கொடியன் குளம் கலவரம் : மறவர் – பள்ளர் சாதி சண்டையின் விளைவா?

கொடியன் குளம் கலவரமும் உண்மை தன்மையும்:-மூன்று மறவர் கொலை
————————————————————-

 


தூத்துக்குடி மாவட்டம் “கொடியன் குளம்” பள்ளர் சமூகம் அதிகம் வசிக்கும் ஊர். அந்த ஊரில் மறவர்கள் சுமார் 10 குடும்பம் தான் வசித்தார்கள்.
.
1995-ல் மூன்று மறவர்கள் பள்ளர் சமூகத்தால் கொல்லப்பட்டார்கள். இதனால் கொலை செய்தவர்களை கைது செய்ய போலீஸ் தரப்பு “கொடியன் குளம்” சென்றார்கள்.
.
போலீசை உள்ளே நுழைய விடாமல் பள்ளர் சமூகத்தவர்கள் தடுத்தார்கள். இதனால் இரண்டு தரப்புக்கும் சண்டை மூண்டு கலவரம் நடந்தது.
.
இதனால் கோபம் கொண்ட போலீஸ் படை அந்த கிராமத்தை சூறையாடினார்கள். இது அன்று தற்செயலாக நடந்த விசயம்.
.
ஆனால் இதற்கு அரசியல் சாயம் பூசினார்கள். சுப்மணிசாமி, ராமதாஸ், கிருஷ்ணசாமி இதை வைத்து அரசியல் செய்தார்கள்.
.
இதற்கு திமுக கலைஞர் மறைமுகமாக ஆதரவு கொடுத்தார்.
அன்றைய கால கட்டத்தில் சுப்ரமணி சாமிக்கும் ஜெயலலிதாவிற்கும் அரசியல் தகராறு இருந்தது.
.
ராமதாஸ் வடக்கே பள்ளி, தெற்கே பள்ளர் என்ற அரசியல் செய்து கொண்டு இருந்தார்.
கிருஷ்ணசாமி அரசியல் வாய்ப்பு தேடி கொண்டு இருந்தார்.
.
சுப்ரமணி சாமி சிபிஐ விசாரணை மேற்கொள்ள முயற்சி செய்தார்.
ராமதாஸ் சென்னையில் போராட்டம் நடத்தினார்.
.
கிருஷ்ண சாமி கொடியன் குளத்தில் போராட்டம் நடத்தினார்.
இந்த சம்பவத்தை அப்படியே சசிகலா மீது தூக்கி பழி போட்டார்கள். அவர் தான் இதற்கு காரணம் என்று பிரச்சாரம் செய்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துறை மற்றும் கலெக்டர் துறையில் அதிக அளவு முக்குலத்தோர் இருந்த காரணத்தால் சசிகலா தான் காரணம் என்று வன்மம் கூறினார்கள்.
.
அதற்கு பின் 1996-ல் நடந்த தேர்தலில் கிருஷ்ண சாமி சுப்ரமணிசாமி கட்சி சின்னமான “ஏர் உழவன்” சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இதற்கு திமுக கலைஞரும் மறைமுகமாக ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்தார்.
.
கொடியன் குளம் கலவத்தை கூறும் நபர்கள் மூன்று மறவர் கொலையை பற்றி யாரும் பேச மாட்டார்கள்.
.
அன்றும் சரி ; இன்றும் சரி; முக்குலத்தோர் இயக்கம் மற்றும் முக்குலத்தோர் மக்கள் ஒற்றுமை இல்லாத காரணத்தால்…
இதை வைத்து கண்டவர்கள் எல்லாம் படம் எடுக்கிறார்கள்.
.

கொடியன் குளம் கலவரம் பற்றி குறை கூறும் நபர்களுக்கு…
கொடியன் குளத்தில் 3மறவர்களை கொலை செய்கிறார்கள். அந்த ஊரை விட்டு மறவர் குடும்பங்களை அடித்து துரத்துகிறார்கள்.
,
இந்த சம்பவ குற்றவாளியை கைது செய்ய போன போலீஸ்சையும் அடிக்கிறார்கள்.
பின்பு கலெக்டர், எஸ்பி தலைமையிலும் சென்ற போலீஸ்சையும் அடிக்கிறார்கள்.
,
இப்போது குறை சொல்லும் நபர்களே, நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர் என்று வைத்து கொள்ளுங்கள்.
உங்களது நடவடிக்கை என்னவாக இருக்கும்.
பதில் கூறுங்கள் குறை சொல்லும் நபர்களே!
==================================

எழுத்தாளர் : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *