சைவ சித்தாந்தத்தில் உள்ள தத்துவங்களில் ஒன்றான தன்மாத்திரைகளை பற்றிய பிற்கால உரையாசிரியர்களின் புரிதலில் உள்ள தவறும் திருத்தமும்:
பஞ்சீகரணம் என்ற தத்துவத்தை இதுவரை எந்தவொரு தற்கால ஆன்மீகவாதியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது… மாறாக நாத்திகர்கள் இதை எள்ளி நகையாடுவதை பார்த்தால் சிரிப்பும் வருகிறது…

ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் ஆகியன எப்படி வந்தது என்று கூறும் தத்துவமே Pancikaranam / பஞ்சீகரணம்… இதை சாங்கிய சமயம் கண்டுபிடித்தது… இதனை வேதாந்த சாஸ்திரங்களான உபநிஷத்துகளில் சாந்தோக்ய உபநிஷத், பிரம்ம சூத்திரம், பஞ்சதசீ ஆகியவையும், அத்வைத வேதாந்தம் வழிவந்த கேவலாத்வதைத்தை நிறுவிய ஆதிசங்கரரும் தனது சமய தத்துவத்தை விளக்க இயற்றிய தத்வ போதா நூலிலும், சைவ சித்தாந்தத்தின் சாஸ்திர நூல்களான சிவஞான சித்தியார், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் ஆகிய நூல்களிலும், புராணங்களில் முக்கியமானதான தேவி பாகவதம் ஆகியவற்றிலும் கூட இந்த பஞ்சீகரணம் பஞ்ச பூதங்களின் தோற்றத்தை விளக்கியுள்ளது… ஆனால் இது எங்குள்ள பஞ்சபூதம் என்று சுத்தமாக விளக்காத காரணத்தால் இன்று இது யாருக்கும் விளங்காத புதிராகவே ஆகி, நவீன விஞ்ஞானத்தை ஏற்றவர்களின் கேலிக்கைக்கு உரிய பொருளாகவும் ஆகி நிற்கிறது… சாங்கிய, வேதாந்த, சித்தாந்த மெய்யியல் தத்துவங்களின் அடிப்படையான அடிநாதமே இப்படி அடிபடும்போது அது அவர்கள் சொன்ன இறை தத்துவம், முக்தி நிலைகள், அதை அடைந்தோர் என அனைத்துமே பொய்யோ என்று மயங்க வழிவகுத்துவிடும்… வழிவகுத்ததும் விட்டது… ஆனால் அதனை கடந்து செல்ல எனக்கு மனமில்லை… அதன் விளைவே இப்பதிவு…
வேதாந்த சித்தாந்த சாங்கிய சாஸ்திரங்களில் கூறப்பட்ட பஞ்ச பூதங்கள் என்ற ஸ்தூல பூதங்களுக்கு மூலமாய் உள்ள தன்மாத்திரைகள் என்ற சூக்ஷும பூதங்கள் என்பன தோன்றுவதை எப்படி என அவை விளக்குவதை நீங்கள் கேட்கும்போது ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றும்… விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகவே இல்லையே என்றும் தோன்றும்… அப்படி என்னதான் சொல்கிறது என்று பார்ப்போம்… பிறகு அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை வேறு கோணத்தில் பாரத்து தெளிவோம்…
கீழே உள்ளதை படித்து கொஞ்ச நேரம் சிரிங்க…
இந்த ஸ்தூல (physical) வடிவில் உள்ள பஞ்ச பூதங்கள் யாவும் அது தோன்றுவதற்கு முன்னர் சூக்ஷும (astral) பூதங்களாக இருந்தன… இந்த சூக்ஷும பஞ்ச பூதங்களுக்கு தன்மாத்திரைகள் என்று பெயர்… அதாவது அது அதன் அளவில் நிற்கும் என்று பொருள்… இந்த தன்மாத்திரைகள் என்பன சப்தம் (ஓசை), ஸ்பரிசம் (ஊறு), ரூபம் (உருவம்), ரசம் (சுவை), நாற்றம் (கந்தம்) … இந்த ஐந்திலும் சூக்ஷும வடிவாய் உள்ள ஓசைக்கு இனிய ஓசை, இன்னா ஓசை, அதிக ஓசை, குறைந்த ஓசை போன்ற தன்மைகள் இல்லாமல் வெறும் கேளாத ஓசையாகவே நிற்கும்… அதே போல சுவை என்பதிலும் அறுசுவை இருக்காது, ஆனால் சுவை என்ற சூக்ஷும பொருளாக மட்டும் நிற்கும்… இதுபோலவே தான் பிறவும்… இதுவும் போக இந்த ஐந்து சூக்ஷும பூதங்களின் கலவையில் தான் ஸ்தூல பூதம் பிறக்கிறது… அதுவும், எந்த சூக்ஷும பூதத்தின் அளவு அந்த கலவையில் அதிகமாக இருக்கிறதோ அந்த பூதமாகவே ஸ்தூலத்திலும் அது ஆகி நிற்கும்…

என்ன சிரிப்பு வருகிறதா மேலே உள்ளதை படித்து? இன்னமும் முடியல… மேலும் படிங்க…
இப்படியாக,
சூக்ஷும சப்தத்தில் இருந்து ஸ்தூல ஆகாயம் வந்தது,
சூக்ஷும ஸ்பரிசத்தில் இருந்து ஸ்தூல காற்று வந்தது,
சூக்ஷும ரூபத்தில் இருந்து ஸ்தூல நெருப்பு வந்தது,
சூக்ஷும ரசத்தில் இருந்து நீர் வந்தது,
சூக்ஷும நாற்றத்தில் இருந்து ஸ்தூல மண் வந்தது…
இப்படியாகத்தான் எல்லா சாஸ்திரங்களிலும் உள்ளது…
இதை படித்ததும் எனக்குள் எழுந்த கேள்விகள் கீழே:
1) சூக்ஷும ஸ்பரிசம் என்ற தொடு-தொடப்படும் உணர்வில் இருந்து காற்று உருவாகாது? அப்படியே ஆனாலும் ஏன் காற்று மட்டும்? நீர் நெருப்பு மண் தீண்டினாலும் ஸ்பரிசம் உணருமே…
2) சூக்ஷும ஓசை என்பதில் இருந்து ஆகாயம் உண்டாகாது… ஏனெனில் vaccum இல் ஓசையே பயணிக்காது, ஒளி மட்டுமே பயணிக்கும்… ஏன் நீருக்குள் மூழ்கும்போது காதில் ஓசை விழாதா? சுவற்றுக்கு (மண்) இந்தப்பக்கம் காதை வைத்தால் அந்தப்பக்கம் தட்டுவது கேட்காதா? அதெப்படி சூக்ஷும ஓசை ஆகாயமாய் ஆகும்? ஆகா…
3) சூக்ஷும சுவையில் இருந்து நீர் உருவாகாது… நீருக்கு சுவையே இல்லையே! நாக்கிற்குள் இருக்கும் taste buds இற்கு எச்சில் என்ற நீரிலோ அல்லது வேறு திரவியத்திலோ நுண்துகள்களான ருசியை கொடுக்கும் minute solid particles கலந்து taste buds இல் சேரும் போது தான் சுவை வரும்…
4) சூக்ஷும கந்தத்தில் இருந்து மண் வராது… அப்படியே வந்தாலும் தீயிற் சுட்டு ஆற்றிய மண்ணில் வாசனை எதாவது வருமா? வராதே!
5) சூக்ஷும ரூபத்தில் இருந்து நெருப்பு வராது… காட்டுவாசிக்கு கூட கல்லும் கல்லும் மோதினால் கூட நெருப்பு வரும் என தெரியும்… இது பிற நான்கு பூதங்களின் அழுத்த உராய்வால், திணிவால் உண்டாவது…
இப்படியிருக்க சூக்ஷும ரூபத்தில் இருந்து தான் நெருப்பு வரும் என ஏன் சொன்னார்கள்? காட்டுவாசிக்கு கூட புரிந்த ஒன்று பல ஆன்மீக சமயங்களை தோற்றுவித்த, மெய்ப்பொருள் உணர்ந்த மேலான intellectuals க்கு இது தெரியாதா என்ன?
ஏன் அப்படி சொன்னார்கள்? என்று நான் மூல சாஸ்திரங்களில் இருந்தே அதன் வாக்கியங்களை படித்தேன்…
பிறகு தான் உண்மை விளங்கியது… அதை பார்க்கும் முன்னர் வேறு சில விஷயங்களை உணர வேண்டியது அவசியம்…
இப்பொழுது இங்கே கூறியவற்றையும் மூல சாஸ்திரங்களில் கூறப்பட்டத்தையும் உற்று நோக்குவோம்… மூல சாஸ்திரங்களில் எதிலுமே தன்மாத்திரையில் இருந்து தான் இந்த ஸ்தூல பிரபஞ்சம் உருவானதாக வரவே இல்லை… மாறாக தன்மாத்திரைகள் என்பன ஆன்மா உறையும் உடலில் நடப்பதே என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது… ஆக இந்த உடலில் தோன்றும் பஞ்ச பூதங்களைத்தான் தன்மாத்திரைகள் இந்த வெளிப்புற ஸ்தூல பிரபஞ்சத்தில் இருந்து, இறை அருளால் எடுத்து உடலில் தோற்றுவிக்கிறதே அன்றி வேறில்லை…
முதலில் பஞ்சதசீ இல் இருந்தே வருவோம்…
1) பஞ்சதசீ 1.26
Tad bhogāya puna bhogya bhogā yatana janmane,
pañcīkaroti bhaga vān prayekaṁ viyadā dikam
தமிழில்: பஞ்ச பூதங்களுக்கு ஓசை, ஒளி ஆகிய ஐந்து தன்மைகள் உண்டு… இந்த சக்திகள் தான் பஞ்ச பூதங்கள் தோன்ற காரணம்… பகவான் ஆனவர் பஞ்சீகரணம் என்ற முறையில் இந்த பஞ்ச பூதங்களை படைக்கிறார்…

இங்கே மூலத்தில் இந்த பஞ்ச பூதங்கள் புற உலகில் படைக்கப்பட்டதா இல்லை உடலில் படைக்கப்பட்டதா என்று ஆசிரியர் வித்யாரண்யர் விளக்கவில்லை… இந்த நூலின் காலம் கிபி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதி… இந்த நூலுக்கு உரை எழுதிய பிற்காலத்தவர்கள் இந்த 1.26 சூத்திரம் சொல்வது இந்த பிரபஞ்சத்தில் உள்ள மொத்த பஞ்ச பூதங்களையும் என உரை எழுதிவிட்டனர்… இது வேதாந்த விளக்க நூல் என்பதால் இந்த உரைகளையே வேதாந்த வாக்காக எண்ணி & இதன் தாக்கத்தாலேயே தான் 600 ஆண்டுகளாக பஞ்ச பூதங்கள் படைக்கப்பட்டது தன்மாத்திரைகளால் என்றும் அந்த தன்மாத்திரைகளுக்கு சூக்ஷும பூதங்கள் என்ற பெயரும் கொடுத்து நடந்த வேடிக்கையான கதை… ஆனால் இந்த நூலின் மூலத்திலேயே இந்த பஞ்ச பூதங்கள் அகத்தில் (உடலில்) படைக்கப்பட்டதா இல்லை புற உலகில் படைக்கப்பட்டதா என்று கூறவேயில்லை என்பது இன்னமும் வேடிக்கையானது…
சரி… இந்த நூலுக்கு முந்தைய நூல்களில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்…
_
2) பிரம்ம சூத்திரம் 2.4.21-22:
मांसादि भौमं यथाशब्दमितरयोश् च ॥ २१ ॥
māṃsādi bhaumaṃ yathāśabdamitarayoś ca || 21 ||
,
वैशेष्यात्तु तद्वादस्तद्वादः ॥ २२ ॥
vaiśeṣyāttu tadvādastadvādaḥ || 22 ||
விளக்கம்: சதை பூமியில் இருந்து பெறப்படுகிறது… அதே போல ஏனைய பூதங்களில் இருந்தும் (உடலில் உள்ள) பிறவை… உடலுக்கு வந்த பிறகு இதுதான் மண், நீர், நெருப்பு என அறியப்படாது… ஆனால் உடலில் ஒரு பொருளில் எதன் தன்மை அதிகமாக இருக்கிறதோ அதன் பெயரில் அழைக்கப்படும்… (ரத்தம் ஒரு நீர் என்பதைப்போல)
ஆக இதிலும் பஞ்ச பூதங்களை பற்றியோ தன்மாத்திரைகள் பற்றியோ வரவேயில்லை… ஆய்வாளர்கள் இதனை தவறாக மேற்கோள் காட்டியுள்ளனர்…
_
பிரம்ம சூத்திரம் 2.3.1-7:
பிரம்ம சூத்திரம் 2.3.1-7 என ஏழு சூத்திரங்கள் ஆகாசம் என்ற பூதம் யாராலும் படைக்கப்பட்டது அல்ல என்றும், அது நித்தியப் பொருள் என்றும் அனாதி என்றும் வேதத்தை சான்று காட்டுகிறது… இதற்கு உரை (பிரம்ம சூத்திர பாஷ்யம்) எழுதிய ஆதிசங்கரர் திணறிப்போய், தனது வார்த்தை ஜாலங்கள் சிலவற்றை காட்டி, பிறகு ஆகாசம் பிரம்மத்தால் படைக்கப்பட்டதே என பிரம்ம சூத்திரத்தையே மறுத்து உரை எழுதியுள்ளார்… இதன் பிறகு தொடரும் பிரம்ம சூத்திர மூல செய்யுள்கள் ஆகாசத்தில் இருந்து மீத பூதங்கள் தோன்றியதாக உரைக்கின்றன…
ஆக, இங்குமே எதிலுமே தன்மாத்திரைகளில் இருந்து உடலுக்கு புறத்தே உள்ள இந்த உலகில் – பஞ்பஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்கள் தோன்றவில்லை என்று தான் நேரடியாக வருகிறது…
_
3) சாந்தோக்ய உபநிஷத் 6.3.1-3
तेषां खल्वेषां भूतानां त्रीण्येव बीजानि भवन्त्याण्डजं जीवजमुद्भिज्जमिति ॥ ६.३.१ ॥
teṣāṃ khalveṣāṃ bhūtānāṃ trīṇyeva bījāni bhavantyāṇḍajaṃ jīvajamudbhijjamiti || 6.3.1 ||
,
सेयं देवतैक्षत हन्ताहमिमास्तिस्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणीति ॥ ६.३.२ ॥
seyaṃ devataikṣata hantāhamimāstisro devatā anena jīvenātmanānupraviśya nāmarūpe vyākaravāṇīti || 6.3.2 ||
,
तासां त्रिवृतं त्रिवृतमेकैकां करवाणीति सेयं देवतेमास्तिस्रो देवता अनेनैव जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरोत् ॥ ६.३.३ ॥
tāsāṃ trivṛtaṃ trivṛtamekaikāṃ karavāṇīti seyaṃ devatemāstisro devatā anenaiva jīvenātmanānupraviśya nāmarūpe vyākarot || 6.3.3 ||
தமிழில்: உயிரினங்கள் மூன்று வகையாக பிறக்கின்றன, அவை முட்டையிலிருந்து, பெற்றோரிடமிருந்து & தாவரங்களில் இருந்து… அந்த கடவுள் முடிவு செய்தான், நெருப்பு நீர் மண் என்ற இந்த மூன்று தேவதைகளுக்குள்ளே புகுந்து ஜீவாத்மனாக (சகல உயிர்கள்) வடிவெடுத்து பற்பல பெயர்களால் அழைக்கப்படலாம் என… அந்த சத்தியப்பொருள் ஆனவர் இந்த மூன்று பூதங்களில் மூன்று கூறுகளாக பிரிந்து பல உயிர்களாக பிறக்கலாம் என பிறந்தார்…
ஆக இங்கே மிகத் தெளிவாக இந்த நீர் நிலம் நெருப்பு ஆகியவை உடலில் ஆன்மாவின் போர்வையாக அமைந்து பிறப்பதைத்தான் கூறுகிறது… கடவுளே பற்பல உயிர்களாக பிறந்தார் என வேதாந்த அத்வைதம் கூறினாலும், பிற அத்வைத பிரிவுகள் அதனை ஏற்பதில்லை… அதனை இப்போது விவாதிக்க வேண்டாம்… பஞ்ச பூதங்கள் உயிர்களாக மாறுவது உடலில் தான் எனவும், உடலில் நடக்கும் விஷயத்தை மட்டுமே தான் இது பேசுகிறது எனவும் தெளிவு…
_
×÷×÷×
தன்மாத்திரைகள் என்பது சூக்ஷும (astral) உடலில் உள்ள அகங்காரத்தின் தாமஸ குண வெளிப்பாடாக தோன்றுவது… உடலுக்கு வெளியே இருக்கும் ஜட பொருட்களான இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்தவன அல்ல இந்த தன்மாத்திரைகள்… வெளிப்புற சட ஸ்தூல பிரபஞ்சத்தில் தோன்றுவதும் அல்ல இந்த தன்மாத்திரைகள்… அகங்காரத்தால் தோன்றும் தன்மாத்திரைகளில் விளைவாக ஸ்தூல பிரபஞ்சத்தில் இருந்து கூறுகளை எடுக்கிறது இவை ஞானேந்திரியங்கள் அறிய… ஞானேந்திரியம் என்பது கண்ணில் உள்ள பார்க்கும் ஆற்றல், காதில் உள்ள கேட்கும் ஆற்றல், நாவில் உள்ள சுவைக்கும் ஆற்றல், ஸ்பரிசத்தில் உள்ள தொடும்-தொடுவதால் உணரும் ஆற்றல், மூக்கில் உள்ள நுகரும் ஆற்றல்… இந்த ஐந்து ஞானேந்திரியங்களுக்கு ஆன்மாவை சூழ்ந்த அகங்காரத்தின் தாமஸ குணமானது மோகம் (ஆசை) கொண்டு இந்த ஸ்தூல உடல் சுகம் அனுபவிக்க இந்த தன்மாத்திரைகளின் மூலமாக சுகத்தை கொடுக்க நினைக்கிறது… இங்கே ஏன் அகங்காரத்தின் தாமஸ குணத்தில் இருந்து இவை வந்தது என்று சொல்கிறார்கள் என்றால் மோகம் கொள்ள வைப்பது தாமஸ குணமே… அதை செயல்படுத்த வைப்பது அகங்காரம் என்ற “நான்” என்ற உணர்வுதான் என்பதால்…
மேலே பார்த்தோம் அல்லவா! சுவை என்னவென்று தெரியாது ஆனால் சுவைக்க வேண்டும் என்ற இச்சை, ஊறு உணர்வு எதுவென தெரியாது ஆனால் தொட்டு-தொடப்பட்டு உணர்ந்து பார்க்க ஆசை, மணம் என்னவென்று தெரியாது ஆனால் முகர்ந்து பார்க்க ஆசை, என இப்படியாக ஐந்து விதமான இந்த வந்த அனுமான ஆசைகள் அகங்காரத்தின் தாமஸ ரூபமாக வெளிப்படுவதே தன்மாத்திரைகள்… அதனால்தான் அவற்றுக்கு சுவை மணம் காட்சி தொடுவுணர்வு இன்னிசை இவை தெரியாது என்பதால் இவை இல்லை என மேலே இலக்கணம் வகுத்தார்கள்…
மேலும், இப்படியாக
1) ஸ்பரிசத்தில் இருந்து காற்று வந்த விதம்: கருப்பையில் இருக்கும்போதும் placenta மூலமாக குழந்தை சுவாசிக்கின்றது… இதற்கு உடலுக்குள் புகும் முதல் உணர்வே காற்று தான்… இதை விட மேலும் ஒரு தகவலும் உண்டு… பரிணாம வளர்ச்சியில் முதல் முதலாக உருவான bacteria aerobic respiration செய்கிறது… 2017 ல் bacteria க்களுக்கு தொடுவுணர்வு உண்டென்பது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்… முதன்முதலாக இவைகள் தொட்டது காற்றையே ஆகும்… மேலும் இவைகளுக்கு decision making திறனும், survival strategies உம் வைத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்… எனவே இவற்றுக்கு மனம் இல்லை என்றாலும் “நான்” என்ற உணர்வு (அகங்காரம்) இருப்பதும் கண்கூடு… மேலும் பாக்ட்டீரியாக்களும் சரி, கடற்பாசிகளும் சரி, நிலத்தில் வாழும் சிலவகை பூச்சிகளும் சரி ஒரு குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சியை அடையும் வரை ஸ்பரிசம் என்ற தோலில் இருந்து தான் சுவாசித்து வந்தன… ஆக தோல் உண்டானதற்கு சுவாசிப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால் சுவாசத்தை (காற்றை) கிரகிக்கவே தோல் உண்டானது என்ற கருத்தில் ஸ்பரிசத்தில் இருந்து காற்று உண்டானது (உள்ளே ஈர்க்கப்பட்டு உடலில் உண்டானது) என்றனர்… அவ்வளவே…
2) ரூபத்தில் இருந்து நெருப்பு வந்த விதம்: ஒரு உருவம் (ரூபம்) நமக்கு புலனாகிறது என்றால் அதற்கு கண்ணே மூல காரணம்… அதில் நாம் கிரகிப்பது ஒளியைத் தானே! இந்த உருவத்தை நம் கண்கள் கிரகித்து, கண்களுக்குள்ளே தலைகீழாக அதே உருவத்தை replica செய்து, signal ஆக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது! இந்த உருவத்திற்கு மூல காரணமான ஒளியை, அந்த ஒளிக்கும் மூல காரணம் நெருப்பு தானே… அதனால் ரூபத்தில் இருந்து நெருப்பு வந்தது என்றார்கள்… அதாவது நமக்குள்ளே புகும் ஒளி என்பது நாம் உருவத்தை காண வேண்டும் என்ற அகங்காரத்தின் தாமஸ இச்சையால் வந்த வினை என்று புரிந்து இப்படி சொன்னார்கள்…
3) கந்தத்தில் இருந்து மண் வந்த விதம்: நாம் நுகரும் எந்த வாசனையும் எதாவது ஒரு வகையான நுண்துகள்களால் ஆன திடப் பொருள் தானே! வாசனை தரும் எதுவும் அந்த துகள்கள் தீரும் வரை தான் தரும்… பிறகு தராது… நீரில் மணம் இல்லை… ஆனால் எதாவது திரவியம் மணக்கிறது என்றால் அதன் மூலம் இந்த மண்தானே? பூ மணக்கிறது என்றால் அது பூமியில் இருந்து பெறப்பட்ட சத்தில் உண்டு பண்ணிய மாற்றம் தானே? நீர்ச்சத்தோ அல்லது சூரிய ஒளியில் வரும் சத்தோ அந்த மணக்கும் துகளாக ஆவது இல்லை… மண்ணில் இருந்து எடுத்த சத்தே ஆகிறது… அதனால் வாசனை என்ற கந்தம் மண்ணில் இருந்து வந்தது என்றார்கள்…
4) ரசத்தில் இருந்து நீர் வந்த விதம்: ரசம் என்ற சுவையை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு taste buds தான் தேவை… ஆனால் அது solid என்ற திடப் பொருள்… சர்க்கரை/உப்பு என்ற இன்னொரு திடப் பொருளிலும் சுவை உள்ளது ஆனால் அது taste bud க்குள் போக வேண்டும் என்றால் எச்சில் என்ற நீரில் கரைந்து அதன் மூலமாகத்தான் செல்ல வேண்டும்… நீருக்கு சுவை இல்லை என்று தெரிந்தும் நீரில் இருந்து தான் சுவை வருகிறது என்று ஞானியர் சொன்னதன் காரணம் இதுதான்... இப்படியாக சுவையான பொருட்களை கரைந்த நீரை நம் உடல் கிரகித்து அதனை சுவைக்கும் ஆற்றல் வேண்டும் என மோகம் கொண்ட நமது அகங்காரத்தின் தாமஸ குணத்தின் வெளிப்பாடாகவே தான் இந்த சுவையான பொருட்கள் கலந்த நீரை நாம் கிரகித்து சுவை காணும் உறுப்பு உருவாக காரணமாக அமைந்தது…
5) சப்தத்தில் இருந்து ஆகாயம் வந்த விதம்: முதல் முதலாக நீருக்குள் தோன்றிய கடற்பாசிகளுக்கும் சரி, நிலத்தில் உள்ள ஏகதேச பூச்சிகளுக்கும் சரி கேட்கும் திறமை இல்லை, காதுகள் இல்லை… பரிணாம வளர்ச்சியில் தான் அது சாத்தியமானது… நீரிலும் காற்றிலும் ஓசை கேட்கும்… திடமான பொருட்களிலும் ஓசை பயணிக்கும்… மூன்றையும் சேர்த்து சொல்ல எண்ணாமல் இந்த மூன்று பூதங்களையும் தாங்கி நிற்கும் ஆகாயத்தை கூறினார்கள்… அவ்வளவே…
இப்படி அணுகினால் எல்லாம் கச்சிதமாய் பொருந்தும்…
சரி… இந்த அகங்காரத்தின் தாமஸ குணத்தால் வந்த மோகத்திற்கு தன்மாத்திரைகள் என பெயர் கொடுத்தார்கள் சரி… அதற்கு சூக்ஷும பூதம் என்ற பெயரும் பிற்கால ஆசிரியர்கள் கொடுத்தால் வந்த குழப்பமே பஞ்ச பூதங்களுக்கு மூலகாரணமே அதற்கும் முந்தைய அருவ வடிவாய் உள்ள இன்னொரு மூலமே என்று தவறாக புரிந்து கொள்ளும் அளவிற்கு சென்றது…
இனி இந்த தன்மாத்திரைகள் ஐந்தும் கலந்து அதில் பெரும்பாண்மையாக உள்ள தன்மாத்திரையே அந்த ஸ்தூல பூதம் ஆகும் என்பது என்னவென்றால், ஐம்புல உணர்வு பற்றி அறியாத உயிருக்கு அதனை அனுமானமாகவே கருதி எதாவது ஒரு வகையிலாவது உணர்வை அறிய வேண்டும் (ஐந்தும் கலந்தது) என்ற ஆசையில் அகங்காரம் தூண்டிவிட்டு அதனை அறியும் முயற்ச்சியில் எது அத்யாவசிய தேவையோ அந்த உணர்வு தன்மாத்திரை முதன்மையாகி அதற்கு ஏற்றார் போல பரிணாமம் நடந்து அந்த முதன்மை தன்மாத்திரை என்ற ஆசையை நிறைவேற்ற இறைவன் அருளால் அது பரிணாமத்தால் கைகூடும் என்பதே…
×÷×÷×
சரி… பரிணாம வளர்ச்சி / evolution எப்படி நடந்து இன்று கோடிக்கணக்கான வெவ்வேறு உயிரினங்களாக பிரிந்து இருக்கின்றன என்பதற்கு நவீன விஞ்ஞானம் divergent evolution என்றும் அதற்கு காரணம் natural selection என்றும் ஒரு கருத்தை முன்வைக்கிறது… இந்த natural selection நடக்க காரணமாக அமைந்தது Mendelian inheritance, Adaptive radiation, Psychological adaptation & Sympatric speciation என்றும் அதற்கும் காரணமாக அமைந்தது genetic mutation, genetic drift, gene flow என பல்வேறு காரணங்களை விஞ்ஞானம் கூறுகிறது… இந்த mutation, flow & drift ஆகியவற்றுக்கு காரணம் “rarest probability” என்று விஞ்ஞானம் சொல்கிறது… ஆனால் இங்கே ஆசையினால் / முயற்ச்சியினால் (தன்மாத்திரைகள்) நடக்கும் பரிணாம வளர்ச்சியினை விளக்க inheritance of acquired characteristics என்ற கோட்பாட்டை Lamarck என்பவரே முதலில் முன்வைத்தார்… நவீன விஞ்ஞானம் இதனை ஆரம்ப காலத்தில் ஏற்று, பின்னர் மறுத்த போதிலும் தற்போது நுண்ணுயிர்களில் இந்த கோட்பாடு வேலை செய்கிறது என்று நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது… Bruce Lipton என்ற விஞ்ஞானி எண்ணங்களாலும், நம்பிக்கைகளாலும் மரபணு மாற்றமடைகிறது என்பதை நிறுவியுள்ளார்… Genetic mutations என்பது அகங்காரமானது தேவை என்று நினைக்கிறபொழுது தான் நடக்கிறது என்பதற்கு சமீபத்தில் ஆதாரங்கள் குவிந்த வண்ணம் உள்ளன… இந்த mutations நடக்க காரணமாக புறவுலகுச் சூழ்நிலையின் காரணமாக அந்த தளத்தில் நடக்கும் adaptive radiation & Psychological adaptation உம் அதன் காரணமாக நடக்கும் natural selection ஆகியவற்றின் காரணமாக வெவ்வேறு கிளை species கள் உதித்தாலும், இந்த adaptiveness க்கு ஏற்ற விதத்தில் genetic mutations முதலில் நடப்பது அகங்காரமானது “இது தேவை” என்று நினைத்ததன் வெளிப்பாடே என்று நிறுவ சில உதாரணங்கள்:
1) பெரும்பாலான திபெத்தியர்களுக்கு அவர்கள் வாழும் உயர்ந்த நிலப்பரப்பில் oxygen 40% குறைந்த அளவிலே இருந்த போதும் அவர்கள் எந்தவித உடற்குறைபாடுமின்றி போதுமான அளவு oxygen சுவாசிக்க காரணமாக உள்ளது EPAS1 என்ற gene mutation தான் எனவும், இது ஏகதேச (72%) திபெத்தியர்களுக்கு உண்டென்றும் உறுதிப்படுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்… மேலும் EGLN1 என்ற ஜீனும் திபெத்தியர்களுக்கு mutation மூலம் உருவானதாகவும், அதுவும் அவர்கள் உயர் வாழ்விடங்களில் வாழ வகை செய்வதாக கண்டுபிடித்துள்ளனர்… திபெத்தியர்களுக்கு சீனர்களை (Han Chinese) விட 34 வகையான அதிக genetic mutations நடந்திருப்பதும், அதனால்தான் அவர்கள் உயர் நிலப்பரப்பில் வாழ ஏதுவாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்… திபெத்தியர்களும் ஹான் ச்சைனீஸ்களும் 2750 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இரு வேறு குழுக்களாக பிரிந்ததாகவும் கண்டுபிடித்துள்ளனர்… ஆனால் இந்த EPAS1 ஜீன் Han Chinese களில் 2.2% தான் உள்ளது… திபெத்தியர்களில் 72% பேருக்கு உள்ளது… ஆக கடைசி 2750 ஆண்டுகளில் தான் இவர்கள் இந்த mutation ஐ அடைந்துள்ளனர் என்பது தெளிவு… அது போக Himalayan wolf என்ற இமாலய ஓநாய் வகைக்கும், Tibetan mastiff என்ற வகை திபெத்திய நாய்களுக்கும் இந்த EPAS1 ஜீன் mutation இருக்கிறதெனவும், அதனால்தான் இவை உயர் வாழ்விடங்களில் வாழ முடிகிறது எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்… ஆனால் இந்த ஜீன் திபெத்தியர்களுக்கு முன்னர் எப்படி வந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் இந்த ஆதாரங்கள் கிடைக்கும் முன்னர் கருதியது என்னவென்றால், Denisovan என்ற மனிதர்கள் அல்லாத மனிதர்களை போன்ற பழைய கிளை என்று பல லட்சம் ஆண்டுகளுகளாக திபெத் சைபீரியா போன்ற பகுதிகளில் வாழ்ந்துள்ளன என்பதாலும் அவர்களுக்கு அந்த gene mutation இருந்ததாலும் அவர்கள் மூலமாக interbreeding மூலியமாக திபெத்தியர்களுக்கு இது வந்ததாகவும் நம்பப்பட்டது… ஆனால் இந்த denisovan கிளை ஜீன் ஆனது மெலனேசியர்கள், ஆஸ்திரேலிய பழங்குடிகள், பிலிப்பைன்ஸ் நாட்டினர் என பலருக்குள்ளும் குறிப்பிட்ட அளவு இருப்பதாகவும், ஆனால் அவர்களுக்கு EPAS1 gene mutation இல்லை என்ற கண்டுபிடித்த பின்னரும், சீனர்களும் திபெத்தியரும் 2750 ஆண்டுகளுக்கு முன்னர் தான் பிரிந்தனர் என்ற கண்டுபிடிப்பும் வந்த பிறகு இந்த கருத்து மாறியது… கடைசி 2500 ஆண்டுகளுக்குள் தான் இந்த EPAS1 gene mutation வந்திருக்கும் என நிறுவப்பட்டது… மேலும் இமாலய ஓநாய்களுக்கும் , திபெத்திய மேஸ்டிப் நாய்க்கும் இந்த EPAS1 gene mutation வந்தது முன்னர் வேறு ஏதோ திபெத்திய நரியிடம் இருந்துதான் என்ற ஆதாரமில்லாத கருத்தும் புறந்தள்ளப்பட்டுக் கொண்டுள்ளது ஆய்வுலகத்தில்…

2) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ப்ரூனை, இந்தோனேசியா, மலேஷியா ஆகிய நாடுகளில் உள்ள Bajau Laut என்ற மக்கள் கடலுக்கு அடியில் 260 ஆழத்திற்கு மூழ்கி சென்று மீன் வேட்டை செய்கிறார்கள்… இவர்கள் 12 நிமிஷங்கள் வரை மூச்சை பிடிக்கிறார்கள் நீருக்கு அடியில்… இது எப்படி அவர்களுக்கு சாத்தியம் ஆகிறது என்று ஆராய்களையில் இவர்களுக்கு PDE10A என்ற gene இல் நடந்த mutation உம், அதன் காரணமான மண்ணீரல் (spleen) அளவு சராசரி மனிதர்களை விட 50% கூடுதல் அளவு பெரிதாகவும் ஆகி, அதன் மூலம் இரத்தத்தில் 10% கூடுதல் அளவு oxygen ஐ தேக்கும் திறன் வந்துள்ளதாகவும், மேலும் BDKRB2 என்ற diving reflex gene (நீரில் மூழ்கும் போது உடலில் உள்ள சக்தியை விரையமாக்காமல் பாதுகாக்கும் gene) மிக வலுவாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்… இந்த கடலில் மீன் பிடித்து வாழும் Bajau மக்களும், கடலுக்கு செல்லாத Saluan மக்களும் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இரு வேறு குழுக்களாக பிரிந்ததாக மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன… இந்த Saluan மக்களிடம் இந்த PDE10A gene இன் அந்த (Bajau க்களிடமுள்ள) variant mutation இல்லை, மண்ணீரல் அளவும் சராசரி மனிதர்களை போலத்தான் இருக்கிறது… ஆக 1000 ஆண்டுகளுக்குள்ளாக மட்டுமே Bajau மக்கள் இந்த mutation களை அடைந்துள்ளனர் என்று நிறுவப்பட்டுள்ளது… Bajau மக்களுக்கு நடந்ததை Physiological and Genetic Adaptations என்றும், அதன் பிறகு நடந்த Natural selection னாலும் தான் இது சாத்தியப்பட்டது என்று விஞ்ஞானிகள் சப்பைக்கட்டு கட்டினாலும் உலகில் இவர்களுக்கு மட்டும் இந்த mutation நடக்க காரணம் என்ன? பதிவின் இறுதியில் இதை ஆழமாக விவாதிப்போம்…
3) அர்ஜென்டினா நாட்டில் உள்ள San Antonio de los Cobres என்ற ஒரு சிறு நகரத்தில் உள்ள 70% மக்களுக்கு (அதன் பூர்வீக குடிகள்) Arsenic poison என்ற சுவையில்லாத மணமில்லாத நிறமில்லாத நீரில் கரையும் கொடும் விஷத்தை ஜீரணிக்கும் சக்தி இருப்பத கண்டுபிடிக்கப்பட்டது… அந்த நகரம் உள்ள பாலைவன பகுதியில் உள்ள ஆற்றில் இந்த விஷம் அதிகம் உள்ளதையும், அந்த மக்களின் பழைய நீராதாரமே அதுதான் என்பதும் பிறகு தெரிய வந்தது… இந்த நீரை இன்றும் இவர்கள் பருகினாலும் இவர்களுக்கு எந்த தீங்கும் நேர்வது இல்லை… மேலும் சாதாரணமாக மனிதர்களுக்கு இந்த விஷம் கொல்லும் அளவை விட 80 மடங்கு அதிக Arsenic poison ஐ கொண்ட அந்த நதியில் இருந்து இவர்கள் அந்த நீரை எடுத்துக்கொண்டாலும் ஒன்றுமே ஆவது இல்லை இவர்களுக்கு… இந்த மக்களுக்கு AS3MT என்ற gene இல் நடந்த mutation தான் இந்த கொடிய விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை அவர்களுக்கு அளித்துள்ளதும், இவர்களுக்கு அது 7000-11000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த genetic mutation நடந்திருக்கும் எனவும் ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்…
4) ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களுக்கு அந்த தேசத்தின் கடும் வெப்பநிலையை தாங்கி உடலை சீராய் வைக்க உதவும் Ala191T என்ற gene ல் நடந்த mutation ஐ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்… இது 40% ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு இருப்பதை ஆய்வாளர்கள் மரபணு ஆய்வுகள் நடத்தி உறுதி செய்துள்ளனர்…
5) ACTN3 என்ற gene உண்டு… இது dna வில் உள்ள chromosome 11 இல் இருக்கும்… இது மூன்று வகைப்படும் RR, RX, XX என… இதில் எதாவது இரண்டு வகையும் அந்த chromosome 11 இல் இருக்கும்… இதில் RR இருந்தால் ஓடும்போது muscle களுக்கு அதிக சக்தியையும், மூச்சுப்பிடித்து ஓடும் திறனையும், muscle கள் காயமாகாது இருக்கவும், காயம்பட்டாலும் சீக்கிரம் குணமடையும் தன்மையையும் கொடுக்க கூடியது… இதனை Olympic இல் பங்கேற்கும் sprint athlete வீரர்களுக்கு சோதித்து பார்த்தார்கள்… உலகில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் இந்த ACTN3 577R 59% ஐ தாண்டவில்லை… ஆனால் ஆப்ரிக்கர்களுக்கு பொதுவாகவே இது 84% ஆக இருந்தது… ஆப்ரிக்க Bantu களக்கு 91% இருந்தது… ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கு 71% ஆக இருந்தது… Jamaicans களுக்கு 98% இருந்தது…இந்த ஜமாய்சியர்கள் ஆப்ரிக்காவில் இருந்து குடிபெயர்ந்த கருப்பர்களே… சமீபத்தில் வேகமாக ஓடுவதில் உலக சாதனை படைத்த Usain Bolt Jamaican தான்… ஆப்ரிக்கர்கள் முன்னர் பொதுவாக வேட்டை தொழிலை செய்து வந்தவர்களே… மேலும் வேட்டையின் போது பிற விலங்குகளிடமிருந்து தப்பிக்க ஓட வேண்டும்… அதனால் அவர்களுக்கு இந்த ACTN3 577R ஆனது உலகில் வேறு எந்த இனத்துக்கும் இல்லாத அளவு கூடுதலாக அமைந்தது… ஆனால் இது தற்செயலானதும் அல்ல…

6) சைபீரியாவில் குளிர் காலத்தில் -71° வெப்பநிலையும், ஆண்டு சராசரியாக -5° வெப்பநிலையும் காணப்படும்… இங்கே 45000 ஆண்டுகளாக உள்ள பூர்வகுடி மக்கள் எப்படி இந்த குளிரை தாங்குகின்றனர் என ஆய்வு மேற்கொண்டனர் விஞ்ஞானிகள்… இவர்ககளுக்கு CPT1A என்ற gene ல் ஏற்பட்ட mutation காரணமாகவும், LRP5 என்ற gene ல் ஏற்பட்ட mutation காரணமாகவும் இவர்களுக்கு ஈரல் (liver) இல் metabolism கூடி, அந்த கடும் குளிரிலும் சீரான ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், இதயத் துடிப்பு ஆகியவை பேணப்படுகின்றன என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்… மேலும் PRKG1 என்ற gene ல் ஏற்பட்ட mutation அவர்களது cardiovascular & neuronal functions ஐ யும், muscle களை (வெளிக்குளிரால்) சூடேறாமலும் பாதுகாக்கின்றன எனவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்… மேலும் POLD3 என்ற gene ல் ஒருவான ஒரு mutation, அங்கே சைபீரியன் ஆர்டிக் பகுதிகளில் உள்ள அதிக UV கதிர்களால் சாதாரண மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் இயல்பை மாற்றி, உடலில் செல்களுக்கு பாதிப்பு வரும் போதிலும் இவர்களுக்கு உடலில் செல்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சீக்கிரமாக உற்பத்தியாக சிறப்பாக செயல்படவும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன…
7) சமீபத்தில் மேற்கு ஆப்ரிக்காவில் HIV-AIDS ஐ தடுக்கும் ஒரு gene mutation ஐ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்… CCR5 என்ற gene இல் delta 32 என்ற mutation ஏற்பட்டு, CCR5 Δ32 என்று அழைக்கப்படும் mutation ஏ அது… இது ஆப்ரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்களிடம் தான் காணப்பட்டது… உலகில் வாழும் அனைத்து இன மக்களையும் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இந்த mutation Nordic மக்கள் எனப்படும் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மக்களிடம் மிக அதிகமாக இருப்பதும், இது அவர்களுக்கு 700, 1200, 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட mutation என மூன்று வித ஆய்வுகள் தெரிவிக்கின்றன… ஆனால் முதல் இரண்டு ஆய்வுகள் சொல்லும் 700-1200 ஆண்டு கால கணக்கே மிகவும் நம்பகரமாக உள்ளது எனவும் பின்னர் ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்… இது 8-10 ஆம் நூற்றாண்டுகளில் Nordic நாடுகளில் Vikings களிடம் இருந்து மீத Europe க்கு பரவியதாக ஊகிக்கின்றனர்… வடக்கு ஐரோப்பாவில் காணப்படும் இந்த mutation தெற்கு Europe க்கு வர வர குறைந்து தென் யூரப்பில் மிக குறைந்தே இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்… சரி Vikings களுக்கும் Aids க்கும் என்ன சம்பந்தம் என பதிவின் இறுதியில் காணலாம்…
சரி… இதெல்லாம் தன்னிச்சையாக நடந்த ஒன்று என்றும், இப்படி mutation அடைத்த மனிதர்கள் மட்டுமே அங்கு வாழ தகுதியானர்வளாக இருந்து தப்பிப் பிழைத்ததாலும், ஏனையோர் இறந்ததாலும் தான், தப்பி உயிர் வாழ்ந்தவர்களிடம் இருந்து தோன்றிய இன்றைய அந்த குறிப்பிட்ட population க்கு இவை அதிகமாக இருக்கிறது என்று Darwin இன் natural selection model சொல்லும்… அப்படியாகவே இருக்கட்டும்… Natural selection வேலை செய்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை… ஆனால்,
1) திபெத்தில் முன்னர் வாழ்ந்த Denisovan களுக்கும் சரி, இடையில் வந்த இன்றைய திபெத்தியர்களுக்கும் சரி, திபெத்திய நாய்களுக்கும் சரி, இமாலய ஓநாய்களுக்கும் சரி எப்படி இந்த EPAS1 gene அவர்களுக்கு மட்டும் mutate ஆனது? ஏன் உலகில் பிறர்களுக்கு ஆகவில்லை? உலகிலேயே மிக உயரிய நிலப்பரப்பான திபெத்தில் மட்டும் ஏன் இப்படி? திபெத்தியர்களின் மிக நெருங்கிய மரபணு சகோதரர்களான Han Chinese களுக்கே 2.2% தான் இது உள்ளபோது, இது திபெத்தியர்கள் சிலர் சீனர்களோடு கலந்த தாக்கத்தால் என உறுதியாக கூற இயலுமே தவிர வேறில்லை… இதையும் ஏற்காமல், natural selection விதியின்படி “தக்கன வாழும் , தகாதன வீழும்” என்று எடுத்துக்கொண்டாலும் திபெத்தியர்கள் அங்கே உயர் பிரதேசத்துக்கு சென்ற பிறகு 100-2.2 = 97.8 % பேர் oxygen இல்லாமல் செத்துப் போய் மீதம் இருந்த 2.2% இல் இருந்துதான் இன்றைய ஏகதேச திபெத்தியர்களும் வந்தார்கள் என யோசிப்பதே விதண்டாவாதமாக இல்லையா? ஊருக்கு 100 பேரில் 98 பேர் காற்று சுவாசிக்க முடியாமல் இறந்து போனால் மீதம் இருப்பவர்கள் பயந்து போய் கீழே இறங்கியிருக்க மாட்டார்களா? “Population bottleneck” திபெத்தியர்களுக்கு நிகழ்ந்தது இரண்டு முறை எனவும் அவை ஆப்ரிக்காவை விட்டு மனிதன் வெளிவந்த காலத்திலும் & ஐரோப்பிய ஆசிய இனங்கள் பிரிந்ததான 41000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று மட்டும் தான்… 2750 ஆண்டுகளுக்கு முன்னர் திபெத்தியர்கள் – சீனர்கள் பிரிந்த போது எந்த bottleneck உம் நடக்கவில்லை என்றுதான் மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன! ஆக எப்படி யோசித்தாலும் இங்கே Darwin இன் natural selection ஐ யும் தாண்டி வேறு ஏதோ தான் நடந்துள்ளது என்பது தெளிவு… திபெத்தியர்கள் 98% அழிந்து பின்னர் இருந்த mutation நடந்த பேர்களில் இருந்து இன்றைய திபெத்தியர்கள் முழுதும் வரவில்லை என்பது பெறப்படுகிறது… அப்படி ஒருவேளை நடந்திருந்தால் அவர்கள் மரபணு ஆய்வுகளில் மூன்றாவது bottleneck உம் கணக்கில் வந்திருக்க வேண்டுமே! வரவில்லையே! ஆக திபெத்தியர்களுக்கு நடந்தது என்ன? 72% திபெத்தியர்களுக்கு இந்த mutation எப்படி வந்தது? யோசியுங்கள்…
2) Bajau Laut மக்களுக்கு PDE10A என்ற gene இல் நடந்த mutation உம் உலகில் வேறு எங்கேயுமே நடக்கவில்லை! அதுவும் வெறும் 1000 ஆண்டுகளில், சுதந்திரமாக மீன் வேட்டை செய்து வாழும் வகுப்பில் நடந்த இந்த மாற்றம், அதனை செய்யாத அவர்களின் அண்ணன்களாக Saluan மக்களுக்கு நடக்கவில்லை… Bajau மக்கள் எல்லோரும் 260 ஆழம் சென்று வேட்டையாடுவதில்லை… மிகச் சிலர் தான் அதை செய்கிறார்கள் அதுவும் octopus ஐ பிடிக்க வேண்டி… ஆக மேலோட்டமாக கடலில் மீன் பிடித்து வாழும் அவர்களுக்கு பெண் கிடைக்காமல் போக வாய்ப்பே இல்லை… ஆக இங்கேயும் Natural selection model அடி வாங்குகிறது… சாதாரணமாக மேல் கடலில் மீன் வேட்டை செய்து வாழும் அவர்களுக்கு எதற்கு 50% அதிக பெரிய மண்ணீரல்? உலகில் வேறு எங்குமே யாருக்குமே இந்த mutation ஏன் நடக்கவில்லை? யோசியுங்கள்…
3) அர்ஜென்டினாவின் San Antonio de los Cobres நகரில் உள்ள ~6000 மக்களுக்கும் Arsenic poison ஐ ஜீரணிக்கும் சக்தி உள்ளது… Natural selection இன் விதிப்படி இது ஒன்றை ஆளில் இருந்து இந்த mutation பரவி தான் இன்றைய இந்த 6000 பேர் இருக்கிறார்கள் என்றால், ஒரே குடும்பத்துக்குள் கல்யாணம் செய்து கொண்டே வந்தார்களா என்ன அவர்கள்? இல்லையே? ஆக இங்கேயும் natural selection model அடி வாங்குகிறது… ஏன் இந்த விஷத்தை ஜீரணிக்கும் gene mutation உலகில் வேறு எங்கேயுமே யாருக்குமே நடக்கவில்லை? யோசியுங்கள்…
4) ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு Ala191T என்ற gene ல் நடந்த mutation 40% பேருக்கு இருக்கிறது… இவர்கள் அனைவரும் ஒற்றை ஆள் வழிவந்தவர்களா natural selection model இன் படி? நிச்சயமாக வாய்ப்பே இல்லை… அவர்களின் colonization of Sahul காலத்தில் தான் population bottleneck நடந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன… அதாவது 40000 ஆண்டுகளுக்கு முன்னர்… இந்த mutation நடந்தது பிற்காலத்தில் தானே! பிறகு எப்படி 40% ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு இந்த mutation வந்தது? யோசியுங்கள்…
5) ஆப்ரிக்க பூர்வீக கருப்பர்களுக்கு உள்ள ACTN3 577R 84% என்றால் ஒரே ஒரு நபரிடம் இருந்து தான் இந்த 84% ஆப்ரிக்க பூர்வகுடிகளும் வந்ததா என்ன? வாய்ப்பே இல்லை… Natural selection இங்கே மீண்டும் அடி வாங்குகிறது… ஏன் ஆப்ரிக்க பூர்வீக கருப்பர்களுக்கு மட்டும் இந்த mutation அதிகம்? யோசியுங்கள்…
6) சைபீரியர்களுக்கு நடந்த நாலு விதமான gene களின் mutations மேலே பார்த்தோம்… உலகிலேயே அதிக குளிரில் வாழ்பவர்கள் அவர்களே… அவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது? உலகில் வேறு யாருக்குமே இந்த mutation நடக்காதது ஏன்? யோசியுங்கள்…
7) HIV – AIDS வராமல் தற்காக்கும் ஒரு genetic mutation எதற்கு குறிப்பாக கற்பழிப்புகளையும் கொள்ளையும் தொழிலாகக் கொண்ட, இன்றைய இங்கிலாந்து அயர்லாந்து பிரான்ஸில் 6% பேருக்கு தகப்பனான Vikings க்கு ஏன் வந்தது? யோசியுங்கள்…
யோசித்து தெளிந்தால் ஒன்று தான் நிச்சயப் பொருளாக வந்து நிற்கும்… புத்தியில் இருந்து வந்த அகங்காரம் ஏங்கியது, அதற்கு உடலில் உள்ள மரபணு மாற்றம் நிகழ்ந்து வழியை காட்டியது… இதுவே முடிவான பொருள்… திபெத்தியர்களுக்கும் Denisovan களுக்கும், திபெத்திய நாய்களுக்கும், இமாலய ஓநாய்களுக்கும் உயர் பிரதேசத்தில் oxygen குறைவாக இருந்தபோதும், போதுமான அளவு சுவாசிக்க வழி வகுத்ததும், Bajau Laut மக்களுக்கு 12 நிமிஷங்கள் மூச்சு பிடிக்க வைத்து மீன் வேட்டையை மகிழ்ச்சியும் செய்ய வழி வகுத்ததும், அர்ஜென்டினாவின் San Antonio de los Cobres நகர மக்களுக்கு ஆளை கொல்லும் Arsenic விஷம் 80 மடங்கை குடித்த போதும் அதனை ஜீரணிக்க வழி வகுத்ததும், ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு வெயிலை தாங்கும் தன்மை கொடுத்ததும், ஆப்ரிக்கர்களுக்கு உலகிலேயே அதிவிரைவாக ஓடும் மனிதன் என்ற நிலையை கொடுத்து மகிழ்ச்சியாக வேட்டையாட வழி வகுத்ததும், சைபீரியர்களுக்கு அந்த -71° குளிரிலும், UV கதிர்வீச்சிலும் இருந்து தங்களை தற்காக்க வழி வகுத்ததும், Vikings களுக்கு பல பேரை கற்பழித்த போதிலும் தனக்கு எந்த தொற்றும் வரக்கூடாது என்று பயந்தபோது அதற்கு ஒரு தற்காப்பு ஏற்படுத்தி வழி வகுத்ததும் ஒன்றே ஒன்றுதான்… நிச்சயமாக இறைவன் அல்ல… அகங்காரத்தில் இருந்து எழுந்த “தேவை” என்ற உணர்வு தான்… ஆனால் இது அகங்காரத்தில் ராஜஸ குணத்தில் இருந்து வரும் “தேவை” என்ற வகை என்பது தெளிவு… அகங்காரத்தின் ராஜஸ குணத்தில் இருந்தே இவ்வளவு வருகிறதென்றால், அகங்காரத்தின் ஸத்வ குணத்தில் இருந்து வந்த மனதிற்கு எவ்வளவு வலிமை இருக்க வேண்டும்? Affirmations என்ற சங்கற்பத்தால் நாலாம் நிலை புற்றுநோய்களை சில மாதங்களிலேயே குணமாகிய சில உண்மை நிகழ்வுகளை ஆங்காங்கு படிக்கிறோமே! (பல பொய்ப் பிரச்சாரங்களையும் தாண்டிய சில உண்மை சம்பவங்கள்)… மனதின் சக்தியே இவ்வளவு என்றால், உடலில் உள்ள ஐந்து கோஷங்களையும் சக்தியூட்டும், பத்து வாயுக்களையும் சீராக இயங்கவைக்கும் மூச்சுப்பயிற்சிகள் என்னவெல்லாம் செய்யும்? ஸ்தூல & சூக்ஷும வளங்களை வழங்கும் முறைப்படுத்தப்பட்ட கீழ் தத்துவ தெய்வ வழிபாடுகள் என்னவெல்லாம் செய்யும்? கற்பனை செய்ய முடியாத அனாதியான அந்த இறையருள் என்னவெல்லாம் செய்யும்?
விஞ்ஞானம் வளர்ந்து வரும் ஒன்று… ஆனால் மெய்ஞானம் முதிர்ந்தவர்கள் சொன்னதை சரியாக புரிந்துகொள்ள காலம் எடுக்கும்… ஆனால் அவர்கள் குறைவாக சொன்னதை கூட புரியாமல் அதையும் தவறாக புரிந்துகொள்வதையாவது இனி திருத்திக்கொள்ள பார்க்க வேண்டும்…
இப்படி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த பிரபஞ்சம்,பஞ்சபூதங்கள் ஒவ்வொரு இனக்குழுவிற்கும்(சாதி) தனிப்பட்ட குணங்களை,பண்புகளை,உடல்வாகுகளை கடத்தி நமக்கு கொடுத்துயிருப்பதை காதல் என்ற போர்வையில் காம இச்சை கொண்டு சாதி விட்டு சாதி திருமணம் செய்து இயற்கை கொடுத்த வரங்களை கலப்பாக்குவது சரியாகுமா? என்பதை இன்றைய தலைமுறை சிந்திக்க வேண்டும்!
கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் :
கொங்கு வேளாளர்
ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர்
மேலும் தொடர்புக்கு :
ஒட்டப்பிடாரம்
சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை
9629908758







