பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்*

படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது!

படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார் வாழ்க கோஷம் விண்ணை முட்டுகிறது!

முதல்வரே பார்த்து பயம் கொள்ளும் துணை முதல்வர் நாஞ்சில் குணசேகரன்,அவருக்கும் முதல்வர் ஆசை உள்ளது!

தீடிரென முதல்வர் காணாமல் போகிறார்,சந்தேகம் நாஞ்சில் குணசேகரன் மீது திரும்புகிறது,

முதல்வர் காணாமல் போன வழக்கை சிபிஐ விசாரிக்கிறது மத்திய அரசின் தலைமையில்,

இடைக்கால முதல்வராக ஒருவர் அமர்த்தப்படுகிறார், இடைக்கால முதல்வர் பேசும்பொழுதெல்லாம் AGR வாழ்க கோஷம் போடுகிறார்,யார் MLA ஆகனும்,யார் MP ஆகனும்,யார் அமைச்சர் ஆகனும் என்பதை முடிவு செய்வதே இந்த AGR தான்,யார் இந்த AGR என அனைவரும் எதிர்பார்க்க அவர் தான் சிம்பு!

தீடிரென கன்னியாகுமாரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இறந்து போக கன்னியாகுமாரி MP தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது!

வேட்பாளர் தேர்வின் போது துணை முதல்வர் நாஞ்சில் குணசேகரனை கலந்து ஆலோசிக்காமல் ஆளும் கட்சியின் இடைக்கால முதல்வர் தனது கட்சியின் கன்னியாகுமாரி MP தொகுதியின் வேட்பாளரை அறிவிக்கிறார்,இதனால் கோவம் அடைந்த நாஞ்சில் குணசேகரன் இடைக்கால முதல்வர் மீது பாய்கிறார்,இடைக்கால முதல்வர் AGR சொல்லி தான் வேட்பாளர் அறிவித்தோம் என்கிறார்,

உடனே நாஞ்சில் குணசேகரனுக்கு கோவம் பொத்து கொண்டு வருகிறது,யார் இந்த AGR ரவுடி பய,கனிமவள கொள்கையில் ஈடுபடும் ரவுடி என பொறிந்து தள்ளிவிட்டு ஆளுங்கட்சிக்கு எதிராக நான் வேட்பாளரை நிறுத்துகிறேன் என சவால் விடும் நாஞ்சில் குணசேகரன் ரூபி பெர்ணாடஸ் என்பவரை தேர்வு செய்கிறார்!

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது,AGR ஆக வரும் சிம்புவை கொலை செய்ய ஆள் அனுப்புகிறார் நாஞ்சிலார்! கௌதம் கார்த்திக் துணையோடு தப்பிகிறார் AGR சிம்பு! கொலை முயற்சி செய்ய சொன்னது நாஞ்சிலார் என AGR சிம்புவுக்கு தெரிய வர நாஞ்சிலாரை கடத்தி சிம்புவும் நாஞ்சிலாரும் பேசி கொள்கிறனர்!

நாஞ்சிலார் : நான் மன்னர் பரம்பரை,ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முற்படுவேன்!

AGR சிம்பு: நாங்க மன்னர் பரம்பரையே அழித்த பரம்பரை! முடிந்தால் என்னை வெற்றி கொள்!

இந்த வசனத்தை Note பண்ணிக்கோங்க!

இடைவெளிக்கு முன் வில்லனாக வரும் AGR,இடைவெளிக்கு பின் ஹீரோ ஆகிறார்!

முழு படத்தையும் நான் சொல்ல விரும்பல்ல! படம் பேசும் சாதி அரசியலை கூறுகிறேன்!

இந்த படத்தில் வரும் நாஞ்சிலார் குணசேகரன் கதாபாத்திரத்தை இயக்குநர் நாஞ்சில் வெள்ளாளராக மறைமுகமாக காண்பித்துள்ளார்! நாஞ்சில் நாட்டு மன்னர்கள் தான் இந்த நாஞ்சில் வெள்ளாளர்கள்! நாஞ்சில் நாடு என்பது கன்னியாகுமாரி மாவட்டத்தை குறிப்பது! தனது பெயரோடு நாஞ்சில் என சேர்த்து கொள்பவர்களை உற்று நோக்குங்கள், அவர்கள் வெள்ளாளராக தான் இருப்பார்கள்!

AGR சிம்பு கதாபாத்திரம் நாடார்! வெள்ளாளர்களை எல்லாவிதத்திலும் ஓரங்கட்டி மன்னர் பரம்பரையே அழித்த பரம்பரையாக நாடார்கள்!

நாஞ்சிலார் நிறுத்தும் MP வேட்பாளர் ரூபி பெர்ணான்டஸ் ஒரு பரதவர் சாதி மீனவர்! AGR சிம்புவால் பாதிக்கப்பட்டவர்!

AGR சிம்பு நாஞ்சிலாரின் கட்சி பதவியை பிடிங்கி, துணை முதல்வர் பதவியை பறிக்கிறார்!

கிளைமாக்ஸில் ஒரு பெரும் படையோடு நாஞ்சிலார் AGR சிம்புவின் வீட்டை முற்றுகையிடுகிறார்,அந்த இடத்தில் AGR சிம்பு குதிரையில் ஏறும் போது தான் பரபரப்பான இசை! காரணம் அந்த காலத்தில் குதிரை ஏற்றம் என்பது மேல்சாதிகளுக்கானது!

சார்பட்டா பரம்பரை படத்தில் கூட பா.ரஞ்சித் பறையர் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யாவை பாக்சிங் போட்டிக்கு போட்டோ சூட் நடத்தும் சீன் வரும் போது ஸ்டூடீயோவுக்கு வரும் ஆர்யாவை குதிரை மேல் அழைத்து வருவது போல் சீன் வைத்திருப்பார், அந்த சீனில் ஒருவர் ஆர்யாவை பார்த்து கேட்பார் குதிரையில் வரும் அளவுக்கு பெரியாள் ஆகிட்டீங்களா நீங்க என! அந்த சீன் பாருங்கள்!

வெந்து தணிந்தது காடு படத்தில் ரவுடியாக, Gangster ஆக சிம்பு, அந்த படமும் நாடார்கள் பணத்திற்காக மும்பைக்கு சென்று ரவுடியிஷம் செய்வதை காண்பித்துயிருக்கும்!

பத்து தல படமும் பணத்திற்கு நாடார்கள் கனிமவளக்கொள்ளையில் ஈடுபடுவதாக காண்பித்துயிருப்பார்கள்!

உங்க தாத்தா பாட்டியிடம் கேட்டால் தெரியும் ஊருக்குள்ள வாழ்ந்து கெட்ட சாதி எது என்றால் இந்த பிள்ளைமார்,முதலியாரை தான் சொல்வார்கள்!

தென்மாவட்டங்களில் நாடார்கள் கல்யாணத்தில் 100 பவுண் போட்டு திருமணம் செய்வதை அம்பேத்கார் கோர்டு சூட் போட்டதோடு Compare செய்யலாம்! நாடார்கள் தங்கம் அணிய கூடாது என வெள்ளாள ஆண்டைகள் தடை விதித்துயிருந்தார்கள் 100 வருடம் முன்!

நாடாரான AGR சிம்புவை வீழ்த்த பரதவர் மீனவர் சாதி சங்க தலைவரான ரூபி பெர்ணான்டஸை கையில் எடுக்கிறார் வெள்ளாளரான நாஞ்சிலார்!

ஒரு சீனில் AGR சிம்பு சொல்வார் மண்ணை அறுத்து தோண்டுவதும் என் தாயின் மாரை அறுப்பதும் ஒன்று என! இது நாடார்கள் நடத்திய தோள்சீலை போராட்டத்தை ஞாபகப்படுத்துகிறது!

சிம்புவிற்கு பக்கபலமாக இருக்கும் செல்வின் என்ற கதாபாத்திரம் கராத்தே செல்வின் நாடாரை ஞாபகப்படுத்துகிறது!

மன்னர் பரம்பரை நாஞ்சிலார் வென்றாரா? மன்னர் பரம்பரையையே அழித்த பரம்பரையான AGR சிம்பு வென்றாரா? என்பதே மீதி கதை!


வெள்ளாளர் எனப்படும் பிள்ளைமார் முதலியார்கள் அரசியலிலும், அதிகாரத்திலும் வீழ்ந்தது உண்மையே!

அவர்கள் மீண்டும் எழுவார்களா? மாட்டார்களா? என்பதை வெள்ளாளர்களும் காலமும் தான் முடிவு செய்யனும்!

வெள்ளாளர் – நாடார் – மீனவர் என உண்மையிலே தென்மாவட்டங்களில் நடக்கும் சாதிய மோதல்களை மறைமுகமாக காண்பித்துள்ளது

பத்து தல படம்

கட்டுரையாளர் : 

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 

9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *