குலத்தெய்வங்களுக்கு பலி ஏன் அவசியம்?

உங்கள் முன்னோர்கள் எப்படி பலி கொடுத்து வந்தார்களோ அந்தந்த பலி பூஜைகள் அப்படி அப்படியே தொடர வேண்டும்.

சிறு மாற்றம் கூட தெய்வ குற்றம் ஆகி விடும்.

பலியிட்ட பிறகு சாமிக்கு படையல் போடும் போது கீழே கண்ட ஐந்து மகாரங்களை படைத்தால் தான் பூர்த்தி ஆகும்.

ஐந்து மகாரங்கள் :

1. பலி மாமிசம்

2. பலி மத்யம் அல்லது சுரா பானம் அதாவது பட்டை சாராயம்,கஞ்சா,கள் போன்றவை

3. பலி மத்ஸ்யம் அல்லது மீன் பலி

4. பலி முத்ரா எனும் பச்சரிசி வகைகளில் செய்யப்படும் பொங்கல்,அவல்,பச்சை மாவு போற்றவை

5. மைதுணம் என்ற கணவன் மனைவி இணைந்து தங்கள் பங்காளிகள் மற்றும் குலத்தினரோடு சேர்ந்து மட்டுமே மேற்கண்ட 4 பூஜைகளையும் செய்வது.

சுருங்கச் சொன்னால் நம்ம ஊரில் உள்ள கோயிலில் பங்காளிகள் உடன் சேர்ந்து செய்யும் பலி பூஜை இட்டு,பொங்கல் வைத்து செய்யும் பூஜை முறைகள் அனைத்துமே அம்மன் நமக்கு அளித்த யாமள மாத்ரு தந்திர ஆகமத்தில் உபதேசிக்கப்பட்டவை ஆகும்.

🔥அந்தந்த கோயிலின் காவல் தெய்வத்திற்கு:

நீங்கள் ஆடு பலி படைப்பதை நிறுத்தினால் உங்கள் பிள்ளைகள் சீமைப் பன்றிக் கறி முதல் பாம்புக் கறி வரை தின்னத் துவங்கி விடுவார்கள்.

நீங்கள் தூய கள், பட்டை சாராயம் படைப்பதை காவல் தெய்வத்திற்கு நிறுத்தினால் உங்கள் பிள்ளைகள் முழு குடிகாரன் ஆகி விடுவார்கள்.

நீங்கள் சுருட்டு படைப்பதை காவல் தெய்வத்திற்கு நிறுத்தினால் உங்கள் பிள்ளைகள் சிகரெட் அடிமையாகவும், பான்பராக் அடிமையாகவும் ஆகி விடுவார்கள்.

நீங்கள் துளி அளவு கஞ்சா படைப்பதை காவல் தெய்வத்திற்கு நிறுத்தினால் உங்கள் பிள்ளைகள் அபின் போதை அடிமையாகவும், ஹெராயின் போதை அடிமையாகவும் ஆகி விடுவார்கள்.

பச்சரிசி மாவு பண்டமும்,சுட்ட கருவாடும் இதே போலதான்.

இத்தனை பலிகளையும் உங்களுடைய குல தெய்வ காவல் தெய்வங்களுக்கு வருடாவருடம் தவறாமல் நீங்கள் படைத்து விட்டால் எந்த ரூபத்தில் துர் பழக்கம் பக்கத்தில் வந்தாலும் அந்த காவல் தெய்வம் தானே ஏற்றுக் கொண்டு உன்னை காத்து நிற்கும்.

இவைகளை விட்டு விட்டால் அந்த தெய்வம் உங்களை அருகில் கூட சேர்க்காது.

இதுதாங்க நம்ம முன்னோர்கள் செய்து வந்த தலையாய கடமைகள்.

🔥குறிப்பு:

பலி கொடுப்பது எல்லாம் தப்பு,அபச்சாரம் என்று ஒரு சாக்கிய பௌத்த அடிமை கோஷ்டி கிளம்பும்.

அட கூ முட்டாளே…என் காளிக்கு எதுக்குடா சிங்கப்பல் வச்சாங்க.
பொங்கல் சாப்பிடவா என்று கேளுங்கள்.

இதை விட்டு விட்ட குடும்பத்தில் தான் இப்போது துர்மரணம், வாழா வெட்டி ஆகுதல், வாரிசு இல்லாமை, பெண் பித்தன் ஆகுதல்,பல ஆண் தொடர்பு ஏற்படுதல்,போதை பழக்கம், சூதாட்டம் ,பிறரை ஏமாற்றும் குணம் ஆகியவை ஏற்படுகிறது.

முக்கியமான விஷயம் பலி பூஜையின் ரத்தத்தை நம் மண் வளம் பெற தாய் மண்ணிற்கு மட்டும் தான் விட வேண்டும்.

சமையல் செய்யக் கூடாது… கூடாது.

பலி தேவை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

அனைவரும் அறிய பகிர்வோம்.

கட்டுரையாளர் : பால சுப்பிரமணிய ஆதித்தன்

 

மேலும் சந்தேகங்களுக்கு:

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *