நாம்என்னபன்னபோகிறோம்.
நம் உரிமையை இழந்து இட ஒதுக்கீட்டை இழந்து நம் இன அடையாளத்தை இழக்கபோகிறோமா

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள் இன்று காலையில் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்தார்.
1 குடும்பன், காலாடி,பண்ணாடி,கடையன்,பள்ளன்,தேவேந்திரகுலத்தான்,வாதிரியான்,என்ற உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று மாண்புமிக்க பெயரில் அழைக்க வகைசெய்யும் அரசு ஆணை கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்
2.வேளாண்மையை பாரம்பரிய பூர்வீக தொழிலாளாக கொண்ட மக்களான தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் வகுப்பில் இருந்துகொண்டு பெற்றுவரும் நன்மைகளைவிட இழந்த மாண்பு அதிகம். அழிந்துவரும் விவசாயம் போல பாரம்பரிய வேளாண்குடிகளின் வேளாண்மை சார்ந்த அடையாளம் அழிந்து வருகின்றது. அதனால் தமது வேளாண்மை சார்ந்த சமூகமாக தனது அடையாளத்தை தக்கவைத்து மாண்போடு வாழ தேவேந்திரகுல மக்கள் விரும்புகிறார்கள். எனவே வேளாண் மரபினராக தனிப் பட்டியல் கீழ் தேவேந்திரகுல மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன் வைக்க உள்ளோம் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தரவேண்டும் என்றும்
3. தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் அரசு விழாவாக அரசு அறிவிக்க பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களிடம் ஆதரவு கோரினார். சந்திப்பின்போது தமமுக மாநில பொதுச் செயலாளர் ஜா.பிரிசில்லாபாண்டியன் மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.







