கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3

*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:*

 

*குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும்.

கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர்.

நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் நம்மை *’கங்கை குலம்’* என்றே அழைக்கின்றன.

 

உழவுக்குடிகளான வேளாளர்களின் தோற்றம் உழவுக்கு முக்கியமான நீராதாரமாக விளங்கும் நதிகளோடு தொடர்புடையதால் கங்கை குலம் என அழைக்கப்பட்டது சாலப் பொருந்துவதாகும்.

 



அதனால் கங்கை எனப்படும் *நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை, கிணறுகள், ஆறுகள், ஓடைகளை அழித்தல் குலத்துக்கு கேடாகும்.*

கோத்திரம் – என்பது குடி, குடும்பம் என்று தமிழில் வழங்கப்படும். கொங்கு தமிழில் *”கூட்டம்”* என நாம் அழைக்கிறோம்.

 

ஆம், நம்முடைய கூட்ட முறைகள் தான் நமது கோத்திரங்களாகும்.

 

*ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணன்-தம்பி பங்காளி முறை.*

 



*பிற கூட்டத்தினர் மாமன் – மச்சினன் முறையினர் ஆவர்.*

 

இதில் சில கூட்டங்கள் மட்டும் விதிவிலக்காய் இருவரும் பங்காளிகளாக வழங்கப்படுகின்றனர். இவர்கள் முன்னர் ஒன்றாய் இருந்து பிரிந்தவர்கள் ஆவர்.

 

அவை:

1) *பொருள்தந்தான் கூட்டமும் – முழுக்காதன்* கூட்டமும் பங்காளிகள்.

2) *கன்னன் கூட்டமும் – கன்னந்தை கூட்டமும்* பங்காளிகள்.

3) *சாத்தந்தை கூட்டமும் – பூச்சந்தை* கூட்டமும் பங்காளிகள்.



பங்காளிகள் ஒரே குடும்பத்தினர் ஆவர். பங்காளிகளுக்குள் கட்டிக் கொடுத்தல் தோஷத்தை உண்டாக்கும். ஒரே கோத்திரம் என்பதால் சகோத்திரரை மணந்த தோஷம் வந்து சேரும். அதனால் இது அறவே கூடாது.

 

*”பாத்திரம் அறிந்து பிச்சையிடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு!”*

 

*”குலம் பார்த்து, கோத்திரம் பார்த்துக் கல்யாணம் கட்டு”*

– என்பவை இதனை உணர்த்தும் பழமொழிகள் ஆகும்.

 

உயர்குடிகளுக்கே உரிய குலம் கோத்திரம் பார்த்து திருமணம் செய்யும் இப்பண்பை தொல்காப்பியரும் தனது இலக்கண நூலில் குறித்துள்ளார்:

 

*”கற்பெனப் படுவது *கரணமொடு புணரக்*

*கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்*

*கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”*

– தொல்காப்பியம் (பொருள், கற்பியல்-1)

 

அதாவது கற்பு எனப்படுவது – கொள்ளும் உரிமை உடைய மரபைச் சேர்ந்த ஆண்மகனுக்கு கொடுக்கும் உரிமை உடைய மரபைச் சேர்ந்தவர்கள் பெண் கொடுக்க திருமணம் செய்து இல்லறம் நடத்துவதே ஆகும் என்கிறார்.

 

திருமணம் செய்ய குலம் ஒன்றாக இருக்க வேண்டும். கோத்திரம் வேறாக இருக்க வேண்டும் என்பது சாஸ்திர விதியாகும்.



 

இதன் முக்கியத்துவம் உணர்ந்தே நமது திருமண வைபவங்களில் *’குலங்கோதல்’* என்கிற வழக்கம் உண்டு. குலங்கோதல் என்றால் குலம் + கோத்திரம் ஓதல் என்று பொருளாகும்.

இன்ன கூட்டத்தை சேர்ந்த பெண்ணைக் கொண்டோம் என்று மாப்பிள்ளை வீட்டாரும், இன்ன கூட்டத்து ஆண் மகனுக்குக் கொடுத்தோம் என்று பெண் வீட்டாரும் உரைப்பர். இதுவே குலங்கோதல் சீர் முறை ஆகும்.

 

ஆகவே மங்கல காரியங்களிலும், முன்னோர்க்கு கிரியை செய்யும் காலத்திலும் ஐயர் குலம் கேட்டால் *”கங்கை குலம்”* என்று சொல்லுங்கள். கோத்திரம் கேட்டால் உங்கள் கூட்டப் பெயரைச் சொல்லுங்கள்.

 

சிவ கோத்திரம் என்று சொல்லாதீர்கள். சிவ கோத்திரம் என்பது சைவர்கள் அனைவருக்கும் பொதுவானது. கோத்திரம் இல்லாதவர்கள் தான் அப்படிச் சொல்வார்கள்.

கொங்க வேளாள கவுண்டர்களைப் பொறுத்த வரை…

*குலம் = கங்கை குலம்*

*கோத்திரம் = நமது கூட்டங்கள்* ஆகும்

நினைவில் கொள்ளுங்கள்!!!

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

website
mp3songs,videos: https://www.vocayya.com/

FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/

TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews

Email – tnvocnews@gmail.com

* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************

எழுத்தாளர் 

காளிமுத்து வேளாள கவுண்டர் 

மேலும் தொடர்புகளுக்கு 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *