*விடுதலை படத்தில் வரும் கலிபெருமாள் தமிழ்தேசிய போராளியா? வன்னிய சாதிக்காக போராடியவரா?*

வெற்றிமாறன் இயக்கத்தில்,சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உண்மையிலே தமிழ்தேசிய சித்தாந்த கொள்கையை பேசுகிறதா? அல்லது தமிழ் நிலவுடைமை சாதியான வெள்ளாளர்களுக்கு எதிராக வன்னியர் சாதியினர் போராடியதை காட்டுகிறதா? உண்மை என்னவென்று நாம் கடலூர்,அரியலூர் மாவட்ட மக்களிடம் பேசிய போது
அரியலூர்,கடலூர் மாவட்டங்களில் வெள்ளாளர்கள் நிலவுடைமையாளராக, பண்ணையாராக, நிலச்சுவன்தாராக இருந்துள்ளனர்!
அங்கே விவசாய கூலிகளாக வன்னியர்களும்,பறையர்களும் இருந்துள்ளனர்!
அங்கே கூலி உயர்வு கேட்டு போராடுகின்றனர் வன்னியர்களும்,பறையர்களும்!
கூலி உயர்வை தாண்டி ஒரு படி மேலே போயி வெள்ளாளர் நிலவுடைமையாளர்களின் நிலங்களை எங்களுக்கு விட்டுவிடுங்கள் என்ற தமிழர் விடுதலை படை கலியப்பெருமாள்,Engineer ரமேஷ் போன்றோர் வெள்ளாள ஆண்டைகளுக்கு எதிராக ஆயுதம் தரித்து போராட துணிகின்றனர்!
இன்றைய அரியலூர்,கடலூர் மாவட்டங்களில் வரும் சிதம்பரம்,பொன்பரப்பி, சிந்துறை சுற்றுவட்டாரங்கள்,
தாமரைப்பூண்டி,மனக்குடையான்,சோழன்பட்டி, கொடுக்கூர் கிராமம் என வெள்ளாள ஆண்டைகள் வசம் இருந்த நிலங்களை வன்னியரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடும் வன்னியர்களை கையில் எடுத்து கொண்டு தமிழர் மக்கள் படை என்ற பெயரில் கம்யூனிசம் சித்தாந்தம் பெயரில் தமிழர்களான வெள்ளாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திவர்கள் தான் இந்த விடுதலை பட கலியபெருமாள்,Engineer ரமேஷ் போன்ற குரூப்!
ஆக அடிப்படை அரியலூர்,கடலூர் மாவட்ட மக்களிடம் விசாரித்ததில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள விடுதலை படம் தமிழ்தேசிய சித்தாந்தத்திற்கு ஆதரவான படம் இல்லையா? என்ற சந்தேகமும் தமிழர்களான வெள்ளாளர்களுக்கு எதிராக தமிழர்களான வன்னியர்கள் எடுத்த ஆயுதம் போராட்டம் தான் விடுதலை திரைப்படம் என்ற உண்மையும் தெரியவருகிறது!

விடுதலை போராட்டத்தை கொண்டாடும் தமிழ்தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள தற்கால வெள்ளாள இளைஞர்களூக்கு இந்த படத்தின் உண்மையான விஷயம் பற்றி தெரியவேயில்லை! ஆனால் வன்னியர், பறையர் இளைஞர்களுக்கு விடுதலை படத்தின் உண்மையான சம்பவங்கள் நன்றாக தெரிந்துள்ளது!
வெள்ளாளர் சமூகம் அரசியலில் மக்கு சமூகமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது! ஆனால் மீண்டும் வெள்ளாளர் இளைஞர்கள் தங்கள் முன்னோர்களுக்கு நடந்த கொடுமைகளை தற்பொழுது தேடிப்படிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்! இன்னும் எத்தனை படங்கள் வெள்ளாளர்களுக்கு எதிராக எடுப்பீர்கள்? வெள்ளாளர்களை ஏன் வில்லனாக சித்தரிக்க மற்ற சாதியினர் முயல்கின்றனர் என புலம்பவும் ஆரம்பித்துள்ளனர்!
விடுதலை 2 படத்தில் வெளிப்படையாகவே வெள்ளாளர் – வன்னியர் வர்க்க சண்டையை வெற்றிமாறன் பேச போவதாகவும் தகவல்! பொறுத்துயிருந்து பார்ப்போம்!

விடுதலை படத்தின் உண்மை கதையறிய அரியலூர்,கடலூர்,திருச்சி மாவட்ட 60 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் கேட்டால் தெரியும்!
கட்டுரையாளர்
ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை
*9629908758*







