பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? இனி எவன் கேட்டாலும் கூறு நாங்கள் வெள்ளாளர்கள் தான் சோழர்கள் என்று.

1

பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ?

படத்தில் இருக்கும் பாடலின் பொருள்:

சோழ நள்ளாறு என்னும் ஆறு பாயும் அழகான பூமியில் ஐராவதம் என்னும் படித்துறையும், ஐந்து இதழ்களை கொண்ட வில்வ மரங்கள் நிறைந்த வனமான செம்பியன் காணி அதாவது செம்பிய நல்லூரில் இருக்கும் அவினாசி லிங்கர்க்கு

கொங்கு நாட்டிற்கு புதியதாக வந்திருக்கும் பைதலை குலத்தலைவன் அவினாசி லிங்கரின் காவலனான விளங்குகின்ற கண்டன் ஆன சோழ அரசன் வாழும் கொங்கு மண்டலம்.
என்பது மேற்கண்ட பாடலின் பொருள்

அம்புவி ; அழகான பூமி

சோழ நள்ளாறு: அன்னூருக்கு மேற்கே உற்பத்தி ஆகி அவினாசி, திருமுருகன் பூண்டி வழியாக திருப்பூர் சர்கார் பெரியபாளையம் அருகே நொய்யல் ஆற்றில் கலக்கும் ஒரு ஆறு. சோழர்கள் இந்த ஆற்றின் நதிகரையான பூண்டியில் ஒரு வகையாறும், செம்பிய நல்லூரில் ஒரு வகையாறும் குடியேறியதால் சோழ நள்ளாறு என்று பெயர் பெற்றது.

அயிராவதமும் : இந்த நள்ளாற்றங்கரையில் இருக்கும் ஒரு படித்துறை.

பண்புறு மைந்திகழ் வில்வமும் : சிறுப்பு வாய்ந்த ஐந்து இதழ்களை கொண்ட வில்வ மரத்தை குறிக்கிறது.

சேர்வனம்: வில்வ மரங்கள் நிறைந்த காடு

பைதலகோன் : பைதலை குல தலைவன்

செம்பியன் காணி : அவினாசி கோவில் இருக்கும் ஊராட்சியின் பெயர். இன்று அரசு கெஜட்டில் செம்பியன் நல்லூர் என்று உள்ளது. தற்போது பேருராட்சிக்கு உட்பட்டு உள்ளது.

சேர்வை பட்டம்: காவலனாக விளங்குவது

வம்புறு : புதியதாக வந்தவன்

கண்டன் : எமன் என்று பொருள்

சோழர்கோன் : சோழ அரசன் என்று பொருள்.

இதில் கூறப்படும் சோழ அரசனான பைதலை குலத்தலைவன் இரட்டை சங்கு பால வெள்ளாளர் பிரிவை சார்ந்தவன். அவினாசி கோவிலில் உள்ள பிற்கால கல்வெட்டுகளில் இவனை “ஆண்ட மக்கள் சோழியாண்டான் சூரிய தேவன்” என்கிறது.

மற்றும் அதே அவினாசி கோவிலின் திருதேர் பட்டையத்தில், “ஆறை நாடு பெரிய பட்டம் இம்முடி பட்டம் வணாங்கா முடி வீர விக்கிரம கரிகால சோழியாண்டான்” என்று கூறுகிறது. இது போல் பல ஆவணங்கள் உள்ளது.

சோழியாண்டான்: சோழன் + ஆண்டான் : சோழனாக ஆண்டவன் என்று பொருள்
பல ஆவணங்கள் தெளிவாக சொல்லி விடுகிறது வெள்ளாளர் சாதியின் உட்பிரிவான பால வெள்ளாளரில் பைதலை குலத்தலைவந்தான் சோழ அரசன் என்று.

இதன் மூலம் வெள்ளாளர்களே சோழர்கள் என்றும் சோழர்களே வெள்ளாளர்கள் என்பதும் ஆதாரபூர்வமாக மறுப்பு எதுவும் இன்றி உண்மையாகிறது, இனி எவன் கேட்டாலும் கூறு நாங்கள் வெள்ளாளர்கள் தான் சோழர்கள் என்று., புலி வம்சதான் புலி கொடியான் வலங்கை சாதியான் என்று , வாழ்க வெள்ளாளர் வெல்க வேளாளர் ஒற்றுமை (வெள்ளாள கவுண்டர் + வெள்ளாள பிள்ளைமார் + சைவ செட்டியார் + சைவ முதலியார் +குருக்கள் + வெள்ளாள முதலியார்+ ஆதி சிவாச்சாரியார்கள்)

நன்றி:சிவா பிரகாஷ் சோழர்

1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *