் தொண்டூழியம் புரிபவர்கள், சிப்பாயாக காவல் பணி புரிபவர்கள். என்றும் இவ்விரண்டிற்கும் கடைநிலை ஊழியர் என்று அபிதான சிந்தாமணி அர்த்தம் சொல்கிறது. பல வரலாற்று இதனை தெளிவுப்படுத்துகிறது. மேலும் இவையாவும் சிறப்பு பட்டம் இதனை இடையர், வலையர், வன்னியர், முக்குலத்தோரில்சிலரும், இப்பட்டம் பெற்றவர்களும் அகமுடையார்(அகம்படியார்) ஆவர். அகமுடையார் என்பதும் ஒருசிறப்பு பெயர் அரண்மனை பணிக்காரன், அரண்மனை பணியினைச் சாந்தவர்கள் என்பதே அதன் பொருள். இதனை தலைமை தளபதி, அமைச்சர், சேனாதிபதி, தலைமை கணக்கர், நிதிய மைச்சர், நீதிபதி, சேணைத்தலைவர், தலைமை காவலர் போன்ற உயர் பதவிகள்வகித்த வேளாளர்(பிள்ளைமார், முதலியார்) பிறபணியிலிருந்த உடையார், நாயக்கர், ரெட்டியார், உள்ளிட்டோரும் அகமுடையார் (பட்டம்) சிறப்பு பெயர் உடையவர்கள். இன்று அகமுடையார் என்பது சாதிய பெயராக உருவெடுத்து முக்குலத்தினை சார்ந்த ஒரு பிரிவினராக அடையாளம் காணப்படுகிறது இவர்களுக்கு வேறு ஏதேனும் காரணமாக கூட அகமுடையார் என வழங்கப்படலாம். ஆனால் இச்சிறப்பு பெயர் (பட்டம்) கொண்ட மற்றோர் தத்தம் குலப்பெய ருடன் அகமுடையார் என சேர்த்து  பயன்படுத்தினர். வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் வெறும் அகமுடையார் என்று பயன்படுத்துவது முறையற்றது எனவும் பிழை எனவும் உணர்ந்து உயர்குடியாக காணப்படும் வேளாளர் எனும் தம் குலப்பெயருடன் சேர்த்து அகமுடைய வேளாளர் என்று பயன்படுத்தினர். ஆனால் தற்சமயம் அகமுடைய முதலியார், அகமுடைய பிள்ளை என்று பயன்படுத்திவருகின்றனர் இவர்கள் வேளாளர்கள். அகமுடையார் சேர்வை முக்குலத்தினர் எனவே அகமுடையார் சேர்வை வேறு அகமுடையவேளாளர் (பிள்ளைமார், முதலியார்) வேறு எனவே இவர்களுக்குள் சாதிய ரீதியான எந்தவித தொடர்போ, உறவோ கிடையாது. வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)கள் இதனை குழப்பிக்கொள்ள வேண்டாம்.அகமுடையார் சேர்வை சமுதாயத்தினர் சிலர் தங்களின் சுயநலத்திற்காக சாதிய அரசியல் ஆதாயம் தேடி வேளாளர் சமுதாயத்திற்குள் குளறுபிடியை ஏற்படுத்தி வருவதும், முக்குலத்திலிருந்து தங்களை தனித்து காட்டிக் கொள்ள முனைந்து தங்களின் எண்ணிக்கையை அதிகப்படியாக காட்டிக் கொள்ள நீண்ட நெடும்பாரம்பரிய வரலாறும் பண்பாடு மிக்க உயர்குடியான வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) பேரினத்தவர்களை தங்களது உயர்குலப் பெயரான வேளாளர், வெள்ளாளர் என்பதனை துறந்து அகமுடையார் சேர்வை என பயன்படுத்துங்கள் என்று முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் செயல்  பாடுகள் கண்டிக்கதக்கது. சங்க காலம் முன்தொட்டே முதற்குடியாக, உயர்குடியாக காணப்பட்டு வரும் வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் கடைச்சாதி யாளராக காணப்பட்ட சமுதாயத்தினராக இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறாக தன்னை தாழ்த்திக் கொள்ளவும் மாட்டார்கள் இவ்வுயர்குடிமக்கள்.மேலும் முக்குலத்தவர்களில் சிலர் முற்பட்ட உயர்குடியான  வேளாளர் (பிள்ளைமார், முதலியார்)களை சூத்திரர்கள் என உண்மைக்கு புறம்பாக கூறியும், எழுதியும், இணையதள பக்கங்களில் உலவவிட்டிருப்பதும் கண்டிக்கதக்கது. வேளாளர்கள் சூத்திரர்கள் அல்ல என்பதுடன் நால்வகை வருணபாகுபட்டின் வகைப்பாட்டு களுக்குள் அடாங்கார். என்பதனையும்  தமிழினத்தின் பழைய ஷத்திரிய வகுப்பினர் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் என்பதனையும் பல வரலாற்று ஆய்வா ளர்கள், தக்க ஆதரங்களுடன் கூறியுள்ளனர். இதனை முன்னரே நாம் கூறியுள்ளோம். வேளாளர்களை விவரமறியாது சூத்திரர் என கூறி, எழுதிவரும் அவர்கள் சத்திரியர் அல்ல அவர்கள் சூத்திரர்களாகவே குறிக்கப்பட்டிருக்கின்றனர். சூத்திரர்களின் கடவுளான  இந்திரனை, மன்மதனை வழிபடுமாறும் பணிக்கப் பட்டனர். ஆனால் வேளாளர்கள் இந்திர வழிபாடு மேற்கொண்டவரல்ல. சைவ சமய கோட்பாட்டினையும் சிவவழிபாட்டினை பரப்பியவர்கள், சிவவழிபாட்டினை மேற்கொண்ட மேன்மக்கள்.  இதுயார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ, பிற சமுதாயத்தினை இழிவுப்படுத்தும் நோக்கிலோ இதனை குறிப்பிட வில்லை. அந்த எண்ணமும் எங்களுக்கில்லை. தமிழர் என்ற முறையிலும் இந்தியர் என்ற முறையிலும் யாவருடனும் ஒற்றுமையுடன் சகோதரபண்புடன் திகழ்வதில் வேளாளர் (பிள்ளைமார், முதலியார்) கள் முன்னிருப்பர் என்பதனை நாடே அறியும். ஆனால் வேளாளருக்குள் குளறுபிடியை ஏற்படுத்தி இலாபம் அடைய நினைப்பவர்களும், வேளாளர்களை இழிவுப் படுத்தும் நோக்கிலும், அவர்தம் நீண்ட நெடிய பாரம்பரிய வரலாற்றை, குல பெயரை கலவாட நினைக்கும் கயவர்களும் கட்டவிழ்த்து விட்ட ஆதாரமற்ற பொய்வாக் கியங்களை வேளாளர் (பிள்ளைமார்,முதலியார்)கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

website
mp3songs,videos: https://www.vocayya.com/

FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/

TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews

Email – tnvocnews@gmail.com

* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************

 

604

70 Comments

  1. சக்திவேல்சிங்காரம்பிள்ளை

    வெ ள்ளாலர் பற்றிய தகவல்மேலும் பலர் அறியஉதவியாக உள்ளது நன்றி

    Reply
    1. admin (Post author)

      உங்கள் அதரவு எப்போதும் தேவை

      Reply
    2. கோபாலகிருஷ்ணன்

      பக்க பக்கமாக வேளாளர்களுக்காக பதிவு செய்துேரத்தை வீண்ணடத்தி வீட்டீர்கள். சங்ககாலம், தொல்காப்பியர் படி நான்கு வகை நிலங்கள் மட்டுமே. குறவன், குறத்தி 2) ஆயர், ஆய்ச்சியர்3) உழவன், உழத்தியர் 4) பரதர்கள் மட்டுமே உண்டு. உழவன் பட்டியல் சாதியாகிவிட்டது. வேளாளன் எங்கே இருக்கான்?

      Reply
  2. குமார்

    அருமை ஐயா என்போன்ற இளையதலைமுறைக்கு நம் இனத்தைப் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாக உள்ளது தங்களின் இக்கட்டுரை.

    Reply
    1. admin

      நமது Website link எடுத்து அனைவருக்கும் பகிரவும்

      Reply
  3. Johnson Christuraj

    It is rally very good information to know more about Vellaler.
    Good work!

    Reply
  4. நரேன்

    என் இனத்தின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இணையத்தில் தேடிப்பின் கண்டேன் தங்கள் பதிவு மிக அருமையாக கூறியுள்ளீர். என் இனம் நினைக்கையில் பெருமை கொள்கிறது மனம்.

    Reply
  5. Kru

    கெடிக்கால் வேளாளர்கள் , மூப்பனார் என்று அழைக்கபடும் சேனைத்தலைவர் சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர்வு வேண்டி பிள்ளை என்றும்(தேனி வட்டத்தில்), முதலியார் என்றும்(செங்கோட்டை வட்டத்தில்) பேட்டுக்கொள்கின்றனர். இவர்களுக்குப்

    Reply
  6. Kru

    கெடிக்கால் வேளாளர்கள் இலை வாணியர் என்று பழைய நூல்கள் கூறுகின்றன .இவர்கள் எண்ணெய் வாணியம் செய்யும் வாணிய செட்டியாருடன் தொடர்புப்படுத்துவதே சரி. இவர்களுக்கும் ஜாதி வெள்ளாளர்களுக்கும் எந்த தொடர்பு ம் கிடையாது.

    Reply
    1. s

      கொடிக்கால் வேளாளர் வேறு இலைவணிகர் வேறு

      Reply
      1. s

        கொடிக்கால் வேளாளர் வேறு இலைவணிகர் வேறு சில இடங்களில் இலைவணிகருடன் உறவுகலந்து போய்யுள்ளனர்

        Reply
  7. விசுவநாதன்

    சேனைத்தலைவர் வேளாளர் என்று 17 நூற்றாண்டுவரை இவர்கள் குலப்பெயருள்ளது இவர்கள் வேளாண்குடி போர்த்தளபதிகளாகிய பின்பே சேனைத்தலைவரானர்

    Reply
    1. s

      வேளாளர்களிலிருந்து வேளாளர்களாலே இடங்கையர் என பிரிந்து உருவாக்கப்பட்டவர்கள் தனிக்குலமாக அதனிலிருந்து குறிக்கப்பட்டவர்கள். அன்றிலிருந்து இன்றுவரை நட்பு குலமாக உள்ளவர்கள்

      Reply
  8. Indumathi

    துளுவவெள்ளாளர் அசைவம் சாப்பிடுவார்களா?

    Reply
    1. admin (Post author)

      சாப்பிடுவார்கள், சைவ வெள்ளாளர் மட்டுமே புலால் உண்ண மாட்டார்கள்

      Reply
    2. Bala

      துளுவ வெள்ளாளா் பிள்ளைமாா் கிடையாது

      Reply
      1. gayathree sweety

        is thuluva vellalar and pillai same?

        Reply
      2. சிவா

        ஹாஹாஹா நல்ல கற்பணை அவர்கள் வேளாளர்களே

        Reply
        1. s

          துளுவ வேளாளர்கள் பிள்ளை, முதலி, நாயக்கர்,உடையார் போன்ற பட்டத்தை உடையவர்கள்
          உடையார் பிள்ளை என்ற பட்டத்தை பயன்படுத்துவோர் குறைவு தான் அதற்காக வேளாளர்கள் இல்லை என்றாகிவிடாது.

          Reply
    3. A k sudhakar

      சாப்பிடலாம்

      Reply
  9. Sannyric

    Make a more new posts please 🙂
    ___
    Sanny

    Reply
    1. admin (Post author)

      kandipaga

      Reply
  10. தமிழன்

    துளுவ வேளாளர் தமிழர் தானே

    Reply
    1. s

      தமிழர்களே தொண்டை மண்டல வேளாளர்களும், சோழிய வேளாளர்களுமே சோழனது ஆட்சியில் துளுவ நாட்டை கைப்பற்றி அங்கே சோழனால் குடியமர்த்தப்பட்டு மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் அதனால் துளுவ வேளாளர் என அழைக்கப்பட்டனர். தவிர இவர்கள் தமிழர்கள் தான்.

      Reply
  11. சங்கர்

    சேனைதலைவர்பிள்ளைமார்சாதி கிடையாது

    Reply
  12. sankar

    சேனைதலைவர் பிள்ளைமார் கிடையாது

    Reply
    1. Guna

      Illathu pillamar velllar a illa ya

      Reply
      1. Ganesh

        Yes illathu pillai is velllalar caste

        Reply
  13. Karthi

    இசை வெள்ளாளர் தமிழர் தானே!

    Reply
    1. Aravind

      இசை வேளாளர் என்று கருணாநிதியால் பெயர் மாற்றப்பட்ட மேல காரர்களுக்கும் வேளாளருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.
      அவர்களை வேளாளர் என்று அழைப்பது எந்த விதத்திலும் பொருத்தமற்றது

      Reply
  14. gayathree sweety

    is thuluva vellalar and pillai same?

    Reply
  15. Selva Prakash

    Kaarkatta vellalan nan…ungaluku terindavatrai sollungal paarpom..!

    Reply
  16. Dheeran

    அடப்பாவிகளா!

    வேலுப்பிள்ளைன்னு அப்பா பேர் இருக்கதனால, தலைவர் பிரபாகரன பிள்ளைமார் பட்டியல்ல சேர்த்துட்டிங்களா?

    அவர் கரையார்/பரதவர் சமூகத்த சேர்ந்தவர்யா!
    இலங்கையில பின்னாடி சாதி போடும் வழக்கம்.ல் கிடையாது, அவங்கள பொறுத்த வரைக்கும், பிள்ளை என்பது பேரின் ஒரு பகுதி,

    இலங்கையில சிங்கள அமைச்சர் ஒருவரோட பெயர் ஜெயராஜ் ஃபெர்னாண்டோ பிள்ளை

    அதுக்காக அவர வேளாளர் லிஸ்ட்ல சேர்த்துடுவிங்களா?

    Reply
  17. Raja

    Prabakaran family is our relation , my caste is veerakodi vellalar

    Reply
  18. Aravind

    வேலுப்பிள்ளை பிரபாகரன் வெள்ளாள சாதியை சேர்ந்தவரே.. அவர்களது குடும்பம் மிகப் பெரிய ஆன்மீகப் பின்னணி கொண்ட குடும்பம் மீனவர்கள் அல்ல.
    கோடியக்கரை யைச் சேர்ந்த எனது உறவினர் மறைந்த சண்முகம் பிள்ளை என்பவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

    Reply
  19. Moorthy

    தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீனவர்.

    Reply
  20. Iyappan

    Arumai💐💐

    Reply
  21. SOMASUNDARAM M

    முன்னொரு காலத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார் இனப்பெண்கள் அனைவரும் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் அவர்தம் குலம் தழைக்க வெள்ளாளர் இனத்தில் இருந்துதான் பெண் எடுத்து அவர்களது எஞ்சிய ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் அதன்பின்னரே இன்றிருக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இனம் தழைத்து வளர்ந்தார்கள் என்றும் அவர்களது வரலாறு கூறுகிறது. அந்த நிகழ்வை நன்றியோடு நினைவு கூறும் விதத்தில் இன்றும்கூட அவர்களின் திருமணச் சடங்குகளில் வெள்ளச்சி பணம் எடுத்து வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

    இதற்கு ஏதேனும் சான்று வெள்ளாளர் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை அறிய முற்படுகிறேன்.

    Reply
  22. Clinton

    Na pillai vellalar srilankan appa porla eernthu taru na eippa Tamil Narula Trichy la irukan yanaku yanna kula thaivam varum solluingga plz yanaku thareya la

    Reply
  23. Nabhan

    பழைய நூல் எங்கு உள்ளது…. அதன் விவரம் தருக. முதலில் கெடி இல்லை கொடி தமிழ் படித்துவிட்டு வருக…

    Reply
  24. முத்துவேல்வேளார்

    வேளார் என்பது குலாலர் சமூகத்தை மட்டுமே குறிக்கும்
    #வேளாளர் உழவு தொழில் வேறு
    #வேளார் குயவு தொழில் வேறு
    இந்த விவரங்களை அனைத்து வெள்ளாளர் வேளாளர் சமூகம் அறிய வேண்டும்.

    Reply
  25. Sundar

    Saiva pillaimar paramparai history pls

    Reply
  26. Sindhuja

    Nice

    Reply
  27. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளாளர் தோற்றம்

    வெள்ளாளர் என்பவர்கள் களப்பிரர்களின் வழித்தோன்றல்கள், அதாவது களப்பாளர் என்று அழைக்கப்படுபவர்கள். கி.பி 250 இல் களப்பிரரின் வடக்குப் படைகள் சேர சோழர் மற்றும் பாண்டிய அரசுகளைத் தாக்கி அடிபணியச் செய்தன மற்றும் அவர்களின் இருப்பு பண்டைய தமிழகத்திற்கு இருண்ட காலத்தை கொண்டு வந்தது.

    சேதி இராச்சியம்

    வேளாளர் பிறந்த இடம் சேதி சாம்ராஜ்யமாக இருக்கலாம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் பழங்கால கலிங்கத்தில் சேதி மக்கள் ஒரு பேரரசை நிறுவினர். கேணி நதிக்கரையில், தற்போதைய புந்தேல்கண்ட் பகுதியில் சேதி சாம்ராஜ்யம் இருந்தது. புந்தேல்கண்ட் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளது. வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் புலம் பெயர்ந்த நாக இனத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளாளர்கள் ஆவர். கிமு 2ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தபோது பிராகிருதம் பேசியிருக்கலாம்.

    வட இந்திய கல்வார்களின் இடம்பெயர்வு

    வட இந்திய கல்வார்கள் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, ஹைதராபாத், சத்தீஸ்கர், வங்காளம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து ஆகிய பகுதிகளில் வாழும் ஒரு பெரிய வட இந்திய சமூகம் ஆகும். அவர்கள் இந்தி, பெங்காலி அல்லது தெலுங்கு பேசுகிறார்கள். கல்வார்களில் இந்துக்கள், ஜைனர்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் உண்டு.
    அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் காலச்சூரிகளின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள்.

    சீக்கிய கல்வார் நாடாகிய, கபுர்தலா நாடு கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது. கல்வார் பட்டங்கள்கள்வார், காலர், கள்ளர், கலியபாலா, சேஹோர் (சேவகர்) இவை அனைத்தும் கல்வார் பட்டங்கள் ஆகும். அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் இனத்தவர் காலச்சூரி வம்சத்தின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள். சீக்கிய கல்வார் மாநிலம், கபூர்தலா மாநிலம் கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது.

    களப்பிரர்

    களப்பிரரின் கலியர் கள்வர்,கள்ளர் மற்றும் களப்பிரர் பட்டங்கள் வட இந்திய கல்வார் பட்டங்களை ஒத்திருக்கிறது. அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபாலா.
    காலச்சூரி வம்சத்தினர் சூரி என்ற கத்தியைப் பயன்படுத்தினர். தமிழ்நாட்டின் கள்ளர்களும் சூரி கத்தியைப் பயன்படுத்தினர்.

    கலிங்கத்திற்கு களப்பிரர் இடம்பெயர்தல்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி வம்சம் கலிங்கத்தின் மீது படையெடுத்து மகாமேகவாஹன வம்சத்தை நிறுவியது. இந்த நாடு சேதிராஷ்டிரா அல்லது சேதரத்தா என்று அறியப்பட்டது, அதாவது சேதிகளின் ராஜ்யம் என்று. வெள்ளாள-களப்பாளர் மற்றும் கள்ளர் ஆகியோர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    கலிங்க வேளாளர்

    கலிங்கத்தை ஜைன மன்னன் காரவேளா ஆண்டபோது, ​​கிமு இரண்டாம் நூற்றாண்டில், சோழ நாட்டில் ஆந்திரா மற்றும் வடக்குப் பகுதிகள் அனைத்தும் காரவேளா மன்னனால் ஆக்கிரமிக்கப்பட்டன. காரவேளா மன்னர் சேதி வம்சத்தைச் சேர்ந்தவர். வேளாளர் கலிங்க மன்னர் காரவேளனின் பணியாட்களாக இருந்ததால் அவர்கள் வேள் ஆளர் என அழைக்கப்பட்டனர். காரவேளரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை வேளாளர்கள் பாதுகாத்ததால், அவர்கள் கார் காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் காராளர் (காரவேளரின் மக்கள்) அல்லது வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். (மட்டக்களப்பு மான்மியம்)

    ஆரம்பகால களப்பிரர்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் வேளிர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்கள் கலிங்க நாட்டிலிருந்து வந்ததால் அவர்கள் கலிங்க வேளாளர்கள் அல்லது சேதி இராச்சியத்தின் சேதிராயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

    மாவண் புல்லி

    இதற்குப் பிறகு மாவண் புல்லி என்ற களப்பிரர் தலைவன் இன்றைய திருப்பதியை ஆண்டான்.

    நந்தி மலை களப்பிரர்

    சோழர்கள் வேளிரை அடிபணியச் செய்தனர். ஆனால் விரைவில் களப்பிரர் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர். விரைவில் களப்பிரரின் காட்டுமிராண்டிக் கூட்டங்கள் மூன்று தமிழ் அரசுகளையும் தோற்கடித்தன. கி.பி 250 இல் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையைத் தலைநகராகக் கொண்ட கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

    சில கல்வெட்டுகள் நந்தி மலையை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்கள் தங்களுக்கென சொந்தக் கொடியை கொண்டிருக்கவில்லை, ஆனால் சேர சோழ பாண்டியக் கொடிகளைப் பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியர்களின் மாறன் பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக தொடர்பில்லாவிட்டாலும், அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்துக்கொண்டு மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர்.

    Reply
  28. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வேளாளரின் பரிணாமம்

    கள்ளர், மறவர், கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே” என்பது பழமொழி.

    பண்டைய காலத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற நாகர் குலங்களிலிருந்து வேளாளர் உருவானார்கள். ஒரு திருடன் அல்லது கொள்ளைக்காரன் கொஞ்சம் பணம் சம்பாதித்து ஒரு விவசாய நிலத்தைப் பெற்ற பிறகு, பின்னர் அவன் தன்னை வெள்ளாளர் என்று அழைத்து கொள்ளுவான். கள்ளர்களும் களப்பிரர்களிடமிருந்து வந்தவர்கள் என்பதால் வேளாளர் கள்ளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்கலாம்.
    தமிழ்நாட்டின் உழவர் என்று அழைக்கப்படும் பழங்கால வேளாண்மையாளர்களுடன் வெள்ளாளர்கள் கலந்திருக்கலாம்.

    இருண்ட காலம்

    கி.பி 250 முதல் கி.பி 600 வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. இது களப்பிர இடைநிலை ஆட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆட்சி இருந்தது மற்றும் அந்த காலத்திலிருந்து அதிகம் அறியப்படவில்லை.

    பாண்டிய சாம்ராஜ்யத்தில் இருந்து களப்பிரர் வெளியேற்றம்

    கி.பி 600 வாக்கில் கூன்பாண்டியன் ஆட்சி செய்த பாண்டிய நாட்டிலிருந்து வில்லவர் – மீனவர் மக்களால் மிகவும் சிரமத்துடன் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர். களப்பிரர் 600 முதல் 800 வரை தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டனர். கி.பி 800க்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்ற சோழர்கள் களப்பிரர்களை அடிபணியச் செய்து தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் கொண்டனர்.

    தஞ்சாவூரில் களப்பிரர் ஆட்சி

    களப்பிரர் கிபி 600 முதல் கிபி 800 வரை சோழ நாட்டின் பெரும்பகுதியை தஞ்சாவூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். அச்சுத களப்பாளர் என்ற மன்னன் தன் மக்களை சைவ இந்து மதத்திற்கு மாற்றினான். தில்லை வாழ் அந்தணர்களால் தன்னை சோழ மன்னனாக முடிசூட விரும்பினார் அச்சுத களப்பாளர். அச்சுதருக்கு முடிசூடத் தயாராக இருந்தபோதிலும் அந்தணர்கள் சோழ மன்னனின் பழிவாங்கலுக்கு அஞ்சி மறுத்துவிட்டனர்.

    பிற்கால சோழ வம்சம்

    உறையூரை ஆண்ட சோழர்கள் கி.பி 800 இல் களப்பிரர்களை (களப்பாளர், கள்ளர் வெள்ளாளர்) அடிபணியச் செய்தனர். சோழப் பேரரசு தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் ஆக்கினர். பின்னர் 1000 கி.பி.யில் சோழர்கள் பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டின் மீது படையெடுத்தபோது, ​​அவர்கள் மீண்டும் களப்பிரர்களை பாண்டிய மற்றும் சேர ராஜ்யங்களில் குடியேற்றினர்.

    வெள்ளாள துணைக்குழுக்கள்
    1.கார்காத்தார்
    2.கொண்டைகெட்டி
    3.சோழியர்
    4.சைவம்

    மகக்கொடை

    சோழர்கள் வெள்ளாளரையும் கள்ளரையும் அடிமைப்படுத்தினர். சோழர்கள் மகக்கொடை முறையை அமல்படுத்தினர், அதில் விவசாய நிலம் பெறும் ஒவ்வொரு வெள்ளாளனும் தனது மகள்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை அரச அரண்மனையில் அந்தப்புரத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் சோழர்கள் வெள்ளாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெள்ளாளப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் ஆனால் முதலி பட்டம் பெற்றிருப்பார்கள்.

    சேர மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலனித்துவம்

    கி.பி 1000க்குப் பிறகு பிற்காலச் சோழர் ஆட்சியில் வெள்ளாளர்கள் தென்பகுதியில் சேர நாட்டின் தென்பகுதியில் குடியேறினர். பாண்டிய நாட்டில் வெள்ளாளர்களும் கள்ளர்களும் சோழர்களால் குடியேற்றப்பட்டனர். சோழர்கள் களப்பிரரை சோழப் பிரதேசங்களில் இருந்து அகற்ற நினைத்திருக்கலாம்.

    வெள்ளை நாடார்

    கேரளாவின் வில்லவர் வம்சங்களில் பிரபுத்துவமான வெள்ளை நாடார்கள் வெள்ளாளர்களிடையே வைப்பாட்டிகளைக் கொண்டிருந்தார்கள். வெள்ளை நாடார்களும் வெள்ளாளப் பெண்களுடன் தாழ்தார திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே அங்கீகரிக்கப்படும். இதன் மூலம் வெள்ளை நாடார்கள் வெள்ளாளரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    வெள்ளை நாடார் அல்லது வெள்ள நாடார்கள் சேர நாட்டின் பிரபுக்கள், அவர்கள் அரச குடையை (கோக்குட) பாதுகாக்கும் பணியைக் கொண்டிருந்தனர் மற்றும் கோயில்களுக்கு நீர் வழங்கினர். வெள்ளை நாடார் கோயில் நிலங்களில் விவசாயம் செய்யும் பணியையும் மேற்கொண்டிருந்தார்கள்.

    Reply
    1. tamil

      dai saana pudikkura sona un caste name laye nee saanam pudikkuravannu theliva nee yaarunnu sollittu poirukkanunga apparam yen ippdi ,vellala chozharil theva rasarasnen kalvettu thedi paaru moovendahrum vellalarnu cbsc paadthulaye vanthuruchu nee yaarra theettu koo.athu yenna vellai sanar a appo neethanda yengalukku poranthu iruppa .first dhanush a brain wash panninga ippa surya vennaigala brahamanan list la unnayellam thotaley thettunu sollituu poirukkan meladai poda anumathi kadyathu
      aaramba kaalathula irunthu brahmanan namma kooda thaan irukkan avanukku theriyum yaara yenga vaikkanumnu british periodlathaana makkala varnasrama murai padi pirikkum bodhu vellargala suthrannu dra listla konduvaran athulakooda suthirargalil uyarvanvargal “sar soothirarnu” thaan soldran yenna 4 pirivu mattuthaangrappa onnum pannamudiyathu aana inga unna thotta brahmananukku theettu brahmanan yenagala thotta yengalukku thaanda theettu innum srilankala saiva vellalargala brahamanana vida uyarnthavargal. british ulla varalana innum sanam pudichuttu thaan iruppa ishtathukku kathai yelutha vendiyathu .

      yella eena piravigalum yenagala target pandrappavey nalla theriyuthu naanga yaarunnu adima….வெள்ளை sanarகளும் வெள்ளாளப் பெண்களுடன் eenappiravigaludan திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே அங்கீகரிக்கப்படும் yennada solla vara kolila irunthu mutta vanthucha illa muttaila irunthu kolivanthucha soldra thotta theettu. otha intha oru line pothumda nee soldra yellam poinu nirubikka eenakkothi.

      Reply
  29. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    துளு பாணப்பெருமாள்

    கேரளாவில் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் கி.பி 1120 இல் 350000 பேர் கொண்ட நாயர் படையுடன் கேரளாவை தாக்கி மலபாரை ஆக்கிரமித்தார். நாயர்கள் நேபாளி நாகர்கள், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூரவர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார். பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி கி.பி.1156ல் அரேபியாவுக்குப் புறப்பட்டார்.

    பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரி கி.பி 1156 இல் கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னன் ஆனான்.

    வெள்ளாளர்களின் துரோகம்

    வில்லவர் சேர வம்சத்திற்கு எதிராக துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளுடன் வெள்ளாளர்கள் துரோகமாக கூட்டணி வைத்தனர். துளு பாணப்பெருமாள் கேரளாவை 18 மாகாணங்களாகப் பிரித்து 4 க்ஷத்திரியர்கள், 8 சாமந்தர்கள் மற்றும் 6 வெள்ளாளத் தலைவர்களுக்கு வழங்கினார். ஆனால் பாணப்பெருமாளின் ஆட்சி மலபாரில் மட்டும் இருந்ததால், வெள்ளாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 6 மாகாணங்கள் கிடைக்கவில்லை.

    சம்பந்தம்

    நாயர் படை நம்பூதிரிகளை மட்டுமே ஆதரித்ததால் கோலத்திரியின் இந்த துளு வம்சம் பலவீனமாக இருந்தது. நம்பூதிரிகள் அரசர்களின் சகோதரியுடன் சம்பந்தம் வைத்திருக்கும் உரிமையைப் பெற்றனர். இவ்வாறு பிறந்த மகன்தான் அடுத்த அரசரானார். நம்பூதிரிகளும் நேபாளத்தில் உள்ள அஹிச்சத்ராவிலிருந்து குடியேறியவர்கள். இதனால் துளு வம்சம் துளு-நேபாள வம்சமாக மாறியது. இதன் மூலம் மலபாரில் நம்பூதிரி ஆதிக்கம் தொடங்கியது. இந்தியாவில் உள்ள மற்ற பிராமணர்களைப் போலல்லாமல் நம்பூதிரிகள் மன்னர்களையும் சூத்திர நாயர்களையும் கட்டுப்படுத்த சம்பந்தத்தைப் பயன்படுத்தினர். நம்பூதிரிகளுக்கு இளவரசிகள் மட்டுமின்றி அனைத்து நாயர் பெண்களுடனும் சம்பந்தம் இருந்தது.

    நம்பூதிரிகளின் எழுச்சிக்கான உண்மையான காரணம், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் வில்லவர் வம்சங்களுக்கு எதிராக துளு வம்சங்களை அரேபியர்கள் மற்றும் துருக்கியர்கள் ஆதரித்தனர்.

    கொல்லத்திற்கு வில்லவர் இடம்பெயர்வு

    துளு எதிர்ப்பை எதிர்கொண்ட சேர வம்சத்தின் தலைநகரம் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. சேர வம்சம் ஆய் வம்சத்தின் முக்கிய குலத்துடன் ஒன்றிணைந்து சேராய் வம்சத்தை உருவாக்கியது (கிபி 1102 முதல் கிபி 1333 வரை). அரச பட்டங்கள் திருப்பாப்பு (திருப்பாப்பூர் மூத்த திருவடி), சிறவா(சிறைவாய்) மூத்தவர் மற்றும் குலசேகரப்பெருமாள். ஆய் ராஜ்ஜியத்தை முதலில் ஆண்ட கூபக குடும்பம் இன்னும் திருவனந்தபுரத்தில் உள்ள கீழ்பேரூரில் இருந்து ஆட்சி செய்தது, அது சேராய் வம்சத்திலிருந்து பிரிந்து இருந்தது.

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதல் மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து வில்லவர் ராஜ்யங்களும் அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகள் முடிவுக்கு வந்தன. வேணாட்டின் துளு வம்சம்ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகள் எனப்படும் இரண்டு துளு இளவரசிகள் கி.பி.1314 இல் வேணாட்டை ஆட்சி செய்ய கண்ணூர் அரசன் கோலத்திரியால் அனுப்பப்பட்டனர்.

    வேணாட்டின் முதல் தாய்வழி துளு-நேபாள மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா (கி.பி. 1333 முதல் 1335 வரை). ஆற்றிங்கல் ராணியுடன் லட்சக்கணக்கான நாயர்கள் வேணாட்டுக்கு குடிபெயர்ந்தனர். நாயர்கள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ரத்திலிருந்து குடியேறியவர்கள். இதனால் வேணாட்டின் தமிழ் சாம்ராஜ்யம் நேபாளி நாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

    கூபக அரச குலம்

    ஆய் வம்சத்தின் கூபக அரச குலம் சேராய் வம்சத்திற்கு விரோதமாக இருந்தது. திருவனந்தபுரத்தின் ஆய் வம்ச இளவரசர்கள் ஆற்றிங்கல் அரசிகளுடன் சம்பந்தம் வைத்ததன் மூலம் துளு வம்சத்துடன் இணைந்து ஒரு தாய்வழி துளு-ஆய் வம்சத்தை உருவாக்கினர். துளு-ஆய் வம்ச ஆட்சி கிபி 1333 இல் தொடங்கியது. கி.பி.1333ல் தமிழ் வில்லவர் சேர ஆட்சி முடிவுக்கு வந்தது.

    மீண்டும் வில்லவர் இடம்பெயர்வு

    கி.பி 1333க்குப் பிறகு வில்லவர் தெற்கே குடிபெயர்ந்து, பழங்கால வில்லவர் தலைநகரான இரணியலுக்குச் சென்று அதன் அருகே கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளைக் கட்டினர். திருவிதாங்கோடு வில்லவர்களின் கோட்டையாக மாறியது. இதற்கிடையில் சோழ வம்சத்தினர் களக்காடு என்ற இடத்தில் ஒரு கோட்டையை கட்டினார்கள். பாண்டிய வம்சத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர்.

    இலங்கையில் வில்லவர்

    பல வில்லவர்களும் பணிக்கர்களும் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அழகக்கோன் கொல்லத்தில் (தென் வஞ்சி அல்லது கோளம்பம்) இருந்து இடம்பெயர்ந்து கொளம்போ கோட்டையை கட்டினார். புதிதாக கட்டப்பட்ட நகரமான கொழும்பு, கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று பெயரிடப்பட்டது.

    Reply
  30. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    தாய்வழி முறை மற்றும் பல கணவருடைமை

    பல வெள்ளாள குடும்பங்கள் மருமக்கத்தாயம் அல்லது தாய்வழி முறையை ஏற்றுக்கொண்டது, இது நாயர்களுக்கு வெள்ளாள வீடுகளுக்குச் செல்லவும், வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் கொள்ளவும் உதவியது. வேளாளர் பெண்கள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருந்தனர். சம்பந்தம் என்பது திருமணம் இல்லாத உறவுமுறை. அனைத்து நாயர்களும் பல பதிகளுடைமை முறையை கடைப்பிடித்ததால், பல நாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு வெள்ளாள பெண்ணுடன் சம்பந்தத்தை வைத்திருந்தனர். சம்பந்தம் வைத்திருந்த ஒவ்வொரு நாயரும் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பலாம் அல்லது திரும்பாமல் போகலாம். வேளாளப் பெண்ணுடன் சம்பந்தம் கொண்ட நாயர்கள் இவ்வாறு பிறந்த குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் தந்தை யார் என்று நிறுவ முடியாது.

    இதில் பிறந்த குழந்தைகள் காரணவர் என்ற தாய் மாமாவின் பாதுகாப்பில் தம் தாய்மார்களுடன் தங்கினர். வருகை தரும் நாயர் அல்லது வெள்ளாளருக்கு விருந்தோம்பல் செய்வதற்கும் காரணவர் பொறுப்பேற்றார். ஒரு நாயர் சம்பந்தம் வைத்திருக்கும் போது, ​​மூடிய கதவுக்கு வெளியே தனது கைத்தடியை விட்டுச் செல்வார். அதே நேரத்தில் இன்னொரு நாயர் அங்கு சென்றால், அறைக்குள் இன்னொரு நாயர் இருப்பது அவருக்குத் தெரிய வரும். அவர் காத்திருக்கலாம் அல்லது பின்னர் வரலாம்.

    தாய்வழி வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வேளாள ஆண் வேறொரு வெள்ளாள வீட்டிற்குச் சென்று அங்குள்ள வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் செய்வான். கி.பி 1335 முதல் 1947 வரை திருமணங்கள் மற்றும் கணவன்-மனைவி குடும்பங்கள் தாய்வழி வெள்ளாளர்களிடையே இருக்கவில்லை. எனினும் வெள்ளாள ஆண்கள் நாயர் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நாயர் பிள்ளைகள் தாய்மார்களின் குலப்பெயரை ஏற்றுக்கொள்வதால், வெள்ளாளத் தாய்மார்களைக் கொண்ட பல நாயர்களுக்கும் பிள்ளை என்ற குடும்பப்பெயர் உள்ளது. பல பிள்ளைகள் அதாவது வெள்ளாள கலப்பு நாயர்கள், நாயர் சமூகத்தில் சேர்ந்து நாயர்களின் துணைஜாதியாக மாறினர், மீதமுள்ளவர்கள் தாய்வழி வெள்ளாளர்களுடன் இருந்தனர். வில்லவர் மக்கள் மற்றும் அவர்களின் சேர வம்சத்தின் பிரபுக்களாக இருந்த வெள்ளை நாடார்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் நாயர்களை ஆதரித்தனர்.

    விஜயநகரப் படையெடுப்பு கி.பி 1377

    1377 இல் விஜயநகரப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் சக்தி கணிசமாகக் குறைந்தது.

    Reply
  31. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளை நாடார் கல்வெட்டுகள்

    வெள்ளாளர் 1380 முதல் 1453 வரையிலான காலப்பகுதியில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் விதத்தில் கல்வெட்டுகளின் வரிசையை வைக்கத் தொடங்கினர்.

    1406 திருவிதாங்கோடு கல்வெட்டு

    கி.பி 1406 இல், வெள்ளாளர்கள் தங்கள் உத்தரவை மீறிய கனக்கு கோளரி அய்யப்பன் உட்பட மூன்று வெள்ளை நாடார்களுக்கு மரண தண்டனை விதித்தனர். இந்த மரணதண்டனை நூற்றுக்கணக்கான வெள்ளாளப் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும்.
    ஆனால் வெள்ளை நாடார்கள் வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.1416 அம்பாசமுத்திரம்1453 திருவிதாங்கோடு மற்றும் கல்லிடைக்குறிச்சி.கி.பி 1453க்குப் பிறகு வெள்ளைநாடார் கல்வெட்டுகளை நாம் காணவில்லை.

    வெள்ளைநாடார் கல்வெட்டுகள் தனித்துவமானது, ஏனெனில் வெள்ளாளர்களைத் தவிர வேறு எந்த இனமும் தங்கள் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்கக் கூடாது என்று கோரி கல்வெட்டுகளை வைத்திருந்தில்லை. நிலப்பிரபுத்துவ முறையில் வெள்ளாளப் பெண்களை கி.பி 1453 வரை வெள்ளை நாடார்கள் காமக்கிழத்திகளாக வைத்திருந்திருக்கலாம்.

    வில்லவர் இறைமை

    1383 முதல் 1595 க்கு இடையில் கொல்லத்தின் சேராய் இளவரசர்களுடன் ஆற்றிங்கல் ராணியின் சம்பந்தம் மூலம் ஒரு ஆட்சியாளர்களின் வம்சம் தோன்றியது. இந்த பாதி துளு பாதி தமிழ் வில்லவர் சேராய் வம்சம் தாய்வழி வம்சமாக இருந்தது மற்றும் அது ஜெயசிம்ஹவம்சம் என்று அழைக்கப்பட்டது. இரண்டு போட்டி வம்சங்கள், துளு-ஆய் மற்றும் துளு-சேராய் வம்சம் ஆகிய இரண்டும் நாயர்களால் ஆதரிக்கப்பட்டன.

    Reply
  32. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    கல்லிடை குறிச்சியில் உள்ள வெள்ளை நாடார் கல்வெட்டு
    கொல்லம் 828.
    1453 கி.பி.
    மொழி: தமிழ்
    எழுதுமுறை: வட்டெழுத்து

    1. கொல்லம் ௬௱௨௰௮ (628) ௵ (ஆண்டு) சித்த்ரை ௴(மாதம்)

    2. ௫ ௳ (5 நாள்) முன்னாள் நாட்டின கல்லு

    3. இரண்டுக்கும் படி எடுப்கொ

    4. ல்லம் ௫௱ ௫௰௫ ௵ (555 ஆண்டு) கும்பனாயறு

    5. யாச சென்றது நம்முடையநாட்

    6. டில் வெள்ளாழற்கு பிழைப்பொ

    7. பொர் சில காரியம் வெள்ளை நாடரி

    8. ல் சொதினை உள்ளிருப்பு பாசித்த

    9. லை விக்கிரம ஆதித்தன் செய்

    10. கையாலேயும் நாட்டின கல்லி

    11. ல்வாசகமும் ௫௱௯௰௧ ௵ (591 ஆண்டு) மீனனா

    12. யறு ௨௰௯(29) சென்றது நாட்டில் வெள்

    13. ளாளற்கு பிழைப்போர் சில காரியம்

    14. வெள்ளை நாடாரில் கணக்கு

    15. கோளரி அய்யப்பனும் அய்யப்ப

    16. ன் குமரனும் அண்டூர் செழியங்க

    17. னும் செய்கையாலேயும் செனமு

    18. ம் காரணப்பட்டவர்களும் காரிய

    19. செய்கின்றவர்களும் கணக் எ

    20. ழுதுகிறவர்களும் மற்றும் நாட்

    21. டில் வெள்ளாழராயுள்ளவர்களெ

    22. ல்லாருங்கூடி இருந்து கற்பித்த

    23. காரியம் பிழைத்தவர்கல் மூவரையும்

    24. கொன்று பரிகாரம் செய்யுமா

    25. றும் வெள்ளை நாடாராயுள்ளவர்கள்

    26. நம் மொடுங் கூடக் கூலிச்சேவகம்

    27. சேவிக்க இளைப்பிதென்றும் கா

    28. ரணப்படுகையும் காரியஞ்

    29. செய்கையும் கணக்கெழுது

    30. கயும் தேசங்கையாளுகையும்

    31. இளைப்பதென்றும் கைற்பித்து நா

    32. ட்டின கல்லி வாசகம் இம்மரிசா

    33. ௬௱ ௨௰௮(628)௵ சித்திரை ௴ ௰௨(12) நாட்

    34. டின கல்லில் முன்பில் வாச

    35. கத்தோடு கூடி இப்போத்தக

    36. ல் வெட்டுக்கு கூட்டின வா

    37. சகம் வெள்ளை நாடார் தமிழ

    38. ப் பாகத்த்குப் பெண் கட்ட அரி

    39. தென்றும் கையாள அரிதென்

    40. றும் பிழைத்தவர்களுக்கு

    41. அய்யப்பன் மார்த்தாண்டன் இரை

    42. மன் சந்திரக் கணக்கு.

    Reply
  33. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    ஜெயசிம்ஹவம்சம்

    துளு-சேராய் வம்சத்தை வில்லவ நாடார்களும் ஆதரித்தனர்.சேரன்மாதேவி, களக்காடு மற்றும் கல்லிடைக்குறிச்சி போன்ற வில்லவர் கோட்டைகளைச் சேர்ந்த இளவரசிகளை துளு-சேராய் வம்சத்தினர் மணந்தனர். கிபி 1383 முதல் 1595 வரை வேணாட்டின் தலைநகரங்கள் இந்த வில்லவர் கோட்டைகளுக்கு மாற்றப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் வெள்ளாள-நாயர் மற்றும் வில்லவ நாடார் என்ற இரு விரோதப் பிரிவுகள் இந்த ஆட்சியை ஆதரித்தன.

    இந்த காலகட்டத்தில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாளர்களிடமிருந்து துணை மனைவிகள் இருப்பதை வேளாளர் தடுக்க முயன்றனர், ஆனால் அது அந்தக் காலத்தில் தொடரப்பட்ட ஒரு நடைமுறை.

    வேணாட்டில் வில்லவர் ஆட்சியின் முடிவு

    விஜயநகர படையெடுப்பாளர்கள் மற்றும் துளு-ஆய் வம்சத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட துளு-சேராய் ஜெயசிம்ஹவம்சம் வில்லவர்களால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் கி.பி 1595 இல் முடிவுக்கு வந்தது.

    பாதி தமிழ் சகாப்தம் (கி.பி. 1383 முதல் 1595 வரை)

    துளு-தமிழ் மன்னர்கள் சேர, ஆய் மற்றும் துளு வம்சங்களின் கலவையாக இருந்தனர்.

    பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (1516 முதல் 1535 வரை) களக்காடு சோழ இளவரசியை மணந்து களக்காட்டைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். தமிழ்நாட்டு வில்லவர் ஆதிக்கம் செலுத்திய திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகள் இவரது கட்டுப்பாட்டில் வந்தது.

    பூதலவீரன் தன்னை “வென்று மண்கொண்ட பூதல வீரன்” என்று அழைத்தான். முத்து கடற்கரையைச் சேர்ந்த பரவர் மீனவர்களை மதம் மாற்றிய கிறித்தவ மதத்திற்கு மாறிய நாயர் ஜோவாவோ டா குரூஸுடன் பூதல வீரன் நட்பு கொண்டிருந்தார். பூதல வீரன் குமரி முட்டம் கிறிஸ்தவப் பரவர்களுக்கு வரிவிலக்கு அளித்தார். வேணாடு மன்னர்கள், பரவரை கிறிஸ்தவர்களாக மாற்ற பிரான்சிஸ் சேவியருக்கு உதவினார்கள்.

    பிரான்சிஸ் சேவியர் நாயக்கர்களுக்கும் வேணாடு அரசர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்தார். வில்லவர் மக்களைப் பற்றியும் அவர்களின் கோட்டைகளைப் பற்றியும் போர்த்துகீசியருக்கு நிச்சயமாகத் தெரியும். ஆய் வம்சம் இந்த துளு-சேராய் வம்சத்தை எதிர்த்தது. ஆனால் போர்த்துகீசியர்கள் துளு-சேராய் வம்சத்தை அகற்றுவதற்கும் வில்லவரை மேலும் கீழ்ப்படுத்துவதற்கும் கருவியாக இருந்தனர்.

    போர்ச்சுகீசியர்

    கி.பி. 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது கேரளா நான்கு துளு-நேபாளத் தாய்வழி ஆட்சியாளர்களால் ஆளப்பட்டிருந்தது, அதாவது கண்ணூரின் கோலத்திரி, கோழிக்கோடு சாமுதிரி, கொச்சி மற்றும் வேணாடு ராஜ்ஜியங்கள். இவை அனைத்தும் அரேபியர்கள் மற்றும் டெல்லியின் துருக்கிய சுல்தானகத்தால் நிறுவப்பட்டு பாதுகாக்கப்பட்டன. ஆனால் பதினாறாம் நூற்றாண்டில் அரேபிய மற்றும் துருக்கிய சக்தி வீழ்ச்சியடைந்தது.

    போர்ச்சுகீசியரின் உயர்ச்சி

    1517 வாக்கில் போர்த்துகீசியர்களுக்கும் எகிப்தின் மாம்லக் சுல்தான்களுக்கும் இடையிலான கடற்படைப் போரில், போர்த்துகீசியர் துருக்கிய மற்றும் அரபு கடற்படைகளை தோற்கடித்தனர்.1526 இல் டெல்லி சுல்தானகம் முடிவுக்கு வந்தபோது போர்த்துகீசியர்கள் இந்த துளு-நேபாள சாம்ராஜ்யங்களின் பாதுகாவலர்களாக ஆனார்கள்.

    போர்த்துகீசியர்கள் துளு ராஜ்ஜியங்களை ஆதரித்திருந்திருக்கவில்லை என்றால், கேரளாவின் அனைத்து வில்லவர் குலங்களும், தெற்கு கேரளாவின் வில்லவர்களும், வில்லவர், சண்ணார், சேர்த்தலையின் பணிக்கர்களும் மற்றும் வில்லார்வட்டம் சேந்தமங்கலம் இராச்சியமும் இணைந்திருக்கலாம். வில்லவர் கேரளாவிலிருந்து துளு-நேபாள தாய்வழி சாம்ராஜ்யங்களை அகற்றியிருப்பார்கள். ஆனால் போர்த்துகீசியர்கள் நான்கு துளு-நேபாள ராஜ்ஜியங்களையும் பாதுகாத்து நவீன ஆயுதங்களை அவர்களக்கு வழங்கினர்.

    நாயர்கள் சக்திவாய்ந்த போர்வீரர்கள் அல்ல. ஆனால் நாயர்களுக்கு அரேபியர்கள், துருக்கியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தொடர்ச்சியான ஆதரவு இருந்தது.போர்த்துகீசிய மிஷனரிகள் வெள்ளை நிறமுடைய நாயர்களும் மற்றும் நம்பூதிரிகளும் இருண்ட திராவிட மக்களை அடிமைப்படுத்தியதாகக் கருதினர். அதனால்தான் போர்த்துகீசியர்கள் நாயர்களையும் நம்பூதிரிகளையும் ஆதரித்தனர்.

    உண்மையில் திராவிட வில்லவர் குலங்கள் டெல்லி சுல்தானகம் மற்றும் அரேபியர்களால் அழிக்கப்பட்டன, நாயர்களால் அல்ல. பணிக்கர்கள் தமிழ்ப் பணிக்கர்களும் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர்களும் போர்த்துகீசியர்களுடன் படைவீரர்களாகச் சேர்ந்தனர். இறுதியில் போர்த்துகீசியருடான கலப்பினால் வலுவான மெஸ்டிசோ ரோமன் கத்தோலிக்க சமூகம் உருவானது. நெஸ்டோரியன்களுடன் (நஸ்ரானி மாப்பிள்ளா) போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் கலந்து கொண்டதன் மூலம் அனைவரும் ரோமன் கத்தோலிக்கராக மாற்றப்பட்டனர். இதனால் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர் மற்றும் பணிக்கர் ஆகியோர் தங்கள் அடையாளத்தை இழந்து சிரியன் கத்தோலிக்க சமூகத்துடன் இணைந்தனர்.

    Reply
  34. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    போர்த்துகீசியர்கள் இந்த இரண்டு போட்டி பிரிவுகளையும் ஒருங்கிணைத்தனர்

    1.துளு-நேபாள பிராமண நம்பியாத்ரி அரசர்கள் மற்றும் கொச்சியின் நேபாள நாயர் வீரர்கள்
    2.நஸ்ரானி மாப்பிள்ளைகள் மத்திய கிழக்கு தந்தைகள் மற்றும் தமிழ் தாய்மார்கள் மற்றும் போர்த்துகீசியர் கலப்புடன் வில்லவர் மற்றும் பணிக்கர்களுக்கு பிறந்தவர்கள், அவர்கள் இறுதியில் ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர். உள்ளூர் ராஜ்ஜியங்களைச் சேர்ந்த நாயர்கள், கிறிஸ்தவ மெஸ்டிசோ மற்றும் பணிக்கர் தளபதிகளின் கீழ் பணியாற்றினார்கள்.

    வள்ளிக்கடைப் பணிக்கர்

    வள்ளிக்கடைப் பணிக்கர்கள் போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டுப் படைகளுக்கு தலைமை தாங்கினார்கள். கி.பி 1498 முதல் கி.பி 1741 க்கு இடையில் போர்த்துகீசிய மற்றும் டச்சு படைகளை இராணுவ தளபதிகளான பன்னிரண்டு வள்ளிக்கடை பணிக்கர்களின் வம்சம் வழிநடத்தியது.

    வள்ளிகடை பணிக்கர் போர்த்துகீசியர்களுக்கு சேவை செய்த ஆரம்பகால நாடார்களில் ஒருவர் மற்றும் அவர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார். பிற்காலத்தில் போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் தங்களை நம்பூதிரி வழித்தோன்றல்களாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினர்.கிறிஸ்தவ நஸ்ரானி மாப்பிள்ளைகளை நம்பூதிரிகள் என்று கூறி, கிறிஸ்தவர்களின் நன்கு ஆயுதம் ஏந்திய படையை உருவாக்கி, மத்திய கேரளாவை போர்த்துகீசியம் கட்டுப்படுத்தியது.

    ஈழவ பணிக்கர்

    சேர்த்தலையின் பணிக்கர்களான சீரப்பஞ்சிற பணிக்கர் போன்றோர் போர்த்துகீசியர் மற்றும் அர்த்துங்கல் தேவாலயத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். சீரப்பஞ்சிற பணிக்கர் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள். ஆனால் பிற்காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர் மற்றும் மத்திய கேரளாவின் மற்ற பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவ சமூகத்தால் உள்வாங்கப்பட்டனர்.

    போர்த்துக்கேயர் காலத்தில் வில்லவர் மக்கள் பல குலங்களாகப் பிரிந்து, மீண்டும் எழ முடியாதபடி பலவீனமடைந்தனர்.

    வெள்ளாளரை வலுப்படுத்துதல்

    வேணாட்டில் 1610 இல் கொச்சி பிராமண பண்டாரத்தில் வம்சத்துடன் பல நாயர்களும் வேணாட்டுக்கு அனுப்பப்பட்டபோது வெள்ளாளர்கள் பலப்படுத்தப்பட்டனர்.

    பிராமண அரசர்களின் நிறுவல்

    போர்த்துகீசியர்கள் 1610 ஆம் ஆண்டில் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமண பண்டாரத்தில் இளவரசிகள் மற்றும் இளவரசர்களை வேணாடு அரசர்களாகவும் அரசிகளாகவும் நிறுவினர்.

    இதற்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. பிராமண ராணிகள் தங்களை நம்பிராட்டியார் என்றும் மன்னர்கள் பண்டாரத்தில் என்றும் அழைக்கப்பட்டனர்.

    வெள்ளாளர்களின் உயர்ச்சி

    1610க்குப் பிறகு எட்டுவீட்டில் பிள்ளைமார் என்ற வெள்ளாள கலப்பு நாயர்களின் எட்டு வீடுகள் தோன்றின. வேளாளரும் நாயர்களுடன் சேர்ந்திருந்தனர். எட்டுவீட்டில் பிள்ளைமார் நம்பிராட்டியார்-பண்டாரத்தில் பிராமண வம்சத்தை ஆதரித்த போதிலும், கி.பி. 1660க்குப் பிறகு போர்த்துகீசிய ஆட்சி முடிவுக்கு வந்ததும் அதை எதிர்க்கத் தொடங்கினர்.

    Reply
  35. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    தாய்வழி முறை மற்றும் பல கணவருடைமை

    பல வெள்ளாள குடும்பங்கள் மருமக்கத்தாயம் அல்லது தாய்வழி முறையை ஏற்றுக்கொண்டது, இது நாயர்களுக்கு வெள்ளாள வீடுகளுக்குச் செல்லவும், வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் கொள்ளவும் உதவியது. வேளாளர் பெண்கள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருந்தனர். சம்பந்தம் என்பது திருமணம் இல்லாத உறவுமுறை. அனைத்து நாயர்களும் பல பதிகளுடைமை முறையை கடைப்பிடித்ததால், பல நாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு வெள்ளாள பெண்ணுடன் சம்பந்தத்தை வைத்திருந்தனர். சம்பந்தம் வைத்திருந்த ஒவ்வொரு நாயரும் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பலாம் அல்லது திரும்பாமல் போகலாம். வேளாளப் பெண்ணுடன் சம்பந்தம் கொண்ட நாயர்கள் இவ்வாறு பிறந்த குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் தந்தை யார் என்று நிறுவ முடியாது.

    இதில் பிறந்த குழந்தைகள் காரணவர் என்ற தாய் மாமாவின் பாதுகாப்பில் தம் தாய்மார்களுடன் தங்கினர். வருகை தரும் நாயர் அல்லது வெள்ளாளருக்கு விருந்தோம்பல் செய்வதற்கும் காரணவர் பொறுப்பேற்றார். ஒரு நாயர் சம்பந்தம் வைத்திருக்கும் போது, ​​மூடிய கதவுக்கு வெளியே தனது கைத்தடியை விட்டுச் செல்வார். அதே நேரத்தில் இன்னொரு நாயர் அங்கு சென்றால், அறைக்குள் இன்னொரு நாயர் இருப்பது அவருக்குத் தெரிய வரும். அவர் காத்திருக்கலாம் அல்லது பின்னர் வரலாம்.

    தாய்வழி வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வேளாள ஆண் வேறொரு வெள்ளாள வீட்டிற்குச் சென்று அங்குள்ள வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் செய்வான். கி.பி 1335 முதல் 1947 வரை திருமணங்கள் மற்றும் கணவன்-மனைவி குடும்பங்கள் தாய்வழி வெள்ளாளர்களிடையே இருக்கவில்லை.எனினும் வெள்ளாள ஆண்கள் நாயர் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நாயர் பிள்ளைகள் தாய்மார்களின் குலப்பெயரை ஏற்றுக்கொள்வதால், வெள்ளாளத் தாய்மார்களைக் கொண்ட பல நாயர்களுக்கும் பிள்ளை என்ற குடும்பப்பெயர் உள்ளது.பல பிள்ளைகள் அதாவது வெள்ளாள கலப்பு நாயர்கள், நாயர் சமூகத்தில் சேர்ந்து நாயர்களின் துணைஜாதியாக மாறினர், மீதமுள்ளவர்கள் தாய்வழி வெள்ளாளர்களுடன் இருந்தனர்.வில்லவர் மக்கள் மற்றும் அவர்களின் சேர வம்சத்தின் பிரபுக்களாக இருந்த வெள்ளை நாடார்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் நாயர்களை ஆதரித்தனர்.

    விஜயநகரப் படையெடுப்பு கி.பி 1377

    1377 இல் விஜயநகரப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் சக்தி கணிசமாகக் குறைந்தது.வெள்ளாளர் 1380 முதல் 1453 வரையிலான காலப்பகுதியில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் விதத்தில் கல்வெட்டுகளின் வரிசையை வைக்கத் தொடங்கினர்.1406 திருவிதாங்கோடு கல்வெட்டுகி.பி 1406 இல், வெள்ளாளர்கள் தங்கள் உத்தரவை மீறிய கனக்கு கோளரி அய்யப்பன் உட்பட மூன்று வெள்ளை நாடார்களுக்கு மரண தண்டனை விதித்தனர்.இந்த மரணதண்டனை நூற்றுக்கணக்கான வெள்ளாளப் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும்.
    ஆனால் வெள்ளை நாடார்கள் வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.1416 அம்பாசமுத்திரம்1453 திருவிதாங்கோடு மற்றும் கல்லிடைக்குறிச்சி.கி.பி 1453க்குப் பிறகு வெள்ளைநாடார் கல்வெட்டுகளை நாம் காணவில்லை.

    வெள்ளைநாடார் கல்வெட்டுகள் தனித்துவமானது, ஏனெனில் வெள்ளாளர்களைத் தவிர வேறு எந்த இனமும் தங்கள் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்கக் கூடாது என்று கோரி கல்வெட்டுகளை வைத்திருந்தில்லை. நிலப்பிரபுத்துவ முறையில் வெள்ளாளப் பெண்களை கி.பி 1453 வரை வெள்ளை நாடார்கள் காமக்கிழத்திகளாக வைத்திருந்திருக்கலாம்.

    வில்லவர் இறைமை

    1383 முதல் 1595 க்கு இடையில் கொல்லத்தின் சேராய் இளவரசர்களுடன் ஆற்றிங்கல் ராணியின் சம்பந்தம் மூலம் ஒரு ஆட்சியாளர்களின் வம்சம் தோன்றியது. இந்த பாதி துளு பாதி தமிழ் வில்லவர் சேராய் வம்சம் தாய்வழி வம்சமாக இருந்தது மற்றும் அது ஜெயசிம்ஹவம்சம் என்று அழைக்கப்பட்டது. இரண்டு போட்டி வம்சங்கள், துளு-ஆய் மற்றும் துளு-சேராய் வம்சம் ஆகிய இரண்டும் நாயர்களால் ஆதரிக்கப்பட்டன.

    Reply
  36. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    போர்த்துகீசியர் ஆட்சியின் முடிவுக்குப் பிறகு எட்டுவீட்டில் பிள்ளைமார் குடும்பங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறின.

    1. குளத்தூர்
    2. கழக்கூட்டம்
    3. செம்பழந்தி
    4. குடமண்
    5. பள்ளிச்சல்
    6. வெங்கானூர்
    7. ராமநாமடம்
    8. மார்த்தாண்டமடம்

    எட்டுவீட்டில் பிள்ளைமார் பிராமண ராணி உமையம்மா ராணியின் ஆறு மகன்களை நீரில் மூழ்கடித்து கொன்றாலும், அவர்களால் அவளை ஆட்சியில் இருந்து அகற்ற முடியவில்லை.நாயர்கள் மற்றும் வெள்ளாளர்களின் சண்டைத் திறன்நாயர் இருவருமே வில்லவர், பணிக்கர் போன்ற போர்வீரர்கள் அல்ல. ஆனால் கேரளாவில் 17 ஆம் நூற்றாண்டில் அதிக எண்ணிக்கையிலான நாயர் படைகள் இருந்தனர், அதாவது சுமார் 135000 நாயர் வீரர்கள் இருந்தனர்.

    சேர வம்சத்தினர் 30000 எண்ணமுள்ள படைகளை மட்டுமே கொண்டிருந்தனர், பாண்டிய வம்சத்தில் அதிகபட்சமாக 50000 வீரர்கள் இருந்தனர்.நாயர்களுக்கு சண்டை திறன் இல்லை, வெள்ளாளர்கள் வீரர்கள் அல்ல, பயந்த விவசாயிகள் மட்டுமே.ஆனால் ஐரோப்பிய ஆயுதங்கள் ஏந்திய நாயர்கள் கேரளாவின் பூர்வீக திராவிட மக்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பயமுறுத்தி கட்டுப்படுத்தினர். நாயர்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருந்தது. ஆனால் எந்த வெளி ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராக நாயர் படைகள் பயனற்றவை.

    முகிலன்1682 இல் ஒரு கிளர்ச்சியாளராகிய, முகலாய சிர்தார் தனது நன்கு பயிற்சி பெற்ற 500 எண்ணிக்கையிலான முகலாய இராணுவத்துடன் வேணாட்டின் மீது படையெடுத்தார். வேணாட்டின் 30000 எண்ணிக்கை கொண்ட நாயர் படை முகிலனின் நன்கு பயிற்சி பெற்ற வீரர்களுக்கு அருகில் செல்ல விரும்பவில்லை. முகிலன் ஆறு மாதங்களுக்கும் மேலாக தோவாளை மற்றும் வர்க்கலை மற்றும் தலைநகரான ஆற்றிங்கலுக்கு இடையே வரி வசூலித்தார். ஆற்றிங்கல் ராணியும் அவளது 30000 நாயர் வீரர்களும் தலைநகரை கைவிட்டு தப்பினர். முகிலன் மணக்காட்டில் தங்கியிருந்தபோது, ​​அவரது படைகள் 5 முதல் 10 வீரர்கள் கொண்ட குழுக்களாகப் பிரிந்து வேணாடு முழுவதும் ஆறு மாதங்கள் வரி வசூல் செய்தனர்.

    முகிலனுக்கு மணக்காட்டு முஸ்லிம்களின் ஆதரவு இருந்ததால் எந்த நாயரும் முகிலன் படையுடன் போரிடத் துணியவில்லை. முகிலன் திருவட்டாரில் கோயில்களை இழிவுபடுத்தினார். அதிர்ஷ்டவசமாக ஆறு மாதங்களுக்குப் பிறகு முகிலன் தேனீக் கூட்டத்தால் குத்தி, குதிரையிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அப்போது துணிச்சலான நாயர்கள் தூரத்தில் நின்று கொண்டு கவண்களைப் பயன்படுத்தி, கற்களை எறிந்தும், தூரத்திலிருந்து அம்புகளை எய்தும் முகிலனைக் கொன்றனர்.

    பொதுவாக நாயர்கள் முஸ்லிம்கள் தங்கள் பக்கம் இருக்கும் போது நன்றாக சண்டை போடுவார்கள். முஸ்லீம்கள் எதிர் பக்கம் இருந்தால் நாயர்கள் ஓடிவிடுவார்கள்.நாயக்கர்நாயர்களின் தப்பியோடும் போக்கைப் பற்றி அறிந்த விஜயநகர நாயக்கர்கள் 30000 எண்ணிக்கையிலான வேணாடுக்கு எதிராக 5000 க்கும் மேற்பட்ட படைகளை அனுப்பவில்லை. நாயக்கர்கள் எப்பொழுதும் வென்றார்கள், அதே சமயம் நாயர்கள் தப்பி ஓடினார்கள்.

    1634 இல் இரவி குட்டிப்பிள்ளை நாயக்கர்களுடன் போரிடத் துணிந்தார். 15 நிமிடப் போருக்குப் பிறகு இரவிக்குட்டி பிள்ளை கொல்லப்பட்டார் மற்றும் நாயர் இராணுவம் சிதைக்கப்பட்டதுஐரோப்பிய ஆயுதங்கள் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் நாயர்களுக்கு துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களை வழங்கி வந்தனர். அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் தொடர்ச்சியான இருப்பு நாயர்களுக்கு உதவியது.

    வேணாட்டில் பிரிட்டிஷ் கோட்டை

    1695 இல் அஞ்சு தெங்கு கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டி முடிக்கப்பட்டது.தலச்சேரியில் ஆங்கிலேயர்கள் மற்றொரு கோட்டையைக் கொண்டிருந்தனர். பிள்ளைமாருக்கு எதிராக உமையம்மா ராணியுடன் ஆங்கிலேயர்கள் கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.

    Reply
  37. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வேணாட்டில் பிரித்தானியர்கள்

    கி.பி 1695 இல் ஆங்கிலேயர்கள் அஞ்செங்கோ கோட்டையை நிறுவியபோது தொழிற்சாலையின் தலைவராக இருந்த ராபர்ட் ஆடம்ஸ் மலபார் விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். ராபர்ட் ஆடம்ஸ் இத்தமர் ராஜாவால் ஆளப்பட்ட பேப்பூர் தட்டாரி கோவிலகம் என்று அழைக்கப்படும் பேப்பூரின் குட்டி சாமந்தர்களின் குடும்பத்திலிருந்து சில இளவரசர்களையும் இளவரசிகளையும் அனுப்பினார். இந்தக் குடும்பம் கோலத்திரியின் பரப்பநாடு கிளையின் சிறு கிளையாக இருந்தது. சாமந்தா என்ற பெயர் கொண்ட அவர்கள் கோலத்திரிகளின் முக்கிய வரிசையைச் சேர்ந்தவர்கள் அல்ல, மாறாக சாமந்தா (க்ஷத்திரியர்களுக்கு சமம்) நிலைக்கு உயர்த்தப்பட்ட துளுநாட்டின் பன்ட்டு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. பாணா இனத்தைச் சேர்ந்த துளுநாட்டின் சிப்பாய் வகுப்பினர் பன்ட்டுகள். ஆனால் அனைத்து துளு வம்சத்தினரும் நம்பூதிரி அல்லது நாயர்களுடனுள்ள தங்களுடைய சம்பந்தம் மூலம் நேபாள இரத்தத்தையும் கொண்டிருந்தனர்.

    கோலத்திரி வம்சத்து இளவரசிகள் அடுத்த அரசனுக்கு தந்தையாக நம்பூதிரிகளுடன் சம்பந்தம் வைத்திருந்தனர். திருவிதாங்கூரின் பேப்பூர் தட்டாரி வம்ச இளவரசிகள் துளு பன்ட் சமூகத்தைப் போலவே தங்கள் சொந்த தாய்வழி உறவினர்களுடன் சம்பந்தம் கொண்டிருந்தனர். பேப்பூரில் இருந்து தத்தெடுப்புகள்1696 இல் இட்டமர் ராஜாவின் பேப்பூர் தட்டாரி கோவிலகத்திலிருந்து, இளவரசர்களும் இளவரசிகளும் பிரித்தானியப் பாதுகாப்பின் கீழ் வேணாடு அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    இந்த பேப்பூர் தட்டாரி வம்சம், 1721 கி.பி முதல் 1947 கி.பி வரை திருவிதாங்கூரை ஆண்ட ஒரு தாய்வழி துளு வம்சமாகும், இது பரப்பநாட்டில் உள்ள கோலத்திரி வம்சத்தின் ஒரு கிளை ஆகும்.

    கோலத்திரி வம்சம் கிபி 1156 இல் துளுநாட்டின் ஆலுப வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்பவரால் நிறுவப்பட்டது.

    வேணாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பேப்பூர் தட்டாரி வம்சம் ஒரு முறையற்ற வம்சம் என்று நினைத்தார்கள். பிள்ளைமார் இந்த வம்சத்தை அகற்ற முயன்றனர் ஆனால் பேப்பூர் வம்சம் ஆங்கிலேயர்களால் பாதுகாக்கப்பட்டது.

    வில்லவர்கள் அடக்கப்படல்

    ஆங்கிலேயர்கள் இந்த காட்டுமிராண்டித்தனமான துளு-நேபாள வம்சத்தை திருவிதாங்கூரில் நிறுவிய பிறகு, வில்லவர் அவர்களின் பெரும்பாலான நிலங்களை இழந்தனர் மற்றும் வில்லவர்களை அடக்க ஒடுக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    ராமராஜா ஆதித்ய வர்மா (கி.பி. 1711 முதல் கி.பி. 1721 வரை)
    தலைநகரம்: கல்குளம்

    அவர் பிள்ளமார் மற்றும் நெடுமங்காடு ராஜாவுடன் சமாதானம் செய்தார். அவர் டச்சுக்காரர்களுடன் கூட்டு வைத்தார். அவர் பிள்ளைமார் (தாய்வழி வெள்ளாள+நாயர்) குடும்பங்களில் இருந்து திருமணம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கினார்.

    நாயர்கள் தாய்மார்களின் குடும்பப்பெயர்களைப் பயன்படுத்தியதால் அவர்கள் வெள்ளாளப் பட்டமாகிய பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்கள். திருவிதாங்கூர் ராணிகள் பாணப்பிள்ளை அம்மா என்று அழைக்கப்பட்டனர் இந்த திருமணத்தின் மூலம் அவருக்கு கல்யாணிபிள்ள கொச்சம்மா என்ற ஒரு மகள் இருந்தாள். எட்டுவீட்டில் பிள்ளைமார்கள் அவருக்கு விஷம் கொடுத்ததால் அவர்களுடனான நட்பு முடிவுக்கு வந்தது. அவர் பத்மநாபபுரத்தில் உள்ள தர்ப்பகுளங்கரை அரண்மனையில் இறந்தார்.

    அம்மவீடு

    இக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் ராணியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நான்கு அம்மவீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தெற்கிலிருந்து வந்த பிள்ளைமார் வீடுகள். ஆங்கிலேயர் வரும் வரை, வேணாட்டின் துளு-நேபாள வம்ச மன்னர்கள் சம்பந்தம் மாத்திரம் வைத்துக்கொண்டனர். திருமணம் செய்வதில்லை. . மற்ற அரசர்களைப் போல அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    1711 முதல் வேணாடு மன்னர்கள் திருமணம் செய்ய தொடங்கினார்கள். திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் எதிரிகளான பிள்ளமார் குடும்பங்களில் இருந்து திருமணம் செய்து கொள்ளத் தொடங்கினர். பிள்ளமாரின் அம்மவீட்டில் இருந்து திருமணம் செய்த முதல் மன்னர் ஆதித்ய வர்மா.

    ஆனால் கி.பி 1721 இல் பிள்ளமாரால் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகுதான் வேணாடு மன்னர்கள் எதிரிகளான பிள்ளைமார்-நாயர்களின் சூத்திர குடும்பங்களில் இருந்து திருமணம் செய்யும் வழக்கம் தொடங்கியது. இந்த திருப்பம் பிள்ளைமாரின் ஆணவத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

    நான்கு அம்மவீடுகள் இருந்தன

    1. அருமனை அம்மவீடு
    2. வடசேரி அம்மவீடு
    3. நாகர்கோவில் அம்மவீடு
    4. திருவட்டார் அம்மவீடு

    Reply
  38. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    அஞ்சு தெங்கு படுகொலை (1721 கி.பி)

    கி.பி 1721 இல் ஆற்றிங்கல் அரண்மனைக்கு விருந்துக்கு அழைக்கப்பட்ட 140 நிராயுதபாணிகளான ஆங்கிலேயர்கள், பிள்ளைமார் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கோழைத்தனமான முறையில் ஆங்கிலேயர்களை ஆற்றிங்கல் ராணி விருந்துக்கு அழைத்தார். ஆனால் நாயர்கள் தந்திரமாக ஆங்கிலேய வணிகர்களிடம் அரண்மனை என்பதால் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    ஆனால் அந்த இரவில் நூற்றுக்கணக்கான நாயர்களும் முஸ்லிம்களும் நிராயுதபாணிகளான பிரிட்டிஷ் வர்த்தகர்களைக் கொன்று குவித்தனர். பிரிட்டிஷ் வர்த்தகர்களின் போட்டியை முஸ்லிம் வர்த்தகர்கள் விரும்பவில்லை.முஸ்லீம்களுடன் இணைந்து போரிடும் போது நாயர்கள் எப்போதும் நன்றாகப் போராடினார்கள். எதிரிகள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் ஓடிவிடுவார்கள்.

    அஞ்செங்கோ கோட்டை முற்றுகை

    78 ஐரோப்பியர்களால் மாத்திரம் பாதுகாக்கப்பட்ட அஞ்செங்கோ கோட்டையை பிள்ளைமாரால் கைப்பற்ற முடியவில்லை. கோட்டைக்குள் இருந்த 78 ஐரோப்பியர்கள் உதவி வரும் வரை ஆறு மாதங்களுக்கு கோட்டையை வெற்றிகரமாக பாதுகாத்தனர். 17ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் ராணுவத்தில் 30000 நாயர் வீரர்கள் இருந்தனர். ஆனால் ஐரோப்பியர்களிடம் துப்பாக்கிகள் இருந்ததால் எந்த பிள்ளைமார்-நாயருக்கும் கோட்டைக்கு அருகில் செல்ல தைரியம் இல்லை.

    பிள்ளைமாரின் துரோகமும் கோழைத்தனமும் அப்படித்தான். அவர்கள் நிராயுதபாணிகளை கொன்றனர். அவர்கள் போரில் ஈடுபடுவதை விட உணவில் விஷம் கொடுப்பதை விரும்பினர். 1671 முதல் 1721 வரை வேணாட்டின் பல மன்னர்களை பிள்ளைமார் அவர்களின் உணவில் விஷம் வைத்து கொன்றனர். 1692 ஆம் ஆண்டு முகிலனின் 500 பலம் வாய்ந்த முகலாயப் படைகளுடன் சண்டையிட பயந்து முகிலன் தண்ணீர் எடுத்த கிணற்றில் பிள்ளமார் விஷம் வைத்தனர். அதில் அவர்கள் வெற்றிபெறவில்லை.ஆனால் துரோகிகளான பிள்ளைமார் மற்றும் வெள்ளாளர்கள் ஆங்கிலேயர்களால் பயிற்றுவிக்கப்பட்டு திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆதரவாளர்களாக ஆக்கப்பட்டனர்.

    இதனால் எந்த இராணுவத் திறமையும் இல்லாத விவசாய வேளாளர்கள் திருவிதாங்கூர் இராணுவத்திற்கு தலைமை தாங்கினர். இது சேர வம்சத்தின் உண்மையான மாவீரர்களாக இருந்த வில்லவர்களை போர்த்தொழிலிருந்து நீக்கியது. ஆங்கிலேயர்கள் வில்லவர் குலங்களை ஒடுக்க கோழைத்தனமான விவசாய களப்பிரர்களான வெள்ளாளர்களை பயன்படுத்தினர்.

    போலி திருவிதாங்கூர் ராஜவம்சம்

    1696 முதல் ஆங்கிலேயர்கள் பேப்பூர் தட்டாரி வம்சம் என்ற துளு-சாமந்தா வம்சத்திலிருந்து இளவரசர்களை அழைத்து வந்து உமையம்மா ராணியால் வேணாட்டின் இளவரசர்களாக தத்தெடுக்கப்பட வைத்தனர். இதனால் பிரிட்டிஷ் தொழிற்சாலைத் தலைவர் ராபர்ட் ஆடம்ஸ் மற்றும் அவரது மருமகன் அலெக்சாண்டர் ஆகியோர் ஒரு போலி துளு வம்சத்தை உருவாக்கினர், இதை பிள்ளைமார் சட்டவிரோதமானது என்று கருதி அதன் மன்னர்களுக்கு விஷம் கொடுத்தனர்.

    ஆயினும்கூட, ஆங்கிலேயர்கள் 1705 முதல் 1947 வரை திருவிதாங்கூரை ஆண்ட துளு பேப்பூர் தட்டாரி வம்சத்தை பாதுகாத்தனர். இந்த பேப்பூர் தட்டாரி வம்சத்தினர் ஆங்கிலேயரின் பாதுகாப்பில் வில்லவர் மக்களை அடக்க ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றினர்.

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    ராமராஜ ராம வர்ம குலசேகரப் பெருமாள் (கி.பி. 1721 முதல் கி.பி. 1728 வரை)

    நெய்யாற்றங்கரை இளவரசர்,இட்டாமர் ராஜாவின் மகள் ராணி கார்த்திகை திருநாளின் மகன்.ராம வர்மாவின் இரண்டு மருமகன்கள் ஒருவர் இரணியல் இளவரசர், மார்த்தாண்ட வர்மா, மற்றவர் நெய்யாற்றின்கரை இளவரசர்.ராமவர்மா 1723 இல் கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒரு உடன்படிக்கையை முடித்தார், அதில் அவர் ஆற்றிங்கல் படுகொலைக்கு பழிவாங்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கினார் மற்றும் சோழமண்டல கடற்கரையிலிருந்து மறவர் குதிரைப்படையை வேலைக்கு அமர்த்த பிரிட்டிஷார் உதவினர்.

    பிரிட்டிஷ்காரர்கள் அவருக்கு திருச்சியில் இருந்து ஒரு இராணுவத்தை அனுப்பியது.

    Reply
  39. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    ஒரு வெள்ளாள பெண்ணுடன் ராமவர்மாவின் திருமணம்

    1721 இல் ராமராஜ ராம வர்மா நாகர்கோவிலில் அதிகாரப்பூர்வமாக அபிராமி என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளாளப் பெண்ணை மணந்தார், அவருடைய அரசப் பட்டம் கிட்டினத்தில் அம்மச்சி பாணப்பிள்ளை அம்மா ஸ்ரீமதி அபிராமிப்பிள்ளை கொச்சம்மா. அபிராமி ஒரு முன்னாள் தேவதாசி அல்லது கோவில் நடனக் கலைஞராக இருந்துள்ளார். அபிராமி சுசீந்திரம் கோயிலுக்கு யாத்திரைக்கு வந்திருந்தார். சேலத்தைச் சேர்ந்த தமிழ் வேளாளர் கிருஷ்ணன் கொச்சுகுமார பிள்ளையின் மகள் அபிராமி.

    ஆனால் வேளாளர்கள் சூத்திரர்கள் என்பதால் அவளை பெங்காலி என்று சொல்லி அவளது அடையாளத்தை மறைக்க முயன்றனர். அவருக்கு பப்பு தம்பி, ராமன் தம்பி என்று இரண்டு மகன்களும், இம்மிணி தங்கச்சி என்ற மகளும் இருந்தனர்.

    கிபி 1721 முதல் கிபி 1736 வரையிலான காலகட்டத்தில் வேளாளர்களின் நிலை அரச வம்சத்திற்கு சமமாக இருந்தது. திருவிதாங்கூரை நிர்வகித்த தலவாக்கள் அக்காலத்தில் வேளாளர்கள். ஆனால் கி.பி 1737க்குப் பிறகு ராமய்யன் தளவா ஒரு தமிழ் பிராமணர் நியமிக்கப்பட்டதும் 1737 இல் வெள்ளாளர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. திருவிதாங்கூர் அரசிகளில் இருவர் வெள்ளாள வேர்களைக் கொண்டிருந்தனர். கி.பி 1721 இல் ராமவர்மா திருமணம் செய்து கொண்ட மன்னர் அபிராமி சேலத்தைச் சேர்ந்த ஒரு வேளாளர் பெண்மணி ஆவார். கி.பி 1843 இல் மன்னர் ஸ்வாதி திருநாளை மணந்த சுந்தர லட்சுமி தஞ்சாவூரைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஆவார், அவர் சைவ வேளாள முதலியார் துணைக்குழுவைச் சேர்ந்தவர்.
    நாடான்மார் மற்றும் பணிக்கன்மார்

    பல நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் குடும்பங்கள் பரம்பரையாக கூலிப்படையாகவும், ஆளும் அரசர்களின் தனிப்பட்ட பாதுகாவலர்களாகவும் பணியாற்றினர், மேலும் அரசரின் வாரிசுகளை பாதுகாத்தனர். நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் ஆகியோர் சாமுராய்களைப் போலவே தற்கொலைப் போராளிகள். அவர்கள் இரண்டு தனித்தனி குழுக்களாக இருந்தனர்.

    நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் ஆகியோரின் ஒரு குழு மன்னர்களின் மகன்களான பப்பு மற்றும் ராமன் தம்பியையும் மற்றொரு குழு மார்த்தாண்ட வர்மாவையும் பாதுகாத்தது. 1729 இல் நடந்த விசித்திரமான வாரிசுப் போரில், நாடான்மார்-பணிக்கன்மார் ஆகிய இரு குழுக்களும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டன. வலிய தம்பி குஞ்சு தம்பி கதைப்பாடல் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிற நூல்கள் நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் பற்றி குறிப்பிடுகின்றன,

    அவர்கள் முதலில் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் 1700 களில் கூலிப்படையின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    வாரிசுரிமைப் போர்

    கிபி 1729 முதல் கிபி 1739 வரையிலான வாரிசுப் போரில் வேளாளப் பெண்ணுக்குப் பிறந்த பப்பு தம்பியும், ராமன் தம்பியும் வேணாட்டுக்கு அரசராக விரும்பினர். வேளாளர்களிடமிருந்து தோன்றிய தாய்வழி வேளாளர்கள் மற்றும் பிள்ளைமார்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் தாய்வழி முறையை அகற்றி, ஆணாதிக்க சூத்திர வேளாளர் பரம்பரையை நிறுவ முயன்றனர்.

    வெள்ளாள வம்சத்தை நிறுவுவதற்கான முயற்சிகள் (கி.பி. 1729)

    தாய்வழி முறையில் அரசர்களின் சொந்த மகனுக்கு அடுத்த அரசராக வெற்றிபெற உரிமை இல்லை. மன்னர்கள் சூத்திரப் பெண்களை மணந்ததால், அவர்களின் மகன்களும் சூத்திரர்களாகக் கருதப்பட்டனர், அவர்கள் தம்பி, தங்கச்சி போன்ற தமிழ்ப் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். தம்பிகளும் தங்கச்சிகளும் நாயர் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டனர். ஆனால் 1729 ஆம் ஆண்டு வெள்ளாளர்களும் பிள்ளைமார்களும் பப்பு அல்லது ராமன் தம்பியை அரசனாக்க முயன்றனர். அவர்கள் பரம்பரை வேளாள வம்சத்தை உருவாக்க முயன்றனர்.

    ______________________________

    நாடார்களின் தடுமாற்றம்

    ______________________________

    1729 இல் இரணியல் இளவரசரின் இளவரசராக நியமிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூரின் அரசரானார். இரணியல் ஒரு முன்னாள் ஆய்-வில்லவர் அரச வீடு.இரணியல் அல்லது ஹிரண்ய சிம்ம நல்லூர் என்பது ஹிரண்யகசிபுவின் (இரணியன்) தலைநகரமாகும், இவர் வில்லவர்களின் மூதாதையரான அசுர வில்லவர் மன்னன் மகாபலியின் (மாவேலி) தாத்தா ஆவார்.

    ஆனால் இரணியல் கிபி 1333க்குப் பிறகு துளு-ஆய் வம்சத்தின் கைகளில் விழுந்தது. மார்த்தாண்ட வர்மா கோலத்திரியின் பரப்பநாடு கிளையின் கிளையான பேப்பூர் தட்டாரி கோவிலகத்தைச் சேர்ந்த துளு சாமந்த (பன்ட்) குலத்தைச் சேர்ந்தவர்.கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூரை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் தட்டாரி கோவிலகத்தின் மன்னர்கள்.பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைச்சேரி தொழிற்சாலையின் தலைவராக இருந்த ராபர்ட் ஆடம்ஸ் என்பவரால் இந்தக் குட்டிக் குடும்பம் திருவிதாங்கூரின் ஆட்சியாளர்களாக உயர்த்தப்பட்டது.

    Reply
  40. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளாள வம்சம்

    துளு பாணர்கள் வில்லவர் மக்களின் பாரம்பரிய எதிரிகள்.ஆனால் மார்த்தாண்டவர்மாவின் எதிரியான பப்பு தம்பியும் ராமன் தம்பியும் அபிராமி என்ற வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்ததால் பல நாடார்கள் மார்த்தாண்டவர்மாவுக்கு ஆதரவாகப் போராடினார்கள்.

    துளு-வெள்ளாள வம்சத்தை நிறுவுவதில் பிள்ளைமார் வெற்றி பெற்றால் நாடார்கள் அழிந்துவிடுவார்கள் என்பதுதான் அதன் காரணம்.ஆனால், நாடார்களின் நண்பனாகக் காட்டிக் கொண்ட நேர்மையற்ற மார்த்தாண்ட வர்மாவுக்கு கொடுத்த நாடார்களின் இந்த ஆதரவு நாடார் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மார்த்தாண்டவர்மா நாடார்களிடம் அவர் ஒரு வாண குலசேகரன் என்றும் நாடார்களின் உறவினர் என்றும் கூறினார்.பாணர் வில்லவரின் வட உறவினர்கள் என்பது உண்மைதான் ஆனால் பாணர்கள் வில்லவர்களின் பரம எதிரிகளும் ஆவர்.

    மார்த்தாண்ட வர்மாவை நாடார்கள் ஆதரித்தது ஒரு பெரிய தவறு, இது இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடார்களின் அடிமைத்தனத்திற்கு வழிவகுத்தது.நாடார்களின் வீழ்ச்சிக்கு மார்த்தாண்ட வர்மாதான் முக்கிய காரணம். நாடார் ஆதரவு இல்லாவிட்டால் மார்த்தாண்டவர்மா பிள்ளைமார்களால் எளிதில் கொல்லப்பட்டிருப்பார்.மார்த்தாண்ட வர்மா ஆற்றிங்கல் படுகொலையில் ஈடுபட்ட எஞ்சிய பிள்ளைகள் அனைவரையும் பிடித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார்.

    மார்த்தாண்ட வர்மா 1741 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் உதவியுடன் குளச்சல் போரில் டச்சுக்காரர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார்.

    குளச்சல் யுத்தம்

    1741 இல் பல நாடார்கள் குளச்சல் போரில் போரிட்டுள்ளனர். அந்த போருக்கு ஆனந்த பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார்.1745 இல் மார்த்தாண்டவர்மா தலைநகரை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்.வாரிசுப் போரில் தனக்கு உதவிய நாடார் தலைவர்கள் அனைவரையும் மார்த்தாண்டவர்மா திட்டமிட்டு படுகொலை செய்தார். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தார்.

    அனந்தபத்மநாபன் கொலை

    விருந்துக்கு அழைத்து ஆனந்தபத்மநாபன் நாடாரை மார்த்தாண்டவர்மா கொலை செய்தார். அனந்தபத்மநாபன் நாடார் அடிவயிற்றில் குறுப்பு கூலிப்படையினரின் வாள்வெட்டுக்களால் படுகாயமடைந்தார். வயிற்றில் காயத்தை துணியால் கட்டிக்கொண்டு குதிரையில் ஏறி வீட்டுக்கு வந்து இறந்தார்.

    நாடார்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வேளாளர் மற்றும் நாயர்களிடையே இந்தக் காலத்திலிருந்து விநியோகிக்கப்பட்டது.இவ்வாறு நேபாளத்திலிருந்து புலம் பெயர்ந்த துளு மற்றும் நேபாள மக்களின் கலவையான ஒரு காட்டுமிராண்டித்தனமான அன்னிய வம்சத்தை ஆதரிப்பதன் மூலம் நாடார்கள் தங்கள் சொந்த வீழ்ச்சியைக் கொண்டு வந்தனர். மார்த்தாண்டவர்மாவுக்கு ஆங்கிலேயர்களால் ராமய்யன் என்ற தமிழ் பிராமண மந்திரி தளபதி அனுப்பப்பட்டார்.

    மார்த்தாண்டவர்மா ஆங்கிலேயர் உதவியுடன் தமிழ்நாட்டின் எட்டயபுரம் (ராமய்யர்களின் இடம் ஏர்வாடிக்கு அருகில்) மற்றும் திருச்சியில் இருந்து கூலிப்படையை (கூலிப்பட்டளம்) அமர்த்தினார். இந்தப் படைகள் பெரும்பாலும் கள்ளர், மறவர் படைகளைக் கொண்டிருந்தன. இந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியின் போது நாயர்களுக்கு மேற்கத்திய இராணுவப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர். போர்த்துகீசியம் தொடங்கி ஐரோப்பியர்கள் வில்லவர் மக்களுக்கு விரோதமாக இருந்தனர்.

    Reply
  41. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    பாரபட்சமான ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள்

    கேரளாவை வில்லவர் வீரர்களின் திராவிட நாடு என்று ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் குறிப்பிடவில்லை. சங்க காலத்தில் நம்பூதிரிகளும், கிறிஸ்தவ மதம் மாறிய நம்பூதிரிகளும் அதாவது சிரியன் கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தியதாக ஐரோப்பியர்கள் கூறினர். துளு-நேபாள ஆக்கிரமிப்பாளர்கள் அதாவது சாமந்த க்ஷத்திரியர்கள், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் அரேபியர்களால் கி.பி. 1120 இல் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள் ஆனால் ஐரோப்பிய அறிஞர்களின் கூற்றுபடி அவர்கள் கேரளாவின் பழங்குடி மக்கள் ஆவர்.

    ஐரோப்பியர்களின் கூற்றுப்படி, கேரளாவில் வில்லவர் தமிழ் அரசுகள் இருந்ததில்லை. ஐரோப்பிய அறிஞர்களும் தமிழ் பிராமணர்களும் திராவிட வில்லவர்கள் இலங்கையிலோ அல்லது வேறு நாட்டிலோ வந்த வெளிநாட்டினர் என்று கூறினர். ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் சொற்களஞ்சியத்தில் இருந்து நேபாள மற்றும் சமஸ்கிருத வார்த்தைகளை மலையாளத்தில் சேர்த்தனர்.

    ஆறுமுகம் பிள்ளை

    ஆறுமுகம் பிள்ளை (கி.பி. 1729 முதல் கி.பி. 1736 வரை) திவானாக ஆக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் கிபி 1730 முதல் கிபி 1795 வரை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி திருவிதாங்கூரின் துளு வம்சத்தின் பாதுகாவலர்களாக இருந்தது. 1740 களில் புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடார்கள் கிளர்ச்சி செய்திருந்தால் அவர்கள் போரில் வெற்றி பெற்றிருப்பார்கள். இதைத் தொடர்ந்து வெள்ளாள, பிள்ளைமார், ஐயர் ஆகியோர் தளவாவாக அதாவது படைத் தளபதிகளாக நியமிக்கப்பட்டனர். தாணுப்பிள்ளை (கி.பி. 1736 முதல் 1737 வரை) ராமய்யன் தளவா (கிபி 1737 முதல் கிபி 1756 வரை)

    வேளாளர்கள் மறவர் படைகளின் உச்ச தளபதிகளாக ஆனார்கள் ஆனால் அவர்கள் இராணுவ திறமைக்கு பெயர் பெற்றவர்கள் அல்ல. ஆனால் மறவர்கள் வெள்ளாளர்களுடன் தொடர்புடைய நாகர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தனர். ஆங்கிலேயர்களும் தமிழ் பிராமணர்களும் தமிழ்நாட்டிலிருந்து படைகளை ஆட்சேர்ப்பு செய்ததன் பின்னணியில் இருந்தனர். எட்டயபுரத்தில் இருந்து கூலிப்படையை ராமய்யன் அழைத்து வந்தார். கள்ளர் மற்றும் மறவர் படைகள் நாடார் மற்றும் வில்லவர் மக்களுக்கு விரோதமாக இருந்தன. கள்ளர்களும் மறவர்களும் கேரளாவில் பெரிதாக மதிக்கப்படாததால் அவர்கள் தங்கள் குடும்பப்பெயர்களை பிள்ளை என்று மாற்றிக்கொண்டு நாயர்களாக வேடமிட்டனர். அவர்களில் சிலர் திருவிதாங்கூர் ராணுவத்தில் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டனர்.

    பிற்காலத்தில் தங்களை தமிழ் பதம் நாயர்கள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால் நாயர்களும் வெள்ளாளர்களும் அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலிருந்து கூலிப்படைகள் வரவழைக்கப்பட்ட பின்னர், உள்ளூர் நாடார்களுக்கு இராணுவ சேவை மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் படைகளில் கேரளாவைச் சேர்ந்த நாகர்கள், அதாவது நாயர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகர்களும் அதாவது கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர்கள் இருந்தனர்.

    தாணுப்பிள்ளை (கி.பி. 1736 முதல் 1737 வரை)

    தாணுப்பிள்ளையும் குமாரசாமிப்பிள்ளையும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தக் கூலிப்படையைக் கொண்டு காயங்குளம் போருக்குத் தலைமை தாங்கினார்கள். காயம்குளம் இராணுவத்தின் ஐயாயிரம் நாயர்கள் பாண்டிப்படையின் ஆயிரம் பேர் கொண்ட இராணுவத்தால் கொல்லப்பட்டனர். மறவர்களின் பாண்டி படைக்கு பொன்னம் பாண்டி தேவர் தலைமை தாங்கினார். மார்த்தாண்ட வர்மா தனக்கு விரோதமான நாயர்களை ஒடுக்கவும் கொல்லவும் மறவர்களின் வெளிநாட்டுப் படைகளைப் பயன்படுத்தினார்.

    அனந்தபத்மநாபன் நாடார் கொலை

    அனந்தபத்மநாபன் நாடார் (பிராந்தன் சாணன் அல்லது ஜால்மன்) மார்த்தாண்ட வர்மாவால் அனுப்பப்பட்ட கொலையாளிகளால் கொல்லப்பட்டார், அவருடைய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்தபத்மநாபன் நாடார் படுகொலையானது குளச்சல் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் அதாவது 1742 அல்லது அதற்குப் பிறகு நடந்தது.

    முக்கியமான நாடார்களின் நிலம் அபகரிக்கப்பட்டு வெள்ளாளருக்கும் பிள்ளைமார்களுக்கும் மறுபங்கீடு செய்யப்பட்டது. நாடார்களுக்கு ராணுவப் பணி மற்றும் அரசு வேலைகள் தடை செய்யப்பட்டன. இதற்கெல்லாம் பின்னால் ஆங்கிலேயர்களும் தமிழ் பிராமணர்களும் இருந்தனர்.

    Reply
  42. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    நன்றிகெட்ட மார்த்தாண்ட வர்மா

    மார்த்தாண்டவர்மா அம்மச்சி பிலாவு என்ற பலா மரத்தின் குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது, ​​எட்டுவீட்டில் பிள்ளைமார் அனுப்பிய 30 நாயர் மற்றும் குறுப்பு கொலையாளிகளை பிராந்தன் சாணான் என்கிற அனந்த பத்மநாபன் நாடார் போரிட்டு கொன்றார். வாய்வழி மரபுகளின்படி மார்த்தாண்டவர்மா பிராந்தன் சாணனால் காப்பாற்றப்பட்டார். ஆனால் பிராந்தன் சாணானின் கொலைக்குப் பிறகு மார்த்தாண்ட வர்மா தான் காப்பாற்றப்பட்டது பிராந்தன் சாணனால் அல்ல என்றும் ஶ்ரீகிருஷ்ணர் ஒரு சிறுவன் வடிவில் வந்து காப்பாற்றினார் என்றும் கூறினார்.

    இதேபோல் வாய்வழி மரபுகளின்படி மணக்காடு, கோட்டார் போன்ற முஸ்லிம் குடியிருப்புகளில் மார்த்தாண்ட வர்மா பெண் வேடமிட்டு மறைந்திருந்தார். அதே சமயத்தில் நாடார்கள் எட்டுவீட்டில் பிள்ளைமார்களின் படைகளுடன் போரிட்டு அவர்களை தோற்கடித்தனர். தனக்காகப் போரிட்ட நாடார்களுக்கு மார்த்தாண்ட வர்மா நன்றி செலுத்தவில்லை ஆனால் அவர்களில் பலரைக் கொன்றார்.

    சிவி ராமன் பிள்ளையின் பொய்கள்

    1891 ஆம் ஆண்டு சி.வி.ராமன் பிள்ளை எழுதிய நாவலில் பிராந்தன் சாணான் எட்டுவீட்டில் பிள்ளைமாரில் ஒருவரான திருமுகத்துப் பிள்ளை என்ற நாயரின் மகன் என்று கூறியிருந்தார். ஆனால் வரலாற்று ரீதியாக திருமுகத்துப் பிள்ளை என்று யாரும் இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீரம் மிக்க வீரர்கள் நாடார்கள், பணிக்கர் மற்றும் குறுப்பு வீரர்கள்தான்.

    நாடார்களுக்கு விரோதமான தளவா மற்றும் திவான்கள்

    மார்த்தாண்டன் பகவதி பிள்ளை (கி.பி. 1756 முதல் 1763 வரை)
    சுப்பையன் தளவா (சங்கர சுப்ரமணிய ஐயர்)(கி.பி 1763 முதல் கிபி 1768 வரை)
    கிருஷ்ண கோபாலய்யன் ஐயர் (கி.பி. 1768 முதல் கி.பி. 1776 வரை)
    வாதிஸ்வரன் சுப்ரமணிய ஐயர் (கி.பி. 1776 முதல் 1780 வரை)
    முள்ளென் செம்பகராமன் பிள்ளை (கி.பி. 1780 முதல் கி.பி. 1782 வரை)
    நாகர்கோவில் ராமய்யன் (கி.பி. 1782 முதல் கி.பி. 1788 வரை).

    அடிமைச்சட்டங்கள்

    18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரின் தளவா அல்லது திவான்கள் பெரும்பாலும் வெள்ளாளர் அல்லது ஐயர்களாக இருந்தனர்.இந்த காலகட்டத்தில் நாடார்கள் தங்கள் சொத்துக்களை இழந்தனர். நாடார்களின் நிலங்களைப் பறிக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டன. நாடார்களுக்கு பத்து ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது, இரட்டை மாடி வீடு கட்ட கூடாது போல சட்டங்கள் இயற்றப்பட்டன. மேலாடை அணிவது மற்றும் நாடார் பெண்கள் தங்கம் அணிவதைத் தடுப்பது ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் நாடார் நிலங்களை நாயர்களும் வெள்ளாளர்களும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர்.

    நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சட்டங்கள் நாடார்களுக்கு பத்து ஏக்கருக்கு மேல் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கவில்லை. நாடார்களுக்கு இரட்டை மாடி வீடுகள் கட்ட அனுமதி இல்லை. நாடார்கள் எப்போதும் நிலம் வைத்திருக்கும் வர்க்கமாகவே இருந்தனர். ஆனால், பத்து ஏக்கர் நில வரம்பு அனைத்து நாடார்களுக்கும் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படவில்லை.
    For
    18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடார்கள் தங்கள் நிலத்தின் பெரும்பகுதியை இழந்தனர் மற்றும் இராணுவ சேவை உட்பட அரசாங்க வேலைகளை ஆக்கிரமிக்க முடியவில்லை.

    நாடார்களுக்கு ஏராளமான களரிகள் இருந்தன மற்றும் பதினான்கு படவீடுகள், போர்க் கூடங்கள் இருந்தன. நாடார்களுக்கு ஆயுதம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. நாடார்களை அடிமைத்தனத்திற்கு கட்டாயப்படுத்த கொடூரமான சட்டங்கள் இயற்றப்பட்டன. நாடார்களை ஞாயிற்றுக்கிழமைகளில் கூலியின்றி அரசு நிலத்தில் வேலை செய்யச் சட்டம் இயற்றப்பட்டது. இது ஊழியம் எனப்பட்டது. நாடார்கள் அதிக வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    18 ஆம் ஆண்டு தமிழ் பிராமண நிர்வாகிகள் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளாகவும், ஆங்கிலேயர்களுக்கு பினாமிகளாகவும் இருந்தனர். இந்த தமிழ் பிராமண நிர்வாகிகள் நாடார்களின் மிக மோசமான எதிரிகளாக இருந்தனர்.

    ஹைதர் அலி மற்றும் திப்புவின் மலபார் படையெடுப்பு

    1766 முதல் 1785 வரையிலான தொடர் தாக்குதல்கள் மலபாரிலிருந்து திருவிதாங்கூருக்கு நாயர்களை வெளியேற்ற வழிவகுத்தது. திருவிதாங்கூரில் நாயர் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்தது. புதிய நாயர்களின் வருகையும், மலபார் நாயர்களுடன் சம்பந்தம் பெருகியதும் தாய்வழி வெள்ளாளர்களின் செல்வத்தை கணிசமாக அதிகரித்தது.

    Reply
  43. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    பிரித்தானியரின் நேரடி ஆட்சி (1795 கி.பி.)

    1795 க்குப் பிறகு திருவிதாங்கூரின் பிரிட்டிஷ் நிர்வாகிகள் பெரும்பாலும் தமிழ் பிராமணர்களாக இருந்தனர். கி.பி.1795ல் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி நிறுவப்பட்டதும், நாடார்களுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு நிலங்களில் பணம் இல்லாமல் கட்டாய விவசாயப் பணி செய்வது போன்ற தண்டனை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன.
    இந்த கட்டாய உழைப்பு ஊழியம் என்று அழைக்கப்பட்டது.

    இது நாடார்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வழிவகுத்தது. கி.பி.1795ல் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சிக்குப் பிறகு. திவான் அல்லது தளவா போன்ற உயர் பதவிகளை வகிக்க வேளாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய நிர்வாகிகளாக இருந்த தமிழ் பிராமணர்கள் மற்றும் மராட்டிய பிராமணர்களை விட வேளாளர் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தனர். உள்ளூர் பிள்ளைமார்களும் உயர் பதவிகளை வகிக்க அனுமதிக்கப்படவில்லை. பிள்ளைமாரும் வெள்ளாளரும் ஒரு தாழ்ந்த பிரபுத்துவத்தை உருவாக்கினர், ஆனால் கள்ளர், மறவர், யாதவர் போன்ற பல தமிழ் சாதியினரின் ஆதரவைப் பெற்றிருந்தனர். இந்த சாதிகளில் பலர் தங்களை பிள்ளைகள் என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இந்த மாறுபட்ட இனக்கும்பல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்களைத் தாக்கியது. வெள்ளாளர்கள் மற்றும் நாயர்கள் இருவரும் பண்டைய காலத்தில் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த வடக்கு நாகர்கள்.

    சவர்ணர்

    நாயர்களும் வெள்ளாளர்களும் சூத்திரர்களாக இருந்தாலும் சவர்ணராகக் கருதப்பட்டனர். திராவிட இனத்தைச் சேர்ந்த நாடார்களும் பிற வில்லவர்களும் அவர்ணராகக் கருதப்பட்டனர். அவர்ணர் என்றால் வில்லவர்கள் ஆரிய நான்கு சாதி அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்பதாகும். வில்லவ நாடார்கள் இனரீதியாக ஆரியர் அல்லது நாகா மக்களுடன் தொடர்பில்லாதவர்கள் என்பது உண்மைதான். வில்லவ நாடார்கள் சேர, சோழ பாண்டிய ராஜ்ஜியங்களின் திராவிட க்ஷத்திரியர்கள் ஆவர்.

    அரேபிய மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்கள் முக்கியமாக நாடார்களின் சீரழிவுக்கும் நாயர்கள் மற்றும் வெள்ளாளர்கள் போன்ற நாகர்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்தனர். ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆரிய நாக மக்களுடன் சேர்ந்து துளு சாமந்தா வம்சத்தை பாதுகாத்தனர். நாயர்கள் நேபாளத்திலிருந்து கிபி 345 இல் பரம்பரை அடிமைப் போர்வீரர்களாக கர்நாடகாவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

    வரலாற்றின் ஒரு விசித்திரமான திருப்பத்தால், நேபாளத்திலிருந்து வந்த நாக அடிமைகள், அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் பாதுகாப்பின் கீழ், கேரளாவின் வில்லவர் ஆட்சியாளர்களை விட உயர்ந்த அந்தஸ்தை அடைய முடிந்தது.

    வெள்ளாளரின் சீரழிவு (1795)

    கி.பி.1795க்குப் பிறகு வெள்ளாளர்களும் பிற திராவிட மக்களும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. பிரித்தானியரின் நேரடி ஆட்சியில் தளவா பதவி ஒழிக்கப்பட்டது. தமிழ் பிராமணர்களும் மராட்டிய பிராமணர்களும் பாலக்காட்டு மேனன்களும் மட்டுமே திவான்களாக அனுமதிக்கப்பட்டனர்.

    கேரளாவில் இருந்து நாயர் படைகள் வெளியேற்றப்படல்

    1795 வாக்கில், தமிழ்நாட்டிலிருந்து வந்த வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் திருவிதாங்கூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் மேன்மையை நிலைநாட்டினர். இந்த காலத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட குடியுரிமை மற்றும் திவான்கள் கேரளாவை மட்டுமே ஆட்சி செய்தனர். 1809 இல் வேலுத்தம்பி தளவாவின் கிளர்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கீழ் ஒரு நாயர் படைப்பிரிவை ஏற்பாடு செய்து அவர்களை கேரளாவிற்கு வெளியே மாற்றினர். நாயர் நீக்கம் வேளாளர்களை பலவீனப்படுத்தியது.

    Reply
  44. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    தோள்சீலை கலஹம்

    தோள்களில் அணியும் தோள் சீலை உயர்குடியின் அடையாளமாக இருந்தது. தோள்சீலை தோள்களில் தொங்கவிடப்பட்ட மெல்லிய நீண்ட துணி, அது மார்பகங்களை சிறிதாக மாத்திரம் மறைத்திருந்ததது. அந்த சகாப்தத்தில் யாரும் மார்பகங்களை மறைக்காததால், நாடார் பெண்களும் உண்மையில் தங்கள் மார்பகங்களை மறைக்க விரும்பவில்லை. நாடார் பெண்கள் விரும்பியது, பிரபுத்துவத்தின் அடையாளமான தோள் சீலையை அணிய வேண்டும் என்பதுதான். ஆனால் நாடார் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேல் துணியை அணிய முயன்றதாக பிரிட்டிஷ் மிஷனரிகளால் வேண்டுமென்றே அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

    கிறித்துவ நாடார் பெண்கள் ரவிக்கைகளையோ அல்லது சிரியன் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் குப்பாயத்தையோ அணிய விரும்பவில்லை. ஆனால் மிஷனரிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளாவில் யாரும் அணிந்திருக்காத ரவிக்கைகளை அணியச் செய்தனர். இதனால் நாடார் பெண்கள் தோள்சீலை அணிந்து, உயர்குடியாக அங்கீகரிக்கக் கோரி நடத்திய போராட்டம் வீணானது.

    மராட்டிய தேசாஸ்தா பிராமணர்கள் தமிழ் பிராமணர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள். அவர்கள் தஞ்சாவூர்க்காரர் என்றும் அழைக்கப்பட்டனர். மராட்டிய பிராமணர்கள் நாடார்களுக்கு விரோதமானவர்களாக இருந்தனர். மராட்டிய பிராமணரான வெங்கட ராவ் 1821 முதல் 1830 வரை திவானாக இருந்தார். அவர் நாடார்களுக்கு மிகவும் விரோதமாக இருந்தார். தோள் சீலை கலகம் அல்லது மேல் துணி கிளர்ச்சியின் போது வெங்கடராவ் நாடார்களுக்கு மேல் ஆடை அணிய உரிமை இல்லை என்று அறிவித்தார்.

    திருவிதாங்கூர் அரசிகளின் உடை

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரள ராணிகள் அணிந்திருந்த மூன்று துணிகள் இடுப்பில் அணிந்திருந்த உடுமுண்டு, தோளுக்குக் கீழே மார்பில் அணிந்திருந்த மேல்முண்டு, தோளில் அணிந்திருந்த மெல்லிய நீண்ட துணி தோள்சீலை. நாடார் பெண்கள் மேல்முண்டு அல்ல, மேல்மட்டத்தின் அடையாளமான தோள் சீலையை அணியும் உரிமைக்காகப் போராடினார்கள். 19 ஆம் நூற்றாண்டில் நம்பூதிரி பெண்கள் கூட தோள் சீலை மாத்திரம்தான் அணிந்திருந்தனர், மார்பகங்களை மறைக்கும் மேல்முண்டு அணியவில்லை.

    19 ம் நூற்றாண்டு வரை துளு-நேபாள மேற்குடி பெண்கள் உடுமுண்டு, தோள் சீலை மட்டுமே அணிந்திருந்தார்கள். டச்சு பிரதிநிதி ஜோஹான் நியுஹோஃப் 1672 ஆம் ஆண்டு கொல்லம் பிராமண ராணி உமையம்மா ராணியை சந்தித்தார், அப்போது உமையம்மா ராணி மார்பகங்களை மறைத்திருக்கவில்லை, ஆனால் அவர் தோள் சீலை அணிந்திருந்தார். உமையம்மா ராணியுடன் வந்த அரச பெண்கள் இடுப்புக்கு மேல் நிர்வாணமாக இருந்தனர்.

    1750 களில் திருவிதாங்கூரின் கட்டுப்பாட்டில் வந்த பிறகுதான் திருவிதாங்கூர் மன்னர்கள் ராஜஸ்தான் பாணி துணிகளை அணியத் தொடங்கினர், ராணிகள் மேல்முண்டு அணிந்து தங்கள் மார்பகங்களை மறைக்கத் தொடங்கினர். ஆனால் திருவிதாங்கூரின் துளு-நேபாள வம்சத்தினர் நாடார் பெண்கள் தோள் சீலை அணிவதைத் தடுத்தனர்.
    பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

    1822 முதல் 1829 வரையிலான தோள்சீலைக் கலஹத்தின் போது வெள்ளாளர்கள் நாயர்களுடன் கைகோர்த்து நாடார் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தாக்கத் தொடங்கினர். பல தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் எரிக்கப்பட்டன.

    அதே சமயம் வெள்ளாளர்கள் கோழைகள், நாயர்கள் மற்றும் பாண்டி களின் உதவியுடன் மட்டுமே நாடார்களைத் தாக்கினர்.

    Reply
  45. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    நாடார்களை காப்பாற்றிய துப்பாக்கிகள்

    1860 வாக்கில் கிறிஸ்தவம் நாடார்களிடையே பரவலாக பரவியது. பல நாடார்கள் பிரித்தானிய இந்தியாவிலும் வெளிநாட்டிலும் டீமேக்கர்களாகவும் மேலாளர்களாகவும் பணியாற்றினர். திருவிதாங்கூரில் ஒவ்வொரு கிறிஸ்தவ நாடார் குடும்பமும் இரட்டை குழல் துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.
    துப்பாக்கிகளுக்கு ஈய குண்டுகளை வீட்டிலேயே செய்யும் வழக்கம் நாடார்களுக்கு பொழுதுபோக்காக மாறியது. உருகிய ஈயத்தை ஒரு சல்லடையின் மேல் மாட்டு சாணம் கலந்த நீரில் ஊற்றி, அவர்கள் சிறிய ஈய உருண்டைகளை உருவாக்கினர். நாடார் குழந்தைகளுக்கு இரட்டை குழல் துப்பாக்கிகளில் பஞ்சு மற்றும் ஈயத் குண்டுகளை ஏற்றுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கப்பட்டது.

    நாடார்களிடம் இருந்த துப்பாக்கிகளால் நாடார்களை தாக்க எந்த நாயரோ வெள்ளாளரோ தயாராக இல்லை. நாடார்களுக்கு வெடிமருந்தில் நிபுணத்துவம் இருந்ததால் அவர்கள் அதை பாறைகளை வெடிக்க பயன்படுத்தினார்கள். இக்காலத்தில் பல நாடார்கள் குவாரி தொழில் செய்தனர். 1860 களில் இருந்து நாடார் உயரடுக்கின் அடையாளக் குறியாக இருந்தது, மேச்லாக் இரட்டை குழல் துப்பாக்கி.

    நாடார்கள் பாரம்பரியமாக வேட்டையாடும் மக்களாக இருந்ததால் அவர்கள் விலங்குகளை வேட்டையாட துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான நாடார்கள் துப்பாக்கி ஏந்திய காட்சி வெள்ளாளர்களை பதற்றமடையச் செய்தது..

    மரண பயம் மாத்திரம் நாயரையும் வெள்ளாளர்களையும் நாடார்களைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்தியது என்பதை பலர் உணரவில்லை. பல கிறிஸ்தவ நாடார்களுக்கு ப்ரீச் லோடிங் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளுக்கான உரிமம் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் அமைதியாக வழங்கப்பட்டது. வெள்ளாளர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படவில்லை.

    பழைய துருப்பிடித்த இரட்டை குழல் துப்பாக்கிகளை நாடார்கள் தூக்கி எறியக்கூடாது. இந்த துப்பாக்கிகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருவிதாங்கூர் நாடார் சமூகத்தின் பெருமையாகவும் அடையாளமாகவும் இருந்தன.

    கிழக்கிந்திய நிறுவனத்தைப் போல் விக்டோரியா நிர்வாகம் நாடார்களுக்கு விரோதமாக இருக்கவில்லை. ஆனால் இன்னும் பிரிட்டிஷ் ராஜ் திருவிதாங்கூரின் சட்டவிரோத துளு-நேபாள வம்சத்தையும் அவர்களின் வீரர்களான நாயர்களையும் கி.பி 1947 வரை ஆதரித்தார்கள்.

    சுதந்திரத்திற்குப் பிறகு வெள்ளாளர்கள்

    1940 களில் குழந்தைகளுக்கான பாடல் புத்தக எழுத்தாளர் ஒருவர் வெள்ளாளர்களின் தாய்வழி முறையின் நற்பண்புகளைப் புகழ்ந்து ஒரு புத்தகத்தை எழுதினார். தாய்வழி அமைப்பில் பெண்கள் பலகணவருடைமையை கடைப்பிடித்தனர். இந்த அமைப்பில் வருகை தரும் நாயர்கள், தினசரி நன்கொடைகளால் வெள்ளாளரை பெரும் செல்வந்தர்களாக ஆக்கினர். அதனால்தான் பல வேளாளர்கள் நாயர்களின் தாய்வழி மருமக்கத்தாய முறைக்கு திரும்ப ஏங்கினார்கள்.
    1333 முதல் 1947 வரை பல வேளாளர்கள் நாயர்களின் தாய்வழி, பலகணவருடைமை, மருமக்கள் வாரிசுரிமை முறையை கடைப்பிடித்தனர்.

    சோழிய வேளாளர்

    சோழிய வேளாளர் என்பவர்கள் எருமேலிக்கு அருகாமையில் காஞ்சிரப்பள்ளி மற்றும் கானம் பகுதிகளில் காணப்படும் வேளாளர் துணைக்குழு ஆகும். மாவேலிக்கரை, பந்தளம், காஞ்சிரப்பள்ளி ஆகியவை பாண்டியர்களின் ஆட்சிப் பகுதிகளாக இருந்தன. கிபி 1000 வாக்கில் சோழிய வேளாளர் சோழ படையெடுப்பாளர்களால் குடியேற்றப்பட்டிருக்கலாம்.

    வெள்ளாள சீர்திருத்தங்கள்

    சுதந்திரத்திற்குப் பிறகு, வேளாளர்கள் தாய்வழி முறையை படிப்படியாகக் கைவிட்டனர். பல குடும்பங்கள் இன்னும் நாயர்களுடன் நட்புறவைக் கொண்டிருந்தாலும் அவர்கள் திருமணம் செய்துகொண்டு குடும்பங்களை நடத்தத் தொடங்கினர். கி.பி.1335 முதல் 1947 வரை வேளாளருக்குப் பின்னால் தாய்வழி மற்றும் சம்பந்தம்தான் உண்மையான சக்தியாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு நாயர்களின் ஆதரவு இருந்தது. தாய்வழி மற்றும் பலநாயர்கணவருடைமை அமைப்பை விட்டு வெளியேறுவது அவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு முன், அவர்கள் தாய்வழியை கடைப்பிடித்த போது, ​​ஒவ்வொரு வெள்ளாள வீடும் நூற்றுக்கணக்கான நாயர்களால் பாதுகாக்கப்பட்டது.

    வேளாளர்கள் போர் சாதியினர் அல்ல, விவசாயிகளான களப்பிரர்கள் ஆவர். நாடார்களைப் போன்ற தற்காப்புக் கலைகளை அவர்கள் அரிதாகவே பயிற்சி செய்தனர். ஆனால் வேளாளர்கள் நாயர்களால் பாதுகாக்கப்பட்டனர். நாயர்கள் ஆங்கிலேயர்களால் பாதுகாக்கப்பட்டனர்.

    Reply
  46. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    தேயிலை தோட்ட உரிமையாளர்களாக நாடார்கள்

    தேயிலை தோட்டங்களின் பிரிட்டிஷ் உரிமையாளர்கள் 1960 களில் மட்டுமே இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இவற்றில் சில தோட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு நாடார்களுக்கு வழங்கப்பட்டன. இது ஒரு பணக்கார நாடார் தோட்டக்காரர் வகுப்பை உருவாக்கியது.

    நாடார்களுக்கான கல்வெட்டு இல்லை

    சுதந்திரத்திற்குப் பிறகும் கூட வேளாளர்கள் நாடார்களின் பண்டைய மற்றும் இடைக்கால உரிமைகளை அதிகாரப்பூர்வமாக மறுசீரமைக்கவில்லை. கிபி 1380 முதல் 1453 வரை நிறுவப்பட்ட வெள்ளை நாடார் கல்வெட்டுகள் வில்லவ நாடார் பிரபுத்துவத்தின் பாரம்பரிய உரிமைகளை மறுத்தன. வெள்ளை நாடார்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டு கொடுக்கும் கல்வெட்டுகளை நவீன வெள்ளாளர்கள் வைத்திருக்க முடியும். இது வெள்ளாளருக்கும் நாடார்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் வெள்ளாளர்கள் அதை செய்யவே இல்லை.

    நாஞ்சில் நாட்டில் தற்போதைய மக்கள் பிரிவுகள்.

    1. இந்து 48.65 %

    அ) இந்து நாடார் 20%
    ஆ) வெள்ளாள மற்றும் நாயர் 20%
    இ) மற்ற இந்துக்கள் 8%

    2. கிறிஸ்தவர்கள் 46.85 %

    அ) கிறிஸ்தவ நாடார் 35%
    ஆ) லத்தீன் கத்தோலிக்கர் 11%

    3. முஸ்லிம் 4.20%

    கன்னியாகுமரியின் மக்கள்தொகையில் நாடார்கள் குறைந்தது 55% ஆக உள்ளனர், வெள்ளாளரும் நாயரும் சேர்ந்து 20% மட்டுமே உள்ளனர். நாடார்கள் ஒன்றாக நின்றால் வெள்ளாளர்களுக்கு அதிக ஆதிக்கம் இருக்காது. தற்போது வெள்ளாளர்கள் பல வடிவங்களை எடுக்கின்றனர். வேளாளர்கள் தாங்கள் மிகவும் பழமைவாதிகள், தேசியவாதிகள், திராவிடர்கள் அல்லது மதச்சார்பற்றவர்கள் என்று பாசாங்கு செய்து நாடார் வாக்குகளைப் பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மேற்கூறியவர்கள் யாரும் இல்லை. அவர்கள் வடக்கே இருந்து வந்த நாக படையெடுப்பாளர்கள் மற்றும் வில்லவர் மக்களின் எதிரிகள்.
    அவர்களின் நாக பழக்கங்களான பலகணவருடைமை மற்றும் தாய்வழி முறைகள் வில்லவர்களால் சீரழிவு மற்றும் வெறுப்பூட்டும் பழக்கவழக்கங்களாக கருதப்பட்டன. வில்லவர் குலத்தின் பாரம்பரிய விரோதிகளாக வெள்ளாளர்கள் இருந்துள்ளனர்.

    இப்போதெல்லாம் நாயர் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளிலிருந்து தாய்வழி வேளாள வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள். பல நாடார்கள் தாய்வழி வெள்ளாளர் வேட்பாளர்களை தங்கள் நண்பர்கள் என்று அப்பாவிகளாக நம்புகிறார்கள்.

    நாயர்கள்

    சுதந்திரத்திற்குப் பிறகு நாயர்கள் வட இந்தியாவிற்குச் சென்று ஒரு நாயர் லாபியை நிறுவினர். நாயர்களும் ஐயர்களும் கூட்டாளிகள் ஆவர். நாயர்கள் வட இந்திய அரசியல் கட்சிகளை ஆதரித்து உயர் பதவிகளை பெற முடிகிறது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவில் வாக்காளர்களின் தேர்தல் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.

    சுதந்திரத்திற்குப் பிறகு நாயர்கள் வட இந்திய பிராமண-பணியா-பார்சி லாபியுடன் கூட்டுச் சேர்ந்தனர். கேரளாவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆதரவில்லாத பல நாயர் தலைவர்கள் 1947 க்குப் பிறகு அமைச்சர்களாகி வருகின்றனர்.

    ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் ஹிந்தி பேசும் நாயர் தலைவர்கள் வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையில் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். நாயர் அதிகாரிகள் தமிழ் பிராமணர்களுக்கு பினாமிகளாகச் செயல்படுகிறார்கள். இலங்கை உள்நாட்டுப் போரில் உயர் பதவியில் நாயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் தூதர்கள் நியமிக்கப்பட்டனர்.

    வெள்ளைக் கொடி சம்பவம்

    2009ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது சிங்களவர்களுக்கு உதவ இரண்டு நாயர் சகோதரர்கள் அனுப்பப்பட்டனர். இது 2009ல் வெள்ளைக்கொடி தாக்குதலுக்கும் தமிழர்களின் படுகொலைக்கும் வழிவகுத்தது.

    நம்பியார் அதிகாரி ஒருவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கைத் தமிழ் கிராம மக்களை வெள்ளைக் கொடியுடன் வந்து சிங்களவர்களிடம் அவர் முன்னிலையில் சரணடையுமாறு வற்புறுத்தினார். ஆனால் கிட்டத்தட்ட 30000 பேர் வெள்ளைக் கொடியுடன் வந்தபோது அவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர், அதன் மூலம் 2009 இல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

    நாயர்கள் திராவிட மக்கள் மீது பச்சாதாபம் இல்லாத வடநாட்டிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள்.

    கிறிஸ்தவ நாயர்கள்

    இப்போது கேரளாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நாயர்கள் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக கிறிஸ்தவர்கள் போல் நடிக்கிறார்கள்.
    இந்த நாயர்கள் தங்களை போதகர்கள், பிஷப்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கிறார்கள். இந்த கிறித்தவ வேடம் போடும் நாயர்கள் அமெரிக்காவில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போரிலும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வட கொரியாவிலும் அமெரிக்கர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளை உளவாளிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

    Reply
  47. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    நாகர்கள் தமிழ்நாட்டில் திராவிடர்களாக நடிக்கிறார்கள்

    தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் உண்மையில் நாகர்களால் அதாவது முதலியார், வெள்ளாள, கள்ளர், மறவர் ஆகியோரால் நடத்தப்படுகின்றன. நாஞ்சில் நாட்டில் வேளாளர் சிறுபான்மையினராக இருந்தாலும் திராவிட அரசியல் கட்சிகள் எனப்படும் கட்சிகள் நாஞ்சில் வேளாளரையே அமைச்சர்களாக நியமிக்கின்றனரே தவிர நாடார்களை அல்ல. எனவே 3% வெள்ளாளர்களும் 2% முதலியார்களும் உண்மையில் நாகர்கள்.
    1967-ல் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் உள்துறை அமைச்சர்கள் எப்பொழுதும் முதலியார்களாகவே இருக்கிறார்கள்.

    வன்னியர்கள், பலிஜா நாயக்கர், நாடார் ஆகியோர் திராவிட குலத்தினர். ஆனால் திராவிட அரசியலில் அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தையே வகிக்கிறார்கள். பழங்காலத்தில் பாஞ்சால நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த பாண குலத்தவர் வன்னியர். கிஷ்கிந்தா-அனேகுண்டி பாண குலங்கள் பலிஜா நாயக்கர்கள். பாணா பலிஜா நாயக்கர்களுக்கும் வில்லவ நாடார்களுக்கும் இடையே பகை இருந்தபோதிலும், இருவரும் பண்டைய காலத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுவான தோற்றம் கொண்டவர்கள்.

    சேரன், சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை நிறுவிய வில்லவர்-மீனவர் குலங்களில் இருந்து நாடார்கள் வந்தவர்கள். கேரளாவில் நாடார் அமைச்சர்கள் இருந்துள்ளனர் ஆனால் தமிழகத்தில் மிக அரிதாகவே நாடார்கள் அமைச்சர்களாக ஆவர். தமிழகத்தில் 12% இருக்கும் நாடார்களின் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் வீணாகி வருகிறது. நாடார் அமைச்சர் பதவி ஏற்றாலும் அவருக்கு தமிழகத்தில் முக்கியமில்லாத இலாகா வழங்கப்படுகிறது. இவ்வாறு 1967 ஆம் ஆண்டு முதல் நாகர்களான முதலியார், வெள்ளாளர், கள்ளர், மறவர் திராவிடர்களாக வேடமணிந்து தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.

    முடிவுரை

    கி.பி 1311 வரை கேரளா மற்றும் தமிழகம் வில்லவர்களால் ஆளப்பட்டது. வேளாளர்கள் களப்பிரர் என்று அழைக்கப்படும் களப்பிர பிரபுக்களாக இருந்தனர், அவர்கள் முதன்முதலில் வட தமிழகத்தை கிமு 100 இல் கலிங்க ஆட்சியாளர் காரவேளாவின் கீழ் ஆக்கிரமித்தனர். கிபி 1120 இல் அரேபியர்கள் நேபாள நாயர்களின் படைகளை கேரளாவிற்குள் கொண்டு வந்தனர். கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு துளு-நேபாள மக்களுக்கு கேரளாவின் ஆதிக்கம் வழங்கப்பட்டது.
    அரேபியர்களும் துருக்கியர்களும் வில்லவர்-மீனவர் வம்சங்களை தோற்கடித்தனர்.

    நாயர்கள் பெரிய போர்களில் ஈடுபடும் அளவுக்கு தைரியமாக இருந்ததில்லை. பெரும்பாலான போர்களில் அவர்கள் ஓடிவிட்டனர். நாயர்கள் வில்லவர்களை ஒருபோதும் தோற்கடிக்கவில்லை. கேரளாவில் நாயர்களின் நேபாள ஆட்சி அரபு, துருக்கிய படையெடுப்பாளர்களால் நிறுவப்பட்டது மற்றும் ஐரோப்பியர்களால் பாதுகாக்கப்பட்டது.

    துருக்கியர்களோ ஐரோப்பியர்களோ இல்லாத காலத்தில் அச்சுறுத்தல் இல்லாத அடிபணிந்த விவசாய மக்களாக வெள்ளாளர்கள் இருந்தனர்.
    வில்லவர் வம்சத்தின் தோல்வி மற்றும் தரமிறக்கப்பட்டது துருக்கியப் படைகள் வில்லவர்களை படுகொலை செய்ததன் விளைவாகும்.
    இலங்கைக்கு வில்லவர்களின் புலம்பெயர்தல் வில்லவர் இறையாண்மையை பெரிதும் பாதித்தது.

    நேர்மையற்ற ஐரோப்பியர்கள் வில்லவர்களுக்கு எதிராக நேபாள ஆரிய நாக மக்களை ஆதரித்தனர். வில்லவர்களை அடக்க ஆங்கிலேயர்கள் தமிழ் மற்றும் மராட்டிய பிராமண நிர்வாகிகளை பயன்படுத்தினர். இது 445 ஆண்டுகளாக நேபாள ஆதிக்கத்திற்கும் கேரளாவில் வில்லவர்களின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. இவ்வாறு வில்லவர்களின் வீழ்ச்சிக்கு அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

    Reply
  48. tamil

    thravida katchiya uruvaakunathey vellalar thaanda .simple a soldren british timela velalar suthiranu sonnatha yethirthu uruvaakunathuthaan neethikatchi ippa thravida katchi.thotta theetu.thanush thelugu ,vetrimaran nadar, ippa pudhusa palli caste a sethurukka naikka pattatha vachu vetrimaran dhanusha brainwash panniruppanu nanaikkuren surya yepdi maattunanu therla.pathinettu sathikku padi alantha vellan antha 18 caste yennanu paaru .nalla dress pottu nalla velaila nalla thaanada irukkinga apparam yenda innum porama pudichu alaiyuringa eenaingala.

    Reply
    1. tamil

      thotta theetu kurippa valainga idangai caste pathi paar tamil saathi yaaru pirasathi /adimaya kootitu vantha saathi yaarunu theliva pirichu iruuppanga vellala chozharil theva rarasargal.ithayellam paathuttu yenna vairathukku munnadi thevaradiyar na yaaru(chola vamsathoda arasa pengaley thevaradiyaar a irunthu irukkanga,higher caste family pangal thaan thevaradiyaar a kovilukku anuppa paduvaanga nee periya aala irunthu iruntha un pengalum athula irunthu iruppanga eena piravinga yella ippa avungaala thappu peasuthu.) avunga motha yentha nokkathukkaga kovilukku anuppa pattanga pirkaathula yeppdi thappa use panna pattanganrathyum thedi paaru avungala thappa sonnena unagala melada illama vachu irunthathum ,thottatheettuna koptathella thappey illa .

      Reply
  49. SEKAR

    GGOD

    Reply
  50. Venkatesh

    வெள்ளாளர் என்பது ஒரு ஜாதி அல்ல இது நமது அடையாளம் நாம் எங்கிருந்து வந்தோம் நம் மூதாதையார் எங்கிருந்து வந்தார்கள் நமது குல வழிபாடு வாழ்வியல் முறை சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு அடைமொழி வேளாளர்.
    இயற்கையாவே நம் குலமக்கள் தெய்வீக சிந்தனையும் ஒழுக்கமும் அன்பும்
    அரிவும் வீரமும் உடையவர்கள் எந்த சூழ்நிலையிலும் நிலை தவறாதவர்கள் இப்பேற்பட்ட சமூகத்தில் பிறந்த நாம் நமது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டியது நம்மது தலையாய கடமை…..

    Reply
  51. த.குமாவேல்

    மிகவும் அருமையான விளக்கம்.நன்றி

    Reply

Leave a Reply to Vil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *