இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி சீமை மாபெரும் எழுச்சியை உருவாக்கிய நாள் இன்று

திருநெல்வேலி எழுச்சி நாள்

மார்ச் 13. இன்று




தெரியுமா உங்களுக்கு ?

மார்ச் 13. இன்று . . .

திருநெல்வேலி எழுச்சி தினம்

அதென்ன. திருநெல்வேலி எழுச்சி ?

இந்த பதிவுக்கு ஒரு 5 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படித்து விட்டு ஒரு முக்கிய வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி எழுச்சி தினம் பலரால் நினைக்கப்படாமலே இன்று கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

இதனால் இளைய தலைமுறையினருக்கு இது குறித்து தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

வரலாற்று அடிப்படையில் திருநெல்வேலி பெருமை பெற்ற ஊராக இருந்தாலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நெல்லைச் சீமையின் பங்கு அளப்பறியது.

நெல்லையை மையமாகக் கொண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள் வரலாற்று பக்கங்களில் இடம்பெற்று, இன்றுவரை பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

வெள்ளையனை எதிர்த்து பாரதத்திலேயே முதலில் போராடியது நெல்லை மாவட்டம் நெற்கட்டான் செவல் புலித்தேவன்

நெல்லையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுவது மார்ச் 13ம் தேதி கடை பிடிக்கப்படும் நெல்லையின் எழுச்சி நாளாகும்.

சுதந்திரப் போராட்ட வீரர் விபின்சந்திரபால் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் நெல்லையில், தூத்துக்குடியிலும் வ.உ.சிதம்பரனார் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்துக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது.

1908ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி நெல்லை தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டபத்தில் ( தற்போதும் இம்மண்டபம் ஆற்று பாலம் அருகில் காணலாம் ) நடந்தது.


தைபூச மண்டப உச்சியில் ஏறி வ.உ.சி பேசினார்.

நெல்லை தூத்துகுடி பகுதியிலிருந்து மட்டுமே அந்த காலத்திலேயே சுமார் 13 ஆயிரம் மக்கள் திரண்ட கூட்டத்தில் வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் எழுச்சியுரை ஆற்றினர்.

மக்கள் எழுச்சியை கண்டு நடுங்கி போனது பிரிட்டிஷ் அரசு

தடையை மீறி பேசியதற்காக வ.உ.சி, சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய 3 பேரையும் மார்ச் 12ம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்தது.

இவர்கள் கைது செய்யப்பட்ட மறுநாள் மார்ச் 13ம் தேதி நெல்லையில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

நெல்லை மதிதா இந்துக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். சி.எம்.எஸ் பள்ளி (தற்போது சாப்டர் பள்ளி) யை நோக்கி சென்றது.
நெல்லை நகராட்சி அலுவலகம், தபால் அலுவலகம், போலீஸ் நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடும் நடந்தது.
உதவி கலெக்டர் ஆஷ் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவனும், போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரும் இறந்தனர்.

டவுண் பேட்டை தச்சநல்லூர் வரை இந்தக் கலவரம்பரவியது. பிரிட்டிஷாரை மக்கள் கல் வீசி தாக்கினர்.

இதற்காக தூத்துக்குடியிலும் (அப்போது நெல்லை மாவட்டம்) மிகப் பெரியவேலை நிறுத்தம் நடந்தது.

இதில் குதிரை வண்டிகாரர்கள் பலர் கலந்து கொண்டனர். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்காக அப்போது இந்தியாவில் நடந்த முதல் வேலை நிறுத்தம் இதுவாகும்.

வெள்ளைகாரனை திக்குமுக்காட செய்து திணறடித்த இந்த விஷயம் பிரிட்டிஷ் பாராளுமன்றம்  வரை எதிரொலித்தது.

இந்த நிகழ்வு திருநெல்வேலி கலகம் என்று பிரிட்டிஷாரால் பதிவு செய்யப்பட்டது.

மார்ச் 13ம் தேதி திருநெல்வேலி கலகத்தின் அடிப்படையில் தான் வஉசி, சிவா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நூற்றுக்கும் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

ஸ்ரீநிவாச்சாரி, சடகோபாச்சாரி, நரசிம்மாச்சாரி உட்பட பல வக்கில்கள் வஉசி, சிவாவுக்கு ஆதரவாக வாதாடினர்.

நீதிபதி பின்ஹே வஉசிக்கு 40 ஆண்டுகளும், சிவாவிற்கு 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

தீர்ப்பைக் கேட்ட வஉசி சகோதரர், ”எனது தம்பிக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையா?” என்று கோர்ட் வளாகத்திலேயே அழுது புலம்பி கண்ணீர் விட்டு கதறினார்.

இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டம் அமலில் இருந்த நேரத்தில், நாட்டின் தென்கோடியில் நடந்த இந்த எழுச்சி, சுதந்திரப் போராட்டத்திற்கு முழு உத்வேகம் அளித்தது.

நெல்லை கலகத்தின் நூற்றாண்டு விழா 2008ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது நெல்லை மேயராக இருந்த எ.எல்.சுப்பிரமணியன் அவர்கள்



நெல்லை கலகமாக பதியப்பட்ட இந்த நிகழ்வை திருநெல்வேலி எழுச்சி தினம் என மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்து மாற்றினார்.

அதன் பின் தற்போது ஆண்டு தோறும் திருநெல்வேலி வஉசி மணிமண்டபத்தில் திருநெல்வேலி எழுச்சி நாள் கடைபிடிக்கபடுகிறது

கத்தியின்றி ரத்தமின்றி வந்ததல்ல சுதந்திரம்

பாரத்மாதாகீ ஜெய்
ஜெய்ஹிந்த்

இன்று நெல்லை எழுச்சி நாளை முன்னிட்டு தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் நெல்லை மாநகர்மாவட்ட செயலாளர் S.செந்தில்குமார்பிள்ளை
மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிபிள்ளை அவர்கள் நெல்லை மணிமண்டபத்தில் உள்ள ஐயா வ.உ.சி அவர்களின் திருஉருவசிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனார் உடன் சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் சைவ வேளாளர் சங்கம் தலைவர் புளியுரை ராஜா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *