சுதந்திர போராட்ட தியாகி…கவிக்குயில்..எம்பாட்டனார்…

கவிமணி தேசிகவிநாயகன் பிள்ளை அவர்களின் 143வது பிறந்த தினம்… அவரின் தியாகங்கள் இன்னும் இம்மண்ணில் நினைந்து உருக செய்யும்… அவர் புகழ் பாட அடியேன், சிறியேன்.
ஆயினும் அவர் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்…
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஜூலை 27 ,1876 ஆம் ஆண்டு குமரிமாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில் பிறந்தார்,
இவர் பக்தி பாடல்,இலக்கியம் பற்றிய பாடல் குழந்தை பாடல் இயற்கை பாடல் சமூக கவிதைகள் போன்ற என்னற்ற கவிதை தொகுப்பை வழங்கி உள்ளார்.
வாழ்க்கை குறிப்பு:
சிவதாணுபிள்ளை -ஆதிலட்சுமி என்ற தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு மகனாக பிறந்தார்.அவரது அப்பா இவருக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார்
குழந்தைகளுக்காக:
குழந்தைகளுக்காக தமிழில் முதன் முதலில் தொடர்ச்சியாக 1938 ஆம் ஆண்டு மலரும் மாலையும் என்ற நூலில் 25க்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதி உள்ளார்







