🔥Scorpion Tales🔥.
// தமிழக RSS ன் வருங்கால தலைவர் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ஜவாஹிருல்லா அவர்களா..???//

ஆச்சரியமும் வேண்டாம் பதட்டமும் வேண்டாம் அதற்கு முன் தற்போது இந்துத்துவ RSS மற்றும் பாஜக வின் பிரச்சார பீரங்கியாகவும் ஒப்பற்ற சனாதன கதாநாயகனாகவும் விளங்கி வரும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த மருத்துவர் திரு.ஸ்டாலின் கிருஷ்ணசாமி( Stalin Krishnasamy) அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.😜..
//அது யாரு ஸ்டாலின் கிருஷ்ணசாமி என்று நீங்கள் கேட்பது புரியுது வாங்க பதிவுக்கு உள்ள போகலாம்//..
(Hero krishnasamy introduction)

டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்டாலின் கிருஷ்ணசாமியாக மாறிய கதை
1970 பதுகளில் கம்யூனிச கட்சிகளிலிருந்து விலகி மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்பு உருவானது அதாவது ML . இந்த அமைப்பில் இருந்தவர்களுக்கு மிசா சட்டத்தில் ஒன்பது மாதம் சிறையிலிருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை அதாவது ஸ்டாலின் கிருஷ்ணசாமியை நன்றாக தெரியும். ஆம் யார் இந்த கிருஷ்ணசாமிஎன்ற ஸ்டாலின் கிருஷ்ணசாமி? கோவை மாவட்டத்தில் ஒரு குக்கிகிரமத்தில் தான் பிறந்ததாகவும், தலீத் என்பதால் கல்வி மறுக்கப்பட்டதாகவும், ஆனால் இவரது பள்ளி தலைமையாசிரியரான ஒரு பிராமணர் இவரை ஊக்கப்படுத்தி கல்வியை தொடர வழிவகை செய்தார் என்றும் ,இவர் தன்னை பற்றிய குறிப்புகளை பட்டியலிடுகிறார் கிருஷ்ணசாமி.
இவர் பள்ளி படிப்பை முடித்து மருத்துவ கல்லூரியில் இணைந்தபோது தீவிர நக்சல்( Naxalate) கொள்கையால் ஈர்க்கப்பட்டதாகவும்,அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ்,பிளேடோ,மார்க்ஸ் போன்றவர்களின் புத்தகங்களை படித்ததாகவும் அதன் காரணமாக மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்பின் மாணவர் கூட்டமைப்பில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி படிக்கும்போதே மார்க்ஸிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் தனது பெயரை ஸ்டாலின் கிருஷ்ணசாமி என மாற்றி எழுதிக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்படி தான் சாதாரண கிருஷ்ணசாமி *ஸ்டாலின் கிருஷ்ணசாமி* யாக மாறினார்.( அதாவது நம்ம கிருஷ்ணசாமிக்கு தலீத் அல்லாத மத்த சாதிக்காரனுக தான் எதிரி ஆனால் பிராமணர்கள் கிடையாது. இன்று கிருஷ்ணசாமி என்ற ஒரு சிறந்த மருத்துவர் உருவாவதற்கு காரணமே அவரது தலைமையாசிரியரான அந்த பிராமணர் தான்னு கிருஷ்ணசாமி சொல்லாமல் சொல்றாரு.திராவிட பார்ப்பன எதிர்ப்பாளர்களே இதற்கு உங்கள் பதில் என்ன?🤔🤔🤔🤔)
சரி அதுக்கு பிறகு இந்த ஸ்டாலின் கிருஷ்ணசாமி வெறும் கிருஷ்ணசாமியா மாறுன கதை
மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்பில் பணியாற்றிய கிருஷ்ணசாமி அந்த அமைப்பைவிட்டு வெளியே வந்ததற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை முக்குலத்தோர் மறவர்களுக்கும் தலீத்களுக்கும் இடையே நடந்த சண்டையில் மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்பு தலையிடலையாம்.அதான் தலைவரு வெளியே வந்துட்டாராம் ( பொதுவுடைமை சித்தாந்தவாதிகளை சாதிசண்டை கட்டபஞ்சாயத்து தலைவர்களா நிணைச்சுட்டாரு போல கிருஷ்ணசாமி)
சும்மா ஏதோ உளறாத இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்னு நீங்க கேக்குறது தெளிவாக புரிகிறது.நவம்பர் 10 1998 ஆம் ஆண்டில் திரு.கிருஷ்ணசாமியே இதை ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.பேட்டி எடுத்தவர் ஷோபா வாரியர்.நிறுவனம்: தி ரெடிஃப். இந்த லிங்க்ல இதன் விவரங்கள் உள்ளது
https://m.rediff.com/news/1998/nov/10krish.htm.

கிருஷ்ணசாமி பிறந்தது கோவையா? உடுமலைபேட்டையானு நீங்க கேக்குறது புரியுது.ஆனால் பதில் என்ட இல்லைங்கோவ்.
மறுபடியும் பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார் கிருஷ்ணசாமி.திராவிட முன்னேற்ற கழகத்துல இணையுறாரு.1984 மக்களவை தேர்தலில் போட்டியிடுறாரு தோத்துடுறாரு.. அவ்வளவுதான்..
பிறகு……????.
இப்போது கிருஷ்ணசாமி அவர்கள் புதிய யுக்தியை கையாளுகிறார்.அதுதான் தலீத்தியம்.ஆம் ஒட்டுமொத்த தலீத்களுக்காகவும் குரல் கொடுக்க போவதாக களத்தில் இறங்குகிறார் கிருஷ்ணசாமி.தலீத்களுக்காக குரல்கொடுக்கிறார்..எப்படி தெரியுமா.?
சாதி என்பது ஒரு பிரமிட் போல மேலே இருப்பவர்கள் பிராமணர்கள் அடியில் இருப்பவர்கள் தலீத்கள்.இடையே இருக்கும் கள்ளர்,மறவர்,அகமுடையர் போன்ற சாதிய மக்களிடமிருந்து கிரிமினல்களை( criminals) ஆட்சியாளர்கள் பெறுகின்றனர்.அவர்களை வைத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். நாயக்கர்களும் இவர்களை தங்கள் அடியாளாக மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக பயண்படுத்தினர்.( அப்போ மண்ணின் மைந்தர்கள் கள்ளர்,மறவர்,அகமுடையர்லாம் கிடையாது போல உடனே கள்ளர்,மறவர்,அகமுடைய சாதியை சேர்ந்த நண்பர்களே நீங்க கோவப்படுவது தெரியுது ,ஆனால் என்னை தவறாக எண்ண வேண்டாம்.இதை சொன்னது தி கிரேட் கிருஷ்ணசாமி மட்டுமே இந்த லிங்க்ல போய் படிச்சுக்கோங்க😜
https://frontline.thehindu.com/static/html/fl1522/15220380.htm
இப்படி அடுத்த சாதிக்காரர்களை வில்லனாக காட்டுவது இவருக்கு கைவந்த கலை போல).
அடேங்கப்பா அஅடுத்து என்ன?? ஜவாஹிருல்லா என்ட்ரி தான்??☺️☺️
(Interval.)
மருத்துவர் கிருஷ்ணசாமிக்கும் முஸ்லீம் அமைப்புகளுக்கும் இடையே உள்ள பாசம்

தலீத்திய அரசியல் பேசிய கிருஷ்ணசாமி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு னு இல்லாத சாதிப்பெயரில் அமைப்பு ஆரம்பிக்கிறாரு.பிறகு அதை அந்த சாதி அமைப்பை புதிய தமிழகம் என்ற கட்சியாக மாற்றுகிறார்.திராவிட கட்சியின் உதவியோடு ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றியும் பெறுகிறார்.அப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை தனக்கு ஏற்றார்போல் அரசியல் செய்கிறார் கிருஷ்ணசாமி.சட்டமன்றத்தில் POTA( prevention of terrorist Activities Act) விற்கு எதிராக குரல் கொடுக்கிறார்.ஐம்பது பொதுகூட்டங்களில் POTA விற்கு எதிராக பேசுகிறார். இந்துத்வாவை கடுமையாக சாடுகிறார்.தலீத்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான நல்லுறவை இந்துத்வா கெடுக்க நிணைப்பதாக கூறுகிறார்.
( அடேங்கப்பா இந்துத்வா மற்றும் RSS ன் உண்மை விசுவாசிகளே இதற்கு உங்கள் பதில் என்ன? 🤣🤣நீங்கள் என்ன செய்ய முடியும்? இன்று உங்கள் கதாநாயகன் இந்த கிருஷ்ணசாமி தானே! ஜெய் ஶ்ரீராம்..பாரத் மாதாகீ ஜெய்)
இதற்கெல்லாம் என்ன ஆதாரம்னு நீங்க கேட்பது புரியுது இதோ பாருங்க ஆதாரத்தை ஹிந்து பிரன்ட்லைன்ல நவம்பர் 06 1998 ல் வெளிவந்த செய்தி
https://frontline.thehindu.com/static/html/fl1522/15220380.htm
(The climax)
கோவை குண்டுவெடிப்பும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும்

என்ன கிளைமாக்ஸ் பெரிய ஆக்ஷனா இருக்கும் போலனு நீங்க நிணைக்குறது புரியுது..கண்டிப்பாக பெரிய ஆக்ஷன் தான்.. கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் பலர் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபிறகு நடந்த அரசியல் நகர்வுகள் யாருக்கும் அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்தபிறகு முஸ்லீம் அமைப்புகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்குமே சில முரண்பாடுகள் எழுந்தன.முஸ்லீம் இளைஞர்கள் பெருவாரியாக கைது செய்யப்பட்டனர்.இதனை ஜவாஹிருல்லா ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.அப்போது இஸ்லாமிய அமைப்புகளை விஷ்வ ஹிந்து பரிக்சத்(VHP) RSS போன்ற இந்து அமைப்புகள் எதிர்த்ததை போல பெரிதாக வேறு எந்த அமைப்பும் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த கிருஷ்ணசாமி அவர்கள் இஸ்லாமிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.POTA சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை இதே புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நடத்தினார்.குண்டுவெடிப்பில் தலீத்கள் யாரும் கொல்லப்படவில்லை போல.இந்த மலிவான அரசியலை இன்று வரை தொடர்ந்து வரும் கிருஷ்ணசாமியை இன்று RSS அமைப்பே கதாநாயகனாக பார்க்கிறது.இறந்த இந்து குடும்பங்களுக்கு RSS அமைப்பு காட்டும் பச்சை துரோகத்தை மறந்துவிட்டு அதே இந்துக்கள் இந்த கிருஷ்ணசாமியை இன்று இந்துமத காவலன் என்கிறார்கள்.இப்படி பட்ட முடத்தனத்தை இதற்கு பிறகு நமது சந்ததிகள் காணப்போவது கிடையாது. இன்று இந்த கிருஷ்ணசாமியை கதாநாயகனாக காட்டும் RSS நாளை இதே ஜவாஹிருல்லாவை கதாநாயகனாக ஏற்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. இந்த கிருஷ்ணசாமி ஆதரித்த ஜவாஹிருல்லாவை RSS ன் தலைவராக ஏன் ஏற்க கூடாது? ஒருவேளை ஜவாஹிருல்லா மீது புகார் எழுந்தால் அதே புகார் இந்த கிருஷ்ணசாமி மீதும் எழுமே.( RSS உண்மை விசுவாசிகளே இதற்கு உங்கள் பதில் என்ன?

மீண்டும் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக கொடிபிடிக்க போகிறீர்களா இல்லை RSS என்ற பழைய அமைப்பின்படி இறந்த இந்துக்களுக்காக கிருஷ்ணசாமியை தூக்கி எறிய போகிறீர்களா? உங்கள் புதிய நவீன RSS இதே கிருஷ்ணசாமியை வைத்து வேளாளர்களோடு விளையாடி வருகிறது. இதனை ஏற்கிறீர்களா? இந்த கிருஷ்ணசாமி யார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதே இந்த பதிவின் நோக்கம். அப்படி பார்த்தால் இந்த கிருஷ்ணசாமி வளர்ப்பால் நக்சலைட்,அரசியலால் திராவிடன்,கொள்கையால் தலீத் ஆதரவாளர்,இன்று RSS ன் கதாநாயகன். நாளை டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவன் கண்ணையா குமார், ஜவாஹிருல்லா னு RSS ன் கதாநாயகர்களின் பட்டியல் நீளும போல.ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் இன்று தலீத் என்ற வார்த்தையை கூட இந்த கிருஷ்ணசாமி சொல்வதில்லை.மாறாக பள்ளர் உட்பட சில சாதிகளை ஒன்றிணைத்து புதிய சாதியை வேளாளர் என்ற சாதிய மக்களின் எதிர்ப்பிற்கெதிராக RSS மற்றும் இந்து அமைப்புகளின் ஏகோபித்த ஆதரவோடு ஏற்படுத்த முயல்கிறார்.இங்கு முட்டாள்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்..யார் முட்டாள்? நாங்கள் கிடையாது RSS மற்றும் இந்து அமைப்பினர்களே நீங்கள்…????????
இறுதியாக நீங்கள் மறுபடியும் கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆதாரம் கேட்பது புரிகிறது. இதோ ஆகஸ்ட் 08 1998ஆம் ஆண்டு அவுட்லுக்(Outlook) பத்திரிகையின்A.S.பன்னீர்செல்வனின் கட்டுரையை படியுங்கள்
https://www.outlookindia.com/magazine/story/caste-as-leader/205954
Rss மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நண்பர்களே.உங்கள் RSS அமைப்பின் நாகரீக கோமாளி, தமிழ் கலாச்சார கொலைகாரன் அரவித்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையையும் இத்துடன் இணைக்கிறேன்..உங்கள் ஒப்பீடுகளுக்காக…
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ
website
mp3songs,videos: https://www.vocayya.com/
FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/
TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews
Email – tnvocnews@gmail.com
* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************
Scorpion stings continues…
எழுத்தாளர்
🔥The Scorpion🔥..







