கொங்கு வேளாளார்களின் வாழ்க்கை முறை திருமண முறை கொங்கு வேளாளர் கவுண்டர்கள் வரலாறு

கொங்கு வேளாளர்

கவுண்டர் என பொதுவாக அழைக்கப்படும் கொங்கு வேளாளர் இனம் தமிழ்நாட் டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஒரு சமுதாயமாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இவர்களை பொதுவாக கவுண்டர் சமுதாயம் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர். கவுண்டர் என்ற சொல்லுக்கு நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்று புலவர் ராசு கூறுகின்றார் .
கவுண்டர்கள் இன்று பெருமளவு விவசாயம் மற்றும் தொழிற்றுறையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் கவுண்டர்கள், திண்டுக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

கவுண்டர்கள் வரலாறு



கரூர் வளநாட்டை ஆண்ட அண்ணமாரை சேரர் என வரலாற்று ஆதாரங்களை திரட்டி வரும் கே.ராஜா குறிப்பிடுவதால், கவுண்டர்கள் சேரர்களின் வழி வந்தவர்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தகடூரை ஆண்ட சத்யபுத்திர அதியமான்கள் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி குறிப்பிடுகிறார். 13ம் நூற்றாண்டில் கொங்கு பகுதியை ஆட்சி செய்த காளிங்கராயர் எனப்படும் லிங்கைய கவுண்டர், கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் ஆவார். காளிங்கராயர் ஈரோடு பகுதியில் பாயும் பவானி நதியையும், கோவை பகுதியில் பாயும் நொய்யல் நதியையும் இணைத்து, கொங்கு நாட்டை வளப்படுத்தினார். விஜயநகர அரசிற்கு பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழக பகுதியில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர்.
அவற்றுட் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சமத்தூர் வானவராயர் (பொள்ளாச்சி பகுதி)
குமாரமங்கலம் ஜமீன் (திருச்செங்கோடு பகுதி)
சங்கராண்டாம்பாளையம் வேணானுடையார் (பழனி/தாராபுரம் பகுதி)
ஊத்துக்குளி ஜமீன் (பொள்ளாச்சி பகுதி)
பழையகோட்டை பட்டக்காரர் (காங்கேயம் பகுதி)[சான்று தேவை]
கொங்கணாபுரம் ஜமீன் (சங்ககிரி பகுதி)
சரித்திர வீரர்கள்
அண்ணமார் சுவாமி – அண்ணமார் எனப்படும் பொன்னர் – சங்கர் என்ற இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையே அண்ணமார் சுவாமி கதையாகும். பொன்னரும் சங்கரும் எவ்வாறு தங்கள் நாட்டை அமைத்தனர், தங்கள் மாமனின் சதி, வேட்டுவ தலைவனின் சதிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தனர், தங்கள் நாட்டை காக்க எவ்வாறு போராடினர் என அண்ணமார் சுவாமி கதை விவரிக்கின்றது. தங்கள் நாட்டையும், இனத்தையும் காக்க பொன்னர் – சங்கர் நடத்திய வீரப் போரினை போற்றும் விதமாக இன்றும் இவர்களை தெய்வமாக கொங்கு வேளாள கவுண்டர்கள் வழிபடுகின்றனர்.
தீரன் சின்னமலை – இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும். காங்கேய பகுதி பாளையக்காரரான இவர், இரண்டாவது பாளையப் போரில், பல்வேறு பாளையங்களுக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார். மைசூர் அரசன் திப்பு சுல்தானுக்கு, தனது படைகளுடன் உதவி புரிந்தார். ஓடாநிலையில் கோட்டை கட்டி, கொங்கு நாட்டை ஆண்டார். 1801ல் காவேரி கரையில் நடந்த போரிலும், 1802ல் ஓடாநிலையில் நடந்த போரிலும், 1804ல் அரச்சலூரில் நடந்த போரிலும், ஆங்கிலேயரை தோற்கடித்து வெற்றி கொண்டார். பழனி பகுதியில் கொரில்லாப் போர் மேற்கொண்டிருந்த போது, சமையல்காரனால் காட்டி கொடுக்கப்பட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

அரசியல் செல்வாக்கு

கொங்கு மண்டல அரசியலில், கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழ்நாட்டில் அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட சாதிகளில் கொங்கு வேளாள கவுண்டர்களும் ஒன்று. தமிழக அரசியலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு பெரும் கட்சிகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் 8 பேர் கொங்கு வேளாளர்கள். தமிழக அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் கொண்ட சாதியினர் இவர்களே. இந்திய மத்திய அரசிலும் காங்கிரஸ் – திமுக கூட்டணியில், திமுகவைச் சேர்ந்த ஒரு கொங்கு வேளாளர் அமைச்சராக உள்ளார்.



தொழில்கள்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொங்கு மாவட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் போன்ற கொங்கு மாவட்டங்களில் பல்வேறு தொழில்களில் கவுண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் உள்ள பெரும்பாலான நூற்பாலைகள், சாயப்பட்டறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் கொங்கு வேளாளர்களுக்கு சொந்தமானவை. நாமக்கல் பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிற்கூடங்கள், கோழிப் பண்ணைகள் போன்ற தொழில்கள் கவுண்டர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஜவுளித்துறை, பின்னலாடை, கனரக மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள், கல்வி நிறுவனங்கள், முட்டை மற்றும் மஞ்சள் ஏற்றுமதி போன்ற துறைகளில் கொங்கு வேளாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நிலை

இந்திய சுதந்திரத்தின் போது கவுண்டர்கள், முன்னேறிய வகுப்பினராக வரையறுக்கப்பட்டிருந்தனர். 1970 களின் ஆரம்பங்களில் மாநாடுகள் நடத்தி, தங்களை பிற்பட்ட வகுப்பினராக வரையறுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அவர்களை பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தது. கிராமபுறங்களில் இன்னும் கல்லூரி வசதி இல்லாததால், ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கொங்கு வேளாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



பண்பாடு மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள்

குலதெய்வ வழிபாடு, கூட்டம் மற்றும் பங்காளி முறை
கொங்கு வேளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கும் கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ – அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதெய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணங்குவதுடன் தமது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள்.

திருமண முறை

கவுண்டர்களின் திருமணங்கள் விமர்சையாக நடக்கும். பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த ‘அருமைப்பெரியவர்’ என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை அருமைக்காரர் என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.
கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.
என்று அப்பாடல் தொடங்கும்.



கொங்கு வேளாளரின் திருமணம் மூன்று நாட்களும், பெண் வீட்டிலும் நடக்கும்.

முதல் நாள் (நாள் விருந்து) –

இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.

இரண்டாம் நாள் (கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்) –

இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும். ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.
இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.

இரண்டாம் நாள் (கங்கணம் கட்டுதல் ) –

அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.
இரண்டாம் நாள் (நிறைநாழி செய்தல்) – வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.

இரண்டாம் நாள் (இணைச்சீர்) –

இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுள் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையைத் தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.
மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.

மூன்றாம் நாள் (முகூர்த்தம்) –

இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க, மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல நாணைக் கட்டுவார்.

குலம் அல்லது கூட்டம் பட்டியல்



கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளது. ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது.
கொங்கு வேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 141 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம். அவை,
அகினி
அந்துவ‌ன்
அன‌ங‌ன்
அழகன்
ஆடை
ஆதி
ஆதித்ர்ய கும்பன்
ஆதிரை
ஆந்தை
ஆரியன்
ஆவ‌ன்
இந்தரன்
ஈன்சென்
உவனன்
என்னை
ஓதாலர்
ஒழுக்கர்
கடுந்துவி
கண்ணன்
கம்பன்
கருன்கண்ணன்
கலிஞி
கன்னந்தை
கனவாலன்
காடன்
காடை
காரி
காவலன்
கிளியன்
கீரன்
குண்குலி
குண்டலி
குமராந்தை
குயிலன்
குருப்பன்
குழயான்
குனியன்
குனுக்கன்
கூரை
கொட்டாரர்
கொட்ராந்தை
கோடரஙி
கோவர்
கோவேந்தர்
கௌரி
சத்துவராயன்
சனகன்
சாத்தாந்தை
செங்க‌ன்னன்
செங்குன்னி
செம்பூத்தான்
செம்பொன்
செம்வன்
செல்லம்
செல்லன்
செவ்வயன்
சேடன்
சேரலன்
சேரன்
சேவடி
சிலம்பன்
சுரபி
சூரியன்
சூலன்
சோதி
சோமன்



செளரியன்
தவளையன்
தளிஞ்சி
தன்டுமன்
தனக்கவன்
தனவந்தன்
தனசயன்
தூரன்
தேமான்
தேர்வேந்தர்
தொரக்கன்
தோடை
நந்தன்
நாரை
நீருன்னி
நீலன்
நெட்டைமணியன்
நெய்தாலி
நெரியன்
ப்ரம்மன்
பஞ்சமன்
படுகுன்னி
பதுமன்
பயிரன்
பரத‌ன்
பவளன்
பன்னன்
பன்னை
பனங்காடன்
பனையன்
பாண்டியன்
பாதாரய்
பாம்பன்
பாமரன்
பாலியன்
பானன்
பிள்ளன்
புதன்
புன்னை
பூச்சாதை
பூசன்
பூதியன்
பெரியன்
பெருங்குடி
பைதாலி
பொடியன்
பொருள்தந்தான்
பொன்னன்
மணியன்
மயிலன்
மழ்உழகர்
மாடை
மாதமன்
மாதுலி
மாவலர்
மீனவன்
முக்கண்ணன்
முத்தன்
முழுகாதன்
முனைவீரன்
மூரியன்
மூலன்
மெதி
மொய்ம்பன்
வணக்கன்
வாணன்
விரதன்
விரைவுளன்
வில்லி
வெளியன் (விளியன்குலம என்றும் விழியகுலம் என்றும் கூறபடும்)
விளோசனன்
வெந்தை
வெந்துவன்
வெளம்பன்
வெளையன்
என்பனவாகும்.
செல்லன், விழியன், கண்ணன், பனையன், மணியன் குலத்தவர்களில் சிலர் மட்டும் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து பின்னாளில் கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குலப்பிரிவு,பருத்திப்பள்ளி செல்லன் குலம்
ராசிபுரம் விழியன் குலம்
மல்லசமுத்திரம் விழியன் குலம்
திண்டமங்கலம் விழியன் குலம்
மோரூர் கண்ணன் குலம்
மொளசி கண்ணன் குலம்
வெண்ணந்தூர் கண்ணன் குலம்
ஏழூர் பண்ணை குலம்
வீரபாண்டி மணியன் குலம்
என்று அழைக்கப்படுகிறது………..



அகநானூறு..புறநானூறு.. பதித்று பத்து.. நூல்கள் தொகுப்பு..

பின் வருகின்றதுவழக்கு கொங்கு 24 நாட்டுச் சபைக்குச் சென்றது. காங்கேயம் அகத்தீசுவரன் கோவிலில் கொங்கு நாட்டுச் சபை கூடியது. 24 நாட்டிலிருந்தும் பிரதிநிதிகள் கூடியிருந்தனர்.
சுப்பராய அப்பாச்சி, கடையூர்ப் பொருளந்தை குலக் காங்கேய மன்றாடியார், பழைய கோட்டை பயிரகுலக் கொற்றவேல் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார், காங்கேயம் செங்கண்ண குலப் பல்லவராயக் கவுண்டர், தென்கரை நாட்டுப் பட்டக்காரர் பெரியகுல வேணாடுடையாக் கவுண்டர், வெள்ளோடு பயிரகுலம், சாத்தைதந்தை குலத்தைச் சேர்ந்த பழனிக்கவுண்டர், காலிங்கராயக் கவுண்டர் ஆகியோரும் அச்சபையில் முதன்மையாக இருந்தனர். இரு சாராரும் தத்தம் வழக்கைச் சபையின் முன் உரைத்தனர்.
பெருந்துறைக் காடை குலத்து இளைஞன் ஒருவன் காங்கேயம் அகத்தீசுவரன் சன்னதியில் காய்ச்சிய மழூ எடுத்துப் பெருந்துறை தங்களுடைய காணியூர் என்று நிரூபித்து வெற்றி கண்டார்.

தலையநல்லூரில் பெற்ற வெற்றி :
தலையநல்லூர் என்பது இன்றைய சிவகிரியாகும். மேல்கரை அரைய நாட்டின் தலைநகர்
அரைய நாட்டுத் தலைய நல்லூரின் எல்லையில் உள்ள ஊர் பூந்துறை நாட்டுக் காகம் ஆகும். ஒரு முறை பூந்துறை நாட்டுக் காகத்து எல்லையை மேல்கரை அரைய நாட்டுத் தலையநல்லூர் ஊரான் தங்களுடையது என்று கவர்ந்து கொண்டனர். அவ்வெல்லை காகம் கிராமத்துக்கே சொந்தமானது. அப்போது வீரப்ப நாயக்கர் என்பவர் மதுரையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இரு ஊருக்கும் உள்ளூர் பகை இருந்தது.
காகம் எல்லையை மீட்கப் பூந்துறை நாட்டுத் தலைவர்களான காடை குலத்தினர் முற்பட்டனர். அதற்கு வேட்டுவப் பெரியண்ணி, செல்லயன், விருமன் ஆகியோரும் உதவி புரிந்தனர். காகத்து மேட்டில் வேங்கஞ்சுனை சூழ்ந்த சுருங்கரடு எல்லை பூந்துறை நாட்டுக் காகத்துக்கு உரியது என்று தாராபுரம் அகத்தீசர் சன்னதியில் மழு எடுத்து மீட்டவர்கள் பூந்துறை நாட்டுக் காடை குலத்தார். காடை குலச் செல்லப்ப கவுண்டர் தம்பி எனக் செல்லக் கவுண்டர் இவ்வரிய காரியத்தைச் செய்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியை ஓலைச் சுவடியில் உள்ள ஒரு தனிப்பாடல் சிறப்புடன் விளங்குகிறது. இவ்வோலைச்சுவடு ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுகிறது.
சிலைமதன ரூபவீ ரப்பநா யக்கரசு
செங்கோல் செலுத்துநாளில்
திசையான காகத்து வேட்டுவப் பெரியண்ணன்
செல்லப்பன் விருமனுடனே
கலையாரு மேட்டுறை வேங்கஞ் சுனைசூழ்க்
கருங்கரடு உள்ளாகவே
காவேரி வாணியும் நொய்யல் சூழ் மேல்கரைப்
பூந்துறைசை நாட்டெல்லையை
சண்டைக ளாகவேதான்
தம்பிகனக செல்வன் காங்கேயம் அகத்தீசர்
சன்னதியில் மழு எடுத்தான்
மலையான கலியுகம் மூவாயிரம்தனில்
வந்தபவ வையாசியில்
மங்கலப் பரணியில் வென்றசெல்லப்பனே
வண்மையுள காடைகுலனே!



வழக்கென்று வந்தபோது ஊர்விட்டு ஊர் சென்று 24 நாட்டவர்களும், பாளையங்காரர்களும், அரச அலுவலர்களும் கூடியுள்ள பெரும் சபையில் வழங்குûத்து வெற்றி பெற்ற காடை குலத்துப் பெருமக்கள் நம் பாராட்டுக்குரியவர்கள்.

வழக்குத் தீர்ப்பதிலும் வல்லவர் :
காடை குலத்தார் வழக்கு விசாரித்து நீதி செலுத்திய நிகழ்ச்சி செப்போடு மூலம் தெரியவரும் செய்தியாகும்.
அவ்வாறு நீதி செலுத்திய காடைகுலத்துத் தலைவர்கள் சிலர் பெயரைப் பாலபாரதி முத்துச்சாமி அய்யர் பாடிய பாம்பண்ண காங்கேயன் குறவஞ்சியில் குறிக்கப் பெறுகின்றனர்.
ஓடை காத் திரமும் மாட சேத்திரமும்
மேடைசேர் பூந்துறைக்க ôடை கோத்திரத்தில்
அசைவிலாப் புகழ்சேர் விசயனே அனைய
மோகவனனுடனே விசுவன துரையும்
மத்தமுத் தயவும் வெற்றியும் குணமும்
வித்தையும் பெறுநல முத்தய வேளும்
வம்பவர்கள் பயந்து நிரம்பவும் நடுங்கிக்
கும்பிடு பெரிய தம்பி மகீபனம்.

மின்னிய பூந்துறை நாடன் காடைகுல
விசுவணன்!
சித்தசன் காடைகுல நல்லமுத்தேந்திர தீரன்!
என்பன பாம்பன காங்கேயன் குறவஞ்சி வரிகளாகும்.

உலகு போற்றும் ஓர் உன்னதச் செயல்

செயற்கு அரிய செய்தல் :
செயற்கு அரிய செய்வார் பெரியவர்! என்று கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகையார். சிறியர் செயற்குரிய காரியங்களைக் கூடச் செய்ய மாட்டார்களாம். எல்லோரும் செய்கின்ற சாதாரணமான செயல்களையே தாங்களும் செய்யாமல் அரியவற்றையே சான்றோர் செய்வர். அரிய புகழை அதனால் பெறுவர். அவ்வாறு புகழ்பெற்ற அருளாளர் ஒருவர் காடை குலத்தில் தோன்றினார். அவர் பெயர் பூந்துறை வாரணவாசி

சங்க காலத்தல் முடவர்கள் :
மக்களுக்குக் கைகால்கள் முடமானால் அறிவு முடம் ஆகாது. அவர்கட்கு அறிவு கூர்மையாகவே இருக்கும். சங்க காலத்தில்
ஐயூர் முடவனார்
மூட மோசியார்
முடத் தாமக் கண்ணினர்
தங்கால் முடக் கொற்றனார்.
போன்ற பல புலவர்கள் பெயரைக் காணுகிறோம். அவர்களைக் கை, கால் ஊனமுடையவர்களாகவே கருதுகின்றனர். கூர்மையான அறிவு பெற் றஇவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருந்து கவிதைகளைப் பாடி தமிழர்களை மகிழ்வித்து வந்தனர். இவர்கள் பெருமைமிக்கவர்கள் என்பதை இவர்கள் பெருக்குப் பின்னர் கொடுக்கப்பட்ட ஆர் விகுதியால் அறியலாம். நல்லிசைப் புலமை மெல்லியலாரான பெண்பாற்புலவர் மூடத்தாமக்கண்ணியார்.
புலவர்கள் மட்டுமல்ல முடத் திருமாறன் என்ற பாண்டிய மன்னர் ஒருவரின் பெயரையும் காணுகின்றோம். மூடத்தன்மை அவன் ஆட்சிக் கட்டில் ஏறிச் சிறப்புடன் ஆட்சி செய்ய இடையூராக இருக்கவில்லை.



ஆதரவு :
முடவர்களை ஆதரிப்பது யார்? யாரேனும் ஆதரவு காட்டி அறிவு கொளுத்தினால் அல்லவா அவர்கள் முடத் தன்மையிருந்தாலும் வாழ்வில் முன்னேற முடியும். கவுண்டர்கள் பல இன மக்களை ஆதரித்த வள்ளல்கள்..
ஏன் முதல்… இடை..கடை எழு வள்ளளகளும் கொங்கு பகுதியை ஓட்டி இருப்பவர்களாக இருப்பார்கள்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *