சாதி விட்டு சாதி திருமணம் செய்வது சரியா? தவறா? — பகவத் கீதை கூறுவது என்ன!!!!

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது தவறானது என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை!!!!!

தொடர் பதிவு  : 2 

பாரதிய ஜனதா கட்சிக்கு வாஜ்பாய் அவர்களின் தலைமை விட்டு போனதில் இருந்தே ஒட்டுமொத்த இந்துத்துவாவின்  உண்மையான ஆரம்பகால சித்தாந்தத்தை ஆர்எஸ்எஸ், பாஜக உட்பட்ட அனைத்து இந்துத்துவா அமைப்புகளும் கை கழுவி விட்டு இந்து தர்மத்திற்கு எதிராக இந்துத்துவா வாதிகள் செயல்படுவதாக சில இந்துத்துவா வாதிகளே குற்றம் சாட்டுகின்றனர்!!!!!



ஆர்எஸ்எஸின் தொடக்க காலத்தில் அதன் தலைவர்களாக விளங்கிய

கேசவ பலிராம் ஹெட்கேவர், 

எம். எஸ். கோல்வால்கர்

மற்றும் இந்து மகா சபை தலைவர் வீரசாவர்க்கார்



அவர்களோ அவர்கள் காலத்திலோ ஜனசங்கத்தின் காலத்திலோ, ஜெய்பிரகாஷ் நாராயணன் அவர்களோ வாஜ்பாய் காலம் வரை  இந்துத்துவா அமைப்புகள் பாரத தேசத்தின் சாதிகள் காக்கப்பட வேண்டும்,  சாதி விட்டு சாதி திருமணம் கூடாது , ஆனால் சமத்துவம் தழைக்க வேண்டாம், இந்துவாக இணைக்கிறோம் என்ற பெயரில் சாதியை அழிக்க கூடாது என்ற கருதுகோள்களில் மிகச்சரியாக இருந்தனர் 

 

காரணம் அவர்கள் பின்பற்றிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட தெளிவான சனாதன தர்மம் ஆகும்!!!! 

 

ஆனால் இன்றோ சனாதன தர்மத்தை காக்கிறேன், இந்து மதத்தை அழிய விடாமல் தடுக்கிறேன் பேர்வழி என்று இந்திய பாரத குடிகளை (சாதிகளை) அழிக்கும் முயற்சிகளில் இந்துத்துவா வாதிகள் செயல்படுகின்றனர்!!!

இந்திய குடிகளை (சாதிகள்) பாதுகாப்பதே தங்களது தலையாய கடமையாக செயல்பட்டு வந்தனர் இந்திய திருநாட்டின் மன்னர்கள் ராஜபுத்திரர்கள், கவுடாஸ், தமிழ் மூவேந்தர்கள், தாகூர்ஸ், ஜாட், பட்டேல்,  சவுக்கான்ஸ், மராத்திய மன்னர் சிவாஜி, விஜய நகர பேரரசு, சாளுக்கியர்கள், மைசூர் பேரரசு போன்றோர்!!!!!



 

ஆனால் இன்று திராவிடவாதிகளும், தமிழ்தேசியவாதிகளும் தாங்கள் மட்டுமே அறிவாளிகள் தமிழ் மூவேந்தர்களே முட்டாள்கள் என்பது போல் பேசுகின்றர்!! அதே போன்று தான்  இந்திய பாரத இந்து மன்னர்கள் பாதுகாத்து வந்த இந்திய குடிகளை (சாதிகளை) இல்லையென்றும், சாதிகளை அழிக்க வேண்டும் என்றும் பேசுகின்றனர்!!!! எழுதுகின்றனர்!!! இது எத்தனை பெரிய முட்டாள் தனம்!!

இதை தான் ஹெட்கேவரும், கோல்வால்கரும், வீரசாவர்க்காரும் கற்று தந்த இந்துத்துவாவாவா??? அவர்களின் இந்துத்துவா தர்மத்திற்கு  எதிராக  தற்கால இந்துத்துவா வாதிகள் செயல்படுவது தான் தர்மத்திற்கு எதிரானது!!!! 

உலகில் உள்ள குடிகளை (சாதிகளை)  அழிக்க நினைத்தாலே உலகில் தர்மம் தலைகவிழ்ந்து அதர்மம்  தலை தூக்கும் என்கிறது பகவத் கீதை!!!!

 

அது குறித்து கீழே காண்போம்!!!!! 

 

“பிராமணப் பெண்ணோ, பிள்ளையோ வேறு வர்ணத்தவரான க்ஷத்திரிய, வைசிய பிள்ளையையோ, பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி அர்ஜுனன் வாக்கு*”.

*ஶ்ரீமத் பகவத் கீதை*

*அத்தியாயம்—-1*

*ஸ்லோகம்—-40 to 44*. 



*குல நாசத்தினால் தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்கள் அழிந்து விடுகின்றன*.

*தர்மம் அழிந்த பிறகு குலம் முழுவதிலும் அதர்மம் வெகுவாகப் பரவுகிறது*. 

*குலதர்மம் அழிந்து விட்டால் குலத்தில் உள்ள ஸ்த்ரீ—புருஷர்கள் குல மரியாதைக்கும், சமூக மரியாதைக்கும் கட்டுப்படாமல் நடத்தை கெட்டு விடுவார்கள்*. 

*அவர்களுடைய எல்லாச் செயல்களிலும் அதர்மங்கள் நிறைந்தே இருக்கும்*. 

*இதனால் பாவம் மேலும் வளர்ந்து சமுதாயம் முழுவதும் பரவி விடும்*. 

*எங்கும் பாவம் பரவி விடுவதால் சமுதாயத்தில் உள்ள ஸ்த்ரீ—புருஷர்கள் கருத்தில், எந்தக் கட்டுப்பாட்டிற்கும் மதிப்பு இருக்காது*. 

*அவற்றைப் பாதுகாப்பது இருக்கட்டும்*. 

*அவற்றை அறிவதற்குக்கூட முயற்சி செய்யமாட்டார்கள்*.

*யாராவது எடுத்துச் சொன்னாலும் அவர்களைப் பரிகாஸம் செய்வார்கள் அல்லது வெறுப்பார்கள்*. 

*இந்த நிலையில் சமுதாய தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு ஆதாரம் புனிதமான ஸதி தர்மம்தான்*. 

*அதுவும் அழிந்து விடும்*. 

*ஸதி தர்மத்தின் பெருமையை இழந்தபிறகு, பரிசுத்தமான குடும்பத்து ஸ்த்ரீகள் வெறுக்கத்தக்க விபசார தோஷத்திற்கு ஆளாவார்கள்*. 

*பல வகுப்பினரிடமும் பழக்கம் ஏற்பட்டு விடும்*. 

*தாய்—-தந்தையர் மாறுபட்ட வர்ணத்தினர் ஆவதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் குலக்கலப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்*. 

*இப்படி குலத்தில் பரம்பரையாக வந்த புனிதத் தன்மை முழுவதும் எளிதாக நாசமாகிவிடும்*.

 

*வர்ணக்கலப்பு குலநாசம் செய்தவர்களையும், குலத்தையும் நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது*. 

*இவர்களுடைய முன்னோர்கள்கூட ச்ராத்தம்,தர்ப்பணம்—இவற்றை இழந்து வீழ்ச்சி அடைவார்கள்*. 

*(ச்ராத்தத்தில் பிண்டம் வைப்பதும், பித்ருக்களை உத்தேசித்து பிராமணர்களுக்கு அனனமிடுவதும்தான்”பிண்டக்ரியை”*.

*தர்ப்பணத்தில் எள்ளும், தண்ணீரும் விடுவதுதான்” உதகக்ரியை”*. 

*இரண்டும் சேர்ந்து”பிண்டோதகக்ரியை”*. 

*அதாவது”ச்ராத்த—-தர்ப்பணங்கள்)*.

 

*சாஸ்திர முறை மீறப்பட்டு விட்டபடியால், அது பித்ருக்களுக்குப் போய்ச் சேருவதில்லை*. 

*இவ்வாறு சந்ததிகள் மூலம் கிடைக்க வேண்டிய பிண்டம் ஜலம் ஆகியவைக் கிடைக்காததால் முன்னோர்கள் வீழ்கிறார்கள்*. 

*குலநாசம் செய்பவர்களின் இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குறறங்களினால், தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்களும், ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன*. 

*வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை வர்ண தர்மங்கள்*. 

*அவையே ஜாதி தர்மங்கள்*. 

*எவர்களுடைய குலதர்மமும், ஜாதி தர்மமும் அழிக்கப்பட்டு விட்டனவோ, அதர்மத்தில் வீழ்ந்துவிட்ட அத்தகைய மனிதர்கள் பாவங்களின் பயனாக வெகுகாலம்” கும்பீபாகம், ரௌரவம் ஆகிய பயங்கரமான நரகங்களில் வீழ்ந்து பற்பலவிதமான யமதண்டனைகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்*. 

*ஆகவே குலநாசத்திற்குரிய செயலை ஒருபோதும் செய்யக் கூடாது*. 

ஆதாரம் :

ஶ்ரீமத் பகவத் கீதா

(தத்வவிவேசனீ)

பக்கம் :  79 to 82.

Gita Press,

Gorakhpur publication.

ஆகவே சனாதன தர்மத்தின் அடிப்படையான நான்கு வேதங்களும், மகாபாரதம், இராமாயணம்,

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதையும் கூட இந்திய குடிகளை (சாதிகளை) பாதுகாக்க வேண்டும்  என்கிறது!!!!

 

 

மதம் மாறுவது எப்படி தவறோ அதே போன்றது தான் சனாதர்மப்படி சாதி விட்டு சாதி திருமணம் செய்வதும் தவறு, சாதியை அழிக்க நினைப்பது அதர்மம், சாதியை இல்லை என்பவன் தர்மத்திற்கு எதிரானவன்!!!  சாதியை பாதுகாப்பவனே புண்ணியவான் ஆவான்!!!!!

கட்டுரையாளர் 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *