தென்காசி பாண்டியரும் சைவ வேளாளர்களும் :

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளரும்!

 

 

1) பாண்டியர் என்ன சாதி?
‌ வெள்ளாளர் (ஆதாரம்: தமிழ் மும்மண்டல பண்டைய வரலாறு D.3088)

2) வேளாளர் ‘பூமிபுத்திரர்’ பாண்டியர் பூமிபுத்திரரா? ஆதாரம்?
கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டில் தன்னை பூமிபுத்திரன் என்று குறிப்பிட்டுள்ளான்.

3) பாண்டியர்களின் பட்டம் எவை அது வேளாளரை குறிக்கிறதா?
பாண்டியரின் பிரதான பட்டம் வழுதி, மாறன் அது வேளாள ஆழ்வார்களுள்‌ நம்மாழ்வாரையும் அவர் முன்னோர்களையும் குறித்திருக்கிறது.
“திருவழுதி நன்மரபிற் செல்வக் குமரன்” என வழுதி குலம் என்கிறது ‘நம்மாழ்வார் திருத்தாலாட்டு’
இன்று வேளாளரின் பட்டமான பிள்ளை என்பதும் பாண்டியரை குறித்துள்ளது. தளவாய்ப்புர சாசனத்தில் பராந்தக பாண்டியன் வீரநாராயணன் தன் தமயன் வரகுண பாண்டியனை, “எம்கோ வரகுணன் பிள்ளை” என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தென்காசி பாண்டியரில் இன்றைய தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியை ஆட்சிபுரிந்த பாண்டியன் அதிவீரராமனின் பெயரே ‘பிள்ளை பாண்டியன்’.

 

4) பாண்டியர் கடைசியாக ஆட்சிபுரிந்த பகுதிகள் எவை அங்கு வேளாளர் உள்ளனரா?
மதுரையிலிருந்து தென்காசி வந்து ஆட்சிபுரிந்த பாண்டியரும் தென்காசி பாண்டியரும் பஞ்சபாண்டியர் என கொற்கை, வள்ளியூர், தென்காசி, கரிவலம்வந்தநல்லூர், கயத்தாறு ஆகிய பகுதிகளில் இன்றளவும் சைவ வேளாளர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முற்காலத்தில் அதிகாரத்தோடு இருந்துள்ளனர்.

5) பாண்டியனின் சமகால வெள்ளாளர் ஆவணம் உண்டா?
தென்காசி பாண்டியன் பராக்கிரமன் தென்காசியில் ஆலயம் கட்டுவித்து
“சாத்திரம் பார்த்திங்கி யான் கண்ட பூசைகள்தாம் நடாத்தியேத்தியன்பால் விசுவநாதன் பொற் கோயிலென்றும் புரக்கப் பா(ர்)த்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரிவுடனங் கோத்திரந் தன்னிலுள்ளார்க்கு மடைக்கலங் கூறினனே” என ஆகம படி தான் பூசைகள் நடத்திய விஸ்வநாதருடைய பொற்கோயிலை தன் கோத்திர (சாதி) மக்களை கூறுகிறான். அதன்படி பதினெட்டு ஊர் சைவ வேளாளர்கள் அக்கோயிலை தாங்கள் காப்பதாக பராக்கிரமன் பாண்டியன் காலத்திலேயே ஊர்மக்கள் முன்பு வாக்கு கொடுத்ததை பராக்கிரமன் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 

“ஸ்வஸ்திஸ்ரீ கோஜடில வன்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் பெருமாள் அரிகேசரிதேவர்…இருந்தருளிய இடத்துக்கு யாண்டு…ஜநமும் பதினெட்டு நாட்டு வெள்ளாழரும் இரண்டு பத்திரிவழியும் மற்றும் அஞ்சுவகைப்பட்ட பரிகரமும் கூடிக் கற்பித்த காரியமாவது…திருப்பணி செய்து நிறைவேற்றின இது மானுஷமல்ல தெய்வீகம் எல்லாரும் அறிந்துகொள்ளவும் எங்களுடைய கர்த்தர் இருந்தருளிய இடம் திருவுள்ளம் பற்றியருள நாங்களுங் கர்ஷணை முதலிய துடங்கி இந்தத்திருப்பணியெல்லாங் கூடச்செய்கையுஞ்செய்து எங்கள் இருந்தருளிய இடம் இன்னாயனார்க்கும் நாச்சியார்க்கும் மற்றுள்ள நாயன்மார்க்கும் பூஜாங்கத்துக்கு வேண்டும் அனைத்துக் கொத்திலுள்ளாரையுங் கற்பித்து திருவாபரனமும் பரிகல பரிசிவந்நமுங் குடுத்து பூசையும் குறைவற நடத்தி…”
என மேலே குறிப்பிடப்பட்ட பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டில் சொல்லப்பட்டவற்றை கூறி தொடங்கி பதினெட்டு நாட்டு வெள்ளாழர்கள் அவர்களுடைய ஐந்துவகை பணியாளர்களுடன், ஜனங்களோடு (பொதுமக்கள்) கூடி மன்னன் பராக்கிரம பாண்டியன் தக்ஷிணகாசியை ஏற்படுத்தியது மனிதகாரியம் அல்ல அது தெய்வச்செயல் என்றும் தங்களுடைய கர்த்தர் (அரசர்) உள்ளம் மகிழும்படி தாங்களும் கர்ஷணை செய்து (மேலே பாண்டிய வேந்தன் கர்ஷணை புரிந்த கல்வெட்டு குறிப்பிடப்பட்டுள்ளது) ஆலயதிருப்பணிகளை உடனிருந்து செய்து சுவாமிக்கும் அம்பாளுக்கும், நாயன்மார்களுக்கும், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் திருஆபரனமும், பரிகல பரிசில்வண்ணமும் கொடுத்து நிறைவாக பூசை நடத்தியதாக குறிப்பிட்டும் மேலும், பூஜைக்கு வேண்டிய அமுதுபடி, கறியமுது, சாத்தப்படி, கற்பூரம் குங்குமம், பணிநீர், திருமாலை திருப்பரிவட்டம், திருவிளக்கு, உட்பட்ட பலவகையான தேவைக்கும் மற்றும் நித்திய நைமித்திய பூஜைளுக்கும், தேவதானம் செய்தனர் என்றும் இவை தவிர்த்து, இறைக்குடிகளுக்கும் (கோவில்குடிகள்), ஆலய பட்டர் முதல் வெட்டியான் வரை உள்ளோர்களுக்கும், அக்கிரகாரத்துக்கும், மடங்களுக்கும் இந்த திருத்தலத்தில் உள்ள யாரேனும் ஒருத்தருக்கும் அழிவோ அந்நியாயமோ வராமல் நாட்டு மக்களும், பதினெட்டு நாட்டு வெள்ளாழரும், ஐவகை பணியாளர்களுடன், இரண்டு பத்திரிவழியினர் உள்ள நாள்வரை நாங்கள் இரக்ஷித்து காப்போம் என அவர்கள் கூறியதை குறிப்பிடுகிறது கீழ்க்காணும் கல்வெட்டு.

“…இவை நீங்கலாக மெல்விடுகிற பற்றுக்களுக்கும் இறைக்குடிகளுக்கும் இக்கொயிலில் நம்பியார் முதல் வெட்டியான் கடையாக உள்ள கொயில் பரிகர்த்தார்க்கும் அகரத்துக்கும் மடபதிகளுக்கும் இந்தத் திருப்படை வீட்டில் மற்றும் யாவர் ஒருத்தர் இருக்கிற அவர்களுக்கு ஒரு அழிவு அன்னியாயம் வாராமல் அகத்தாஜநமும் பதின் எட்டு நாட்டு வெள்ளாழரும் இரண்டு பத்திரிவழியும் மற்றும் அஞ்சுவகைப்பட்ட பரிகரமும் உள்ள நாள்க் காத்து இரக்ஷித்துக் கொள்ளுவொமாகவும்…” என அந்தணரையும், அவர்கள் வாழும் அகரங்களையும், மடங்களையும், கோவில்குடியினரையும், பிராமணர் முதல் வெட்டியான் வரை உள்ள சாதிமக்களையும் மன்னனோடு (பாண்டியனோடு) அவன் குலமக்களும் (வெள்ளாளர்களும்) காத்து ரக்ஷித்தனர் என்பதையும், அவர்களுக்கு அழிவோ அந்நியாயமோ நாங்கள் இருக்கும் வரை நிகழாது என சத்தியம் செய்ததையும் மெய்ப்பிக்கிறது இக்கல்வெட்டு.

 

எழுத்தாளர் ஸ்ரீவழுதி பாண்டியன் 

 

மேலும் தொடர்புக்கு : சைவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *