பாண்டியர்கள் என்றுமே கொங்கு வேளாளர்களுக்கு எதிரி தான்!

பாண்டியர்கள் என்றுமே கொங்கர்களுக்கும் எதிரி தான்…

இடைக்கால பாண்டியனான கோச்சடையன் ரணதீரன் (கிபி ஏழாம் நூற்றாண்டில்) மட்டுமே கொங்கர்களுக்கு மகனாக நின்று காத்து “கொங்கர் கோமான்” என பட்டம் பெற்றான்… சங்க கால வரலாற்றை சொல்லும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி தெளிவாக கொங்கர் என்று நாமம் சாற்றப்பட்ட வேளிர் ஐவருக்கும் பாண்டியன் எதிரியே என ஆரம்பித்து, இடைக்கால & பிற்கால பாண்டியர்களின் மெய்க்கீர்த்திகள் வரை கொங்கர்களுக்கு எதிரியாகவே இருந்துள்ளனர் என்பது வரலாறு… பாண்டியர்களின் மெய்க்கீர்த்திகள் சில…

1) “கொங்கினின் தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய
வெங்கதிர்வேல் வலங்கோண்டும்”

– பராந்தக வீரநாராயணன் (859-907) தளவாய்புரச் செப்பேட்டு மெய்க்கீர்த்தி பகுதி…

கொங்கினில் உள்ள தேனூர் எனும் ஊர் வரை குடகொங்கர் (மேற்கு கொங்கர்) உடல்கள் சாக போரிட்டு பிறகு வெண்மையான கதிர்வேலை வணங்கினான் பாண்டியன் என்பது பொருள்… இந்த கொங்கு நாட்டு தேனூர் ஆந்தை குல வேளிர்களின் காணிப் பாடலில் வருகிறது… இன்று அழிந்தபட்டுவிட்டது போலும்…

_

2) “குடகொங்கத் தடன்மன்னனைக் கொல்களிற்றொடுங் கொண்டுபோந்து”

– பராந்தக நெடுஞ்சடையன் (768-815) சீவரமங்கலச் செப்பேட்டு மெய்க்கீர்த்தி பகுதி…

குடகொங்கு என்ற மேற்கு கொங்கு மன்னனை ஆளைக் கொல்லும் யானை வைத்து ஏற்றிக் கொன்றுவிட்டு போனான் என்று பொருள்…

_

3) “கொங்கபூமி யடிப்படுத்துக் கொடுஞ்சிலைபூட் டிழிவித்து”

– பராந்தக நெடுஞ்சடையன் (768-815) சீவரமங்கலச் செப்பேட்டு மெய்க்கீர்த்தி பகுதி…

கொங்கு பூமியை அடிமைப்படுத்தி கொடுமையான வில் (சிலை) போன்ற ஏர்க்கலப்பையை (கழுதையில்) பூட்டி இழிவுபடுத்தினான் பாண்டியன் என்று பொருள்… இது போல் வரலாற்றில் பலமுறை பல இடங்களில் பல அரசர்கள் செய்துள்ளனர், கழுதையை வைத்து அரண்மனையில் உழவோட்டி இழிவுபடுத்துவது…

4) “மழகொங்கம் அடிப்படுத்தும்”

– பராந்தக நெடுஞ்சடையன் (768-815) வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி…

மழகொங்க நாட்டை அடிமைப்படுத்தினான் பாண்டியன் என்று பொருள்… அதாவது இன்றைய நாமக்கல் சேலம் மாவட்டங்கள் மழகொங்கம்…

_

5) “கொங்கரையுங் கும்பீடு கொண்டவர்க்கு”

– மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 – 1239) மெய்க்கீர்த்தி கல்வெட்டு…

கொங்கரையும் (வீழ்த்தி) தன்னை கும்பிட வைத்தவன் பாண்டியன் என பொருள்…

_

6) “மற்றார முழங்கு முரசக் கடற்றானை
முன்புகுந்து தென்கொங்கர் வந்திட்ட தெண்டனுக்கு
மின்பொங்கச் சாத்தியஆ பரணந்தக்க தெனவழங்கி”

– மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 – 1239) மெய்க்கீர்த்தி கல்வெட்டு…

ஆர்ப்பரித்து முரசு முழங்க, கடல் போன்ற வீரர் கூட்டத்தில்/கூட்டத்தோடு களத்தில் முன் புகுந்து, தென் கொங்கர் வந்து கொடுத்த தண்டம்/தண்டனைக்கு, மின்னிப் பொங்க சாற்றிய ஆபரணமே தக்கது என வழங்கி

என்று பொருள்…

இதிலே தென் கொங்கர் பாண்டியர்களுக்கு சார்பாக நின்றார்கள் என தெரிகிறது… இதே காலகட்டத்தில் கொங்கில் கொங்குப் பாண்டியர் என்ற தனி பரம்பரை ஆண்டது… சோழர்கள் சார்பில் இருந்த வேளிர்களான சாத்தந்தை பொருளந்தை பயிரர் கண்ணன் போன்றோர் பாண்டியர் பக்கம் அணி மாறினர் என்பது வரலாறு… கொங்கர்களை வணங்க செய்தவன் என்பதும் இவனது முந்தைய மெய்க்கீர்த்தி பார்த்தோம்… இங்கே தென்கொங்கர் பாண்டியர் சார்பாக என வருகிறது… ஆக கொங்கர்களுக்குள்ளேயே சோழர்களுக்கு ஆதரவு தந்த வேளிர்களும் இருந்தனர் & பாண்டியர்க்கு ஆதரவு தந்த வேளிர்களும் இருந்தனர் என்பது தெளிவு… இங்கே ஒற்றுமை இல்லாத கேவலத்தால் தான் பாண்டியன் கொங்கிற்கு உள்ளே தலை காட்ட முடிந்துள்ளது என்பது முடிபு…

பாண்டியர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை… போர் என்றால் தலைகள் உருளத்தான் செய்யும்… ஆனால் பாண்டியது முடிசூட்டிய தலையை கொய்து, அதனை மதுரை கோட்டையின் மதிலில் அது அழுகி கூடாகும் வரை தொங்க விட்டது என்பது தவறே ஆகும்… அதனை பாண்டியன் முடித்தலை கொண்ட கோப்பரகேசரி என்று கல்வெட்டுகள் சொல்கின்றன… கொங்கு மண்ணை கழுதை பூட்டி களங்கப்படுத்திய பாண்டியை தலைவனாக ஏற்ற கொங்கர்கள் மீதும் அதனை செய்த பாண்டி மீதும்தான் எனக்கு கோபமே ஒழிய வேறில்லை…

  • கொங்கில் பாண்டியர்கள் என்றுமே அடிமைப்படுத்தி அரசாளும்போது கொங்கர்களை ஒடுக்கிவிட்டு வேட்டுவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பது வழக்கம்… இது அரசியல்… பாண்டிகளின் இந்த நிலைபாட்டுக்கும் கொங்கர்கள் கோபப்படக்கூடாது… ஆனால் கோச்சடையன் ரணதீரன் காலத்தில் மட்டும் இது மாறியிருந்தது… அனைவரையும் அரவணைத்து செல்பவன் அவன்… பிற்கால பாண்டியர்களின் காலத்தில் வேட்டுவர்களுக்கு மட்டுமின்றி கொங்கர்களையும் அரச நிலையினராகவே இருத்தி அழகு பார்த்து ரசித்தார்கள் என்பதும் அரசியலே… ஆனால் இதற்காக பாண்டியனை அவசரப்பட்டு பாராட்டவும் கூடாது… எல்லாம் அரசியலே…

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *