சைவ வேளாளர்களும் அவர்களின் 18 குடிபடை சாதிகளும் (குடிமக்கள்):

1.திருமணத்தின் போது முகூர்த்த கால் நடும் போது அத்தி மர குச்சை அல்லது கம்பை எடுத்து கொண்டு வந்து கொடுப்பது *சைவ நாவிதர்* உரிமை !(சைவ நாவிதர் அல்லது சைவ மருத்துவர் என்பவர்கள் முடிவெட்டக்கூடிய அம்பட்டர்களில் ஒரு பிரிவினர் தான்,100 வருடம் முன்பு வரை சைவ வெள்ளாளர், பிராமணர் தவிர மற்ற எந்த சாதிக்கும் முடிவெட்டமாட்டார்கள் இந்த சைவ நாவிதர்கள், ) சைவ நாவிதர்களின் பட்டம் பண்டிதர் என்பதாகும்! சைவ நாவிதர் வேறு நாடார் எனப்படும் சாணார்களுக்கு மட்டும் பாண்டிய அம்பட்டர் சாதியினர் வேறு !பாண்டிய அம்பட்டரை விட சைவ நாவிதர்கள் மேலானவர்கள் ஆவர்!
2.தாலி உருக்கு நிகழ்வின் போது *தங்க ஆசாரி* தாலி செய்து கொடுக்க வேண்டும், அதற்கு ஈடாக சைவ வெள்ளாளர்கள் ஆசாரிமார்களுக்கு தாம்பளத்தில் பழங்கள், வெற்றிலை, பாக்கு, பணம், வேட்டி சட்டை வைத்து கொடுக்க வேண்டும் !
3. சைவ வெள்ளாளரில் ஒரு பெண் வயதுக்கு வந்த பின் அவளது தீட்டு நாள் முடியும் வரை அவள் உடுத்தும் துணியை துவைத்து தருவது *ராஜ வண்ணார்* உரிிமை, அதற்கு ஈடாக தாம்பளத்தில் பழங்கள், வெற்றிலை, பாக்கு, பணம், வேட்டி சட்டை வைத்து கொடுக்க வேண்டும் ! ராஜ வண்ணார் சைவ வேளாளர் மற்றும் பிராமணர்களுக்கு மட்டுமே வெளுக்கக்கூடியவர்கள் ! பள்ளர்களுக்கு வெளுக்கக்கூடிய புதிரை வண்ணார்களுடன் ராஜ வண்ணார்கள் திருமணம் செய்து கொள்வதில்லை ! புதிரை வண்ணாரை விட ராஜ வண்ணார்கள் மேலானவர்கள் ஆவர்! ராஜ வண்ணார் MBC , புதிரை வண்ணார் SC சாதியினர் ஆவர் !
4.வருடாந்திர கூலி என்ற அடிப்படையில் சைவ நாவிதருக்கும், ராஜ வண்ணாருக்கும் வருடம் 15 பணம் அளிக்க வேண்டும் !
5.அம்மன் கோவில் கொடையின் போது மண்பாண்டங்கள், அக்னி சட்டி, கலையங்கள் செய்து கொடுப்பது *குலாலர் என்ற குயவர்களின்* உரிமையாகும்!
6.கோவில் விஷங்களின் போது அக்னி சட்டியில் போடுவதற்கான சுல்லிகளை பொருக்கி வந்து சாமி ஆடி போகும்போது அந்த அக்னி சட்டியில் சுல்லிகளை போடுவதும், எண்ணெய் விடுவதும் சைவ நாவிதர்களின் உரிமை, பெருமாள் புரட்டாசி ஜப்பரம், மார்கழி மாத ஜப்பரத்தின் போது பிராமணர்களுக்கு உதவியாக இருப்பது சைவ நாவிதர்கள் உரிமை !

7.அம்மன் கோவில்களுக்கு பூசை செய்வது பண்டாரங்களின் (உவச்ச பண்டாரம், ஆண்டி பண்டாரம், யோகிஸ்வரர், கோ பண்டாரம்) உரிமையாகும் !
8.சைவ வெள்ளாளர்களின் குலத்தெய்வ சாஸ்தா கோவில்களுக்கு பூசை செய்வது குலாலர் உரிமை , பூசை செய்யும் குலாலர் மீசையோ, தாடியோ வைத்திருக்க கூடாது என்பது ஐதீகம்!! இதற்காக இவர்களுக்கு வருடாந்திர கூலி வழங்கப்படும்!!
9.கதிர் அறுத்து களத்தில் அடிக்கும் முன் சாணி தெளித்து மொழுகுவது பகடைமார் என்ற அருந்ததியர் உரிமை, அந்த பகடைமாருக்கு கூலியாக நெல் கொடுப்பது சைவ வெள்ளாளர் கடமையாகும்!
10.சைவ வெள்ளாளர் அம்மன் கோவில் கொடையின் போது துள்ளு மறி (சின்ன ஆடு) கொடுப்பது காவல்காரர்கள் ஆன கம்பளத்து நாயக்கமார் உரிமையாகும் !
11. சைவ வெள்ளாளர் கோவில்களில் நடைபெறும் சாமிக்கான அபிஷேங்களில் பால் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பது கோனார் (யாதவர்) சாதி மக்களின் உரிமையாகும் !
12.சைவ வெள்ளாளர் வீட்டில் யாரேனும் இறந்தால் மாட்டுவண்டிக்கு பயன்படுத்தக்கூடிய பெரிய மொக்கால் எடுத்து கொண்டு வந்து படுக்க போடுவது பகடைமார் (அருந்ததியர்) உரிமை

13.யாரேனும் இறந்தால் மாத்து கொடி போடுவது ராஜ வண்ணார் உரிமை
14.இறப்பு அசுப காரியங்கள் முடிந்த பின் அதற்காக உதவிய பகடைமார்களுக்கு (அருந்ததியர்) மேளம் வாசித்த பறையர் இன மக்களுக்கு அவர்களுக்கான பணத்தை சைவ வெள்ளாளர்கள் தங்களது இடது கை மூலம் ராஜ வண்ணாரின் இடது கையிலும் ராஜ வண்ணார் தனது இடது கை மூலம் பறையர், பகடைமார்களின் (அருந்ததியர்) இடது கையிலும் வழங்க வேண்டும்
15.இறப்பின் போது தேர் செய்வதற்கான இரும்பு வலைவை வழங்க வேண்டியது குலாலர் உரிமை!
16.இறப்பின் போது பந்தல் போடுவதற்கான மர கட்டைகளை கொண்டு வருவது ராஜ வண்ணார் , சைவ நாவிதர் உரிமை !
17. சித்திரை ஒன்றாம் தேதி அன்று ஊரின் ஈசானிய மூலை எனப்படும் பகுதியில் நல்லேர் (பொன்னேர்) சைவ வெள்ளாள ஆண்கள் செலுத்த (பூட்டுவது) , சைவ வெள்ளாளர் பெண்கள் நாற்று விதைக்க, மாட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து அதனை வழிபட்டு பின் நல்லேர் (பொன்னேர்) செலுத்த வேண்டும், குடிபடை சாதி மக்கள் சைவ வெள்ளாளரை போற்றி பாடல் பாட வேண்டும், பிராமணர்கள் நல்லேர் (பொன்னேர்) முன் தீர்த்தம் தெளிக்க வேண்டும் !

18.சைவ வெள்ளாளர்கள் வீட்டில் யாரேனும் இறந்தால் அருகில் உள்ள கோவில் மடப்பள்ளியின் தலைமை பிராமணர் வந்து மாலையிட்டு மரியாதை செலுத்த வேண்டும் !
19.நெல் அறுவடையின் பின் பிறகுடிசாதிகள் அறுவடை நடந்த வயலில் மீதமுள்ள நெல்கதிர்களை அள்ளுவது நடைமுறை வழக்கம் !
20.வீடு கட்டுவதற்கு தேவையான சுண்ணாம்பை வழங்குவது, வீடு கட்டுவதற்கான முழு வேலையும் ஆள் கொண்டு ஏவி செய்வது சுண்ணாம்பு ஒட்டர் அல்லது சுண்ணாம்பு பறையர் எனப்படுவோர் ஆவர்!
21.சைவ வெள்ளாளர்களின் குலத்தெய்வ சாஸ்தா கோவில்களுக்கு வருடா வருடம் மண்ணில் குதிரை செய்து வைப்பது குலாலர் உரிமை !
22.சைவ வெள்ளாளர்கள் சித்திரை மாதம் தான் அம்மன்கோவில் கொடையையும், தங்களது குலத்தெய்வத்திற்கான விழாவையும் நடத்துவது வழக்கம்
23. சைவ வெள்ளாளர் ஒருவர் இறப்பின் போது பணி செய்த பகடைமார்கள் (அருந்தியர்களுக்கு) நின்னான் கூலி என்று பணம் வழங்குவது சைவ வெள்ளாளர்களின் கடமை ஆகும்!
24. சைவ வெள்ளாளர் காடு, களணிகளில் நாற்று நடுவது போன்ற விவசாய பணிகளை மேற்கொள்வது பள்ளர் என்ற குடும்பர்களின் உரிமையாகும்!

25. கண்மாய், குளம் போன்றவற்றில் இருந்து வயல்வெளிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதும், கண்மாய், குளங்களுக்கு சரியாக தண்ணீர் வருவதை கண்காணிப்பதும் மடைபள்ளர் (குடும்பர்) மக்களின் கடமை ஆகும், அந்த பணிக்கு ஏற்ற கூலி அவர்களுக்கு வழங்கப்படும்!!!
26. சைவ வெள்ளாளர் காடு, களணி, கண்மாய், குளங்களில் காவல் பணி செய்வது கம்பளத்து நாயக்கர் அல்லது மறவர்களின் பணி ஆகும்!! இதற்கு என்று அவர்களுக்கு தனியாக காவல் கூலியாக வருடா வருடம் பணம் அல்லது உணவு தானியங்கள் காவல் கூலியாக வழங்கப்படும்!!!
27. சைவ வெள்ளாளர் கல்யாண வீடுகளில் சமையலுக்காக அடுப்பு எரிக்க அடுப்புகளை தயார் செய்து கொடுப்பது குலாலர் என்ற குயவர்களின் பணி ஆகும்!!
28. சைவ வெள்ளாளர் கல்யாணத்திற்கு பணி செய்த சைவ நாவிதருக்கும், ராஜ வண்ணாருக்கும் அரிசி மற்றும் காய்கறி, கனிகளை வழங்குவது சைவ வெள்ளாளரின் கடமையாகும்!!!

29.சைவ வேளாளர் மணமகன் மற்றும் மணமகள் கையில் அவர் அவர் தாய்மாமன்மார்களால் கட்டப்படும் காப்பு கயிறு திருமணம் முடிந்த மறுநாள் காப்பு அவிழ்பது சைவ நாவிதர் உரிமையாகும், இதற்காக கிழக்கு பார்த்து திருமண தம்பதிகள் நிற்க சைவ நாவிதருக்கு ஒரு படி அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்படும் ,
30. சைவ வேளாளர்கள் திருமணத்திலும் , கோவிலும் அதாவது சுப காரியங்களில் ராஜமேளம் வாசிப்பது கம்பர் சாதியினர் ஆவர் , அதாவது இன்று இசை வேளாளர் என்று சாதி சான்றிதழ் மாற்றி வைத்திருப்போர் , ஆனால் உண்மையில் இசை வேளாளர் என்ற தெலுங்கு சின்னமேள சாதிக்கும் கம்பர் சாதிக்கும் சம்பந்தமே இல்லை , கம்பர் சாதியினர் தமிழக அரசின் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் (BC) வருவதால் இடஒதுக்கீட்டிற்காக இசை வேளாளர் (தெலுங்கு சின்னமேளம் ) (MBC) வாங்கி வைத்துள்ளனர்! ராஜமேளம் வாசித்தற்காக கம்பர் சாதியினருக்கு கூலி வழங்கப்படும் ,
31. சைவ வெள்ளாளர் திருமணம், கிரகபிரவேஷம் என சுப நிகழ்ச்சிகளை செய்து வைப்பது சைவ வெள்ளாள குருக்கள் அல்லது ஆதிசைவர்கள் (சிவபிராமணர்) ஆவார் , சைவ வெள்ளாளர் வீட்டு அசுப(கெட்ட) காரியங்களை செய்து வைப்பது மாத்வா பிராமணர் ஆவர்
32.சைவ வெள்ளாளர் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு கல்யாணத்திற்கு முன் பந்தல்கால் நடுவது சேனைத்தலைவர் (மூப்பனார்) சாதி சார்ந்தவர் ஆவார்!
33.சைவ வெள்ளாளர் திருமணத்தின் போது முகுர்த்தகால் நடும் போதும், காப்பு கட்டும் போதும், தாலி கட்டும் போதும் பண்டாரம் (யோகிஸ்வரர் அல்லது உவச்சர்) சாதியினர் சங்கு பெருக்குதல் (ஊதுதல்) உரிமையாகும்!
34.சைவ வேளாளர் திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பின் போது சைவஅஷ்டமங்கல பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் !
35.சைவ வெள்ளாளர் மணமகன் வருகையின் போது கல்யாணம் நடைபெறும் இடத்தை நெருங்கியதும் கொம்பு தாரை ஊதுதல் அவசியமானது ஆகும்! கொம்பு தாரை ஊதுவது பண்டாரங்களின் உரிமையாகும்! கொம்பு தாாரை ஊதுவது மணமகன் திருமண நடைபெறும் இடத்தை நெருங்கிவிட்டார் என்பதை மணமகளுக்கு தெரிவிப்பதாகும் !
சைவ வெள்ளாளர் மற்றும் அவர்களின் 18 குடிபடை சாதிகளின் (குடிமக்கள்) வரலாற்று நீட்சி தொடரும்!!!
சைவ வெள்ளாளர் மற்றும் அவர்களின் 18 குடிபடை சாதிகளின் விவரங்கள் ஏதேனும் மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டிய எண் :
*சைவச்செல்வன்.ஒட்டப்பிடாரம்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758*







