#வெள்ளாளர்_தனிமதம் ஒரு மில்லியன் டூவிட்ஸ் ஒரு பார்வை

“வெள்ளாளர்_தனிமதம்” – 1 மில்லியன் ட்வீட்ஸ் : ஒரு பார்வை

வேளாளர் தனி மதக் கோரிக்கை சென்ற ஞாயிறு 10 லட்சம் ட்வீட்டுகளுக்கு மேல் சென்று இந்திய அளவில் மிகப்பெரும் ட்ரெண்ட் ஆனது. பலரும் வேளாளருக்கு தனிமதம் அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுத்து ட்வீட்டுகள் இட்டனர். இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது தேவேந்திர குலத்தார் என்னும் பள்ளர் சாதி மக்களுக்கு வேளாளர் என்று அவர்களுக்கு உரிமையில்லாத மரபுப் பெயரைக் கொடுக்க வேண்டும் என்ற சட்ட மசோதா தான். இதுநாள் வரையில் தாங்கள் கண்டிராத கேட்டிராத படித்திராத வரலாறுகளையும் வேளாளர்கள் புரட்டிப் படிக்கத் தூண்டியது இச்சம்பவம் எனலாம்.

அப்படி ஒரு எழுச்சியின் வெளிப்பாடே இன்று வேளாளர்கள் தனிமதம் கேட்டு நிற்பதும். அப்படியென்ன தனிமதம் கேட்கிறார்கள்? ஏன் இந்து மதம் வேண்டாம் என்கிறார்கள்?

மேற்சொன்ன பெயர் மாற்றப் பிரச்சனையில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் நிறைய சூட்சமமான அரசியலை வேளாளர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதே.

இங்கு இந்து மதம் என்கிற பெயரில் அரசுகளும், கட்சிகளும் தமது அரசியல் ஜாலங்களை இந்து என்று வரையறைப் படுத்தப்பட்டுள்ள மக்கள் மீது எளிமையாக செலுத்துகிறார்கள். இந்நிலை பிறமதத்தவர்களுக்கு இல்லை.

தமிழகத்தின் மிகப்பெருஞ்சமயம் என்ற அந்தஸ்தில் இருந்த சைவ சமயம் கேட்பாரற்று சென்று வரும் நிலை கண் முன்னே நடக்கிறது. ஆகம விரோதப் போக்குகள், குருக்கள் அவமதிப்பு, கோயில் சொத்துக்கள் திருட்டு என சைவம் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது.

மறுபுறம் சரியான சமயக் கல்வி இல்லாமல் பொதுக் கல்வியில் மூழ்கி, சமய தத்துவங்கள் புரியாது, புறப்புறச் சமயம் என சைவம் மறுத்த மாயாவாதமான ஆதிசங்கரரின் ஸ்மார்த்த மதம் மெல்ல இந்து மதம் என்கிற வடிவமும் பொது ஆதரவும் பெற்று வருகிறது.

ஸ்மார்த்தர்கள் மீதாக நமக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு நிறைய ஸ்மார்த்த நண்பர்கள், வழிகாட்டிகள் உண்டு. ஆனால் அவ்வாறானவர்களின் சிறப்பான எண்ணங்கள் பொதுப் புத்தியில் இல்லை. அப்படிப்பட்டவர்கள் இந்து மதம் என்ற ஒன்றை உறுதிபடுத்தி அதற்குத் தாங்கள் தான் அதிகாரி என்னும் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.

இன்னொருபுறம் தமிழ்வழி என்ற கோஷ்டிகள் பெருகி சைவத்தை மொழிவழிச் சண்டைகளை உருவாக்கி மிஷனரி சைவமாக்க துண்டாடி வருகின்றன. இதற்கு காரணம் தமிழ் – சமஸ்கிருதம் இரண்டையும் இரு கண்ணாய்ப் பேணும் சைவத்தை இந்த இந்து மதம் பேணாததே!

இம்மியளவும் இப்பொது மதத்தின் வாயிலாக சைவம் ஒரு நற்பலனையும் சம்பாதிக்கவில்லை. ஆகமங்களைப் பற்றியோ, சிவாச்சாரிய குருக்கள் பற்றியோ, ஸ்ரீகண்டர் – மெய்கண்டார் முதலிய சைவ ஆச்சாரியர்கள் பற்றியோ எந்தப் பாடப் புத்தகத்தின் மூலை முடுக்கிலும் ஒரு சிரு துறும்பு அளவேனும் கண்டில்லை.

மறுபுறம் அரசியல் அமைப்புகள் பாரம்பரிய நெறிமுறைகளுக்கு எதிரான மக்கள் வழக்கங்களுக்கு ஒவ்வாத பொதுச் சட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அதனை இந்து என்கிற பொது அடையாளத்தின் பெயரால் எம்மீது திணிக்கிறார்கள்.

குழப்பியடித்த மாதிரி யாருக்காக எதற்காக நாங்கள் கேட்காதவற்றையெல்லாம் எங்கள் மக்கள் மீதும் சமய நிறுவனங்கள் மீதும் அடிப்படை இல்லாமல் பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-உம் போலித்திராவிட அரசியல் பாணியில் முற்போக்கு என்ற பெயரில் திணிக்கிறார்கள் என்று யோசிக்க எங்களுக்கு நேரமில்லை. அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. வேண்டுவோர் கட்டியழுங்கள்.

இவற்றிற்கு தீர்வு எமது சமய வாழ்க்கையிலும், தனிப்பட்ட சமூகம் மற்றும் குடும்ப வாழ்க்கை முறைகளிலும் அரசாங்கங்களும் கட்சிகளும் தலையிடுவதை நிறுத்துவதே. சமய சமுதாய குடும்ப நிறுவனங்கள் தங்களைத் தாமே நெறிப்படுத்திக்கொள்ளும் வழிமுறையை உருவாக்கி அவற்றை அங்கீகரிப்பதே அரசின் கடமையே தவிர, அவற்றை தாமே மனம் போன போக்கில் நடத்துவோம் என்பதல்ல.

பழம்பெருஞ் சமயத்தைக் கட்டிக்காத்தாவர்கள் என்ற அடிப்படையில் வேளாளர்கள் இதனை முன்னேடுத்திருக்கிறோம். வரிசையாக வைணவம் முதலிய மதங்களும் தனி அங்கீகாரமும் பாதுகாப்பும் பெற குரல் கொடுப்போம். அனைவரின் ஆதரவையும் பெருவோம். இதனூடே சமய, சமூக, அரசியல், தனித்த வாழ்க்கை முறைச் சட்டங்களுக்கான விழிப்புணர்வுகளையும் பெறுவோமாக.

வேளாளர் மரபையும் மீட்போம்
எம் சமய வாழ்க்கையையும் மீட்போம்

இது எங்கள் உரிமை! இது எங்கள் கடமை!

உங்களில் ஒருவன்
#வேளாளன்

கட்டுரையாளர் 

அந்துவன் கூட்ட காளிமுத்து வெள்ளாள கவுண்டர் 

 

மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *