சோழர்கால நிர்வாக முறையும், சாதி ரீதியான சேரிகளும்! சித்திரமேழி நாட்டார் அமைப்பும்

#சோழர்கால நிர்வாக முறை 50 குறிப்புகள்:

#சோழர்கள் காலத்தில் நிர்வாக முறைகள் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன,
பல நிர்வாகக் குழுக்கள் அமைத்து நிர்வாகங்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன என்பதனை பல கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன.
#சோழர் காலத்தில் நில நிர்வாகங்கள்:
1. ஊர்
2. நாடு
3 . நகரம்
4 . பிரமதேயம்
5. சதுர்வேதிமங்கலம்
6. வளநாடு
7.மண்டலங்கள்
8. பிடாகை
என பிரிக்கப்பட்டு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

வணிக நிர்வாகங்கள்:
9. மணிக்கிராமத்தார்
10. திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்
11. ஞானதேசிகர்
12 .பதினெண் பூமி திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்
13. ஐந்நூற்றுவர்
என பல வணிக குழுக்கள் செயல்பட்டுள்ளனர்….
14 . கோயில் நிர்வாகம் கோயில்கள் நிர்வாகப் மணிக்கு தனி நிர்வாக குழுக்கள் செயல்பட்டுள்ளன
15 .தொழில் நிர்வாகம்
தொழில் நிர்வாகங்களுக்கு தனி குழுக்கள் செயல்பட்டுள்ளன.
சில தொழில் சார்ந்த மக்கள் வாசித்த பகுதிகள் தொழில் அடிப்படையிலான சேரிகளாக கல்வெட்டுகளில் பதியப்பட்டுள்ளன அவை
16. கம்மாளர் சேரி
17. ஈழச் சேரி
18. தனிச்சேரி
19. தீண்டாச்சேரி
20. பறைச்சேரி
21. தளவாய் சேரி
22. வண்ணார சேரி
23. அறுவை வாணிய சேரி 24.உழப்பறையர் சேரி
25.மேல் சேரி, கீழ்சேரி

கிராம நிர்வாக சபைகள் மூலம் தனித்தனி வாரியங்கள் அமைத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளன
அவ்வாரியங்கள் பின்வருமாறு
26.நீர் வாரியம்
27.ஏரி வாரியம்
28.நில வாரியம்
29.பஞ்ச வாரியம்
30.கழனி வாரியம்
31.பொன் வாரியம்
32.தடிவழி வாரியம்
33.குடும்பு வாரியம்
34.களிங்கு வாரியம்
35.கணக்கு வாரியம்
36.தோட்ட வாரியம் 37சம்வத்சர வாரியம்

உழவு தொடர்பாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள நிர்வாக வரிகளும், வருவாய்களும்

38.ஆடி பச்சை
39.ஆற்றங்கரை பாட்டம்
40.ஆற்றுப்பாட்டம்
41.ஏர் கடமை
42.ஏர் காசு
43.ஏர்க்காடி
44.அப்பு வரி
45.அரிசி காணம்
46.அளக்கும் கரணம்
47.இலைக்கடலம்
48.உழவிறை
49 .ஏத்தக்காணம்
50 . அரிமுக்கை
…..
என பல நிர்வாக குழுக்களும், நிர்வாகங்களும் கல்வெட்டுக்களில் பதியப்பட்டுள்ளது மூலம் அறியப்படுகின்றது

எழுத்தாளர் : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *