யார் பின்தங்கியோர்?
10% EWS Reservation! பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்கள்!!

யார் பின்தங்கியோர்?
தென்மாவட்டங்களில் 42 பாளையக்காரர்கள் மறவர் சாதியினர் தான், பூலிதேவன், தென்காசி, முத்துராமலிங்க தேவர், ஏழாயிரம் பண்ணை என பல்வேறு பாளையங்கள், ஆனால் மறவர் MBC போதாது என்று DNT கேட்கிறார்கள் !!

வடமாவட்டத்தில் உள்ள வன்னியர்களும் நாங்க தான் பல்லவர்கள், நாங்க அக்னி குல சஷத்திரியர், வன்னியர்களும் நிறைய பாளையக்காரர்களாக இருந்துள்ளோம் என்கின்றனர்!!!! இவர்களும் MBC இடஒதுக்கீடு தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு!!! தற்பொழுது வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்கின்றனர்!!!

தொட்டிய நாயக்கர்களும் நிறைய பாளையக்காரர்களாக இருந்துள்ளனர் நிலக்கோட்டை பாளையம் என, இவர்களும் இன்று MBC இடஒதுக்கீடு, வரும்காலங்களில் DNT இடஒதுக்கீடு கேட்கின்றனர்,
கம்பளத்து நாயக்கர் வீரபாண்டிய கட்டபொம்மன் சாதியினர், இவர்களும் பாளையக்காரராக இருந்துள்ளனர், சூரங்குடி, பாஞ்சாலங்குறிச்சி என, இவர்களும் இன்று MBC இடஒதுக்கீடு , தற்பொழுது DNT இடஒதுக்கீடு கேட்கின்றனர்!!!

பலிஜா நாயுடு மூன்று விதம் இருக்கு, இதில் சஷத்திரிய பலிஜா என்போர் MBC இடஒதுக்கீடு,
கள்ளர் பாளையங்கள் நிறைய இருந்துள்ளனர், எ.கா: புதுக்கோட்டை கள்ளர் குல தொண்டைமான்கள், இவர்களில் பெரும்பாலும் BC இடஒதுக்கீடு, சூரியூர் கள்ளர்கள் மட்டும் MBC இடஒதுக்கீடு

நாங்க தான் மூவேந்தர் என சொல்லி திரியும் நாடார்கள் BC இடஒதுக்கீடு

நாங்க தான் பாண்டியர் (உண்மையோ & பொய்யோ ) இருந்தாலும் என சொல்லும் பள்ளர்கள் SC இடஒதுக்கீடு
அகமுடையார்களும் தாங்கள் தான் சேரர், சோழர், பாண்டியர் என கூறுகின்றனர், இவர்களும் BC இடஒதுக்கீடு
நாங்க தான் வேளிர், ஆண்ட பரம்பரை என சொல்லும் உடையார் சாதியினர் BC இடஒதுக்கீடு
நாங்க தான் சேர மன்னர் என கூறும் வேட்டுவ கவுண்டர்கள் MBC DNT இடஒதுக்கீடு

நாங்க தான் முத்துராஜா மன்னர் பரம்பரை, களப்பிர மன்னர்கள் நாங்க தான் என கூறும் வலையர் என்ற முத்தரையர்கள் MBC இடஒதுக்கீடு, DNT இடஒதுக்கீடு,

அதே போல் குயவர்கள், பண்டாரங்கள் நாங்களும் ஆண்ட பரம்பரை என உண்மையோ, பொய்யோ Blogspot, Website எழுதி வைத்துள்ளனர்,
ஆக மொத்தம் தமிழ்நாட்டில் இப்படி பல்வேறு ஆண்ட சாதிகள் இருக்கும் போது இவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு?
வடஇந்தியாவில் ஆண்ட சாதி ராஜபுத்திரர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது, ஆனால் தமிழ்நாட்டு ராஜபுத்திரர் கூறும் வன்னியர்கள் தனி இடஒதுக்கீடு ஏன் கேட்கனும்?
ஆனால் இந்த சாதிகளை சார்ந்தவர்கள் அல்லது இந்த சாதிகளை வைத்து அரசியல் பேசும் அரசியல் கட்சியினர் போன்றோர் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை மட்டும் எதிர்ப்பது ஏன்?
10% பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பாமக ராமதாஸ் வன்னியர், அமமுக தினகரன் கள்ளர் அவர்களே, கருணாஸ் அகமுடையார் அவர்களே நீங்க எல்லாம் தான் ஆண்ட பாளையக்கார, ஜமீன்தார் பரம்பரை ஆச்சே, நீங்க ஏன் 10% பொருளாதார இடஒதூக்கீட்டை எதிர்க்கிறீர்கள்? ஆனால் DNT இடஒதுக்கீட்டிற்கு மட்டும் ஆதரவு ஏன்? DNT யில் பயன்பெறுவது எல்லாம் உங்க சாதியினரோ?
மேலே குறிப்பிட்ட ஆண்ட சாதிகளை வைத்து அரசியல் பேசும், அவர்களுக்கு இடஒதுக்கீட்டை வாரி வழங்கிய திமுக தான் சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது, ஆண்ட சாதி வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்கியது திமுக தானே, கம்யூனிஸட், விசிக, நாம் தமிழர் கட்சி இன்னும் பலர் ஏன் 10% பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த விடாமல் தடுப்பது ஏன்?
கேட்டால் பிராமணன் மட்டும் தானே அதில் பயன்பெறுவான் என்பார்கள், பிராமணன் மட்டும் அல்ல ஓதுவார், தேசிகர், குருக்கள், செட்டியார்கள், வெள்ளாள பிள்ளைமார், வெள்ளாள முதலியார், முஸ்லீம், கிறிஸ்த்துவன், சேலம் கொல்ல ஆசாரி, ராஜீஸ், கம்மா நாயுடு, ரெட்டியார், பலிஜா நாயுடு என 70 க்கும் மேற்பட்ட சாதிகள் பயன்பெற போகிறது, இந்த சாதிகளில் பெரும்பான்மையினோர் தங்களை ஆண்ட சாதி என சொல்லி கொள்வதில்லை,
மாறாக பிராமணனுக்கு சொத்து வைத்து கொள்ள உரிமையே இல்லை 1900 முன்னர், பிரிட்டிஷ்க்காரன் தான் பிராமணன்,குருக்கள், தேசிகர் என்போரும் சொத்து வைத்து கொள்ளலாம் என சட்டம் கொண்டு வந்தது,
எந்த பிராமணன் பாளையக்காரனாக இருந்துள்ளான்? எந்த செட்டியார் மூவேந்தாராக இருந்துள்ளார்? என ஆதாரத்தை காட்டி விட்டு 10% பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும், அதை விடுத்து பொய் பிரச்சாரம் கூடாது,
இப்படி ஆதாரத்தை நானே காண்பித்து விட்டேன்!!!
சமூக நீதி பேசும் திமுக, திக, கம்யூனிஸட்கள், விசிக, நாம் தமிழர் கட்சியினர் தான் இங்கே சமூக நீதியை குழித்தோண்டி புதைப்பது,

தனி இடஒதுக்கீடு கேட்கும் வன்னிய பாமக வினர் எல்லாம் ஒன்று நீங்க ஆண்ட பரம்பரை இல்லையென ஒத்து கொள்ளுங்கள் அல்லது 10% பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்க்காதீர்கள் !!!
இப்படி தமிழ்நாட்டில் ஒரு பக்கம் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவதும், மறுபக்கம் இடஒதுக்கீடு வேண்டும் என போராடுவதும் என இரட்டை நாடகம் ஆடாதீர்கள்!!!!
ஒரு பக்கம் நில்லுங்கள்!!!
இப்படிக்கு :
தமிழ்நாட்டில் 10% பொருளாதார இடஒதுக்கீடு வரும் கல்வியாண்டிலே அமலாகும் என எதிர்பார்த்து காத்துயிருக்கும் சாமானியன்
மேலும் தொடர்புக்கு : கட்டுரையாளர் :
திருநெல்வேலி சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







