*சைவ வெள்ளாள சங்க அறிவிப்பு*
மாநில தலைவர் சைவத்திரு.புளியறை ராஜா அவர்களின் அறிவுறுத்தல் உத்தரவின் பேரில் தமிழகம் முழுக்க உள்ள
*சைவ வெள்ளாளர்* கூறபடுவது என்னவென்றால்
செப்டம்பர் 5 சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாட அனைத்து கிளை சங்கங்களும் நாகரீகமான முறையில் வ.உ.சி பிறந்த நாளுக்கு *போஸ்டர்* அடித்து உங்கள் சங்கம் அமைந்திருக்கும் சுற்றுபுறபகுதிகளில் கூலிக்கு ஆள் வைத்தாவது ஓட்ட வேண்டும் எனவும்
தங்களது சங்கங்ளில் உள்ள வ.உ.சி அய்யாவின் திருவுரு படத்திற்கு மட்டும் மாலை அணிவிப்பதோடு அல்லாமல்
உங்கள் சங்க பகுதிக்கு அருகில் உள்ள *ஒன்றிய தலைநகர், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி* போன்ற பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஐயா வ.உ.சி யின் சிலைக்கு குறைந்தது சங்கத்தில் இருந்து
*இருபது பேராவது*
கார், பைக் போன்ற வாகனங்களில் பேரணியாக சென்று
மாலை அணிவித்து சிறப்பானதொரு முறையில் வ.உ.சி பிறந்த நாளை கொண்டாடும்படியாக அறிவுறுத்தப்படுகிறது
மேலும் அனைத்து சைவவெள்ளாளர் சங்கங்களும் கண்டிப்பான முறையில் உங்களுக்கு அருகே உள்ள *பத்திரிக்கையாளர் மற்றும் செய்தி நிறுவன ரிப்போர்ட்ர்களை* அழைத்து *பத்திரிக்கையாளர் சந்திப்பு* நடத்துமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
இப்படிக்கு *சைவ வெள்ளாளர் சங்கத்தார் மாநில தலைமை*
இந்த மாதிரி சைவ வெள்ளாளர் சங்கத்தை போன்றே மற்ற வெள்ளாள சங்கங்களும் வ.உ.சி பிறந்த நாளுக்கு சிறப்பு செய்தால் என்ன?
வெள்ளாள அமைப்புகள் மட்டுமே வ.உ.சி பிறந்த நாளை கொண்டாட வேண்டுமா
சங்கங்களும் களத்தில் இறங்கினால் தானே நமது இளைய தலைமுறை சிறப்பானதொரு வாழ்க்கை வாழ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்க முடியும்
அனைத்து வெள்ளாள சங்கங்களும் தயாராகுங்கள் வ.உ.சி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட!!
கண்டிப்பான முறையில் வ.உ.சி பிறந்த நாள் நிகழ்ச்சியை கொண்டாடும் போது அனைத்து அமைப்புகளும், அனைத்து சங்கங்களும் கண்டிப்பான முறையில் உங்களுக்கு அருகே உள்ள பத்திரிக்கையாளர் மற்றும் செய்தி நிறுவன ரிப்போர்ட்ர்களை அழைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்







