கொடிகால் வெள்ளாளர் “குடிகார வேளாளர்” ஆனது
தமிழக அரசால் இணையதளம் மூலம் அளிக்கப்பட்டுவரும் சாதிச் சான்றிதழில் சாதிபெயர் மாறுவதால் நம் இன மக்கள் பெரிதும் பாதிக்கபடிகின்றனர்.
தமிழக அரசின் சாதிவாரியான பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதியினருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு வரை வட்டாச்சியர் அலுவலகம் மூலம் வருவாய்த்துறை அலுவலர்கள் கையெழுத்திட்டு அளிக்கும் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து வருமானம்,சாதி,இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து விதமான சான்றுகளும் மாநில அளவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் மூலம் இந்த சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் பெருமான்மை மாவட்டங்களில் வசித்து வரும் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த கொடிக்கால் வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தற்போது இணையதளம் மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழில் “குடிகார வெள்ளாளர்” என்று தரக்குறைவான வார்த்தையில் சான்றிதழ் வழங்கபடுகிறது.இதனால்,சம்பந்தப்பட்ட நம் இனத்தை சேர்ந்த லட்சகணக்கான மாணவ,மாணவிகள் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
மேலும்,இதில் சாதிச் சான்றிதழ்களில் மதம் என்ற பிரிவு நீக்கப்பட்டு சாதிப் பெயரும்,அரசு ஆணை எண் விவரங்கள் மட்டுமே குறிப்பிடபடுகிறது. எதிர்காலத்தில் கல்வி வேலைவாய்புகளில் பெரிய சிக்கலை எம் இன மாணவ,மாணவியருக்கு இந்த அரசு உருவாக்கி உள்ளது.
OBC-பிரிவில் மத்திய,மாநில அரசுப் பணியிலும் சேரும்போது சாதிசான்றிதழின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாவதால் பணியில் சேர முடியாமல் மறுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
வெள்ளாளர் இனத்தில் வெற்றிலைக் கொடிகால் விவசாயம் செய்து வந்தவர்கள் கொடிக்கால் வெள்ளாளர் என தனிப்பிரிவாக அழைக்கப்பட்டனர் அவ்வாறே சாதிச் சான்றிதழும் வழங்கபட்டு வந்தது.
இந்நிலையில்,இணைய வழிச் சான்றிதழ் பெறும் முறை வந்த பிறகு இந்த பெயர் மாற்றம் வந்துள்ளது.இது மென்பொருளின் உள்ள குறைபாடு எனவே,மாநில அளவில் பயன்படுத்தபடும் மென்பொருளில் இந்த தவறான வார்த்தையில் உரிய திருத்தம் கொண்டுவர தமிழக அரசும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் உரிய,துரித நடவடிக்கை எடுத்து லட்சகணக்கான மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க முன் வர வேண்டும்.
இது சம்பந்தமாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்க வேண்டும்.








Yes sir how to escalate such matter to higher official