ஆகம விதிகளை மீறும் ஸ்மார்த்த பிராமணர்கள், ஆகமத்தை போற்றும் ஆதிசைவர்கள்

*ஆகமத்தை பின்பற்றும் கோவில்களான விநாயகர், சுப்ரமணியர், சிவாலயங்களில் ஆதிசைவ சிவாச்சார்யார்களையும், விஷ்ணு ஆலயங்களில் பட்டாச்சார்யார்களையும், கிராம தேவதை (கொற்றவை அம்சத்தின் அம்பாள்) ஆலயத்தில் உவச்சர்களையும், சாஸ்தா ஆலயங்களில் குலாளர்களையும் கைங்கர்யம் செய்ய வேண்டும். மேற்கண்ட கோவில்களில் இருந்து ஸ்மார்த்த பிராமணர்களை வெளியேறி பூர்வீக வைதிக குடிகளிடமே பூஜை செய்ய அனுமதிப்போம்*

சைவ ஆகம விதியும் அதை தான் சொல்கிறது,


நீ என்ன மதம்? என்று கேட்டால் இன்று நம்மில் பலரும் ‘இந்து’ என்கிறோம்.

இந்து மதத்திற்கென தனியே கொள்கையும் தத்துவமும் உண்டா? எந்த இறைக்கொள்கையை கொண்டு இந்து மதம் நகர்கிறது? எனும் கேள்விக்கு முடிவான விளக்கம் தருபவர்கள் இருக்கிறார்களா?

இந்த கேள்வி பலருக்கும் புரியாமல் அல்லது பிடிபடாமல் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் எளிமையாக போவோம். ஒரு அரசியல் கட்சியை தொடங்கினால் அல்லது ஒரு கட்சியில் சேர்ந்தால் முதலில் எதை எதிர்பார்ப்போம். கட்சியின் கொள்கை என்ன? அதன் சித்தாந்தம் என்ன? என்பதை தானே.

திராவிட கொள்கை, கம்யூனிச சித்தாந்தம், தமிழ்தேசியம், தலித்தியம், இந்துத்துவம் என்பதெல்லாம் இன்று இந்தியாவில்/தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு உண்டு. அதை நோக்கியே அவை நகரும். இதில் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து அதில் ஒருசில சமரசங்களுடன் எதிரணியை வீழ்த்தும் இலக்குடன் அது தேர்தல் நேர அரசியலாக மட்டுமே முடியும். மற்றபடி அந்த கூட்டணி எப்ப வேண்டுமானாலும் உடையலாம். பிரியலாம். தான் வீழ்த்திய எதிரணியோடவே அது அடுத்த தேர்தலை சந்திக்கலாம். ஆனால் அந்த கட்சியின் கொள்கை எப்பவும் மாறாது. அது தனித்து நின்றாலும் சரி கூட்டணி அமைத்தாலும் சரி. இப்ப நீங்க எந்த கட்சினு கேட்டால் மேற்சுட்டிய சித்தாந்தங்களை, கொள்கைகளை கொண்ட ஏதோவொரு கட்சியின் பெயரை சொல்வீர்கள் அல்லது எதுவுமே இல்லாமலும் கூட இருக்கலாம். ஆனால் NDA என்றோ UPA என்றோ எங்கும் கூறமாட்டீர்கள். அது கூட்டணி மட்டுமே கட்சி அல்ல. அதுவும் தேர்தல் நேர கூட்டணி.

இதையே தான் மதத்திலும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். சைவம், வைணவம், சாக்தம், ஸ்மார்த்தம், மத்வம் போன்ற சமயங்கள் வெவ்வேறு கொள்கையையும் சித்தாந்தத்தையும் உடையன. ஒவ்வொரு சமயமும் மற்ற சமய கொள்கையை மறுக்கும் நிலையில் இருப்பவை. இவை எல்லாம் புறச்சமயங்களான கிருத்துவ/இஸ்லாமிய தாக்கத்தினால் ஒரு தற்காலிக கூட்டணியை அமைத்திருக்கிறது. அதுக்கு பேருதான் இந்து மதம். சில சமயம் இது மதம் அல்ல வாழ்வியல் முறை. அதுதான் சனாதனம் னு முடிப்பாங்க. ஏனெனில் அதற்கென பிரத்யேக கொள்கைகளோ சித்தாந்தமோ பரத்துவமோ இல்லை. வெறுமனே NDA, UPA போன்று ஒரு கூட்டணியின் பெயர். அதனாலேயே நாங்கள் இந்துக்கள் இல்லை எனும் கலகக்குரலில் ஒரு தார்மீக நியாயம் உள்ளது என்பதே எனது நிலைப்பாடு.

பண்டைய காலத்தில் மதச்சண்டைகள் நடந்தது. அதையெல்லாம் கலைந்து ஒற்றுமையை உருவாக்கத்தான் ‘இந்து’ அடையாளம் என சிலர் உருட்டுகிறார்கள். ஒற்றுமை என்பதும் சகோதரத்துவம் என்பதும் என்ன? எனக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் பலநாள் சண்டை. திடீரென ஒருநாள் எதிர்த்த வீட்டுக்காரன் வந்துடுறான். இந்த சண்டையால் அவனுக்கு ஒரு சந்தோசம் என வைத்துக்கொள்வோம். இப்ப நான் பக்கத்து வீட்டுக்காரனோட ஒற்றுமையாக செல்வது என்பது இனி அவனுடன் சண்டையிடாமல் இருப்பது தானே தவிர அவனை கூட்டினு வந்து என் வீட்டில் வச்சுக்கறது இல்லை. அது மடத்தனம். ஆனால் இந்த மடத்தனத்தை தான் சைவர்கள் செய்தார்கள்.

சைவ கோவில்களுடன் மண்ணாங்கட்டி தொடர்பும் இல்லாத ஸ்மார்த்த பிராமணர்களை கூட்டிட்டு வந்து ‘இந்து’ என்ற பெயரில் விட்டார்கள். விஜயநகர/ நாயக்கர் காலத்தில் நடந்த இந்த அயோக்கியத்தனத்தை பின்வந்த வழிவழி சைவர்கள் கண்டிப்பதோ/ எதிர்ப்பதோ இல்லை. தீவிர மரபு சைவரான யாழ்பாணத்து நாவலர் அவர்களும் வைதீக சைவசித்தாந்த சண்டமாருதமான சோமசுந்தர நாயகர் போன்ற குறிப்பிடும்படியான சைவர்களே இதனை கண்டித்துள்ளனர்.

இத்தனைக்கும் ஸ்மார்த்தர்கள் சைவ கோவில் கருவறையில் நுழைந்து பூஜிப்பது ஆகம விரோதம். இது சைவ சித்தாந்த கொள்கைக்கே எதிரானது. ஏனெனில் சைவத்தின் அடிப்படை சித்தாந்தமான ‘பதி பசு பாசம்’ எனும் முப்பொருள் உண்மையையே ஏற்காதவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். அவர்களை கொண்டு வந்து சைவக் கோவில்களில் வைத்து வீழ்ந்து வணங்கி கொண்டிருப்போரில் பலர் ஆகமத்தை விடாமல் உயர்த்தி பிடிப்போர் என்பது ஒரு நகைமுரண்.

இவ்விடயத்தில் ஶ்ரீவைஷ்ணவத்தின் ஜாம்பவானான ஶ்ரீஇராமானூஜரை வெகுவாக மதிக்கிறேன். கிரியைகள் மட்டுமன்றி கோவில் நிர்வாகம், தெளிவான தத்துவக்கோட்பாடு என ஒரு வலிமையான protocol ஐ உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இராமானூஜரின் இடம் சைவத்தில் நிரப்பப்படவில்லை என்பது எனது கருத்து. இராமானூஜர் போன்ற ஒரு ஆளுமையை சைவம் இழந்திருப்பது வேதனையான உண்மை. ஏனெனில் சைவத்தில் நுழைந்து செய்த/செய்யும் ஸ்மார்த்த அட்டகாசங்களை இதே ஸ்மார்த்தர்களால் வைணவத்தில் செய்ய முடியாது. அதற்கு காரணமும் இராமானூஜரே. ஆதி சங்கரரின் உரையை மறுத்து இராமானூஜர் எழுதிய உரையில் மிகத்தெளிவாக சங்கரரை மறுத்திருக்கிறார். அதோட அவர் நிலைப்படுத்திய கோவில் நிர்வாகம். இவை இரண்டுமே இன்று வரை தென்கலை வைணவம் நிலைப்பெற காரணம்.

புறவாசல் வழியாக பாஜக தமிழகத்தில் நுழைந்தது போலவே ஸ்மார்த்தம் சைவத்தில் நுழைந்திருக்கிறது. அந்த நச்சை பாதுகாக்க மட்டுமே ‘இந்து’ அடையாளம் உதவுகிறது.

ஆக தம்மை நிலைநிறுத்தி கொள்ள சைவம் தனது தத்துவார்த்த ரீதியிலான அக-புற சமய வேறுபாடுகளை முழு மூச்சாக பரவலாக்க வேண்டும். இதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. ஒன்று சைவமே பார்ப்பனிய சமயம்/கடவுள் என்றாலே அது சங்கித்தனம் எனும் க்ரூப்பை மேய்ப்பது. இவர்களின் பின்னால் மறைந்துக்கொண்டே வந்து பகுத்தறிவு பௌத்தம் – புரட்சிக்கரமான ஜைனம் என அதன் பிலாசபி தெரியாமலேயே சொந்தமாக வரலாறு எழுதும் க்ரூப்புக்கு விடையளிப்பது.

இரண்டாவது இந்து மதமே பாரத பண்பாடு என ஒரு கொள்கை கோட்பாடு சித்தாந்தம் இல்லாத வெறுமனே அரசியல் பேசும் நபர்களுக்கு தத்துவார்த்த அறிவூட்டுவது.

பி.கு. ஆப்ரகாமிய சமய காழ்ப்புணர்ச்சியில் மட்டுமே இந்துத்துவம் பேசி பார்ப்பனீயத்தை வளர்க்கும் நபர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம் என்பது எனது கருத்து.

இப்படிக்கு வைதிக சைவ சமயத்தை பின்பற்றி, அதன் சித்தாந்தத்தை ஏற்று போற்றும்

*வேளாளர்கள் (வெள்ளாளர்கள்)*

எழுத்தாளர் ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *