அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிப்படையும் பூர்வக்குடி தமிழர்களான ஆதிசைவர்கள்

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களை காக்கவேண்டிய வேளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார் + செட்டியார்) எதிர்ப்பு* :

பிராமணர் என்ற வர்ணத்தில் பல சாதிகள் உண்டு, அதில் ஸ்மார்த்த பிராமணர்கள் மட்டும் தமிழக, இந்திய அரசியலில் ஆதிக்க மனப்பான்மையோடு ஈடுபட கூடியவர்கள்,


ஸ்மார்த்த பிராமணர்கள் ஐயர், சாஸ்த்திரி , தீட்ஷீதர் என பட்டம் போட கூடியவர்கள்,

இந்த ஸ்மார்த்த பிராமணர்கள் தங்களை பிரம்மாவின் அதாவது நான்முகனின் வழிவந்தவர்கள் என்கிறார்கள், இவர்களிலும் ஐந்து பிரிவுகள் உள்ளது, ஒவ்வொரு பிரிவும் மற்ற பிரிவினருடன் திருமணம் புரிய மாட்டார்கள்,

*இந்த ஸ்மார்த்த பிராமணர்கள் வேதம் படித்தாலும் சைவ, வைணவ ஆகமவிதிப்படி சைவ, வைணவ கோவில்களில் பூஜை செய்ய கூடாதவர்கள் ஆவர்*

பெருமாளின் வழிவந்தவர்கள் ஐயங்கார்கள், ஐயங்காரில் வடகலை ஐயங்கார், தென்கலை ஐயங்கார் என இரண்டு பிரிவு உள்ளது, *இவர்கள் பட்டாச்சாரியார் என பட்டம் போட கூடியவர்கள்*

*வைணவ ஆகமப்படி வைணவ கோவில்களில் பூஜை செய்யக்கூடியவர்கள் இந்த ஐயங்கார்கள், இவர்களின் மடங்கள் தான் பல்வேறு ஜீயர் மடங்கள் ஆகும்*

இதுபோக சிவனின் வழிவந்தவர்கள் தான் ஆதிசைவர்கள் ஆவர், ஆதிசைவர்களை ஆதிசைவச்சிவாச்சாரியார்கள் என்றும் அழைப்பார்கள், ஆதிசைவர்களின் பட்டங்கள் சிவம், குருக்கள், பட்டர் ஆகும்.

இந்த ஆதிசைவர்கள் தான் சைவ ஆகம விதிப்படி உள்ள சைவ ஆகம கோவில்களில் பூஜை செய்யக்கூடியவர்கள் ஆவர்,

இந்த ஆதிசைவர்கள் தான் வேளாளர்களின் குலக்குருக்கள் ஆவர், இவர்களை வரலாறு சித்திரமேழிபட்டர் என அழைக்கிறது, சித்திரமேழி என்பது என்ன என்று வேளாளர்களுக்கு நன்றாகவே தெரியும்,

 

இதுபோக சைவ வேளாளர் குருக்களும், சைவ வேளாள தேசிகர்களும் ஆங்காங்கே சைவ கோவில்களில் பூஜை செய்து வருகின்றனர், சைவ வேளாள ஓதுவார்கள் அனைத்து கோவில்களில் ஓதுவார் பணி செய்து வருகின்றனர்,

தற்பொழுது திமுக கொண்டு வந்துள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அனைத்து சாதியினரும் ஓதுவார் ஆகலாம் என்ற திட்டம் வேளாளர்களின் குலக்குருக்களான ஆதிசைவர்களையும், சைவ வேளாளர்களையும் மிகவும் பாதிக்க கூடியது ஆகும்,

 


பிராமண அரசியலில் ஈடுபடுவது சைவ, வைணவ ஆகம விதிப்படி கோவில்களில் பூஜை செய்ய கூடாது ஸ்மார்த்த பிராமணர்களான ஐயர்களும், சாஸ்த்திரிகளும் தான்,

எ.கா : சுப்பிரமணிய சுவாமி, குருமூர்த்தி, நிர்மலா சீத்தாராமன், S.V சேகர், லே.கணேஷன் போன்ற அரசியல்வாதிகள் கோவிலில் பூஜை செய்யக்கூடாத ஸ்மார்த்த பிராமணர் வகை சார்ந்தவர்கள், காஞ்சி சங்கராச்சாரியர் மடமும் ஸ்மார்த்த பிராமணர் மடமே,

*ஸ்மார்த்த பிராமணர்கள் சைவ, வைணவ ஆகமப்படி சைவ, வைணவ கோவில்களின் கருவறைக்குள் செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது*

 

திமுக, திக, கம்யூனிஸ்ட், தலீத்தியம், பெரியாரிஸ்ட் போன்றோர் இந்த மாதிரி அரசியலில் ஈடுபட்டுள்ள ஸ்மார்த்த பிராமணர்களை பழிவாங்குகிறேன் பேர்வழி என்று வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களையும், பட்டாச்சாரியார்களையும் (ஐயங்கார்), சைவ வேளாளர்களையும் (குருக்கள், தேசிகர்) கோவிலை விட்டு அகற்ற நினைக்கிறது,

ஆகவே திமுக வின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் நடவடிக்கைக்கு வேளாளர்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் பாதிக்கப்பட போவது அரசியலில் ஈடுபடாத கோவில் அர்ச்சக குடிகளான வேளாளர்களின் குருமார்களான ஆதிசைவர்களும், சைவ வேளாளர்களும் தான் என்பதை உணருங்கள்!!!

எழுத்தாளர் : சைவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *