வேளாளர் பூசன் கூட்ட உதயேந்திர சிம்மன் என்ற உதயேந்திர வர்மனின் வீரவரலாறு! போர்க்குடி வேளாளர் வரலாறு

8 தேச அரசர்களை போரிட்டு வென்று விரட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடிய வேளாண் மரபாளன் பூசன் குலத்துதித்த உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன்…

அந்த எட்டு அரசர்களும் முறையே,

1) முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் என்ற பாண்டியன் (போரில் இறுதியில் தோற்றவன் பாண்டியன் – உதயேந்திரம் செப்பேடு)…

2) மூன்றாம் விஷ்ணுவர்தனன் என்ற கீழைச் சாளுக்கியன் (இவனை வென்று நந்திவர்மனை சிறை மீட்டான் உதயேந்திர சிம்மன் – உதயேந்திரம் செப்பேடு)…

3) இரண்டாம் விக்கிரமாதித்தன் என்ற பதாமி சாளுக்கியன் (உதயேந்திர சிம்மனால் காஞ்சியில் இருந்து விரட்டப்பட்டவன் – ராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு நூல்)…

4) சித்திரமாயப் பல்லவன் (உயயேந்திர சிம்மனால் கொல்லப்பட்டான் – உதயேந்திரம்
செப்பேடு)…

5) மேலைக் கங்க அரசன் ஸ்ரீபுருஷன் (கங்க தேசத்தின் சில பகுதிகளையும் வெற்றி கொண்டு பல்லவ நாட்டோடு இணைத்தான் உதயேந்திர சிம்மன் – தமிழ்நாடும் மொழியும் நூல்)

6) சபர அரசனான உதயணன் (எளிதில் வென்றான் உதயேந்திர சிம்மன் – உதயேந்திரம் செப்பேடு)…

7) பிருத்வி வியாக்கிரன் என்ற வட கலிங்கத்தை ஆண்ட நள வம்சத்து நிஷாத அரசன் (உதயேந்திர சிம்மன் இவனை துரத்தி துரத்தி வென்றான் – உதயேந்திரம் செப்பேடு)…

8) சங்க சேனாதிபதி (உதயேந்திரம் செப்பேடு)…

இவர்களை போரிட்டு வெற்றி கொண்டு வாகை சூடிய அந்த வேளாளன் பெயர் உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன் என்பதாகும்… 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த உதயேந்திரம் செப்பேடுகள் 8 ஆம் நூற்றாண்டைய வரலாற்றை சொல்லுகின்றன… மேலும் இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு நூலும், தமிழ்நாடும் மொழியும் என்ற நூலும் இதனை மேலும் விளக்கி சொல்கிறது…

உதயேந்திர சிம்மன் கொங்கு வேளாள பூசன் குலம் என்பதை International institute of Tamil studies இன் journal ஆன Journal of Tamil studies, December 1989 இதழில் கொங்கு வேளாளர் அல்லாத ஆய்வாளரான இராசவேலு அவர்களே ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்டுள்ளார்… மேலும் இவர் தனது நூலான “சித்திர மேழிப் பெரிய நாட்டார்” என்பதிலும் உதயேந்திர சிம்மன் பூசன் குல வேளாளனே என வெளியிட்டுள்ளார்… பேராசிரியர் இராசவேலு அவர்கள் தொல்லியல் கழகத்தின் செயலரும் கூட… சுப்பராயலு, நொபொரு கராஷிமா ஆகியோருடன் சேர்ந்து பயணித்து பல நூல்களை பதிப்பித்துள்ளார்…

சரி… மீண்டும் உதயேந்திர சிம்மன் வரலாற்றுக்கே வருவோம்…

காஞ்சிக்கு அருகே வேகவதி நதிக்கரையில் உள்ள வில்வலம் (தற்போது வில்லிவலம்) என்ற ஊரின் சிற்றரசனும், பல்லவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக சேனாதிபதியாகவும் இருந்து வந்த ஒரு வேளாண் மரபினன்… கி.பி. 731… அன்றைய கம்போஜ தேசம் – சம்பா (இன்றைய கம்போடியா – வியட்னாம்) நாட்டில் இருந்து இரண்டாம் நந்திவர்மன் இறக்குமதி செய்யப்படுகிறான்… இதற்கு முன்னர் ஆண்ட பல்லவனான இரண்டாம் பரமேஸ்வர வர்மனுக்கு வாரிசு இல்லை… சுத்தமான பல்லவ குல இளவரசனை கண்டு கொண்டு வர உத்தரவு போட்டதில், எங்கெங்கோ அலைந்து தேடி, பல்லவனின் படை 13 வயதான இரண்டாம் நந்திவர்மனை கொண்டு வருகிறார்கள்… அந்த இளவரசன் ஹிரண்யவர்மனின் மகன், பீமவர்மனின் பேரன்… பீமவர்மன் பல்லவ மன்னனான சிம்மவிஷ்ணுவின் தம்பியாவான்… எப்படியோ இந்த அசலான வாரிசை கண்டு கொண்டு வந்துவிட்டார்கள்… அப்பொழுது கிபி 731 இல் இதற்கு முன்னர் ஆண்ட இரண்டாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் என்பவன் மேலைக் கங்கர்களால் போரில் கொல்லப்படுகிறான்… பிறகு வழியே இல்லாமல் இரண்டாம் நந்திவர்மன் முடிசூடுகிறான் பல்லவ பேரரசனாக… பல்லவ மல்லன் என்றும் பட்டம் சூடுகிறான்…

ஆனால் அவன் வயதோ அன்று 13… நந்திபுரத்தில் (இன்றுள்ள நாதன் கோவில் – கும்பகோணம் அருகே) நடந்த போரிலே த்ரமிள (தமிழ்) அரசர்கள் நந்திவர்மனை சூழ்ந்து கொண்டார்கள்… அவர்களை பூசன் குலத்து உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன் பெரும்படையுடன் சென்று வெற்றி கொள்கிறான்… இடைப்பட்ட காலத்தில் பதாமி சாளுக்கியன் இரண்டாம் விக்கிரமாதித்தனின் உதவியோடு பல்லவ நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்ட சித்திரமாயப் பல்லவராஜன் என்ற வேறு ஒரு பல்லவனையும் வென்று கொல்கிறான் உதயேந்திர சிம்மன்…

பிறகு நிம்பவனம், சூதவனம், சங்கர கிராமம், வநலூர், நெல்வேலி, சூராவழுந்தூர் ‌என பல போர்க்களங்களில் வெற்றி வாகையே சூடுகிறான்… நெல்வேலி போரிலே சேனாதிபதி சங்கன் என்பவனை வெல்கிறான்… பிறகு கீழைச் சாளுக்கியர்கள் நந்திவர்மன் அரசாள தகுதியற்றவன் என சொல்லி இரண்டாம் நந்திவர்ம பல்லவனை வென்று சிறை வைக்கின்றனர்… உதயேந்திர சிம்மன் மீண்டும் படைநடத்தி சென்று கீழைச் சாளுக்கியனான மூன்றாம் விஷ்ணுவர்தனனை வீழ்த்தி இரண்டாம் நந்திவர்மனை மீண்டும் மீட்டுக் கொண்டு, பல்லவர்களை பெருமைப்படுத்தி கௌரவித்தே ஆக வேண்டும் என சாளுக்கியர்களுக்கு கட்டளை இடுகிறான் உதயேந்திர சிம்மன்…

பிறகு உதயேந்திர சிம்மன் போருக்கு சென்றிருந்த சமயம் பார்த்து பதாமி சாளுக்கியன் இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியை கைப்பற்றிக்கொண்டான்… பிறகு உதயேந்திர சிம்மன் மீண்டும் படையெடுத்து வந்து காஞ்சியை மீட்டு, பதாமி சளுக்கியான இரண்டாம் விக்கிரமாதித்த சாளுக்கியனை அவனது நாட்டுக்கே (வடக்கு கர்நாடகா) துரத்தி ஓட்டுகிறான்… பிறகு ஒரிசா பகுதியின் சபர அரசனான உதயணன் & வட கலிங்கத்து நள வம்சத்து நிஷாத அரசனான பிருத்வி வியாக்கிரன் ஆகியோரையும் போரிட்டு வென்று வருகிறான்… பிறகு மண்ணைக்குடி என்ற இடத்தில் (முதலாம் மாறவர்மன் ராஜசிம்ம) பாண்டியனையும் வெற்றி கொள்கிறான்… வெற்றி வாகை சூடவே பிறந்தவனாக வலம் வருகிறான் உதயேந்திர சிம்மன்…

உதயேந்திரம் செப்பேட்டில் உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மனை வீரர்களில் சிறந்தவன் என்றும், வேற்றரசர்களை தண்டிப்பவன் என்றும் கூறப்பட்டுள்ளது… மேலும் தான் பிறந்த குலம் பூசான் குலம் என்று மூன்று இடங்களில் பதிவு செய்திருக்கிறது செப்பேடு… பிறகு உதயச்சந்திர வர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க நந்திவர்மன் என்ற பல்லவ மல்லன் வெள்ளாட்டூர் என்ற ஊரை உதயேந்திரம் என்று பெயரிட்டு அதனை 108 பிராமணர்களுக்கு தானமாக அளித்தான்…

உதயேந்திர சிம்மன் வெற்றிகொண்டதில் மிகப் பெரியது என்றால் அது இரண்டாம் விக்கிரமாதித்தன் ஆன பதாமி சாளுக்கியனை காஞ்சியை விட்டு துரத்தியடித்ததுதான்… கிட்டத்தட்ட இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதியை ஆண்டு வந்தனர் பதாமி சாளுக்கியர்கள் அப்பொழுது… மேலும் மேலைக் கங்கர்களிடமிருப்தும் சில பகுதிகளை உதயேந்திர சிம்மன் கைப்பற்றினான் என தமிழ்நாடும் மொழியும் என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ளது… ஆக கர்நாடகத்தின் பாதியை ஆண்ட மேலைக் கங்கர்களையும் ஒரு கை பார்த்துள்ளான் உதயேந்திர சிம்மன்… பிறகு பாண்டியர்களை வென்றது, கலிங்கத்து நள வம்சத்தை வென்றது என கூட்டிக் கழித்து பார்த்தால் பாரதத்தில் பாதியை ஆண்ட அரசர்களை அடித்து துரத்தியும் , அடிய பணிய வைத்தும் தனது 13 வயதுடைய மன்னனான பல்லவ வம்ச வாரிசை காத்துள்ளான் உதயேந்திர சிம்மன்…

உதயேந்திர சிம்மன் போரிட்டு வென்று கொடுத்த வரிசையான வெற்றிகளின் காரணமாக மட்டுமே முதலாவது ராஷ்ட்ரகூட மன்னனான தந்திதுர்க்கன் தன் மகளான ரேவாதேவியை நந்திவர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான்… உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன் இல்லையேல் இந்த கல்யாணம் மட்டுமல்ல இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மல்லனே வரலாற்றில் இல்லாமல் கரைந்து போயிருப்பான்… பல்லவ சாம்ராஜ்யம் 8 ஆம் நூற்றாண்டிலேயே அழிந்திருக்கும் அல்லது மாற்றார் கைகளுக்கு மாறியிருக்கும்… பிறர் பல்லவர்களை ஒடுக்க நினைத்தது போல ராஷ்ட்ரகூடர்களையும் சாளுக்கியர் கங்கர் கூட்டணியானது அழித்திருக்கும்… ஆக முதலாவது ராஷ்ட்ரகூட பேரரசன் தந்திதுர்கன் அடுத்த 200 ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரகூடர் ஆள்வதற்கு மறைமுகமாக அஸ்திவாரம் போட்டதும் உதயேந்திர சிம்மனே… கி.பி 753 ல் ராஷ்ட்ரகூடர் சாளுக்கியர்களை வென்றதற்கு காரணமும் உதயேந்திர சிம்மனால் உருவான பல்லவர் – ராஷ்ட்ரகூடர் கூட்டணியே ஆகும்… உதயேந்திர சிம்மன் தான் நினைத்திருந்தால் 13 வயதே ஆன இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மல்லனை ஒரம்கட்டிவிட்டு, தானே அரியணையில் அமர்ந்து, பிறகு தான் செய்ததைப்போல பாதி பாரதத்தை வென்றது மட்டுமல்லாமல், தானே ராஷ்ட்டகூட இளவரசியை மணந்து இன்றைய குஜராத் வரை மறைமுகமாகவும் கர்நட ஆந்திர கலிங்க கங்க தமிழக பகுதிகளை நேரடியாகவும் ஆட்சி செய்து ஒரு புதிய பேரரசை நிறுவி சாதனை படைத்திருக்கலாம்…

அப்படி செய்திருந்தால் பிற்கால சோழர்களே எழுந்திருக்க மாட்டார்கள்… இஸ்லாமிய மன்னர்களிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற ஒரு விஜயபகர பேரரசோ அல்லது ஒரு சத்ரபதி சிவாஜியோ தேவையில்லாமல், உதயேந்திரனின் சாம்ராஜ்யமே அதை பூர்த்தி செய்திருக்கலாம்… இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும்… ஆனால் ஆசைக்கு விலைபோன அரசனல்ல உதயேந்திர சிம்மன்… அவன் கண்ணியம் தவறாத வில்வலத்து அரசன்… எப்படி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகர் கார்த்தி சோழ இளவரசனை தூக்கிக்கொண்டு சோழர்கள் பயணம் தொடரும் என வருகிறதோ அதே போல 13 வயதே ஆன பல்லவ இளவரசனான இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மல்லனை தூக்கிக்கொண்டு, எதிர்த்து நின்ற பாதி பாரதத்தையே வீழ்த்தி பல்லவ மரபை காத்துள்ளான் உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன் என்ற பூசன் குல வேளாளன்… பல்லவ சாம்ராஜ்யத்திற்கு ஒரு உதயேந்திர சிம்மன் என்றால் சோழ பேரரசுக்கு இப்படி எத்தனை வேளாண் சாமந்தர்கள் இருந்திருப்பார்கள் என இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்…

பூசன் குலத்தார்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல… முன்னர் களப்பிரர் காலத்திலும் களப்பிரன் அச்சுத களப்பாளனோடு போரிட்டு மூவேந்தரை சிறை நீக்கியும், தொண்டை மண்டலத்தை களப்பிரரிடம் இருந்து மீட்டு பல்லலர்களுக்கே மீட்டு கொடுத்த பெருஞ்சாதனையாளர்கள் இவர்கள்… இதனை 18 ஆம் நூற்றாண்டிய தனிப்பாடல் சுவடிகள் & கொங்கு மண்டல சதக பாடல்கள் கூறும்… வன்னிய வரலாற்று ஆய்வாளரான நடன காசிநாதன் இதனை தனது களப்பிரர் எனும் நூலில் குறித்துள்ளார்… “ஒளியராவர் பிற மண்டலத்தில் அரசராதற்கு உரிய வேளாளர்” என்ற நச்சினார்க்கினியர் உரைக்கு ஏற்ப உறையூர் சைவ குலத்தினன் ஒருவனை கொங்கு நாட்டில் அரசனாக்கினான் சோழன் என்றும், பிறகு அதில் ஒரு கிளை தொண்டை தேசம் சென்றது என்றும் மூலனூர் வரலாற்று பாமாலை கூறும்… கொங்குச் சோழர்களின் காலத்தில் சோழன் சார்பாக சேரனையே வீழ்த்திய பேர்கள் இந்த பூசன் குலத்தவர்கள்… இதனை மூலனூர் வரலாற்று பாமாலை என்ற 300 ஆண்டுகால புதுப்பை ராம புலவர் அருளிய சுவடி சொல்லும்… பரங்கியர்கள் காலத்திலும் (கி.பி 1798) பரங்கியருக்கு 150 வீரர்களை திப்பு சுல்தானை வீழ்த்த கொடுத்த அரச நிலை தவறாத கொற்றவர்கள்… அனைத்தையும் பதிவிட நேரமில்லை…

ஆங்கிலேயருக்கு 150 படை வீரர்களை கொடையளித்ததை தூரன் நல் நடராஜன் எழுதிய கொங்கு வேளாளர் வரலாறு நூலில் அவர் ஒரு ஆவணம் உள்ளது என்று மட்டும் குறித்துள்ளார்… அதை மட்டும் பகிர்கிறேன்… இந்த பூசன் குலத்தார் வரலாற்றை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் மிஞ்சிய ஒரு காவித்தையும் படைக்கலாம், பொன்னியின் செல்வனை மிஞ்சிய ஒரு காவியத்தையும் படைக்கலாம்… இப்பேர்பட்ட வம்சத்தில் வந்த இந்த உதயேந்திர சிம்மன் என்ற தீரனை போல இன்னமும் எத்தனை எத்தனை வேளாண் சாமந்தர்கள் அவர்களது புண்ணிய பூமியை காத்து நின்றனரோ ! கடவுளுக்கே வெளிச்சம்…

காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில் சிற்பங்களில் 14 ஆம் கட்டத்தில் ஒரு பகுதியும், 15 ஆம் கட்டம் முழுவதும் உதயேந்திர சிம்மன் பல்லவ மல்லன் இரண்டாம் நந்திவர்மனுக்காக நடத்திய படையெடுப்புகளை விவரிப்பதாக உள்ளன என்பதையும் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர்…

எழுத்தாளர் : முத்தூர் மணியன் கூட்ட ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர் 

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன் . கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *