சங்குபிள்ளையின் வரலாறு

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் சங்குப்பிள்ளை என்பவர்தற்போது இருக்கும் விருதுநகர் மாவட்டத்தை வடபட்டி,ரெண்டலம்,மன்னார் கோட்டை ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தார்,அப்போது

1551 ,1550 ஆம் ஆண்டுகளில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதிகள் அரிநாத முதலியார்,அண்ணாமலை நாயக்கர் இருவரும் சங்குப்பிள்ளை மன்னரின் பகுதிகளை முற்றுகைஇட்டு அங்கிருந்த பெண்கள் 8 பேரை சிறை பிடித்து சென்று உள்ளனர்,

இந்த அரிநாத முதலியார் என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை கட்டியவர் அதுமட்டும் இல்லாமல் நாயக்க மன்னரின் தலைமை தளபதியாகவும் படை தளபதியாகவும் இருந்து எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து உள்ளார்



சங்குப்பிள்ளை அவரது ஆட்களை அனுப்பி அந்த பெண்களை மீட்டு வர சொன்னார்,
880 பொற்காசுகளை கொடுத்து அந்த பெண்களை மீட்டு வந்து உள்ளார்,
சிறைபிடிக்கப்பட்ட பெண்களை மீட்க சென்றபோது கோட்டை காவலாளி சப்பயப்பன் என்பவருக்கு தனிப்பட்ட முறையில் அரசனை சந்திக்க லஞ்சமாக 100 பொற்காசுகளை கொடுத்து உள்ளே செல்ல அனுமதி வாங்கி உள்ளார்
இந்த செப்பேடு சிறை மீட்டலுக்கு நன்றி கடனாக ஊர்மக்கள் ஒன்றுகூடி சோலையழகன் என்பவரை வைத்து செப்பேடு எழுதி அதை சங்குப்பிள்ளைக்கு வழங்கி உள்ளனர்

இந்த செப்பேடு ஆனது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தொல்லியியல் துறையினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது,தொல்லியியல் துறை அதிகாரி நாராயணமூர்த்தி கூறுகையில் இந்த செப்பேட்டின் இருபுறமும் தகவல் உள்ளது, சுமார் 175 வரிகள் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்,
அதுமட்டும் இல்லாமல் சிறை பிடிக்கப்பட்ட பெண்கள் பெயர் எதுவும் குறிப்பிடாமல் இன்னாரது மனைவி, இவருடைய அக்கா, இவருடைய தங்கை, இன்னாருடைய மகள் என்று தான் குறிப்பிட்டு உள்ளனர்




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *