*’ஜாதி’* என்றாலே *தகாத வார்த்தையாக, பொது இடத்தில் உச்சரிக்கக்கூடாத வார்த்தையாக* பலரும் எண்ணும் வகையில் *எதிர்மறையான பிரச்சாரங்கள்* நடந்து வருகிறது.
ஜாதி என்றாலே *தீண்டாமை, ஏற்றத் தாழ்வு, ஆதிக்க வெறி, ஒடுக்கும் யுக்தி, ஆணாதிக்கம்* என்பதாக *பொய்ப் பரப்புகள்* நடைபெற்று வருகிறது.

ஜாதி மீதான இவ்வகை எதிர்மறை விமர்சனங்களை பிறிதொரு பதிவில் பார்ப்போம்.
உண்மையில் ஜாதி என்றால் என்ன? ஜாதியின் பயன்பாடு என்ன? அதன் பலன் தான் என்ன?
ஜாதி என்பது தனது *தொன்மையான இரத்த உறவுகளுக்குள் திருமண உறவுகள் வைத்துக் கொள்ளும், சொத்துக்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும், ஒரு தொழிலில் அதற்குண்டான ஒழுக்கங்களை உருவாக்கி அதில் பங்குதாரர்களாக விளங்கும்* ஒரு அமைப்பாகும்.
ஒரு சமுதாயம் உயர்ந்த நாகரிகத்தை எய்த முதற்படி *குடும்பக் கட்டமைப்பே* ஆகும். ஒரு குடும்பம் நிலையாக உறவுகளை மேம்படுத்தி வாழ அதிமுக்கியமானது *ஒரே தொழிலில் ஈடுபடுவதாகும்*. அப்படி ஈடுபடும்போது தான் ஒரு இடத்தில் தங்கி குடி பெருகி குலம் தழைக்கிறது. தொடர்ந்து ஒரே இடத்தில் வாழும் போது தான் *நிலைத்த நீடித்த நடுக்கமில்லாத பண்பாட்டுச் சூழல்* உருவாகிறது. நாடோடி வாழ்க்கையில் அத்தகைய நாகரிகம் உண்டாவதில்லை.

ஒரு *பரந்து விரிந்து கிளைத்த கூட்டுக் குடும்ப அமைப்பே ஜாதி* எனலாம். *அன்னிய இரத்தக் கலப்பை தவிர்த்தல், நிரந்தர தொழில் உத்திரவாதம், தலைமுறை கடந்தும் தாம் பெற்ற தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவத்தை கடத்தும் ஒரு அமைப்பாகும்*. அதனால் தான் ஜாதிகளை பிறப்பின் அடிப்படையில் வைத்து, தமக்குரிய குலத் தொழிலையே காலங்காலமாக செய்து வந்தனர்.
உலகமே பாரதத்தை கண்டு வியக்கும் *வேதம், ஆன்மிகம், தத்துவம், கணிதம், மருத்துவம், யோகம், வானியல், இலக்கணம், இலக்கியம், இசை, நாட்டியம், சிற்பம், கட்டிடக் கலை, உழவு, வணிகம்* என அனைத்தும் பரம்பரை பரம்பரையாக சேமித்த அறிவின் வெளிப்பாடாகும். இவற்றில் ஒவ்வொன்றையும் ஜாதிகள் தான் தலைமுறை தலைமுறைகளாக கடத்தி வருகின்றன.
இன்று *ஜாதிக் கட்டமைப்புகள் உடைந்த காரணத்தினால்* அளப்பரிய பெருமைமிகு பாரம்பரியக் கலைகளும் அதைத் தாங்கி வந்த ஜாதிகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது!
இந்த நிலை ஏன்?
ஜாதிகள் என்பவை *வர்ணாஸ்ரம கோட்பாட்டின்* படி தொழில்வாரியாக *குறிப்பிட்ட தொழிலிற்கு குறிப்பிட்ட குணம் உடைய மக்கள் தேவை* எனும் கருத்தின்படி அத்தகைய குணாதிசயங்கள் உள்ளவாறு *இன உற்பத்தி செய்து, அவர்களுக்கு தகுந்த வாழ்வியல் சூழலும் உணவுமுறையும் வாழ்க்கை முறையும் கொடுத்து உருவாக்கப்பட்டவை.*
இன்று *ஜாதிக் கலப்புகள் அத்தகை குணாதிசயங்களை வாழ்க்கை முறைகளை மரபியல் கூறுகளை அழித்து வருகின்றன.*
முக்கிய காரணம் – *குருகுல, திண்ணைப் பள்ளிக் கூடங்களுக்கு* மாற்றாக ஆங்கிலேய *மெக்காலேவால் புகுத்தப்பட்ட அன்னிய கல்வி முறை* ஆகும்.

*ஒரு தலைமுறை செய்த தொழிலை அடுத்த தலைமுறை செய்வதில்லை.*
*ஒரு தலைமுறை வாழ்ந்த இடத்தில் அடுத்த தலைமுறை வாழ்வதில்லை.*
கூடி வாழும் *கூட்டுக் குடும்ப, ஊர் அமைப்புகளை* மறந்து வருகிறோம்.
மரபார்ந்த அறிவை பரம்பரைகளாகக் கடத்திய *குலக் கட்டமைப்பு(ஜாதி) மறக்கப்படுகிறது.* அனைத்து ஜாதிகளும் கட்டுப்பாடுகளை விடுத்து கலந்து கொள்கிறோம்.
ஜாதிக்குள்ளேயே *நிலையில்லாத தொழில்கள், சமனிலை அற்ற வருமானம், கட்டுப்பாடு இல்லாத குடும்பம், கலையிழந்த ஊர்கள், சிதறிச் செல்லும் உறவுகள்* நாடோடிகளாய் நம்மை ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு ஜாதியின் பண்பாட்டுக் கூறுகளைத் தாங்கி வரும் *திருமணம், வளைகாப்பு, பிறப்பு, காதுகுத்து, பூப்படைதல், இறப்பு, கருமாதி என நல்லதும் கெட்டதுமான எத்தனை சடங்குகளை* நாம் மறந்து வருகிறோம். இவை *வெறும் சடங்குகள் அல்ல! உறவுகளை உறுதிபடுத்தி, ஜாதி ஒழுக்கத்தை நடைமுறைப் படுத்தி, சமுதாயத்தை பிணைக்கும்* வழிமுறைகள் ஆகும்.
இன்று ஒரே சாதியினர் தமக்குச் *சம்பந்தமில்லாதா பல தொழில்களில் ஈடுபடுகின்றனர்.*
அப்பா ஒரு தொழில் அம்மா ஒரு தொழில் மகன் ஒரு தொழில் மகள் ஒரு தொழில்.
திருமண வரன் தேடையில் மாப்பிள்ளை ஒரு தொழில் மருமகள் ஒரு தொழில்.
இதனால் உண்டாகும் *பொருளாதார வேறுபாடுகள், தொழில் கஷ்ட நஷ்டங்களை உணர முடியாத, பகிர முடியாத சூழல்.*
தொழில் நிமித்தம் தம் *பூர்விகத்தை விட்டு வெளியேறும்* மக்கள்.
வாழ்க்கைத் தரத்தை *பொருள் தேடும் பயணமாக* மாற்றிக் கொண்டது.
நல்லது கெட்டதில் *பிள்ளைகள் இல்லை*; கேட்டால் கல்வி முக்கியம்.
*உறவுகளே பாதி வருவதில்லை* கேட்டால் வேலை முக்கியம்.
*வெளியூர் வெளிநாடு செல்வது தோஷமாய் இருந்ததை யோகம் என்று சொல்லும்* இழிநிலை.
*ஊரில் தம் உறவுகளான ஜாதியினர் இல்லை.* தட்டிக்கேட்போர் யாரும் இல்லை.
*ஜாதிவிட்டு ஜாதி காதல், திருமணம், கலப்பு* ஏற்படுகிறது. கட்டுப்பாடுகள் உடைகிறது. *அன்னியர்கள் புகுந்து கூறுபோட்டு வருகிறார்கள்*. கேட்க யாரும் இல்லை!
இத்தகைய சூழலில் இருந்து எப்படி நாம் மீள்வது?
– உங்கள் *குலத்தொழிலை இழிவாக நினைக்காதீர்கள்.* அதற்கான தேவை உலகம் அழியும் வரையும் இருக்கும். அதனை மேம்படுத்த வழி தேடுங்கள். அதனை *மதிக்கத்தக்க வகையில் மாற்றும் வழிமுறைகளை* யே அரசாங்கத்திடமும் வேண்டுங்கள்.

– உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் *குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள்*. 25-30 வரையும் வேலை தேடி என்ன தொழில் செய்வது என்கிற தேடலில் *திறனற்று செல்லும் தலைமுறைகள் இனி ஒழியட்டும்.*
– இப்போது செய்யும் தொழிலும் வாழும் இடமும் *தற்காலிக ஏற்பாடாக இருக்கட்டும்.* குலத்தொழிலை நோக்கிச் செல்வதை, சொந்த ஊருக்குச் செல்வதை குறிக்கோளாக வையுங்கள். இதில் உடன்பாடில்லை என்றால் நீங்கள் *ஜாதி ஜாதி என்று பீற்றிக் கொள்வது வீண்.*

– *நவீன கல்வி முறை* என்பது உங்கள் பிள்ளைகளை *உங்கள் தொழிலை விட்டு வெளியேற்றி குடும்பத்தை விட்டு ஊரைவிட்டு வெளியேற்றுவதற்காக* வடிவமைக்கப்பட்டவை. *மொழிப்பாடமும், கணக்கும்* வாழ்க்கைக்குப் போதுமானது. மீதியை பிள்ளை *உங்களிடம் கற்றுக் கொள்வார்கள்!*
– *நிரந்தர வாழ்விடத்தை* உருவாக்கி அதில் உங்கள் *உறவுகளுடன் சேர்ந்து வாழுங்கள்*. தொழிலில் *போட்டி பொறாமைகளைத் தாண்டி* ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாய் இருங்கள். *சொந்த ஊரை நோக்கிச் செல்லுங்கள். சொந்த ஊரில் பிழைக்க முடியாவிட்டால் காலம் தோறும் நமது சந்ததி நாடோடிகள் தான்.* பண்பாடு என்பது சீர்குழைந்து எட்டாக் கனி ஆகி விடும்.
– *உறவுகளுக்குள் சுக துக்க நிகழ்வுகளில்* கட்டாயமாக குடும்பத்தார் அனைவருடனும் கலந்து கொள்ளுங்கள்.
– *பருவ வயதில் பிள்ளைகளுக்கு உறவுகளில் திருமணம் செய்து வைத்து* குடித்தனம் அமைத்துக் கொடுங்கள். ஒழுக்கக் கேடுகள் தவிர்க்கப்படும். *இளமையில் மகப்பேறு ஆரோக்கியமானது.*
– இளம் வயது திருமணங்களால் 80களைத் தொடும்போது பேரன் பேத்திகளை பார்த்து விடலாம். நமது *பக்குவமும் அனுபவமும் அவர்களுக்கு வரமாகும்.*

–*குல கோத்திரம் பார்த்து சொந்த ஜாதியில் இரத்த உறவுகளுக்குள் நெருங்கிய சொந்தத்துக்குள்* திருமணம் செய்யுங்கள். *உறவில் மணம் புரிந்தால் நோய்கள் வரும் என்பது அப்பட்டமான பொய்.* ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் வழக்கத்தை கேலிக்குரியதாக்கும் செயல் இது.
*நோய் என்பது ஆரோக்கியம் இல்லாத எந்த வம்சத்திலும் பரம்பரையாக வரலாம். நெருங்கிய சொந்தத்தில் தான் வரும் என்பது கிடையாது.* மேலும் அவரவர் கர்ம வினையைப் பொறுத்தது!
– *கலப்புத் மணங்களை அங்கீகரிக்காதீர்கள்.* ஒதுங்கி இருங்கள். ஒதுக்கி வையுங்கள். ஜாதிக் கலப்பால் *மரபியல் கூறு கெடும், குணம் கெடும், பழக்க வழக்கங்கள் மாறும், கருத்து வேறுபாடுகளும் உரிமைச் சிக்கல்களும் சண்டைகளும் இரு ஜாதியினருக்குள் உண்டாகும்.*
– *சினிமா, தொலைக்காட்சி, சீரியல், காம/காதல் ரசம் மிகுந்த பாடல்களை, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வீடுகளில் பார்ப்பதை கேட்பதை தவிருங்கள்.* அடுத்த தலைமுறையை சீரழிப்பதே இந்த ஊடகங்கள் தான்.
– *பக்தியும், இறைத் தொண்டும், ஆன்மிகத் தேடலும் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளுங்கள்.* நல்ல சிந்தனைகளும், அறங்களும், ஒழுக்கமும் குடும்பத்தை நல்ல நிலைக்கு ஏற்றிவிடும் வழிகள். *குல தெய்வ வழிபாட்டை கெட்டியாகப் பிடித்து வழிபட்டு வருவது குலத்தைக் காக்கும்!*
– *நவீன சுகபோக தொழில்நுட்பங்களை தவிருங்கள்.* சுற்றுச் சூழல் பாதிப்புகளை மட்டுமல்ல நாம் செய்து வரும் அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தும் விதமாக *தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது அறிவியல் வளர்ந்துவிட்டது!* என்கிற வரட்டு வாதங்களை விடுங்கள். *பாரம்பரிய முறைகளுக்கு முடிந்த அளவில் சிறிது சிறிதாக மாறுங்கள்.*
– *சொந்தங்களுக்குள் ஜாதிக்குள் நெருங்கிய நட்பு வட்டாரத்தை உருவாக்குங்கள்*. ஜாதி கடந்த நட்புகளும் வேண்டும். ஆனால் வெளியாட்கள் உடனான அதிகப்படியான தோழமை குணக் கேட்டுக்கு இட்டுச்செல்லும்.
– *தான் மட்டும் வாழ்ந்தால் போதும், தான் மட்டுமே பொருள் சேர்த்தால் போதும், தன் சாதிக்காரன் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்* என்கிற மெக்காலே கல்வி முறையில் உருவான *நவீன சாதிக் கொள்கையை விட்டுவிடுங்கள்.*
– *நம்மை சார்ந்தும், நமக்கு உதவிகரமாயும், நம்முடன் ஒத்தும் வாழ்கின்றன பிற தொழில் செய்யும் வேற்று சாதியினரையும்* மதித்து ஒற்றுமையுடம் உதவி செய்து அனுசரித்து *ஊராக வாழுங்கள்.*
– ஊர்த் திருவிழா, பிரச்சனைகள், மேம்பாடுகள், கட்டுப்பாடுகளை சம்பந்தமுடைய *அனைத்து ஜாதியினரும் சேர்ந்து ஆலோசித்து* முடிவெடுங்கள்.
– *ஒரு இடத்தில் நிலைத்து நீடித்து நடுக்கமின்றி வாழ்வது தான் நாகரிகம்.* இனி வரப்போகும் *ஏழேழு தலைமுறைக்கும் இந்த ஊர் தான் எனது வம்சம் வாழப் போகும் இடம்* என்பதை மறவாதீர்கள். அதனைக் காக்க முழுமுயற்சி எடுங்கள்.
– *இனி யார் இங்கு வாழப்போகிறார்கள் என்கிற அக்கறையில்லாத்தனத்தால் தான்கேட்பாரின்றி இன்று அன்னியர்கள் நமது வளங்களை சுரண்ட தோதாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
– *பொன்னையும் பொருளையும் பணத்தையும்* வைத்து உங்கள் உறவினரின் தரத்தை மதிப்பிடாதீர்கள். சேர்த்து வைத்துள்ள கைகளை பார்த்து அல்ல. *பிறருக்கு கொடுக்கும் கைகளை* போற்றுங்கள்.
– ஒருவரின் தராதரத்தை அவரது *குல ஒழுக்கம், தர்ம சிந்தனை, வாக்கு, செயல்களில்* கண்டு மதிப்பிடுங்கள்.
ஜாதி என்பது –
*பிறப்பினால்* வருவது.
*தொழிலினால்* நடப்பது.
*குல ஒழுக்கத்தை* முன்னிறுத்துவது.
திருமண வரன் தேடும்போது மட்டும் *மேட்ரிமோனியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆப்ஷன் அல்ல!*

இட ஒதுக்கீட்டில் கல்லூரி, வேலை வாய்ப்புகளில் *சீட் பெருகிற வழிமுறை அல்ல!*
தேர்தலில் போட்டியிடும் உங்கள் சாதியினருக்கு நீங்கள் போடும் *ஓட்டை நிர்ணயிக்கிற தகுதி அல்ல!*
என்றிலிருந்து நாம் *ஆசைகளின் பால் அகப்பட்டு வாழ்க்கை நோக்கமான அறச் சிந்தனைகளை ஆன்மிகப் பாதையை விட்டு* விலகிச் சென்று *பணத்தைத் தேடி* அலைய ஆரம்பித்தோமோ அன்றே நம் *வாழ்க்கை முறை மாறியது, கல்வி மாறியது, தொழில் மாறியது, பாரம்பரியம் மறந்தது, ஜாதி மறந்தது, வரலாறு மறந்தது, தர்மம் மறந்தது, ஒழுக்கம் மறந்தது, அரோக்கியம் மறந்தது, ஆண்மை மறந்தது*. பணம் எனும் தூண்டிலில் சிக்கி இறை ஆனோம். *பணம் என்பது அடிமை சாசனம்!*
மகாபாரதப் போரில் கிருஷ்ணனை நோக்கி, *”போர்க்களத்தில் எனது ஜாதியினரைத் நானே கொல்லும் நிலை ஏற்பட்டுள்ளதே கண்ணா. நான் போரிட மாட்டேன்!”* என்கிறான் அர்ஜுனன்.
*”அர்ஜுனா! உனது ஜாதி தர்மமானது போர். அதை மேற்கொள்வதே உனது கடமை. உனது முன்னோர்கள் கைவிடாமல் இதுகாறும் போற்றி வந்த அறத்தை கைகொள். அதுவே உன்னை மோக்ஷத்திற்கு இட்டுச் செல்லும். கடமையை சரிவர செய்! பலனை எதிர்பார்க்காதே!”* என்கிறான் கிருஷ்ணன்.

*முன்னோர் மேற்கொண்டு வந்த ஜாதி வழக்கங்களை கைவிடலாகாது.* ஆசா பாசங்களைத் தாண்டி அதனை தொடர்ந்து செய்து வருவதே சமுதாயம் அரோக்கியமாக நிலைத்து வாழ வழி வகுப்பது என்று *கீதை தனது சாராம்சங்களில் ஒன்றாகக் கூறுகிறது.*
*நாம் இன்ன ஜாதியில் பிறக்கிறோம் என்பது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவம்-புண்ணியம் ஆகிய கர்ம வினைகளால் ஏற்படுவது.* அதனை விதிவழியே அனுபவித்து மோட்சத்தை அடைய *நாம் பிறந்த ஜாதியின் மேன்மையான கடமைகளைச் செய்து வருவதே கர்ம யோகம்.*
*ஜாதிகள் நல்லதடி பாப்பா!*

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ
website
mp3songs,videos: https://www.vocayya.com/
FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/
TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews
Email – tnvocnews@gmail.com
* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************
எழுத்தாளர்
காளிமுத்துக் கவுண்டர்








இந்த காலகட்டத்திற்கு தேவையான அவசியமான பதிவு… நன்றி…
இது தேவையற்ற எண்ணம்