தமிழக பாஜக தலைமைகளை காவு வாங்கிய புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி!!!!

🔥Scorpion Tales🔥

*பா.ஜ.கவை ஆட்டுவிக்கும் கிருஷ்ணசாமி*

 

*பலியான மாநில தலைமைகள்*

என்ன இப்படி சொல்றீங்கனு நீங்க கேட்பது புரிகிறது. ஆனால் பாரதத்தையே தனது செல்வாக்கினால் கைபற்றிய பாஜக வால் தமிழக திராவிட கொள்கையை கொண்ட திமுகவை  தொட்டுகூட பார்க்க இயலவில்லை.அதுவே உண்மை. ஆம் இந்துத்துவ கொள்கைகளை தமிழ் மக்கள் ஏற்க தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டது ஆனால் அதை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக தோற்றுவருகிறது.இதற்கு முக்கிய காரணம் பாஜக என்ற தேசிய கட்சி மாநில சிறு பள்ளர் ஜாதிகட்சியான புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமிக்கு அடங்கியிருப்பதே எனலாம். ஆம் கடந்த சில வருடங்களாக பாஜகவின் பல கொள்கைகளை ஆதரித்து வரும் கிருஷ்ணசாமி பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறார் என்ற கருத்துக்கள்  நிலவிய வேளையில் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்று ஓடியது அனைவரும் அறிந்ததே.இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் குறிப்பாக திமுகவின் மீள் எழுச்சி என கூறப்பட்டாலும் அதையும் தாண்டி பெரும்பான்மை ஜாதிகள் பாஜகவை தோற்கடித்துள்ளது என தெளிவாக அறிந்துகொள்ளலாம்.



அதுவும் குறிப்பாக இந்துத்துவ கொள்கையினை பெரிதும் ஏற்றிருந்த வேளாளர் ,மறவர்,நாடார் போன்ற சாதிகளுக்கு பச்சை துரோகத்தை செய்த பாஜகவை இந்த சாதிகள் பழிக்கு பழி வாங்கியுள்ளனர் என கூறலாம். ஒட்டுமொத்த பள்ளர் சாதி மக்களையும் பாஜகவின் ஆதரவாளர்கள் என கிருஷ்ணசாமி அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளை எளிதாக பாஜக எப்படி நம்பியதென்று தெரியவில்லை. தேர்தல் பிரச்சாரங்களிலும் பள்ளர் சாதியினரின் வேளாளர் என்ற பெரும்பான்மை சாதியினரின் பெயர் திருட்டை அங்கீகரித்து பேசிய அஇஅதிமுக மற்றும் பாஜக தலைவர்களே உங்கள் கூட்டணி தோல்விக்கு யார் காரணம் என நீங்கள் அறியகூட விரும்பவில்லை அதுவே நிதர்சனம். பள்ளர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அதிகளவில் பள்ளர்கள் திமுகவிற்கு தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர்.அதேபோல் தன்னை தெலுங்கு சாதி என்பதனை மறைத்து பள்ளர்களுக்காக போராடுகிறேன் என்று கூறிக்கொண்டு தேர்தலை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் முகத்தில் கரியை பூசி அனுப்பியது யார் என்ற கேள்விக்கு பதில் மேலே உள்ளது அதை விட கூடுதலாக சொல்லவேண்டும் என்றால் தென்காசி தொகுதி  பள்ளர்களே முழுமையாக கிருஷ்ணசாமிக்கு வாக்களிக்கவில்லை அதுவே உண்மை.



இப்படி திமுகவின் அனுதாபிகளுக்கு சலுகை,சாதிப்பெயர்மாற்றம் என சுழன்று சுழன்று பேசிய பாஜக தங்களது உண்மை விசுவாசிகளை கண்டுகொள்ளாமல் ஏமாற்றியதே உண்மை. தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்களிடம் அவரது சமுதாயமான நாடார் மக்களின் சார்பாக ஒரே கேள்வி மட்டுமே கேட்கப்படுகிறது .சொந்த மண்ணைவிட்டு தொழிலைவிட்டு,பல உயிர்களை பலிகொடுத்துள்ள சுபாஷ் பண்ணையார் குடும்பத்தின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் யார்? அவர்களுக்காக உங்கள் சொந்த சாதிய மக்களை ஏமாற்றியதால் தங்களுக்கு தூத்துக்குடியில் மாபெரும் தோல்வியை பரிசாக உங்கள் சாதி மக்கள் வழங்கியுள்ளனர் என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை. அதேபோல வானதி சீனிவாசன் அம்மா அவர்களே நீங்கள் என்றைக்காவது உங்கள் சாதி சான்றிதழை பார்த்ததுண்டா? நீங்கள் கலப்பு திருமணம் செய்துவிட்டபடியால் பிறந்த சாதியை தூக்கி எறிந்திருப்பீர் அது நன்றாக தெரிகிறது ஆனால் பள்ளர்களின் வேளாளர் பெயர் திருட்டை அங்கீகரித்ததற்கு தனது சொந்த சாதி மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டவர் உங்கள் ஊரில் தான் C.P.இராதாகிருஷ்ணன் அவர்கள்  வீட்டில் வெறுமனே அமர்ந்துள்ளார்.



இதேபோல் தனது சொந்த சாதிக்காரர்களாலேயே தோற்றுப்போன பொன்.இராதாகிருஷ்ணன், வெள்ளாளர் மற்றும் கள்ளர்,மறவர்களால் தோற்கடிக்கப்பட்ட பாஜகவின் H.ராஜா மற்றும் மறவர்கள் அதிகம் உள்ள இராமநாதபுரம் தொகுதியில் இஸ்லாமியரிடம் தோற்றுப்போன மறவர் சாதியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் என அனைவரது தோல்வியிலும் சாதியம் விளையாடியது.பாஜகவினரே சற்று சிந்தியுங்கள் தோல்விக்கான காரணங்களை.இல்லை திமுக என்ற கட்சி தான் உங்களை தோற்கடித்துவிட்டது என உங்களுக்கு நீங்களே ஆறுதல் கூறிக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கும்,காங்கிரசிற்கும் கண்டனம் மட்டும் தெரிவித்துக்கொண்டு வழக்கம் போல கிருஷ்ணசாமி சொல்வதை நீங்கள் கேட்டுக்கொண்டும்,உங்கள் கட்சிக்கு அவர் வக்காலத்து வாங்கி கொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருங்கள்..அடுத்த தேர்தல்களில் சந்திப்போம்..இதைவிட பெரிய சைஸ் பரிசை தர தயாராக உள்ளோம்..

 

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.உங்களை தோற்க்கடித்தது யார் தெரியுமா?

 

 இந்துத்வாவை ஏற்று திமுகவிற்கு வாக்களித்த சாதிகளே.

 

நீங்கள் யாருக்காக வேளாளர் பெயரை திருடி தர நிணைக்குறீர்கள் தெரியுமா??

 

அதே இந்துத்வாவை பெயரளவில் ஏற்றுக்கொண்டு திமுகவிற்கு வாக்களித்த சிறுபான்மை பள்ளர்களே.

நாங்கள் சொல்வதெல்லாம்   உண்மையா பொய்யா என்று உங்கள் பூத் ஏஜென்ட்களை கேளுங்க…….

மீண்டும் சந்திப்போம்….

எழுத்தாளர் 

The Scorpion

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *