வஉசியை போற்றி பாடி காமராஜர் எழுதிய பாடல்
admin
July 17, 2018
வஉசியை போற்றி பாடிய காமராஜர்
அந்த பாடல்
கப்பல் ஓட்டிய தமிழன் யாரு?
கண்மணி கூறு
இப்புவியில் வெள்ளையரை
எதிர்த்த கப்பலு
இந்தியாவில் ஒருவர் தானே
என்பது பேரு
சிதம்பரம் அவர் தென்தமிழன்
சிதம்பரனாரு
வஉசி என்றாலே
வள்ளல் என்பாரே
பிள்ளை என்று சொன்னால்
உள்ளம் பதறுவார்
வெள்ளை அவன் இவராலே
வியர்த்து கொட்டுவான்
ஓட்டபிடாரம் உலகநாதன்
பெத்த பிள்ளையிவரு
செக்கிழுத்த செம்மல் இவரு
சொத்திழந்தாறு
சுதந்திரம் தான் சொத்து என வாழ்ந்தாரு
வாழும் நாட்டின் உரிமைக்காக
வறுமைபட்டாறு
பட்டம் பதவி எல்லாத்தையும்
பறிகொடுத்தாறு
மிச்சம் என்ன உயிர் அதையும்
துச்சம் என்றாரு
முத்தமிட்டே பாரதத்தை
முன்மொழிந்தாரு
கட்டாயம் விடியும் என்றே
கண்ணயர்ந்தாரு.
