ஆயிரத்து ஐந்நூற்றுவன் வாள் படை பிரிவு என்பது வெள்ளாளர்களை கொண்ட படை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழுவை பற்றி அதிகமாக சோழர் கால கல்வெட்டுகளில் காண முடியும்.

இவர்கள் பல கடல்களையும் கண்டங்களையும் கடந்து வணிகம் செய்தவர்கள் இவர்களை பற்றிய கல்வெட்டுகள் சீன மற்றும் சுமித்திரா போன்ற நாடுகளில் கிடைக்கின்றது.

இந்த ஆயிரத்து ஐந்நூற்றுவன் குழுவுக்குரிய பாதுகாப்பை அரசங்காம்தான் செய்ய வேண்டும் அதற்கு ஏற்படும் செலவுகளை வணிகர்களுக்கு சுங்கம் விதித்து ஈடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசாங்கத்தால் நன்கு வாள் வீச்சில் வல்லவர்களான வலங்கை படையும்

வணிகர்களால் தனிப்பட்ட முறையில் ஊதியம் பெறும் இடங்கை படையும் இவர்களின் பாதுகாப்பிற்கு இருப்பார்கள்.

இதில் வாள் வீரர்களின் படையின் சிறப்புகளை பற்றி மைசூர் கல்வெட்டு வெகு சிறப்பாக பேசியிருக்கும்..

அத்துடன்

கொற்ற குடை முன்னூற்றுவர் படை

நானூற்றுவர் படை

கொற்றவாள் எழுநூற்றுவர் படை (மூலப்படை )

போன்ற அரசர்களின் வாள்படையை பற்றியும் மூல படை பற்றியும் நான் ஏற்கனவே ஆதாராங்களை பதிவிட்டு இருந்தேன்.

மேற்கண்ட படை பிரிவினர் அனைவரும் வெள்ளாளர்கள் என்பதையும் தக்க கல்வெட்டு ஆதாரத்துடன் பதிவு செய்திருப்பேன்.

அதேபோல இந்த ஆயிரத்து ஐந்நூற்றுவன் வாள் படை பிரிவும் வெள்ளாளர்களுடையதே.

இதில் ஆயிரவர் என்பது வெள்ளாளர்களையும் ஐந்நூற்றுவர் என்பது வணிகர்களையும் குறிக்கிறது என்ற கருந்து நிலவுகிறது. இருவர்களையும் சேர்த்துதான் ஆயிரத்து ஐந்நூற்றுவன் என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் இன்னும் இக்கருத்திற்கு வலுவான ஆதாராம் கிடைக்கவில்லை

ஆனால் ஆயிரத்து ஐந்நூற்றுவன் வாள் படை பிரிவு என்பது வெள்ளாளர்களை கொண்ட படை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இந்த பதிவில் இருக்கும் படத்தில்

வெள்ளாளன் நிறணிந்தப்பேரரையன் ஆயிரத்து ஐந்நூற்றுவன் என்பவன் திருக்கடையூரில் ஆயிரத்து ஐந்நூற்றுவன் மடம் என்ற ஒரு மடத்தை எடுத்துள்ள செய்தி கூறப்பெறுகிறது.

உலகம் முழுவதும் இருக்கும் இந்த ஆயிரத்து ஐந்நூற்றுவர்கள் நலனுக்காக ஆயிரத்து ஐந்நூற்றுவன் எடுத்த மடம் இன்னும் உள்ளதா என்பது பற்றி அறிந்து அதை பாதுகாக்க வேண்டும்.

பேரரையன் என்பது க்ஷத்திரிய வர்ணத்தவர்களுக்குரிய பட்டம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *