நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை தமிழ்அறிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972)





நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார்.
இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே முதலில் பால கங்காதர திலகர் போண்றவர்களின் தீவிரதவதாத்தல் ஈர்க்கப்பட்டு பிறகு காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அறபோரட்டத்தால் விடுதலை பெற முடியும் என்று நம்பினார்.
இவரது கவிதைகள் சுதந்திர போராட்டத்தைப் பற்றி இருப்பதால் இவர் காந்தியக் கவிஞர் எனவும் போற்ற பற்றார்.
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமன்பிள்ளை-அம்மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் சிறுவயது முதலே தமிழ் மீதும் சுதந்திர பற்று மீதும் ஆதித காதல் கொண்டு உள்ளார்.காந்தி மீது உள்ள ஈர்ப்பினால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்,பிறகு திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆனார், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றினார்.
தேச பக்தி மிக்க தமிழ் பேச்சினால் பல இளைஞர்கள் தேசத்தொண்டர் ஆனார்கள், வெள்ளைக்காரன் அரசின் தடை உத்திரவை மீறி, கூட்டங்களில் பேசி சிறை சென்றவர்.
1932-ல் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கடுமையான சிறை தண்டனை பெற்றவர்.
இவரின் விடுதலை வாக்கியம் மிகவும் புகழ் பெற்றது
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’
’கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது’
‘தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு’
‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’
இவர் முத்தமிழ் ஆன இயல்,இசை,நாடகம்மற்றும் ஓவியக்கலையிலும் வல்லவர்.
இவருடைய இந்த பாடல்
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
1932 இல் உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

வெள்ளாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மனு படிக்க:  https://wp.me/p9svoI-gI




இவர் இயற்றிய இலக்கிய படைப்புகள்
• இசை நாவல்கள் – 3
• கட்டுரைகள் – 12
• தன் வரலாறு – 3
• புதினங்கள் – 5
• இலக்கிய திறனாய்வுகள் – 7
• கவிதை தொகுப்புகள் – 10
• சிறுகாப்பியங்கள் – 5
• மொழிபெயர்ப்புகள் – 4
இவர் எழுதிய நூல்கள்:
1. மலைக்கள்ளன் (நாவல்)
2. காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
3. பிரார்த்தனை (கவிதை)
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள்
5. திருக்குறளும் பரிமேலழகரும்
6. திருவள்ளுவர் திடுக்கிடுவார்
7. திருக்குறள் புது உரை
8. கம்பனும் வால்மீகியும்
9. கம்பன் கவிதை இன்பக் குவியல்
10. என்கதை (சுயசரிதம்)
11. அவனும் அவளும் (கவிதை)
12. சங்கொலி (கவிதை)
13. மாமன் மகள் (நாடகம்)
14. அரவணை சுந்தரம் (நாடகம்)
என்கதை என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதையை மூன்று பாகமாக எழுதி உள்ளார்

தமிழ்நாடு அரசு இவரையும் இவரது நாட்டுபற்றை போற்றியும் அரசவை கவிஞராகவும், பின்னர் சட்டமேலவை உறுப்பினர் ஆகவும் நியமித்து சிறப்பித்தனர்.
அதுமட்டுமில்லாமல் இவர் சாகித்திய அகடாமி விருதும் பெற்றுள்ளார் பின்னாளில் இவர் சாகித்திய அகடாமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார்
மத்திய அரசு இவருக்கு 1971 ஆம் ஆண்டு பத்மபுஷன் விருது அளித்து பெருமைபடுத்தியது

மற்றும் 1989 ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டு கௌரவபடுத்தியுள்ளது

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற வாக்கியத்தின் வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கபட்டுள்ளது,தட்டாரத்தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு இன்று இவர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டு கவிஞர் இராமலிங்கம்பிள்ளை தெரு என்று அழைக்கப்படுகிறது

சேலம் அருங்காட்சியத்தில் இவருடைய பொருட்களை இன்றும் பேணி பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இவரை போன்ற தமிழ் அறிஞர் வாழ்ந்து தமிழை வளர்த்து அடுத்த தலைமுறைக்கு தந்ததாலயே இன்றும் நாம் தமிழ் படித்து கொண்டுஇருக்கிறோம்.


சென்னையில் உள்ள அரசு தலமைசெயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது





இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.
“மலைக்கள்ளன்”, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். “நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார். இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். (1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார். கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *