அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள்

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள், இந்த பண்பை கொண்ட வேளாளர்களே சுத்தமான வேளாளனாக அறிய படுகிறார்கள்

1. ஆணை வழி நிற்றல்

சத்தியம் தவறாமை, அநீதி தவிர்த்து நீதியின் பக்கம் நிற்றல் !

2. மாண் வினை தொடங்கல்

பெருமை தரக்கூடிய செயல்களில் செய்ய தொடங்குவது! 

3.கைக் கடனாற்றல்

&பிறருக்கு உதவி புரிவது

4.குற்றமனத்தின்மை

மனதளவிலும் பொய், களவு, தீங்கு முதலிய குற்றங்களை செய்யாதிருப்பவர்கள்! 

5.சுற்றம் போற்றல்

உறவினர்களுக்கு உபகாரம் செய்து அவர்களுடன் ஒற்றுமையுடன் ஒன்றி வாழுதல் !

6.நீங்கா முயற்சி

தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் எந்த நிலையிலும் தளராமல் முயற்சி செய்துகொண்டே இருப்பது! 

7.அரசரிறைதருதல்

பெற்ற பொருளில் 6ல் ஒரு பங்கை வரியாக செலுத்துவது !

8.ஒற்றுமை கோடல்

அனைத்து தரப்பு மக்களிடமும் பாரபட்சமின்றி ஒற்றுமையுடன் இருந்தல்!

9.ஒழுக்கத்திருத்தல்

மனம், வாக்கு, சிந்தனை என அனைத்திலும் தூய்மையாக நல்லொழுக்கத்துடன் இருப்பது! 

10.விருந்துபுறந்தருதல்

விருந்தோம்பல், வேளாளர்களின் முக்கிய பங்காக இவை உள்ளது, வேளாளரின் கண்கள் கூட விருந்தோம்பல் செய்யும், விருந்தினர் விருந்திருக்க உணவு உண்ணாதவர்கள் வேளாளர். இப்படியாக விருந்தோம்பலில் வேளாளர்களின் சிறப்பை கூறியுள்ளனர்! 

எழுத்தாளர் : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *