திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ரெட்டியார் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன
வ.எண். பிரிவு வாழ்ந்த இடங்கள் கோத்திரம்
1 . சரவல்லியார் (தெரியவில்லை) (மூலக்கரைப்பட்டி, பலசேரி, கோலியன்குளம், தனக்கர்குளம்) வீரசவல்லியார் கோத்திரம்)
2 . நெல்லியார் (ஆந்திராவில் நெல்லூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) பலசேரி, பாணான்குளம், பருத்திப்பாடு, நன்னிகுளம், திருமலாபுரம், தாழகுளம், தனக்கர்குளம், கோலியன்குளம் வீரசவல்லியார் கோத்திரம்
3 . கொண்டபெல்லம் (ஆந்திராவில் கொண்டபெல்லம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) தெரியவில்லை வீரசவல்லியார் கோத்திரம்
4 . கந்தலார் (ஆந்திராவில் கந்தலார் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, தாழகுளம் மிதுனபாலக் கோத்திரம்
5 . இருவார்த்தார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி மிதுனபாலக் கோத்திரம்
6 . பூணுரர் மூலக்கரைப்பட்டி மிதுனபாலக் கோத்திரம்
7 . மச்சார் (தெரியவில்லை) ரெங்கசமுத்திரம், மூலக்கரைப்பட்டி, பதைக்கம், காடங்குளம் விசுவநாத கோத்திரம்
8.வங்காளத்தார் (தெரியவில்லை) அருணாபுரம், சூரபுரம் விசுவநாத கோத்திரம்
9.ஆலிங்கார் (தெரியவில்லை) காரியாண்டி சிந்துபால கோத்திரம்
10 .பிடித்தவல்லியார் (தெரியவில்லை) காரியாண்டி சிந்துபால கோத்திரம்
11 .பொக்கா ரெட்டி (தெரியவில்லை) சிங்கநேரி, கோலியன்குளம், மூலக்கரைப்பட்டி சிந்துபால கோத்திரம்
12 .மயிலூரார் (தெரியவில்லை) கழுவூர், திருமாலாபுரம் சிந்துபால கோத்திரம்
13. சுண்டியார் (தெரியவில்லை) காரியாண்டி, பலசேரி சிந்துபால கோத்திரம்
14 .ஆரூரார் (தெரியவில்லை) பதைக்கம் சிந்துபால கோத்திரம்
15 .கொக்கடியார் (தெரியவில்லை) தெரியவில்லை சிந்துபால கோத்திரம்
16 .பாலட்டார் (தெரியவில்லை) திருமலாபுரம், முனைஞ்சிப்பட்டி சிந்துபால கோத்திரம்
17 .ஈங்குலாரு (தெரியவில்லை) கூந்தன்குளம், வெங்கட்டாபுரம், அரவ்நேரி, ஜெகனாதபுரம்(செண்பகராம நல்லூர் ) , கால்கரை, பெத்தரெங்கபுரம் பல்லமலா கோத்திரம்
18 .தடையலார் (தெரியவில்லை) பதைக்கம், முனைஞ்சிப்பட்டி பல்லமலா கோத்திரம்
19. கொண்டபுரத்தார் ((ஆந்திராவில் கொண்டபுரம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி மதுராந்தக் கோத்திரம்
20 .நிலவல்லியார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி, பதைக்கம் இரதணயல கோத்திரம்
21 .ராஜமகேந்திரம் ((ஆந்திராவில் ராஜமுந்திரி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) வெங்கட்டாபுரம், திருமலாபுரம், ராமகிருஷ்ணபுரம், மூலக்கரைப்பட்டி, கோலியன்குளம் அனுபால கோத்திரம்
22 .கொம்புரார் (தெரியவில்லை) வெங்கட்டாபுரம், மூலக்கரைப்பட்டி, சிதம்பராபுரம் பிரமல கோத்திரம்
23 .கொலூரார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி கனகமள்ளா கோத்திரம்
24 .கொண்டபல்லி ((ஆந்திராவில் கொண்டபல்லி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) தெரியவில்லை பிரமல கோத்திரம்
25 .ஒழுத்துலார் ((ஆந்திராவில் ஒங்கலூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) தெரியவில்லை விஷ்ணுபால கோத்திரம்

26 .பங்களூ(ர்)வார் சமூகரெங்கபுரம்,சீலாத்திகுளம்.
27 .திருமங்களவார் சமூகரெங்கபுரம்,சீலாத்திகுளம்.
28 .பொல்லாடிவார் சமூகரெங்கபுரம்,சீலாத்திகுளம்.
29.போலாடிவார், பத்தட்டிவார், தூர்வார், பென்னூர்வார், குண்டாலுவார், பொல்லாடிவார் இவர்கள் நெல்லை மாவட்டம், சமூகரெங்கபுரம்,நக்கனேரி, பருத்திப்பாடு கிராமத்தில் வாழ்கின்றனர்
விடுபட்டதை தெரிவிக்கவும்..
கோத்திரம் தெரியாதவர்கள் சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.
ஆண்களுக்கு மட்டும்தான் கோத்திரம் என்பது இல்லை. பெண்களும் தங்களின் கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தைச் சார்ந்தவர்களாகி, அந்த வம்ச ஸந்ததியை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தைச் சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்குத் தத்து (ஸ்வீகாரம்) அளிக்கப்பட்டுவிட்டால் அந்த வம்சத்து வாரிசாக மாறிடுவதால் அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவராகி விடுவதால் பிறந்த கோத்திரம் மாறிவிடும்.
ஆண் பெண்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படும்போது முதலில் கோத்திரத்தின் அடிப்படையிலேயே தான் செய்யப்படுகிறது. ஒரே கோத்திரத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் உடன்பிறந்தவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்யப்படுவதில்லை. ஆணின் கோத்திரத்திற்காக அல்லது பெண்ணின் கோத்திரத்திற்காக அன்னியமான கோத்திரத்தில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
கோத்ர பிரவர்த்தகரின் கீழ் பல ரிஷிக்கள் கோத்திரங்கள் உள்ளன. ஆனால், ரிஷிகள் அறிந்தும் பிரவர்த்தக ரிஷி மாறுவதில்லை. பிரவர்த்தக ரிஷியின் பெயர் கட்டாயம் பிரவரத்தில் இருக்கும் என்பதால் பிரவரத்தில் உள்ள ரிஷியின் பெயர் ஆண், பெண் கோத்திரங்களில் ஒன்றாக இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை.
உதாரணத்திற்கு ஒன்றைக் காட்டலாம். ஆணின் கோத்திரம் ஓமதக்னி. பெண்ணின் கோத்திரம் கர்கிய. ஓமதகனியும், கர்கியரும் வேறு வேறு ரிஷிகள் என்றிருந்தாலும் இவர்கள் பிருகு வம்சத்தில் வந்தவர்கள் என்பதால் பிரவரத்தில் பகுதி ரிஷியின் பெயர் கட்டாயம் இருக்கும். ஆக, இந்த இரண்டு கோத்திரங்களைச் சார்ந்த ஆண் பெண்களுக்கும் திருமணம் செய்ய கோத்திரப் பொருத்தம் இல்லை.
ஆண் பெண் திருமணத்திற்குப் பார்க்கும் பத்து வித பொருத்தங்களில் முதன்மையானது கோத்திரப் பொருத்தம். இது இல்லை எனில் மற்ற எல்லா வகையிலும் நூறு சதம் சரியாகப் பொருந்தி இருந்தாலும் திருமணம் செய்வதற்கில்லை. அங்ஙனம் திருமணம் செய்வது சகோதர சகோதரிக்கு இடையே செய்த திருமணமேயாகும்.
ஆண் தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்துகொள்வதுடன் தன் மனைவியின் தந்தை கோத்திரத்தையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு
பெண்கள் உந்நதமான நிலையில் இருக்க வேண்டியவர்கள். பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது என்பதையும் அறிவோம். ஆகவே பெண் என்ன மட்டமானவளா, ஆண் என்ன உசத்தி என்றெல்லாம் கேட்பதோடு ஆண் குழந்தை பிறந்தால் தான் வம்ச வ்ருத்தி எனச் சொல்வதையும் தவறாகவே புரிந்து கொள்கிறோம். பெண்ணில்லாமல் கருவைச் சுமக்க யாரும் இல்லை. ஆகவே பெண் வேண்டாம் என யாருமே சொல்வதில்லை.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.
விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.
- ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. பெண் எப்போதும் பெண்; 100% பெண். ஆனால் ஆணோ 50% பெண் எனலாம். இதிலே வேடிக்கை என்னவெனில் ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. ஆனால் அதிலே உருவாகும் ஆண் பெண்ணை அடக்கி ஆள்கிறான் என்பதும் விந்தையிலும் விந்தை. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.
—->> மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







