இழிபிறப்பாளர் யார்? ஏன் அவர்கள் இழிபிறப்பு அடைந்தனர்? சங்க இலக்கியங்கள் கூறுவது என்ன?

புறநானூறு கூறும் இழிபிறப்பினோன் பற்றிய மெய்யும் – பொய்யும்:

இழிபிறப்பாளன் என்ற சொல்லே புறநானூற்றில் மூலச்சுவடியில் வரவில்லை என்று திரிப்புவாத தீவிரவாதி ஒருவர் தான் வெளியிட்ட நூலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு தகவல் வந்தது…

இழிந்தோர் பற்றி சுருக்கமாக எழுதும் முன்னர் இந்த பொய்யை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கப் பதிவு…

சில ஆண்டுகளுக்கு முன்பு புறநானூறு 170, 363 ஆகியவற்றில் வரும் இழிபிறப்பாளன் இழிபிறப்பினோன் ஆகிய சொற்கள் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் பதிப்பில் தான் வந்தது என்றும், மூலச்சுவடியில் அப்படி இல்லவே இல்லை என்றும், மாண்புமிகு உவேசா அவர்கள் வரலாற்றையே திரிந்தார் என்றும் தமிழ்தேசிய போர்வையில் ஒளிந்து பிழைக்கும் சில திரிப்புவாத தீவிரவாதிகள் கதறிக்கொண்டிருந்தனர்… கடல் நீர் கசக்கத்தானே செய்யும்! தீவிரவாதிகள் புழுகத்தானே செய்வர்! என்று அதை கண்டுகொள்ளவே இல்லை… பல்லாண்டுகள் கழித்து பின்னொரு நாளில் இதை ஆய்ந்தபோதுதான் தெரிந்தது இந்த கேள்வியை முதலில் எழுப்பியது யார் மீதும் எவ்விதமும் காழ்ப்புணர்வு இல்லாத நேர்மையான ஆய்வாளர் ஒருவர் என்று… அவர் இட்ட பதிவிலேயே அவர் மேலும் சான்றுகள் கொடுத்து இழிபிறப்பாளன் என்று வருவது பற்றி மேலும் விளக்கியிருந்தார்.‌‌..

1) புறநானூறு 170 இன் மூலச் சுவடியில், “யயென லி ழி பிற ப பா ள க ரு ங _” என்று உள்ளது… புள்ளி வைத்த எழுத்துக்கள் சுவடியில் வராது என்பதால் இதனை ஒல்”லெனல் இழிபிறப்பாளன் கருங்கை” என்று படிப்பதை தவிர வேறு வழியே இல்லை…

ஆக புறநானூறு 170 இன் மூலச்சுவடியில் இழிபிறப்பாளன் என்று வருவது உண்மையே…
_

அடுத்து புறநானூறு 363 க்கு இரண்டு சுவடி மூலங்கள் உண்டு.‌..

2) அதில் (புறம் 363) ஒன்றில், “பிறககு நொககானி ப பிற ப பி னோ னீ ய” என்று உள்ளது… இதனை “பிறக்கு நோக்கான் இப்பிறப்பினோன் ஈய” என்று தான் படிக்க வேண்டும்… ஆனால் உ.வே.ச பதிப்பில் இது “இழிப்பிறப்பினோன் ஈய” என்று வந்துள்ளது… இதற்கு காரணம் புறநானூறு 170 இல் இழிபிறப்பாளன் என்று வருவதால் இதில் உள்ள “ப்” பாடபேதமாக இருக்க வேண்டும் என்றும், “ழி” என்பதே சரி என்றும் கொண்டதாகவே தெரிகிறது…

3) புறநானூறு 363 ஐ கூறும் மற்றுமொரு மூலச்சுவடியை உவேசா பதித்துள்ளார்… மூலச் சுவடியில், மிகத் தெளிவாக “பி ற க கு நோ க கா னி ப பி ற ப பி னோ னீ ய” ஒன்று தான் வருகிறது… அதாவது, “பிறக்கு நோக்கான் இப்பிறப்பினோன் ஈய” என்று தான் படிக்க வேண்டும்… இதனை உவேச தனது குறிப்பில் இப்பிறப்பினோன் என்று இந்த பதிப்பில் நேரடியாகவே குறித்துள்ளார்… ஆனால் பதிப்பு வெளியானபோது அதில் இழிபிறப்பினோன் என்று தான் வெளிவந்தது… இந்த தவறுக்கும் உவேசா அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று இந்த கேள்வியை எழுப்பிய கட்டுரை ஆசிரியரே விளக்கம் அளித்திருந்தார்…

இங்கே உவேச செய்த ஒரே தவறு புறநானூறு 170 இல் இழிபிறப்பாளன் என்று வருவதற்கு உரை எழுதும்போது “இழிபிறப்பாளன் ஆகிய புலையன்” என்று எழுதிவிட்டார்… அது விவாதமாகும்போது, உவேச வரலாற்றில் உள்ளதைத்தானே எழுதியுள்ளார் என்று சிலரும், இல்லாததை ஏன் எழுதினார் என்று சிலரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன… ஆக இங்கே புலையன் என்பதை மட்டும் விட்டுவிடுவோம்… ஆனால் புறநானூறு 170 இல் வரும் இழிபிறப்பாளன் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை…

மூலச்சுவடிகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது…

ஆக புறநானூறு 170 இல் “இழிப்பிறப்பாளன்” என்று மூலச்சுவடியில் வருவதும் உண்மைதான் & புறநானூறு 363 இல் “இப்பிறப்பினோன்” என்று மூலச்சுவடிகளில் வருவதும் உண்மைதான்… ஆக இரண்டுமே உண்டு என்பதால் இழிபிறப்பாளன் என்ற வார்த்தையே புறநானூற்றில் இல்லை என்ற தீவிரவாதிகளின் வாதம் சுத்தப் பொய்யே என்று அந்த நேர்மையான ஆய்வாளர் கொடுத்த சுவடி மூலத்தின் மூலமாகவே தெரிய வருகிறது…

எல்லாவற்றுக்கும் மேல் புறநானூறு 363 இல் இப்பிறப்பினோன் என்று வருவது காலம் காலமாக சுவடிகளின் காலம் அழிய அழிய திரும்ப திரும்ப எழுதப்பட்டபோது வந்த பாடபோதமாகவே இருக்கும் என்பதுதான் சரியென கருத முடிகிறது… சுவடியின் ஆயுள் அதன் தரத்தைப் பொறுத்து 100-300 ஆண்டுகள்… ஆக இன்றுள்ள புறநானூற்றுச் சுவடி குறைந்தது 9 முறையாவது அழிந்து அழிந்து எழுதப்பட்டிருக்கும்… ஆக மூலமான இழிப்பிறப்பினோன் என்பதன் பிற்காலத்திய பாடபேதமாகவே இப்பிறப்பினோன் என்று இருப்பதை கொள்ள வேண்டும்… இழிபிறப்பாளன் என்ற சொல் புறநானூறு 170 மூலச்சுவடியில் வருவதால் இந்த பாடபேதம் என்ற வாதமே தர்க்கரீதியாக வெல்லும்… அதுவே நியாயமும் கூட…

கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் 

கொங்கு வேளாளர் 

ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர் 

மேலும் தொடர்புக்கு : 

ஒட்டப்பிடாரம்

சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *