ஒவ்வொரு வெள்ளாளனும் பார்க்க வேண்டிய திரைப்படம் சீவலப்பேரி பாண்டி …..
சீவலபேரி பாண்டி திரைபடத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் தமிழ்சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து இருப்பார்கள்
இத் திரைபடம் கற்பனை கதையா அல்லது உண்மை சம்பவமா என்பது நம்மில் பலருக்கு தெரியாது
ஆனால் இந்த திரைபடம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட திரைபடம்
அந்த திரைபடத்தில் மிரட்டலான தோற்றத்தில் வரும் ஊர் தலைவர் தான் க்ராம்ஸ் பிள்ளை அல்லது முன்சிப் சிவ சுப்பிரமணியம் பிள்ளை
முன்சிப் சிவ சுப்பிரமணியம் பிள்ளை அல்லது க்ராம்ஸ் பிள்ளை அவர்களை பற்றி பார்ப்போம்
நெல்லை சீமையின் ஓர் பகுதியை நேர்மையாலும், துணிச்சலாலும் ஆண்ட க்ராம்ஸ் பிள்ளை ஐயா என்ற முன்சிப் சிவ சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் வீர வரலாற்றை தமிழ்நாட்டில் அந்த காலத்தில் வாழ்ந்த எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை
அதில் வரும் ஊர் தலைவரின் மிரட்டலான தோற்றத்தையும், அவரின் சொல் கேட்டு நெல்லை சீமையின் மக்கள் நடக்கும் அந்த கதாபாத்திரத்தை நாம் கண் சிமிட்டாமல் பார்த்திருப்போம்
அவரின் ஒற்றை சொல்லை நெல்லையை சுற்றியுள்ள பல கிராமங்கள் வேத வாக்காக பின்பற்றி வந்ததில் எந்தவித ஆச்சரியுமில்லை, காரணம் நேர்மை, வீரம் , எவர் கேட்டாலும் அள்ளி கொடுக்கும் குணம் இந்த மூன்றையும் ஒருங்கே பெற்றவர்
இவர் ஆட்சி செய்த பகுதியில் நீதிமன்றம், காவல்துறை இவற்றிற்கெல்லாம் இடமே இல்லை
நெல்லை சீமையின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இவருக்கு சொந்தமான சொத்துக்கள் கொட்டி கிடந்தன
வந்தவருக்கெல்லாம் வாரி இரைத்த இந்த மாமனிதர் எப்படி வீழ்த்தபட்டார் என்றதை நாம் அறிந்திருப்போம்
சீவலபேரி பாண்டி படம் ஓர் உண்மை சம்பவம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது
அதிலும் அந்த மிரட்டலான ஊர் தலைவர் வேளாள பிள்ளைமார் வம்சத்தவர் என்று நம்மில் 90 சதவிகிதம் மக்கள் மறந்தது வேதனையிலும் வேதனை
நெல்லை சீமை எவ்வளவு ஆபத்தான பகுதி என்பதை தமிழ் நாடே நன்கறியும்
கொலை என்பது காலையில் எழுந்து தேனிர் அருந்துவதை விட சர்வ சாதாரணமான் ஓர் நிகழ்வாக நடந்தேறும்
சாதி கலவரத்தின் தலைநகரமே நெல்லை தான் என்பதை சமுதாய களத்தில் நிற்கும் அனைவரும் அறிந்திருப்பார்கள்
அப்பேர்பட்ட சூழலிலும் நீதீயையும் நேர்மையையும் கொண்டு வாழ்ந்த அந்த மாமனிதரை போற்றுவோம்
இன்றும் க்ராம்ஸ் பிள்ளை அவர்களின் வாரிசுதாரர்கள் நெல்லையில் மிக மிகச் சாதரணமாக வாழ்ந்து வருகிறார்கள்
நீதி ஒருபோதும் சாகாது….
வரலாற்று பதிவு தொடரும்
எழுத்தாளர் : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758