அர்ச்சகக்குடிகளான ஆதிசைவர்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது! சைவ கோயில்களை கைப்பற்ற ஸ்மார்த்தர்கள் திட்டம்!

குருத்துவம்: குருக்கள்கள்.

அர்ச்சகக்குடிகள் சார்ந்த ஒரு முக்கிய
பிரச்சனை இப்போது புதிய புதிய வடி
கங்களைக் கொண்டதாக ஆகியிருக்
கிறது.”தமஸோமா ஜ்யோதிர் கமய”
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு நக
ர்ந்து கொண்டிருப்பதாக நம்ப முடிகிறது. நூறுசதவீதப்புரிதல் சாத்தியமில்லை என்பதுண்டு.இது ஓரு கருத்தே.
எதுவும் முடியும்.ஆனால் பெரும்பாலான அர்ச்சகக் குடிகள் பிரச்சனையை
ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை
யோ என்று தோன்றுகிறது. புறசமயத்திலிருந்து சைவத்தை மீட்டெடுத்தல்
என்பதே இங்கு பேசுபொருள்.

சைவத்தை குறிப்பாக ஆலயங்களின் வழி
கைப்பற்றுவதே சுமார்த்தத்தின் பிரதான நோக்கமாகி கச்சிதமாகக் காய்களை நகர்த்திவருகிறார்கள் என்ற
செய்தி பலதிசைகளிலிருந்தும் கிடைக்கிறது.திருவையாறு ஐயாரப்பர்
கோயிலில் பரமாச்சாரியாரை வைத்து அதிருத்ர ஹோமம் பண்ணுமளவி
ற்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதிவிருந்து அர்ச்சகர்கள் பாடம் கற்க
வேண்டும். இதில் மிரட்டல்வேறு.

இது சரியா என்ற விவாதம் உரக்க
எழவில்லை.சிவாச்சார்யார்கள் பலர்
சுமார்த்தச் சாய்வு நிலையை எடுத்தி
ருக்கிறார்கள்.சுமார்த்தம் திருக்கோயில்களுக்கும் அர்ச்சகக் குடிகளுக்கும் நிறைய அனுகூலம் செய்திருப்ப
தான பிரமையில் இருக்கிறார்கள்.
இவர்களிடமிருந்து அனுகூலம் என்று
எதை நம்புகிறார்கள்? கண்களை விற்று சித்திரம்வாங்கி மகிழும் அவலம்
போலத்தான்.

புறசமய திருவுருவப் பிரதிஷ்டைகள்
பிழையில்லை.பரமாச்சாரியாரும்
சிவஸ்வரூபமே என்று ஒரு சிவாச்சாரியார் கருத்து தெரிவித்து திடுக்கிட வைத்திருந்தார்.சைவத்தில் அவதாரக்கருதுகோள் இல்லை.சுமார்த்தச் சாய்வு என்பது சைவத்தைக் கரைத்தல் என்பதுதான்.

அர்ச்சகர்
சமூகம் வாய்திறக்க வேண்டும்.பிற
சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற
போதும் தமிழ்வழி வழிபாடு என்ற
போதும் பிறர்வாயால் பேசமுடிந்தது.
கள்ளமௌனம் ஆபத்தானது.சரியான
குருத்துவம் இல்லை. இன்னொரு அபத்தம். எவர்கள் முன்னின்று எதிர்க்க
வேண்டுமோ அவர்கள் அவர்களோடு
சேர்த்துக்கொள்வது.ஆயிரக்கணக்கான அர்ச்சர்களுக்கு நிலையின்
திரியாமை என்பது புரியவில்லை  ! யாகத்தை அறமாகக்கொண்டவர்களுடன் யாசக அறமற்ற அர்ச்சகர்கள்
ஈஷிக்கொண்டு நிற்பது சரியல்ல.

பார்வை, அதைத்தொடாது.மனமும்
நம் அறிவிற்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டது.அதுகுறித்து நான் எவ்வாறு பிறருக்கு உபதேசிப்பது என்னும்
கேன உபநிஷதம் 1.3.

இதைச் சிக்கெனப்பிடித்துக் கொண்டுவிட்டனர்.சுயம்
இழத்தல் கொடுமை.அர்ச்சகக்குடிகள்
தம்மை இன்னும் சரிபண்ணிக் கொள்ளவில்லை என்று கருதவேண்டியிருக்கிறது. தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் பின்னமான வராஹியை வணங்கவைத்து பெரிய வணிகமாக்கிவிட்டதை, திருவையாற்றில் ஒரு கோயிலில் அப்பர்சுவாமிகளை மறைத்து விநாயகர்பிரதிஷ்டை செய்து பூஜைநடப்
பதையெல்லாம் யார் செய்தார்கள்?
தட்சிணாமூர்த்தியை குரு”வாக்கி குருப்பெயர்ச்சி நடக்கிறது.எப்படி?
திருநாகேஸ்வரத்தில் நாகரை ராகு
வாக்கியது யார்?

சில பிறழ்வுகள் திருத்தக்கூடியவை
தாம்.இதெற்கெல்லா ஸ்ரீமட ஆலோசனை தேவையில்லை.சைவத்திற்குப்
பாஷ்யம் சொல்லும் அருகதை சுமார்த்த மடங்களுக்கு இல்லை.மனிதர்கள்
இங்கு நோய்களால் கஷ்டப்படுகிறார்கள்.நோய்கள் நாம் அல்ல.இந்தப்
புரிதல் இல்லை.தீர்வும் இங்கே இருக்கிறது.சிறிய குற்றங்களைத் தண்டித்து பெரும் குற்றங்களுக்கு அடிபணிவது ஏற்கத்தக்கதல்ல.சைவம் நீர்த்த்துப்போகாமல் பார்த்துக்கொள்வது
ஆதிசைவக்குடிகளின் முதற் கடமை.
சுமார்த்த ஆக்ரமிப்பு என்பது நம்மீதான பண்பாட்டுப் படையெடுப்புதான்.
பரமாச்சாரியாருக்கு வேல்”‘சாத்தி
அலங்காரம் செய்வது, வடைமாலை
சாத்துவது, திருநிறணிவித்துப் பார்த்
து மகிழ்வது, இடபத்தில் வாகனிக்க
வைப்பது போன்றவை தற்செயலான
தல்ல.

குருத்துவம் இல்லை யாரும் கேட்பதற்கில்லை என்ற துணிச்சலில்தான். நல்ல ஆச்சார்யர்கள் பற்றாக்குறை இவ்விடமுண்டு.சவாரி செய்பவன் குறை
பாட்டால் குதிரையும் கழுதையாகும்.
உயிர்ப்போடிருத்தலின் அவசியம்
முக்கியமானது.எங்கள் குடும்பத்தில்
மாசி மகத்தன்று கும்பகோணத்தில்
சமாராதனை பல்லாண்டுகளாக உண்
டு. ஆதிசைவ பிராமண” சமாராதனை
என்றுதான் பத்திரிகை அழைக்கும்
சில வருடங்களாக “பிராமண”என்ற
சொல் பிடுங்கப்பட்டு ஆதிசைவ மக

சமாராதனை என்றே வருகிறது.

குருத்துவக் குறைபாடு என்றில்லை.
எப்படியோ பிள்ளையார்ப்பட்டி
திருப்பரங்குன்றம் மயிலாடுதுறை
அண்ணாக்கள் அரசோடு நெருங்கி
நிற்கிறார்கள்.ஆயிரம் குடும்பங்களை
வாழவைத்தவர்கள் இவர்கள்.சைவத்திரிபுகளை வெளிசத்திற்குக் கொண்டுவரவேண்டும்.
வாழ்வளித்தவர்கள் மட்டுமல்ல வழி
காட்டிகளாகவும் இருக்கக் கடமைப்
பட்டவர்கள்.கும்பாபிஷேகம் போன்ற
தனலாபச் சிந்தனையைப் பின்தள்ளிவிட்டு முன்வரிசையில் நிற்க வேண்டும்.அர்ச்சகர்கள் மத்தியில் மிக ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்தவேண்டும்.திருமணம் கும்பாபிஷேகம் மற்றும் சமூக குடும்ப நிகழ்ச்சிகளில் உண்டு’ ஏதோ பேசிக் கலைதல் கூடாது.ஒவ்வொரு நிகழ்விலும்
நேரம் ஒதுக்கி விவாதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.எதையும்
விட்டுவிட்டு நழுவும் கலை நமக்கு
உதவாது.

ஸம்ஜபனம் லோ மனஸ
அதோ ஸம்ஜயனம் ஹ்ருத
உள்ளத்திலும் இதயத்திலும் ஒத்திசை
வு இலங்கட்டும்( அதர்வ 6.74)—-

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன் .கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *