வேளாளர்கள் சற்சூத்திரர் மட்டும் தானா? திமுக MP ஆ.ராசாவின் பேச்சையும்,காஞ்சி காமக்கோடி மடத்தின் பொய் கருத்தையும் அடித்து உடைக்கும் கட்டுரை

காஞ்சி பெரியவர் சொல்லிட்டாராம் கவுண்டர்கள் சூத்திரர்கள் என்று… அதை தி.க தொண்டர்கள் கொண்டுவந்து நீட்டுகிறார்கள்… இதைப்போன்ற பிதற்றல்களை சுயலாபத்திற்காக தி‌.க.வினரும் சுயபுத்தி இல்லாத துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற “மடச்சாம்பிராணி”களும் ஏற்கலாம்… ஆனால் வரலாறு ஏற்காது…

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பிங்கல நிகண்டு தெளிவாக வைசியர் பொதுப்பெயரே வேளாளர் என்றும், பூவைசியர் காராளரே என்றும் தெளிவாக கூறுகிறது… அந்தக் காலத்திய தமிழ் அகராதியே இதுதான்… இதைத்தான் வேந்தர்களும் படித்து அறிவு வளர்த்திருப்பார்கள்… மேலும் அக் காராள வைசியர்களை இளங் கோக்கள் என்றும் கூறுகிறது… கோ என்றால் அரசன்… அதாவது அரச நிலையில் உள்ள வேளிர்கள்… இளங்கோக்கள் என்றால் உழவை விரும்பி ஏற்ற கோக்களான வேளிர் வழிவந்த காராள வேளாளர்… மேலும் கொங்கு வேளாள கவுண்டர்கள் வேளிர் வழிவந்தவர்கள் & அரச நிலையினர் என அடியார்க்கு நல்லார் முதற்கொண்டு ஐராவதம் மகாதேவன் கட்டுரை வரை தெளிவாக உள்ளது… வேளாளர் வேளிர் வேறு வேறு அல்ல என நச்சினார்க்கினியர் உரை போன்றவை உண்டு…

ஆந்தை குல காணியாள கவுண்டர்களின் ஆதரிப்பில் புலவர்கள் பாடிய கொங்கு வேளாளர் புராணம் மிகத்தெளிவாக கவுண்டர்களில் பெரும்பாண்மையினராகிய (ஊரின் ஒரு பெரும்பங்குக்கு உரிமையுள்ள) காணியாள வேளாளர்களை வைசியர் என்கிறது… ஊராளும் காணியாளர், நாடாளும் காணியாளர்கள் என்ற இருவரும் அரச நிலையினர் என்பது வரலாறு… ஊரில் ஒரு பங்கு பெருநிலத்திற்கு உரிய மூன்றாம் வகை காணியாளர்கள் வைசிய நிலையினர்… இவர்களே கவுண்டர்களில் பெரும்பாண்மையினர் என்பதால் பொதுவாக “வைசியர்” என வேளாள புராணம் சுட்டுகிறது…

பிங்கல நிகண்டு சூத்திரர் என்ற நிலையில் இருந்த வேளாளர்களையும் சொல்கிறது அவர்கள் மண்மகள் புதல்வர் என… அதாவது பூதேவி புத்திரர்கள் என சோழர்கால சித்திரமேழி மெய்க்கீர்த்தி சொல்வதைப்போலவே… இந்த சூத்திரர்களான மண்மகள் / பூதேவி புதல்வர்களையும் ஆண்டிமுத்து மகன் ராசா வேசிமக்கள் என பொய் சொல்லியுள்ளது பெரும் நகைப்புக்கு உரியதாகும்…

ஆகவே உண்மைக்கு மாறாக காஞ்சி சங்கர மடப் பெரியவரான சங்கராச்சாரியார் பேசினாலும், ஈ.வே.ரா பேசினாலும், இவர் இருவரது அடிவருடிகள் பேசினாலும் அது உண்மை ஆகிவிட முடியாது என்பதே வரலாறு ஆகும்… ஆக வரலாற்று சான்றுகள் சொல்பவையை ஏற்பது மட்டுமே அறிவுடைமை ஆகும் என்பதாம்… 

வேளாளர்கள் சஷத்திரியராகவும்,பிரம்ம சஷத்திரியராகவும்,பூவைசியர்,கோவைசியர்,தனவைசியர்,சற்சூத்திரர் ஆகவும் இருக்கின்றனர்! 

—->> எழுத்தாளர் முத்தூர் மணியன் கூட்ட ஜெய்வந்த செல்வக்குமார் கவுண்டர் 

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

1 Comment

  1. Aravindhan

    பிங்கல நிகண்டு 52 வது பாடல் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். 55 வது பாடலுக்கும் விளக்கம் கொடுத்து விடுங்கள் ஐயா.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *