*இலங்கையில் சாதி , மதங்களின் நிலைப்பாடு குறித்து இலங்கையை சார்ந்த யாழ்ப்பாண சைவ வேளாளர் ஒருவர் கூறும் பதில் கீழே*
இலங்கையில் G.C.E (O/L) – 10 வது வகுப்பு வரை அரசாங்கப் பாடசாலைகள் உட்பட எல்லாப் பாடசாலைகளிலும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் மதம், மொழி போன்றவை கட்டாயமாகக் கற்பிக்கப் படுகின்றது.
சைவ மத மாணவர்கள் கட்டாயம் இந்து மதம் (சைவம், சாத்தம், வைணவம்) கற்க வேண்டும்.
இலங்கையில்
சாத்தம், வைணவம் இல்லை. சைவ மதம் மட்டும் உண்டு.
இங்கு குறிப்பிடும் ஆறுமுக நாவலரின் சைவ சித்தாந்தம், அவர் எழுதிய சைவ வினா விடையும் கற்பிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள எல்லா பெளத்த சிங்களவர்களும் புத்தரை வணங்கிக் கொண்டு சைவ மதக் கோவில்களுக்குச் சென்று சிவன், முருகன், அம்மன் போன்ற கடவுள்களை வணங்குகின்றனர்.
இலங்கை அரசாங்கத்தின் மந்திரி சபையில், இந்து கலாச்சார அமைச்சு என்று தனியாக உள்ளது. அரசாங்கம் சைவத் தமிழரை அமைச்சராக நியமிக்கும் அல்லது பிரதமர் அந்தப் பொறுப்பை ஏற்பார்.
இலங்கையில் சைவ மதத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட
ஆறுமுக நாவலர், சேர் பொன்.இராமநாதன் (இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி),
சேர்.பொன். அருணசலம், சிங்களவரால் அடங்காத்த தமிழன் என்று அழைக்கப்பட்டவரும் , யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரான பள்ளர், பறையர், நளவர், சக்கிலியர் யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ கோவிலான மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் உள்ளே செல்ல போராடிய போது யாழ்ப்பாண வெள்ளாளர்களுக்கு தலைமை தாங்கி போராடி நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்று வெள்ளாளரின் மரியாதையைக் காப்பாற்றிய சி.சுந்தரலிங்கம் (London Educated Math Prof., Lawyer, Govt-Minister) ஆகியோர் அனைவரும் யாழ்ப்பாண வெள்ளாளர் (வேளாளர்) உயர் சாதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை தாழ்த்தப் பட்ட எந்த சாதியினருக்கும் பிடிக்காது என்பதும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இலங்கையில் வெள்ளாளர், பிராமணர் ஆகிய இரு சாதியினர் . தான் உயர் சாதியினர்.
அதேபோல் சிங்களவர்களில் கோவி கம (Govi gama) (இவர்கள் தமிழ் வெள்ளாளர் களுக்கு சமமானவர்கள்) தான் உயர் சாதியினர். சிங்களவர் தமிழர்ளைப் போல் சாதி பார்க்கின்றனர்.
சிங்கள பெளத்த மதகுருமார், இலங்கையின் பிரதமர், ஜனாதிபதி எல்லோருமே கோவி கம (Govi gama) சாதியில் இருந்து தான் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். சிங்கள கோவி கம சாதியினருக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர் சாதியினருக்கும் திருமணம் நடைபெற்றால் எதுவித பிரச்சனையும் இல்லை.
உதாரணமாக இன்று தமிழர் தேசியம் பேசும் முன்னாள் நீதிபதியும், முன்னாள் இலங்கையின் வட மாகாண (வட பிராந்தியம்) தமிழ் தேசிய கூட்டு அபைப் பின் முதல் அமைச்சரும், இன்றைய தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், இலங்கையின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாண சைவ வெள்ளாளர். அவரது இரு மகன்களும் சிங்கள பெளத்த கோவி கம (Govi Gama) அமைச்சர்களின் (Minister Vasudeva Nanayakara) மகள்களை காதலித்து கல்யாணம் செய்யும் போது தமிழ் வெள்ளாளர் குடும்பங்களும் சிங்கள கேவி கம குடும்பங்களும் தமிழ் – சிங்கள கலாச்சார முறைப்படி விவாகம் செய்து வைத்தனர்.
தமிழ் தேசியம் பேசும் தமிழர் எப்படி சிங்கள தேசியம் பேசும் சிங்களவருடன் திருமண பந்தம் செய்ய முடியும்?
இங்கு உண்மையில் தமிழ் தேசியம், சிங்கள தேசியம் வாய் அளவில் மட்டும்தான். இங்கு சாதி தான் வெற்றி பெறுகின்றது.
எனவேதான் தமிழ் தேசியம், திராவிடம் எல்லா வற்றையும் சாதி தோற்கடிக்கின்றது.
நாம் வெள்ளாளர்/ வேளாளர் என்பதால் உலகளாவிய ரீதியில் வெள்ளாளர் / வேளாளர்களாக ஒன்று படுகின்றோம்.
ஆறுமுகநாவலர் சைவ சமயத்துக்கும் வெள்ளாளர் (வேளாளர்) களின் முன்னேற்றத்துக்கும் இலங்கையில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் சேவை செய்துள்ளார்.
நன்றி.
நன்றி
*யாழ்ப்பாண சைவ வேளாளர் ராஜா நியூயார்க்*
மேலும் தொடர்புக்கு சைவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







