*சைவ ஹோட்டல்கள் யாருக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது?*
வேளாளர்கள் உணர்வார்களா?
ஹோட்டல்களில் பெரும்பாலும் தற்போது துரித உணவு, சைனீஸ் உணவுகள், புலாலில் விதவிதமான ரகங்கள் பார்த்தவுடன் பூரிக்கும் பெயர் மற்றும் மசாலா வாசனை என இப்படி இருக்க, சைவ ஹோட்டல்கள் இன்றளவும் உயிரோடு உள்ளது என்றால் அது பிரமிக்க வேண்டும். யார் சைவர்? வேளாளரே சைவர் வேளாளர் மாத்திரமே சைவர் (நான் இன்று நேற்று சைவர்களை சொல்லவில்லை. பிற சமூகங்கள் இன்று தீட்சை வாங்கி சைவ சமயத்தை விரும்பலாம் ஆனால் பூர்வீக சைவர் வேளாளரே!)
இப்படி இருக்கையில் வேளாளர் வெளியில் பெரும்பாலும் உணவு எடுப்பது இல்லை ஆனால் தற்போது காலகட்டம் மாறுகிறது. நான் அதற்காக அதை ஆதரிக்கவில்லை. நாம் வெளியில் எங்கோ உணவு உண்பதற்கு பதில் சைவ உணவகங்களில் அருந்தி சாத்வீத குணத்தை வாழ்வில் மேம்பட பெற்றுக்கொள்ளுங்கள். இன்றளவும் பிழைத்து கிடக்கும் சைவ உணவுகள் உணவகங்கள் இல்லாதிருந்தால் நாளை அது நம் வீட்டிலாவது இருக்குமா என்பதை யோசியுங்கள். புலால் பெருமை அல்ல மரக்கறி சிறுமையும் அல்ல. உழவு ஓட்டும் வேளாளனுக்கு விளைந்த பொருளே அமுதம், வேட்டையால் பிற உயிரணத்தின் இரத்தம், சதை, மலஜல உறுப்புகள் நம் பாரம்பரியம் அல்ல!
சைவ உணவகங்களில் உணவுகளின் விலை அதிகம் தான் இருப்பினும், சின்ன ஹோட்டல்கள் உள்ளது. உணவு சாப்பிடுவது அவரவர் தனி விருப்பம் அதில் தலையிடுவது மிக தவறு. இது வேளாளர் கலாச்சாரத்தை காக்க நினைப்போருக்கு மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கலாச்சாரம் என்பது சோற்றிலும் உள்ளது.
(யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல)
நன்றி!
தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758







