திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளின் பார்வையில் சூத்திரர் என அனைவரையும் வகைப்படுத்துவது சரியா? ஆ.ராசா சூத்திரர் குறித்து பேசியதற்கு வரலாறு என்ன சொல்கிறது?

*திமுக தலைவர் ஆ.ராசா அவர்களின் சூத்திரர் யார்? என்ற பேச்சுக்கான பதில் அளித்தல்*


தென் இந்திய வர்ணஸிரம கோட்பாட்டுக்கும், வடஇந்திய வர்ணஸிரமத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

முதலில் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் அனைவரும் சூத்திரர் என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது! அது பிராமணர்களை உயர்வாக வைக்க வேண்டும் என்பதற்காக பிராமணர் சமூகத்திலே அந்த பொய் பரப்பப்பட்டது என்பதை நான் நம்புகிறேன்!

தமிழ்நாட்டில் வர்ண சாதிகள், அவர்ணசாதிகள் , அனுலோமர், பிரதிலோமர்,பஞ்சமர் என வகைப்பாடு உண்டு!

*வர்ணசாதிகள் என்பது சஷத்திரிய, வைசிய,சூத்திரர் ஆவர்*

*அவர்ணசாதிகள் என்பது எக்காரணம் கொண்டு வர்ணத்திற்குள் அடங்காத சாதிகள் என்பதாகும்!*

அனுலோமர், பிரதிலோமர் என்பவர்கள் வர்ண கலப்பு சாதிகள்,

பஞ்சமர் அனைவருக்கும் தெரியும்!

இங்கே நான் பேச விரும்புவது தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாத அனைத்து சாதிகளும் சூத்திரரா? சூத்திரர் என்பது தீண்டதாகதவர்களா? என்பது தான்!

சில ஆதார பூர்வ எடுத்துக்காட்டுகளுடன் :

தமிழ்நாட்டில் வாழும் கம்பளத்து நாயக்கர்களின் தோற்றம் என்பது அவர்களை சூத்திரர் என்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் கம்பளத்து நாயக்கர் 20 க்கும் மேற்பட்ட பாளையக்காரர்களாக இருந்தவர்கள் அனைவரும் அறிவர்! இவர்கள் தீண்டதாகதவர்கள் கிடையாது,ஆளாளப்பட்ட பிராமணர்களுக்கே படியளந்தவர்கள்!

ஆதாரம்: எட்டயப்புர சமஸ்தான சரித்திரம்,வம்சமணிதீபிகை என்ற நூலில் கம்பளத்து நாயக்கர் தோற்றம் குறித்து வருகிறது, கீழே இணைத்துள்ளேன்! இதே போல் கம்மவார்,பலிஜா நாயுடுகளும் வர்ணத்திற்குள் வர கூடிய சாதிகளே!

 

மனுதர்மப்படி பிராமணன் சொத்து வைத்து வைத்து கொள்ள கூடாது,அதாவது தானம் பெற்று அதாவது பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டும் என்பது இங்கே கவனிக்கதக்கது!

வரலாற்றில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்,ஆயிர வைசிய செட்டியார், ஆரிய வைசிய செட்டியார்,வெள்ளாஞ்செட்டியார்,சைவ செட்டியார் ஆகியோர் *தனவைசிய* வர்ண சாதியினர்!


அதே போல் பிள்ளை,முதலியார், கவுண்டர் என பட்டம் கொண்டுள்ள *வெள்ளாளர்கள்* எனப்படும் வேளாளரில் சஷத்திரியர்,வைசியர், சூத்திரர் என மூன்று வர்ணமும் உண்டு! இந்த வெள்ளாளர்கள் தான் ஆதீனமாக பரிபாலனம் செய்து வருகிறார்கள் தமிழ்நாட்டில், *விஜயநகர பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயர்* வம்சாவளியினரே சமீபகாலத்தில் பெங்களூரூவில் வைதீக சைவ ஆதீனத்தை சந்தித்து பணிந்து வணங்கியுள்ளார்கள், மேலும் பிராமணர்களும் ஆதீனங்களிடம் பணிவுடன் குருத்துவ நிலையில் நடந்து கொள்கிறார்கள்!

இதே போல் வைசியரிலே பூ – வைசியர்,
கோ – வைசியர்,
தன – வைசியர் என மூன்று உள்ளது, இதில் மூன்றுமாகவும் வெள்ளாளர்கள் இருந்துள்ளார்கள்!

இந்த வெள்ளாளர்களின் சமூக அந்தஸ்து ஊர் அறியும்!

வெள்ளாளர்களின் வர்ணம் குறித்து சில ஆதாரங்களான
*மரபாள புராணம்* என்ற நூலும்,சில *தமிழ்நிகண்டுகளில்* உள்ளவற்றையும்,சில கல்வெட்டுகளையும் இணைத்துள்ளேன்!


மேலும் தமிழ்நாட்டில் உயர்ந்த நிலையில் உள்ள *ரெட்டியார்கள்* சூத்திரர்கள் என அவர்களே வெளியிட்ட கல்வெட்டு ஒன்றையும் இணைத்துள்ளேன்! ரெட்டியார் தீண்டதாகதவர்களாக? ரெட்டியார்களும் பிராமணர்களுக்கு படியளந்தவர்களே!

ரெட்டியார் குறித்த கல்வெட்டில் சதுர்த்த வர்ணம் என்று வரும்,சதுர்த்த என்றால் நான்காவது என்று அர்த்தம்!

சர்வதேச செஸ் ஒலிம்யாட் போட்டியை திமுக சீறும் சிறப்புமாக நடத்திய போது தொடக்கவிழாவில் சேர,சோழ, பாண்டியர்களை மேன்மைப்படுத்தி காட்டியிருந்தீர்களே அந்த மூவேந்தர்களும் மனுதர்மவாதிகள் தானே!

ஆதாரக்கான தொல்லியல் துறை வெளியிட்ட செப்பேடு ஆதாரங்களும்,தமிழக பள்ளிக்கல்வித்துறையே வெளியிட்ட சமூக அறிவியல் பாடதிட்டத்தில் வெளியிட்டதையும் இணைத்துள்ளேன்!

*அவர்ண சாதிகள்*

மீதி இருக்கக்கூடிய மறவர்,கள்ளர்,அகமுடையார்,வன்னியர், வேட்டுவர்,முத்தரையர், வலையர்,நாடார்,பரதவர் போன்ற மேலும் சில சாதிகள் வர்ணத்திற்குள் வராத அவர்ண சாதிகள், இதில் மறவர்,கள்ளர்,வன்னியர் எல்லாம் பாளையக்காரராக இருந்துள்ளனர்! கொங்கு வரலாற்றில் பூலுவ வேட்டுவர்களும் பட்டக்காரர்களாக அதாவது குறுநில மன்னர்களாக இருந்துள்ளனர்,இந்த சாதிகளில் சமூகநிலையும் ஊர் அறியும்!

இதுபோக அனுலோமர், பிரதிலோமர் சாதிகளும் உண்டு!


ஆகவே தமிழ்நாட்டில் பிராமணர்கள் அல்லாதோர் அனைவரும் சூத்திரர் தான் என்பது பொய்,மேலும் சூத்திரர் என்றாலே இழிவானவர் என்பதும் பொய்,மேலும் தென்இந்திய வர்ணாசிரமம் வேறு வடஇந்திய வர்ணாசிரமம் என்பது வேறு!

தெலுங்கு சாதிகளை கழித்தது போக தமிழ் சாதிகளில் வெள்ளாளர் சாதி மட்டுமே வர்ணத்திற்குள் வர கூடிய சாதிகள்,மற்ற தமிழ் சாதிகள் அவர்ண சாதிகள்! அனுலோமர், பிரதிலோமர் சாதிகள்

சில அந்த கால பிராமணர்கள் தங்களை உயர்வாக காட்டி கொள்ள *திக* கொள்கையாளர்களை பயன்படுத்தி பிராமணர் அல்லாதோர் எல்லாம் சூத்திரர் என்ற பொய் பிரச்சாரத்தை தமிழத்தில் விதைத்துள்ளனர்! இதை திராவிடமும் பயன்படுத்தி கொண்டு காங்கிரஸில் வலுவான தலைவர்களாக இருந்த பிராமணர்களை ஓரம் கட்ட பிராமணர் அல்லாத மற்ற சாதிகளின் ஓட்டுகளை அறுவடை செய்ய சூத்திரர் பதத்தை இழிவாகப்படுத்தி பயன்படுத்தி கொண்டது *திமுக*

தற்பொழுது *ஆ.ராசா* வுக்கு பதில் போடுகிறேன் பேர்வழி என்று சில இந்துத்துவாதிகளும்,சில பிராமணர்களும் வரலாற்றை மூடி மறைத்து பேசுவது அபத்தம்!

*சூத்திரர் என்றாலே இழிவானர்கள் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் அது உண்மையாகி விடாது*

*சூத்திரர் என்பதை ஓட்டு அறுவடைக்காக திமுக பயன்படுத்தி கொள்கிறது அவ்வளவே*

இப்படிக்கு :

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *