*மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு(சைவப்பிள்ளைமார்) தான் இந்த பதிவு*

தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில்
*மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு தான் இந்த பதிவு*
தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் மறந்து விட்டோம்,
ஆனால் கோத்திரம் என்பது எதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்,
*வெள்ளாளர்கள் கோத்திரங்களை, கூட்டங்களை, கிளைகளை, குலத்தெய்வங்களை மறக்க கூடாது*
*கோத்திரம் என்றால் என்ன??*
நம்மில் அநேகருக்கு கோத்த்திரம் என்றால் என்ன, அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. உங்கள் சந்தேகத்தை என்னால் இயன்ற அளவு போக்குவதற்குத் தான் இந்த விளக்கம்.
இது நான் படித்த புத்தகங்களின் சாராம்சமும், நான் சிறு வயது முதல் எனது பெற்றோர்கள், முதியோர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையிலும் தான், இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கோத்ரா என்றாலே பரம்பரை அல்லது வமிசம் என்றுதான் பொருள். ஒரு சமூகத்தில், அநேக குடும்பங்கள் உண்டு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தலைவர், அவரின் சந்ததியர் உண்டு. அதைத் தான் பரம்பரை அல்லது வமிசம் என்று அழைக்கிறோம். அந்த பரம்பரைக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தனி அடையாளம் தான் கோத்திரம் என்பது. இல்லை என்றால் நாம் எவ்வாறு பல வம்சாவழியினரைப் பாகுபடுத்த இயலும்?இதற்கு ஏன் இவ்வளவு முக்கியம்? ஒவ்வொரு கோத்திர மூலபுருஷரின் பரம்பரையில் பிறந்தவர்களுக்கும், அவர்களுக்கென்று ஒரு தனி குணாதிசயம், அவர்களுக்கு என்று ஒரு இனக்கீற்று அமிலம் (DNA) உண்டு .
பிராமணர்கள், அவர்கள் தாங்கள் முதலில் இருந்த விசுவாமித்திரர்,பரத்வாஜ், வசிஸ்டர் முதலான 7 ரிஷிகளின் வாரிசுகள் என்று தங்களை கூறிக்கொள்வார்கள் . ஆனால் நமது சமூகத்தில், அனேகமாக நாம் ஒவ்வொருவரும் நமது முன்னோர்கள் இருந்த பூர்விக இடங்களின் பெயரை வைத்து நமது கோத்திரங்களின் பெயர்களை கொண்டுள்ளோம். அந்தக் காலத்தில், சிறுசிறு நாடுகளாக இருந்தபொழுது ஒரு அரசன் படைஎடுத்து, ஒரு நாட்டைப் பிடித்தால், அங்கு வாழ்ந்த நமது சமூகத்தினர், இரவோடு இரவாக பாதுகாப்பான வேறு நாட்டிற்குக் குடிபெயர வேண்டியிருந்தது. சில நேரங்களில் அரசன் மதம் மாறிவிட்டால், மற்றக் குடிமக்களும் அவரின் மதத்துக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் குடிபெயர்ந்து வேறு இடத்தில் வாழத் தொடங்கினாலும் தமது பூர்விக இடத்தை தம் குடும்பத்தின் அடையாளமாக வைத்துக்கொண்டனர். அவைகளே கோத்திரம் என அமைந்தது. நமது கொடிவழிப் புத்தகத்தைப் பார்த்தால், அதில் ஆத்தூர், மாமண்டூர், ஆரையூர், ஆர்ப்பாக்கம், ஜோதியம்பாக்கம் என்று பல ஊர்ப் பெயர்களைக்
காணமுடியும். அவர்கள் எல்லோரும் இந்த ஊர்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று தான் நமக்கு எண்ணத் தோன்றுகிறது. சுருங்கக் கூற வேண்டுமெனில் கோத்ரா என்பது ஒரு குடும்பத்தின் தனி அடையாளம்தான். அவர்கள் எல்லோரும் அதே பரம்பரையில் பிறந்ததால் அவர்களின் ரத்தமும் ஒன்று. அவர்களின் குணாதிசயங்களும் ஒன்றாகத்தான் இருக்கும். அதனால்தான் நாம் ஒரு கோத்திரத்தில் பிறந்தவர்கள் தமக்குள் திருமணம் செய்யக்கூடாது என்று வைத்தனர். அவர்கள் உடன்பிறந்த அண்ணன், தங்கைக்கு சமம் ஆவார். இன்றைய விஞ்ஞான உலகமும் இதை அங்கீகரிக்கிறது.
ஒரு கோத்திரத்தை சேர்ந்தவர்கள், வேறு வேறு இடங்களுக்குத் தம் பணிநிமித்தம் போக நேரிடும். அங்கு கோத்ரம் தெரியவில்லை என்றால் அந்த வம்சாவளியிலேயே பிறந்த குடும்பங்களில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. அது அவர்களின் சந்ததிகளுக்கு விஞ்ஞானரீதியாகவே நல்லதல்ல. இதற்காகத்தான் நமது வம்சாவழி/கொடிவழி கோத்திரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது,
கோத்திரம் எதற்கு முக்கியம் என்பது குறித்து பார்த்தோம், ஆனால் நாம் கோத்திரத்தை மறந்தே விட்டோம்,
எனவே தான் நாம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமாரி மாவட்டத்திற்குள் மட்டுமே தான் அதுவும் நெருங்கிய சொந்தபந்தத்திற்குள் மட்டுமே திருமணம் செய்து வந்தோம், ஆனால் தற்காலத்தில் வேலை நிமித்தமாக, வாழ்வாதாரம் பொருட்டு சென்னை, பெங்களூர், மும்பை, கோவை என செட்டில் ஆகி வருகிறோம், அது போக நெருங்கிய சொந்தபந்திற்குள் திருமணம் முடிப்பதும் தற்பொழுது அருகி வருகிறது, எனவே *நாம் குலத்தெய்வத்தை கோத்திரமாக வைத்து இனி திருமணம் செய்வோம், ஒரே குலத்தெய்வத்தை வணங்குபவர்கள் அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என பங்காளி முறை ஆவர், ஆகவே ஒரே குலத்தெய்வத்தை வணங்கும் சைவ வேளாளர்கள் தங்களுக்குள் திருமணம் முடிக்க வேண்டாம், வேறு வேறு குலத்தெய்வத்தை வணங்குபவர்கள் மட்டுமே தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்*, அதற்காகவே வகுக்கப்பட்டது தான் குலத்தெய்வமும்,
ஆகவே இந்த குலத்தெய்வ (கோத்திரம்) முறையை பயன்படுத்தி, குலத்தெய்வம் கேட்டு திருமணம் முடியுங்கள்,
அனைத்து சைவ வேளாளர் சங்கங்களும், திருமண வரன் நடத்துபவர்களும் இதனை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,
திருமண வரன் நடத்துபவர்கள் நீங்கள் தயாரிக்கும் பதிவு சீட்டிலும் (Marriage application form) குலத்தெய்வ பெயரை குறிப்பிட சொல்லி பதிவு செய்ய சொல்லுங்கள்,
நன்றி வணக்கம்,
*இது குறித்து ஏதேனும் சந்தேகம் எனில் தொடர்புக்கு :ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன். கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758*







