மதிப்புடையீர்!
கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளர், மூப்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், மண்ணாடி, வாதிரியன் போன்ற சமூகங்களை இணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கும்படி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் இன்னும் சில பள்ளர் அமைப்புகளும் அரசாங்கத்திடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும், போராட்டம் செய்தும் வருகின்றனர். மேலும் தங்கள் சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக மாற விரும்புவதாகவும், அதனால் பட்டியல் இன பிரிவில் இருந்து தங்கள் சமுதாயத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
பள்ளர்கள் தங்கள் சமுதாயத்தை மேம்படுத்த எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்காக நமது இனத்தின் பெயரான வேளாளர் பெயரை கேட்பதை நமது வெள்ளாள சமுதாயங்களால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கோரிக்கையில் எந்த வித நியாயமும் இல்லை. வரலாற்று ரீதியாகவும் எந்த அடிப்படையும் இல்லாத கோரிக்கையாகும்.
பள்ளர்களுக்குண்டான கல்வெட்டு பட்டயங்கள் போன்ற வரலாற்று ஆவணங்கள் எதிலும் அவர்களை வேளாளர் என்று குறிப்பிடப்படவில்லை. அவர்களை பள்ளு, தேவேந்திரன், பண்ணாடி, போன்ற பெயர்களால் தான் குறிப்பிடப்படுகின்றனர்.
ஆனால் வெள்ளாளர்களுக்குண்டான ஆவணங்கள் அனைத்திலும் வெள்ளாளர் / வேளாளர் பெயர்களாலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்தையும் வெள்ளாளர் என்ற பெயரிலேயே கல்வெட்டு குறிக்கிறது. (ஆதாரம்: தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுக்கள் )
வெள்ளாளர் / வேளாளர் என்பது நமது இனப்பெயர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாளர்களை குறிக்க பயன்படுத்தப்படும் பெயர்.
மேற்கு தமிழகம் (கொங்கு நாடு)
கொங்கு வெள்ளாளர், பால வெள்ளாளர், நரம்புகட்டி வெள்ளாளர், பவளங்கட்டி வெள்ளாளர்
கிழக்கு தமிழகம்: (சோழ நாடு)
சோழிய வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர், வீரக்கொடி வெள்ளாளர், நற்குடி வெள்ளாளர்.
தெற்கு தமிழகம் (பாண்டிய நாடு)
பாண்டிய வெள்ளாளர், சைவ வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்.
வடக்கு தமிழகம்: (தொண்டை நாடு)
வெள்ளாள முதலிகள், துளுவ வெள்ளாளர்.
வெள்ளாளர் / வேளாளர் என்பது மேற்கண்ட சமுதாயத்தையும் இன்னும் சில சமுதாயங்களையுமே குறிக்கும் ஒரு இனப்பெயர். வேளாளர் என்பது நமக்குண்டான அடிப்படை அடையாளமாகும். நமது முன்னோர்கள் நாடாண்டவர்களாகவும், கொடைவள்ளல்களாகவும், சைவ, வைணவ நெறிகளை வளர்த்த மகான்களாகவும் இருந்துள்ளனர்
தமிழகத்தின் ஆட்சியாளர்களாகவும், நீதி பரிபாலனம் செய்பவர்களாகவும் நமது இனம் இருந்துள்ளது. மூவேந்தர்களும் வெள்ளாளரில் மட்டுமே பெரும்பாலும் பெண் எடுத்துள்ளார்கள். சங்க கால கடையேழு வள்ளல்கள் அனைவரும் வெள்ளாளர்களே.
மேலும், தமிழ்நாட்டின் மிகப்பெரும் சைவ ஆதீனங்களான மதுரை ஆதீனம், திருவாடுதுரை ஆதீனம், செங்கோல் அதீனம், தருமபுரம் ஆதீனங்களில் வெள்ளாளர்கள் மட்டுமே மடாதிபதியாக வர முடியும். ஆன்மீகம், அரசாட்சி என்று நமது நீண்ட நெடிய உயரிய வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட ஒரு இனத்தின் பெயர்தான் வெள்ளாளர் / வேளாளர் என்ற பெயர். அது நமது இனத்திற்கு மட்டுமே உரிமையுள்ள பெயர். எல்லாரும் பயன்படுத்தக்கூடிய பெயர் அல்ல.
இன்று வேளாளர் என்றால் விவசாயம் செய்பவர்கள் என்று பொய்யான ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பள்ளர்கள் தாங்களும் நெல்விவசாயம் செய்வதாக கூறி “தேவேந்திர குல வேளாளர்” என்று கடந்த நூறு வருடங்களாக கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த பிம்பத்தை உடைத்தெறிந்து, வெள்ளாளர் / வேளாளர் என்பது நமக்கு மட்டுமே உண்டான ஒரு இனப்பெயர் என்பதை நிலை நிறுத்த வேண்டும்.
வேளாளர் என்ற பெயருக்கு சமூகத்தில் உள்ள மரியாதையை பார்த்து, அந்த பெயரை பெற்று விட்டால் அந்த மரியாதை தங்கள் சமுதாயத்துக்கும் வந்து விடும் என்ற கணக்கில் இந்த கோரிக்கையை வைக்கிறார்கள். இது நியாயமற்ற நேர்மையற்ற குறுக்கு வழியாகும். பள்ளர் சமுதாயத்தை மேம்படுத்துவத்ஹாக கூறும் அதன் தலைவர்கள் நம்முடைய இனத்தின் / சமுதாயத்தின் பெயரை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது.
அப்படி நடக்கும் பட்சத்தில், நமது வெள்ளாளர் இனத்திற்கு ஏற்படும் மோசமான விளைவுகளை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். வெள்ளாளர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி அடுத்த தலைமுறையினர் யார் வெள்ளாளர் என்ற அறிய முடியாமல், தன்னுடைய அடையாளத்தை இழந்து நிற்கும் சூழல் உருவாகும்.
இவர்களது இந்த செயல்பாடுகள் நமது அடிப்படை கட்டமைப்பை சிதைப்பதாக உள்ளது. மேலும் நாளை வேளாளர் என்ற பதம் தாரைவார்க்கப்பட்டால் நமக்கே உரித்தான சைவ மடங்களும், நமது குல பெண்களும், கோவில்களும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தற்போதைய நிலவரம்:
கடந்த நான்கைந்து வருடங்களாக பள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகளிடமும், அரசாங்கத்திடமும் வைத்திருக்கிறார்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.அமித்ஷா அவர்கள் மதுரை வந்தபோது இச்சமுதாய மக்களை சந்தித்து “தேவேந்திரகுல வேளாளர்”என்ற பெயரை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க வின் முரளிதர ராவ்,துக்ளக் ஆசிரியர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பாரத பிரதமரும் இவர்களின் கோரிக்கையினை ஏற்று அவர்களின் கோரிக்கையினை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
பா.ஜ.க வில் இருக்கும் சில தமிழ்நாட்டு தலைவர்கள் இவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி, அவர்களுக்கு தேவையான அத்துனை உதவிகளையும் செய்து வருகிறார்கள். பள்ளர் சமுதாய தலைவர்களை அமித் ஷா, மற்றும் மோடியுடன் சந்திக்க ஏற்பாடு செய்து தந்ததும் இவர்களே.
மேலும் இவர்கள் அரசாங்க ரீதியில் பல்வேறு நகர்த்தல்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளர்களை மாநாடு போட வைத்தும், இவர்களுக்கு ஒத்துழைக்கும் நபர்களை மட்டும் அழைத்து அனைத்து சமுதாய கூட்டம் என்ற ஒன்றை நடத்தி அதில் எல்லா தரப்பு மக்களும் பள்ளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஒரு பொய்யான அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இதுவரை முறையாக பதிவு செய்யப்பட்ட எந்த வெள்ளாள சங்கங்களையும் (எங்கள் சங்கம் உட்பட) அணுகி அவர்கள் கருத்து கேட்கவில்லை. நமது வெள்ளாள சங்கங்களும் இவர்களின் கோரிக்கைக்கு எந்த எதிர்ப்பையும் இதுவரை தெரிவிக்காததால் அவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கவே வாய்ப்புகள் அதிகம். வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, இது தொடர்பான முடிவினை ஆளும் பா.ஜ.க அரசு வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.
ஆகையால் நமது வெள்ளாள சமுதாய அமைப்புகள் முதல் கட்டமாக, அரசாங்கத்திடம் நமது எதிர்ப்பை முறையாக, அதிகாரபூர்வமாகவும், பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
நமது நிலைப்பாடு:
நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வேளையில் நமது நிலைப்பாட்டையும் அரசாங்கத்திடம் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது, பள்ளர்கள் பட்டியல் வகுப்பை விட்டு வெளியே வருவதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு வைத்த கோரிக்கையான தேவேந்திரகுலத்தார் என்ற பெயரை கேட்பதிலும் நமக்கு ஆட்சேபனை இல்லை. தேவேந்திர குல வேளாளர் என்று வேளாளர் பெயரை கோருவதைதான் நாம் வன்மையாக எதிர்க்கிறோம்.
மேலும் பதிவு செய்யப்பட்ட வெள்ளாள சங்கங்கள் / அமைப்புகளின் கருத்தை இதுவரை அரசாங்கம் கேட்கவில்லை என்பதையும், இது தொடர்பாக அரசாங்கம் எந்த முடிவு எடுத்தாலும் நம்முடைய கருத்தை கேட்ட பிறகே எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
ஆகவே நமது இன மாண்பை காப்பதே நமது தலையாய கடமை என எண்ணி வேளாளர் என்ற பெயரை தக்கவைத்து கொள்ளவும் அரசிடம் நமது நியாயமான கோரிக்கைகளை உரிய முறையில் எடுத்துகூறி முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இன உணர்வுடன் கேட்டு கொள்கிறோம். வேளாளர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் இரவு பகல் பாராது தயார் செய்து உள்ளோம். இப்பிரச்சினையில் தாங்கள் எடுக்கவுள்ள முயற்சிகள் அனைத்திற்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதையும் ஆவணங்கள் தேவைப்படின் வழங்க தயாராக உள்ளோம் எனவும் கூறிக்கொள்கிறோம்..🙏
(நன்றி நமது கொங்கு உறவுகளுக்கு)








பாண்டிய வெள்ளாளர்கள் பற்றி சிலர் வேறு மாதிரி கூறுகின்றனர். பாணர் சாதியுடன் ஒப்பிடுகின்றனர். அதனை உடனடியாக ஆராய்ந்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.