ஈழப்போருக்கு பின் தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை பாதுகாப்பது எவ்வாறு?

*தமிழர் யார்* ? *ஈழப்போருக்கு பின் இடப்பெயர்வுகளால் தமிழர் வாழ்வியல் சூரையாடப்படுவதை தடுப்பது எவ்வாறு*

 

தமிழ் மொழி பேசுபவர் எல்லாம் தமிழரா? என்றால் கிடையாது,

பாரத தமிழகத்தில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் அனைவரும் தமிழை சரளமாக பேச கூடியவர்களே, ஆனால் இவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழராக ஏற்கவியலாது,

யார் தமிழர் என்பதற்கு தமிழரில் உள்ள சாதி கட்டமைப்புகளே விடை தருகின்றனர்,

ஈழத்தில் தமிழர் மத்தியில் சாதி பார்க்க மாட்டோம் என்ற பேச்சுகள் அதிகமாகவே நடக்கின்றன, மேலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்களது சாதியை காத்து கொள்ளவியலாது போகிறது, இப்படியாக ஈழப்போர் பாதிப்பின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் தமிழர்கள் தங்களை தமிழராக காத்துக்கொள்ள சாதி தேவைப்படுகிறது,

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்களை தமிழராக காண்பித்து கொள்ளும் போக்கும் நிகழ்கிறது,


அவர்களிடம் இருந்து தமிழர்கள் தம்மை தற்காத்து கொள்ள தமிழரில் உள்ள சாதிகளே உறுதுணையாக இருக்க முடியும், தமிழர்கள் தத்தம் சாதிகளை பேணிகாக்காமல் விடுவோமானால் வருங்காலத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள் எல்லாம் தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்தி கொண்டு தமிழர் நலன்களை, வாழ்வியலை, பண்பாடுகள், கலாச்சாரத்தில் தலையிட்டு தமிழர் நலனை பாதிப்புக்குள்ளாக்க நேரிடலாம்,

ஈழப்போருக்கு பின் ஈழத்தில் சாதி கட்டமைப்புகள் வலுவிழந்து போயிருப்பது தமிழர் நலனை எதிர்காலத்தில் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை,

தமிழரில் உள்ள சாதிகளை பேணாமல் தமிழர் நல்வாழ்வு என்பது இல்லாமல் போயி விடும்,

தமிழர் சாதிகளை பேணுவோம், தமிழர் பண்பாடு, கலாச்சார, வாழ்வியலை பாதுகாத்திடுவோம்!!

கட்டுரையாளன் :

*கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *