திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்) பற்றின கட்டுரை :
திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர்,
இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் ஒன்பது கிராமங்களில் தற்பொழுது வாழ்கின்றனர்,

இவர்களுக்கு அம்பலக்காரர், பிள்ளை, தொண்டைமான் போன்ற பட்டங்கள் உள்ளன, தற்பொழுது பிள்ளை பட்டம் மட்டுமே நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர்!!
இவர்கள் காஞ்சிப்புரத்தில் இருந்து சில நூற்றாண்டுக்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளில் குடிபெயர்ந்ததாக தகவல்,
ஆனால் எதற்காக காஞ்சிப்புரத்தில் இருந்து இடம்பெயர்ந்தார்கள் என்று தெரியவில்லை,
விவசாயமே இவர்களின் பிரதான தொழில்,
தமிழக சாதி பட்டியலான முற்படுத்தப்பட்ட பிரிவு (Forward Caste) அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவு (Backward Class) அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு (Most Backward Class) என எதிலும் திருநீற்று வெள்ளாளர் என்ற சாதியை அரசு சேர்க்காதது மிகப்பெரிய வரலாற்று பிழையாகும், இன்று வரை திருநீற்று வெள்ளாளர்கள் தங்களை தமிழக அரசிஜ் சாதி பட்டியலில் ஏதாவது ஒரு பிரிவில் தங்கள் சாதியையும் இணைக்கக்கோரி அரசுக்கு வேண்டுக்கோள் விடுத்து வருகின்றனர் இன்று வரை, ஆனால் தமிழக அரசு தான் செவி சாய்த்தப்பாடில்லை, இந்தியா சுதந்திரமடைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகியும் விட்டது!!!
மற்ற வெள்ளாள சங்க, அமைப்பு, கட்சிகளை சார்ந்த வெள்ளாளர்கள் திருநீற்று வெள்ளாளர்களை தமிழக அரசு சாதி பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைக்க வேண்டும் என திருநீற்று வெள்ளாளர்கள் மற்ற வெள்ளாள உட்பிரிவு சங்கங்களை, அமைப்புகளை, கட்சிகளை, அதன் தலைவர்களிடமும் கோரிக்கையும் விடுத்து வருகிறார்கள் காலம் காலமாக!!! ஆனால் அந்த வெள்ளாள தலைவர்களின் செவிக்களுக்கு தான் எட்டவில்லை போலும்!!!
தற்காலத்தில் தீருநீற்று வெள்ளாளர்கள் வாழும் ஊர் பெயர்கள் மாவட்ட வாரியாக :
திருநீற்று வெள்ளாளர்கள் வாழும் ஊர்கள் :
புதுக்கோட்டை மாவட்டம் :
1.முத்துக்குடா
2.இராஜகுமாரம்பாள் சத்திரம் (மீமிசல்)
3.இரா.புதூர் என்ற இரா.புதுப்பட்டிணம்
தஞ்சாவூர் மாவட்டம்
4.வல்லவன்பட்டிணம்
5..சோமநாதம்பட்டிணம்
6.அதிராம் பட்டிணம்
இராமநாதபுரம் மாவட்டம்
7.தீர்த்தாண்டதானம்
8.ஓரியூர்
9.பெருவாக்கோட்டை
10.அடுத்தக்குடி

நீர்பூசி வெள்ளாளர்களும் – திருநீற்று வெள்ளாளர்களும் ஒன்று தான் என பேசப்படுகிறது, ஆனால் ஆய்வுக்கூரியது, நீர்ப்பூசி வெள்ளாளர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிப்புரம் மாவட்டங்களில் வாழ்வதாக தகவல்!!!
திருநீற்று வெள்ளாளர்கள் சுத்த சைவ உணவையே உண்கின்றனர், சமய தீட்ஷை போன்ற சைவ சமய தீட்ஷைகளை பெறுகின்றனர், இவர்கள் கோத்திரம் என்பதை கிளை என்ற முறையில் பயன்படுத்தி வருகின்றனர் தற்பொழுதும்!!! கிளை பார்த்து தான் திருமணம் புரிகின்றனர்!! பங்காளி கிளைகளுக்குள் திருமணம் புரிவதில்லை,
திருநீற்று வெள்ளாளர்கள் பயன்படுத்தும் தாலியின் பெயர் : பாப்பாரத்தாலி ஆகும்!!!
அந்த பாப்பாரத்தாலியின் புகைப்படம் கீழே :

நமக்கு தகவல் தெரிந்து திருநீற்று வெள்ளாளர்களில் தற்பொழுது 8 கிளைகள் நடைமுறையில் உள்ளதாக தகவல், மீதி ஏதேனும் கிளைகள் உள்ளதா என விசாரித்து வருகிறோம்,
கிளையின் உட்பிரிவுகளாக பிதிர்களும் உள்ளதாக பேசப்படுகிறது, ஆனால் அதற்கான தெளிவான பதிலே நமக்கு கிடைக்கவில்லை!!!
கீழே திருநீற்று வெள்ளாளர்களின் கிளைப்பெயர்கள் :
திருநீற்று வெள்ளாளர்களின் கோத்திரங்கள் (கிளைப்பெயர்கள்) :
1.தோட்டாரம் (தொண்டைமான்) கிளை
2.வழிகொண்டான் கிளை
3.வளம்பெத்தான் கிளை
4.வாடாபுரி கிளை
5.நந்தங்கிளை
6.காக்கா கிளை
7.பொறிச்சான்கிளை
8.ஆணைக்காரன் கிளை

இவை தான் தற்போதைக்கு திருநீற்று வெள்ளாளர்கள் குறித்து நமக்கு கிடைத்த அடிப்படை தகவல்கள்!!! மேலும் ஏதேனும் தகவல் பின்னர் கிடைக்கும் போது அவற்றை சேர்த்து இந்த பதிவிலே நாம் பதிவிடுவோம்,
திருநீற்று வெள்ளாளர்கள் குறித்து நமக்கு அடிப்படை தகவல்களை வழங்கிய திருநீற்று வெள்ளாளர் பிரிவை சார்ந்த அண்ணன் திரு.செந்தில் பிள்ளை அவர்களுக்கும், அண்ணன் திரு.சிவபாலன் பிள்ளை அவர்களுக்கும் நமது மற்றும் ஒட்டுமொத்த வெள்ளாளர்கள் சார்பாக நன்றியினை உரித்தாக்குகிறோம்! !!
திருநீற்று வெள்ளாளர்கள் குறித்து ஏதேனும் தகவல்கள் வேறு யாருக்கேனும் கிடைத்தால் தகவல் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்கள்,








Vera level ji💥✨💥