*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் மூலம் பிராமணர்களை தமிழ்நாட்டை விட்டே வெளியேற்றி இந்து மதத்தின் ஆணிவேரையே அசைத்து பார்க்க துணிந்துள்ளது திமுக*
ஆண்டாள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த ஜீயர்கள் தற்பொழுது எங்கே? பாஜக, RSS, இந்துத்துவா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, அனுமன் சேனா இன்னும் பிற இந்து அமைப்புகள் வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?
திருக்கோயில்கள் திண்டாடுகின்றன..
கைங்கர்யரர்கள் கதறுகிறார்கள்..
ஆயிரங்கால தர்மம் ஆட்டம் காண்கிறது..
ஆனால் அழகிய சிங்கரை காணவில்லை…
ஆண்டவன் ஜீயரை காணவில்லை…
கந்தசஷ்டி கவசத்துக்கு கம்பு சுத்தின ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனி ஜீயரை காணவில்லை..
இடையர் ஒருவரை ஜீயராக்கி புரட்சி செய்த மன்னார்குடி ஜீயரை காணவில்லை…
வானமாமலை திருக்குறுங்குடி திருப்பதி ஜீயர்கள் எங்கே??
வைணவ நெறி காற்றில் பறக்கிறதே தங்கமாய் திங்கும் ஹைதராபாத் திரிதண்டி சாமியார் எங்கே???
இவர்களை கண்டா வரச்சொல்லுங்கோ..
கண்டவுடன் கூட்டி வாருங்கோ..
பஞ்ச முத்திரையும் பரிவட்டமும் மாத்திரம் கேட்கிறதா??
கதறும் பட்டாச்சாரியார்களையும் அர்ச்சகர்களையும் காப்பாற்ற வராத இந்த சுயநலமிகளுக்கு திண்டு கொழுத்த சாமிகளுக்கும் அவர்களை அண்டி திருடும் மடாஸ்ரம கூட்டத்துக்கும் இனி மானமுள்ள எந்த கோயில் பட்டர் பரிவட்டம் கட்டுகிறார் சடாரி சாதிக்கிறார் என்று பார்க்கலாம்…
மதமே கெட்டாலும் தர்மமே தள்ளாட்டம் போட்டாலும் தன் கும்பாவை பற்றி மாத்திரம் அக்கறை கொள்ளும் இவர்களா முற்றும் துறந்தவர்கள்??
இவர்களுக்கா தமிழக திருக்கோயில்களில் பஞ்ச முத்திரையும் பரிவட்ட மரியாதைகளும்??
தமிழக பெருமாள் திருக்கோயில் கைங்கர்ய வைணவ பிராமணர்களே பட்டாச்சாரியார்களே அர்ச்சகர்களே சிந்திப்பீர்…

*சைவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை* 9629908758







