நேரடியாக பதிவிற்கு
1) சைவ வேளாளர் சூத்திரரா?
2) சைவ ஆதினங்கள் சூத்திரரா?
என்ற கேள்விகளில் முதலில் சைவ வேளாளர் சூத்திரரா என்று இந்த பதிவில் பார்ப்போம்… அடுத்ததாக அடுத்த பதிவில் ஆதினங்களை பார்ப்போம்…
மனு தர்மத்தில் உள்ள சூத்திரன் என்ற வார்த்தையை வைத்து தானே விளையாட்டு காண்பித்தார்கள்! அதே மனு தர்மத்தை வைத்து விளக்கம் காட்டுகிறேன்…
_
சைவ வேளாளர்:
ஒருவர் வீட்டில் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டால் எந்தெந்த வர்ணத்தவர்கள் எவ்வளவு நாட்கள் கழித்து தீட்டு கழிக்க வேண்டும் என்று மனு தர்மம் 5:83 கூறுகிறது…
பிராமணர்களுக்கு 10 நாள் தீட்டு,
க்ஷத்ரியர்களுக்கு 12 நாள் தீட்டு,
வைசியர்களுக்கு 15 நாள் தீட்டு,
சூத்திரர்களுக்கு 30 நாள் தீட்டு…
இப்படியாக தீட்டு கழித்த பிறகுதான் சிவாலயம் முதற்கொண்டு வேறு எந்த கோவிலுக்கும் போக வேண்டும் என்பது இங்கே பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள விதி… தீட்டு கழியாமல் சிவாலயத்திற்குள்ளே அரசனும் சரி, சிவப்பிராமணரும் சரி உயிரைக்கொடுத்தாவது தடுத்திருப்பார்கள் அல்லவா! அதனால் தான் வர்ணத்தை உறுதிப்படுத்த இந்த தீட்டு கழிதல் எப்பொழுது என்று பார்ப்பார்கள் வரலாற்று அறிவு உடையவர்கள்…
சைவ வேளாளர்கள் 15 நாட்கள் கழித்து 16 ஆவது நாளில் தீட்டு கழிக்கிறார்கள்…
16 ஆம் நாளில் பாண்டிய நாட்டு சைவ வேளாளர்களுக்கு தீட்டு கழிப்பது சிவப்பிராமணர்களே… தீட்டு கழிந்த அன்றே சிவாலயமும் சொல்வார்கள் & நீத்தார் வழிபாடும் செய்வர்… இதனை “உத்தரகிரியை” என்று அழைக்கிறார்கள்…
தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்களுக்கு 16 ஆம் நாளில் தீட்டு கழிப்பதும் பிராமணரே… மூன்று கலசங்கள் வைத்து “புண்ணியதானம்” என்ற ஒரு பூஜை செய்து தீட்டு கழிப்பார்கள்…
பாண்டிய நாட்டில் இருந்து தொடுபுழா (கேரளா) சென்ற சைவ வேளாளர்களுக்கு 12 நாள் தான் தீட்டு… கேரளாவில் வர்ண பாகுபாடுகள் மிக இறுக்கமானவை… ஆக அங்கே இந்த குறிப்பிட்ட சைவ வேளாளர்கள் பாரம்பரியமாக எந்த வகுப்பினராக இருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி…
தீட்டோடு இருப்பவர்களை யாருமே நெருங்க மாட்டார்கள் அவ்லவா! ஆனால் 16 ஆம் நாளில் சைவ வேளாளருக்கு தீட்டு கழிக்கிறார்கள் பிராமணர்கள் என்றால் இவர்களுக்கு தீட்டு கழிந்துள்ளது என்றும், தீட்டு கழிந்த 16 அன்றே சிவாலயமும் செல்லும் பாரம்பரிய வழங்கும் உள்ளதால் இவர்கள் தெளிவான வைசியர்களே…
இந்த தீட்டு கழிக்கும் நாட்களை மனு தர்மத்தின் படி செய்பவர்கள் நால்வருணம் & அநுலோம சாதியினர் மட்டுமே… பிறருக்கு தீட்டு கழிய வேண்டிய அவசியமும் இல்லை… அதனால் சமூக நீரோட்டத்தில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நாற்குலத்தார்களுக்கு மட்டுமே இந்த தீட்டு கழிதலை வைத்து வர்ணம் அறிய முடியும்… கண்டவர்களுக்கும் பார்த்தால் குழப்பமே மிஞ்சும்…

சரி… சூத்திரர் என்பதற்கு சான்றுகள் எவை:
1) தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்களின் விஜயநகர கால பட்டயம் ஒன்றில் அவர்களை “நாலாம் சாதி வெள்ளாளருக்கு கரிகால சோழன் நாள் முதலே நடந்து வருகிறது” என வருகிறது… அதாவது கரிகாலன் காலத்தில் நாலாம் வர்ணமாக இருந்த வேளாளருக்கு தொண்டை மண்டலம் 24 கோட்டங்களையும் 79 நாடுகளையும் கொடுத்து அரசர் ஆக்கியதைத்தான் சொல்கிறது…
2) தொண்டை மண்டல சதகம் 97 ஆம் பாடலில், “காவியம் ஆகிய காமீகம் கண்டு, கங்கா குலத்தோர் ஓவிய சூத்திரராக இருபத்தி நான்கு உயர்ந்த மேவிய கோட்டதிலும் கரிகால வளவன் மிக்க வாவிய மேன்மை கொடுத்து அளித்தான் தொண்டை மண்டலமே” என வருகிறது… அதாவது “காமிக ஆகமம் என்ற சைவ ஆகமத்தின் வழியில் கங்கா குலத்தார் ஆன வேளாளர்கள் சற்சூத்திரராக (ஓவிய சூத்திரர்) இருந்து, பிறகு 24 நாடுகளில் (அரசனாக) உயர்ந்ததும், அவர்கள் வந்தமர்ந்த (மேவிய) 24 கோட்டங்களிலும் கரிகால் வளவன் என்ற சோழன் மிக உயர்ந்த அரசுகளை (மிக்க வாவிய மேன்மை) கொடுத்து அளித்தான் தொண்டை மண்டலமே” என்பது இதன் பொருள்…
ஆக சூத்திரர் என்று பிறர் சுட்டிக் காட்டும் இரண்டு ஆவணங்களுமே கூட அவர்கள் முன்னர் சூத்திரர் என்ற நிலையில் இருந்ததையும், சற்சூத்திரர் என்ற நிலையில் இருந்ததையும் தான் கூறி பிறகு அரசர்கள் ஆனதையும் கூறுகிறது…
சோழர் கால சித்திரமேழி நாட்டார்கள் மெய்க்கீர்த்தி கல்வெட்டுகள் பல,
“பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ண குலோத்பவ” என்று சொல்லும்…
அதாவது, பூதேவிக்கு புத்திரர்களாக பிறந்து நான்கு வர்ணங்களாக உதித்தவர்கள் என… ஏகதேச அனைத்து ஆய்வாளர்களும் இதற்கு இதே விளக்கத்தை தான் கொடுப்பார்கள்… அனைத்து வேந்தர் நிகண்டுகளும் சொல்லும் பூதேவி புத்திரர் – மண்மகள் புதல்வர் நாலாம் வர்ண வெள்ளாளர் என… மூன்றாம் வர்ணத்திலும் பூவைசிய வெள்ளாளரை நிகண்டுகள் சொல்லும் ஆனால் பூதேவி புத்திரர் என்று சொல்லாது… பூதேவி புருஷர் பெருமாள்… அதாவது அரசர்… இதிலே மறைமுகமாக சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் முறையான அரசனுக்கு முறையான மனைவியின் மூலமாக முறையாக பிறந்த சூத்திரர்கள் என்று தான் பொருள் வரும்… அதெப்படி? என்று கேள்வி வருமே! வீழ்குடிகள் என்பதால்… இதனை இந்த பதிவிலேயே கீழே விளக்கப்பட்டுள்ளது…
அரசர்கள் ஆனவர்கள் ஏன் வைசியர்களாக 16 ஆம் நாளில் பிராமணரைக் கொண்டு தீட்டு கழிப்பவர்களாக இன்று உள்ளனர் என்ற கேள்வியும் வரும்… 79 வளநாட்டார்களும் கொங்கிற்கு கம்பர் காலத்திலேயே வந்துவிட்டதாக கம்பர் வதுவை வரி பட்டயம் கூறுகிறது… 79 நாட்டார்களும் வந்தார்களா என்று தெரியவில்லை ஆனால் பெரும்பாலான நாட்டார்களும் கொங்கிற்கு வந்துவிட்டனர் என்று புரிந்துகொள்ள வேண்டும்… குடும்பத்தில்-குடியில் மூத்தவர் தான் நாட்டாராக தொடர்ந்து பட்டம் ஏற்பார்கள்… உடன்பிறந்த இளவல்களும் அவர்கள் வழியினரும் பூவைசியர்களாகவே தொடர்வார்கள்… கம்பர் வதுவை வரி பட்டயம் கூறும் அதே நாட்டார்கள் கொங்கிற்கு வருவதை கொங்கு காணியாள பட்டயமும் கூறுகிறது… அதிலே “செங்கோல்” என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு உரியதே அல்ல என்றும் அது கொங்குற்கு வந்து கவுண்டர்களோடு கலந்த அந்த தொண்டை மண்டல வேளாளர்க்கே உரியது என்றும் கம்பர் பாடுவதாக வருகிறது… இதில் ஒன்று தெளிவாக புரியும்… செங்கோல் செலுத்தும் அரச நிலையினரே சித்திரமேழி நாட்டார்கள் என்று… இப்படிப்பட்ட அரச நிலை நாட்டார்களின் தலைக் குடும்பங்கள் மட்டும் அவர்களின் பங்காளிகளான பூவைசிய வர்ணத்தாரை அங்கேயே விட்டுவிட்டு, தங்களது அரச நிலைக்கு மூன்றாம் குலோத்துங்கன் ஆப்பு வைக்க போகிறான் என்று தெரிந்தவுடன் தொண்டை தேயமே வேண்டாம் என்று கொங்கிற்கு வந்துவிட்டார்கள் என்று தெளிவாக இதன் மூலம் விளங்கிக்கொள்ள முடியும்… இவர்களின் நேரடி பங்காளிகள் தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்களாக உள்ளதையும் புரிந்துகொள்ள முடியும்… இங்கே இவர்கள் கொங்கிற்கு உள்ளே வரும் முன்னரேயே கொங்கர் என்ற பெயரில் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கே பூர்வீகமாக இருந்த கொங்கு வேளாளர்களும் இருந்ததையும் புரிந்து கொள்ள வேண்டும்…
சரி… அதென்ன கரிகாலன் காலத்திய சூத்திரன்? கேள்வி வருமே… 1275-1325 இல் வாழ்ந்த நச்சினார்க்கினியர் தனது பட்டினப்பாலை உரையில் தெளிவாக சொல்வார், “வேளிரில் ஒளிநாட்டு வேளிரான ஒளியர் என்பவர்கள் பிற தேசங்களில் அரசர் ஆவதற்கு உரிய வேளாளர்கள்” என… அதாவது சோழன் ஒளிநாட்டு வேளிர்களை வீழ்த்தி வீழ்குடியாக்கி நாலாம் வருண வேள் ஆளர் (வேளாளர்) ஆக்குகிறான்… பிறகு மீண்டும் அரசராக உயர்வு கொடுக்கிறான் என… 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரையில், காணியாளர் என்பதற்கு வீழ்குடி என்றும் வேளாண் சாமந்தர் என்றும் விளக்கம் கொடுக்கிறார்… வீழ்ந்தவனே வேளாண் சாமந்தர் (வேந்தனுக்கு அடங்கிய வேளாள சிற்றரசன்) ஆக உள்ளான் என்றால் வீழ்வதற்கு முன்னர் பெருவேளிர் தானே அவர்கள்! 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் வேளாளரும் அரசர் ஆகலாம் என்று தொல்காப்பிய பொருளதிகார புறத்திணையியல் இரண்டாம் சூத்திர உரையில் நடைமுறையை கூறுகிறார்… சோழர் காலத்திய பிங்கல நிகண்டே வைசியருக்கு பொதுப்பெயரே வேளாளர் என்று தான் கூறுகிறது… அந்த வைசியர் பிரிவில் மூன்று வகையில் ஒன்றான பூவைசியரில் இளங்கோக்களும் இருப்பதாக வருகிறது அதே நிகண்டில்… அதான்… பட்டத்துக்கு உரியவன் அரசன்… அவனது இளவல்கள் பூவைசியர் ஆகிறார்கள்… நச்சினார்க்கினியரே அரச வேளிர் வழிவந்தவர்கள் தான் வேளாளர் என தனது தொல்காப்பிய அகத்திணையியல் 32 ஆம் சூத்திர உரையில் மிகத்தெளிவாக கூறுகிறார்… 1700 வாக்கில் புலவர்களால் பாடப்பட்ட கொங்கு வேளாளர் காணிப்பாடல்களில் வேளிர் என பலமுறை பாடப்பட்டுள்ளது… 1752 இல் சேர குல பிரமியண வழி புலவரால் இயற்றப்பட்ட அலகுமலை குறவஞ்சியில் பல இடங்களில் வேளிர் என்று கொங்கு வேளாளர்களை குறிப்பிட்டுள்ளது… 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர கால கல்வெட்டில் கொங்கு வேளாள பயிரன் கூட்டத்து ராக்ஷஸ மன்றாடியாரை “கொங்கவேள் தரையன்” என குறிப்பிட்டுள்ளது… இதெல்லாம் ஆங்கிலேயர் உள்ளே வருவதற்கு முன்னரேயே விஜயநகரம் ஆதரித்த பாளையக்காரர்கள் இருந்தபோதே அரங்கேற்றப்பட்டவை… ஏதோ வேளிர்களை வேளாளர்கள் ராகவ ஐயங்கார் காலத்திற்கு பிறகு தான் claim செய்வதை போன்ற பிம்பத்தை காழ்ப்புணர்ச்சிக்கு பிறந்தவர்கள் திரித்து எழுதுகிறார்கள்… 10 ஓடு 11 ஆக claim வைப்பது எங்கள் வேலையில்லை… 1000 இல் 1 ஆன வேளாளர்க்கு மட்டுமே ஏன் 1799 க்கு முன்புவரை (ஆங்கிலேயர் உள்ளே வருவதற்கு முன்) வேளிர் என கிடைக்கிறது என்று தான் கேட்கிறேன்!
இப்படியாக வர்ணம் ஏறும் இறங்கும்… இறங்கும் ஏறும்… இதெல்லாம் theme park இல் வரும் சருக்கல் விளையாட்டு போல… வீழ்ந்த வேளிர்கள் சமரசத்திற்கு இணங்கினாலோ அல்லது வீழ்த்திய வேந்தனே சமாதானம் பேசினாலோ மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறி ஆண்டு களிப்பர் வேள் ஆளர்கள்… அது தான் வரலாறு… இன்றைய காலகட்டத்தில் உள்ள சைவ வெள்ளாள பிள்ளைகளும் சரி, சைவ வெள்ளாள முதலியார்களும் சரி சுத்தமான பூவைசியர்களே… இடைக்காலத்தில் வேந்தனால் வீழ்த்தப்பட்டபோது சற்சூத்திரராக இருந்தனர்… ஆனால் அதற்கு முன்னர் வேளிர்களாக அரசாண்டவர்கள்… வரலாற்றின் வாசனையை கூட உணர முடியாத காழ்ப்புணர்ச்சி தீவிரவாதிகளுக்கு இதெல்லாம் புரிந்தாலும் புரியாதது போல நடிப்பார்கள்… மீண்டும் சூத்திரர் சூத்திரர் என்றே ஏசுவார்கள்… இப்படிப்பட்ட சண்டாளர்கள் காஞ்சி சங்கர மடமாக இருந்தாலும் சரி வேறு எவனாக இருந்தாலும் சரி அவர்களின் மூக்கை உடைக்கும் வித்தைகள் இனி ஆரவாரத்துடன் அரங்கேறும்…
கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர்
கொங்கு வேளாளர்
ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர்
மேலும் தொடர்புக்கு :
ஒட்டப்பிடாரம்
சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை
9629908758







