நடுநிலையோடு நின்று மனசாட்சி படி யோசித்தால் நான் கூறுவதில் இருக்கும் உண்மை புரியும் சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று

நடுநிலையோடு நின்று மனசாட்சி படி யோசித்தால் நான் கூறுவதில் இருக்கும் உண்மை புரியும்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொண்டைமண்டலத்தில் கிடைக்கும் ஒலைச்சுவடிகளை தொகுத்து வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் சார்பாக இந்த பணியை செய்தது வேறு யாரும் இல்லை. மூன்றாம் குலோத்துங்கனை மட்டுமே வன்னியன் என்று கிளைம் செய்து நூல் எழுதிய அதே நடன காசிநாதன் அவர்கள்தான்.

பல முறை பதிவிட்டிருப்பேன், சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று. அதற்கு தேவையான தரவுகளை தேவைக்கு அதிகமாக அடுக்கி
இருப்பேன்.

தொண்டை மண்டலத்தில் இருக்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நிலவறையில் கிடைத்த சோழன் பூர்வ பட்டையம் என்னும் ஓலைச்சுவடி சோழனை காளையை கட்டி உழுது திண்ணும் வெள்ளாப்பையன் என்று கூறும். இதனை ராமச்சந்திரன் செட்டியார் பதிப்பித்திருகிறார்.

அதே தொண்டை மண்டலத்தில் கிடைத்த மற்றொரு ஓலைச்சுவடிதான் சோழன் பூர்வ விருத்தி என்னும் ஓலைச்சுவடி. இதனை நடன காசிநாதன் பதிப்பித்துள்ளார்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இரண்டு ஓலைச்சுவடிகளுமே சோழனை வெள்ளாளன் என்று சொல்லுகிறது.

நான் பல முறை பதிவு செய்திருந்த சோழன் வெள்ளாளன் என்ற கருத்திற்கும் இந்த பட்டையம் மேலும் வலு சேர்க்கிறது.

காழ்ப்பில் இருப்பவர்களுக்கு எத்தனை ஆதாரங்களை அடுக்கினாலும் எதுவுமே கண்ணுக்கு தெரியாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *