கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன்
வெள்ளாளர்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம் ::
ஜமீன் பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்
மு. சித்தேஷ் ஹரிஹரன் நமது வெள்ளாளரில் பாரம்பரியமான
சைவ வெள்ளாளர் குல பிரிவை சார்ந்தவர், தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
அதற்காக அகில இந்திய கலாச்சார மையம் இவருக்கு இளம் வளர்மணி விருது வழங்கி கௌரவித்தது.
தற்சமயம் செப்டம்பர் 8 ஆம் தேதி அறந்தாங்கியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் 4 விதமான போட்டிகளில் பங்கு பெற்று நான்கிலும் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.
இதன் பயனாக அக்டோபர் 4ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை சென்று வருவதற்கான செலவு ரூ45000 ஆகும். எனவே கருணை உள்ளம் கொண்டு இவருக்கு உதவினால் தமிழ்நாட்டிலேயே வெளிநாட்டிற்கு சென்று போட்டியில் கலந்து கொள்ளும் முதல் அரசுப் பள்ளி மாணவர்
என்ற பெருமையோடு நிச்சயமாக வெற்றியோடு திரும்புவார் என்பது உறுதி👍
மாணவர் பெயர் – A.M.சித்தேஷ் ஹரிகரன்
Father Name- A. முருக ஆழ்வார்
அம்மா பெயர் — மு.வேலம்மாள்
62A.RKV Avenue 2nd street
Old pallavaram
Chennai-600117
Contact no- 9003134677
Bank Details-A.Geetha
Indian Overseas Bank
Zameen pallavaram branch
A/c No: 311401000005234
IFSC NO:IOBA0003114
இலங்கை செல்லும் தேதி-04/10/2018
சாதனை படைக்க விரும்பும் வெள்ளாள மாணவருக்கு உதவ வேண்டுகிறோம் என்று அவர்களது குடும்பத்தின் சார்பாக கேட்டு கொண்டார்கள் சென்னை வாழ் திருநெல்வேலி சைவ வெள்ளாளர் சங்கத்திடமும் ஒட்டுமொத்த வெள்ளாளர்களிடமும் , அதன்படி வாட்ஸ் அப், முகநூலிலும் இந்த செய்தி வலம் வந்தது
அதன்படி
நம்மினத்தைச் சார்ந்த மாஸ்டர் மு.சித்தேஷ் ஹரிஹரன் கராத்தே போட்டியில் உலக அளவில் வெற்றியையும் பதக்கங்களையும் பெறுவதற்கு இலங்கை செல்வதற்கு இனஉணர்வுடன் உடனே ரூபாய் 25000 வசூல் செய்து உதவிய
சென்னை வாழ் திருநெல்வேலி சைவ வேளாளர் பொதுநல வளர்ச்சிக் கழகத்தின்
வள்ளல் பெருமக்கள் ஆடிட்டர் S.A.நாயகம்,
கல்யாணி ஸ்டாம்பிங்ஸ்
M.ராதாகிருஷ்ணன்,
தலைவர் KSS.மணிப்பிள்ளை,
இணைச் செயலாளர் சாக்லேட் சந்திரன்,
திருமணத் தகவல் பொறுப்பாளர் SS.அருணாசலம்
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள். சைவப் பெருமக்களுக்கு உதவுவதில் சென்னை வாழ் திருநெல்வேலி சைவ வேளாளர் பொதுநல வளர்ச்சிக் கழகம்
என்றும் முதன்மையாக முன்னின்று செயல்படும் மற்ற சைவ வெள்ளாளர் மற்றும் மற்ற பிரிவு வெள்ளாளர் சங்கங்களுக்கும் முன் உதாராணமாக செயல்படும் என நிரூபித்த இனச்செம்மல்களுக்கு அனைவர் சார்பில் பலே சபாஷ். தொடரட்டும் நமது சமுதாய பணிகள்.
உங்கள் செயல்களால் பெருமையுடன் மகிழ்ச்சியில் திளைக்கும்,
சித்தேஷ் ஹரிஹரன் அவர்கள் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள ஆகும் செலவு ரூபாய் 45000-ல் ஏற்கனவே வழங்கிய ரூபாய் 25000 போக மீதி ரூபாய் 20000 -ஐ நம்மின வள்ளல் பண்புச் செம்மல்
KGEYES கட்டுமான நிறுவனர் P.V.சண்முகம்
அவர்கள் சித்தேஷ் பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்தினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் சமுதாய பணியில்,
கே.மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
பொதுச் செயலாளர்,
சென்னை வாழ் திருநெல்வேலி சைவ வேளாளர் பொதுநல வளர்ச்சிக் கழகம்.
வள்ளல் பெருமக்கள் உதவிகரம் நீட்டியதை தொடர்ந்து இலங்கை சென்று காரத்தே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட சித்தேஷ் ஹரிகரன் அவர்கள்
#Siddeshhariharan got #Goldmedals in the international karate competition🤩🤩🤩🤩
8 வயது வரம்பிற்கு உட்பட்ட போட்டியில் 2 வகையான போட்டியில் (தனி கட்டா மற்றும் சாய்(சண்டையிடுதல் போட்டி) கலந்து கொண்டு இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்
என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது
இலங்கை மாண்புமிகு கல்வி அமைச்சர் ஐயா திரு. இராதாகிருஷ்ணன்
அவர்கள் இலங்கை விமான நிலையத்தில் நெகிழ்ச்சியோடு கராத்தே உலக சாம்பியன் 8 வயது சிறுவன் சித்தேஷ்அரிகரன் அவர்களை வழி அனுப்பி வைத்த போது…. எடுத்த புகைப்படம்
மூன்றாவது புகைப்படம்
தமிழகம் திரும்பிய சித்தேஷ் அரிகரன் அவர்களுக்கு தமிழக அரசு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
அவர்கள் உலக சாம்பியன் சித்தேஷ் அரிகரன் அவர்களை வரவேற்று வாழ்த்திய போது….. எடுத்த புகைப்படம்
நான்காவது புகைப்படம்
இதே போன்று ஒவ்வொரு வெள்ளாள பெற்றோர்களும், வெள்ளாளர்களும் தங்களது குழந்தைகள் மற்றும் உறவினர் குழந்தைகள், பள்ளிமாணவ, மாணவிரையும், கல்லூரி மாணவ, மாணவியரையுமௌ ஊக்க வேண்டுகிறோம்
செலவு ஆகுமே என்று அச்சம் கொள்ள வேண்டாம் வெள்ளாளர்கள் பலதுறையிலும் சாதிக்க நினைக்கும் போது அவர்களுக்கு உதவ வெள்ளாளர்கள் அனைவரும் தயாராக உள்ளனர் தற்காலத்தில் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
வெள்ளாளர்கள் மேலும் மேலும் விளையாட்டு துறையில் சாதனை படைத்து நமது வெள்ளாள குலத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது எமது வலுவான எண்ணமாகும்
உலக சாம்பியன் சித்தேஷ் அரிகரன் அவர்களை
பாராட்ட நினைப்பவர்கள்
தொடர்பு கொண்டு போன் செய்து வாழ்த்துகளை தெரிவிக்கலாம் 9003134677
இரண்டாவது புகைப்படத்தில் நடுவில் அமர்ந்து இருப்பவர் தான்
மாஸ்டர் சித்தேஷ் அரிகரன் அவர்கள்



வஉசி செய்திகள் தமிழ்நாடு – tnvocnews க்காக
செய்தியாளர் —
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை







