செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா ?

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா என ஆதங்கமாக உள்ளது.
நம்மிடம் தான் ஆட்சியோ அதிகாரம் இல்லாததால் நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருகிறார்களோ? 
போஸ்டர் ஆக்கிரமிப்பு . பொலிவிழந்து வரும்  வஉசி மணிமண்டபம். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நெல்லையில் மணிமண்டபம் அமைத்து அவரை பெருமை படுத்தினார். அந்த மணிமண்டபத்திற்கு ஆண்டு தோறும் பிறந்தநாள் நினைவுநாளில் எண்ணற்ற மக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். அங்கு
ஒட்டபடும் போஸ்டர்களால் மணிமண்டபத்தின் தோரண வாயில் , நுழைவு வாயில் மற்றும் சுற்று சுவர்கள் சேதமடைந்து பொலிவிழந்து காணப்படுகிறது.
தற்போது மணிமண்டப நுழைவுவாயில் அருகே உள்ள சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் நூலகம் வரும் மாணவர்களின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
தனியார் பொருட்காட்சிக்கு பார்வையிட வரும் நபர்கள் மற்றும் சுற்றி உள்ள கடைகாரர்களால் அங்கே உள்ள குப்பைதொட்டியில் கொட்டப்படும் கழிவுகளால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா என மக்கள் வேதனை படுவதுடன் மாவட்ட நிர்வாகம் போஸ்டர் ஒட்ட தடை விதிக்க வேண்டும் சுற்று சுவரை சரி செய்ய வேண்டும்என்றும் மணிமண்டப முகப்பு மற்றும் சுற்று சுவரில் அவரின் வாழ்க்கை வரலாற்றின் ஒவியங்களை தீட்டவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *