வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2

*வேளாளர் புராணச் சுருக்கம்:*

ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.

 

சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும் துன்பமுற்றனர்.

 



அப்போது அனைவரும் மகாதேவரான சிவ பெருமானிடம் சென்று உலக உயிர்களின் பசிப்பிணி நீக்குமாறு வேண்டினர். உயிர்களின் வேதனையை உணர்ந்த ஈசன் ஓரக் கண்ணால் தன் உள்ளக்கிடக்கையை *திருமாலிடம்* வெளிப்படுத்தினார். உடனே *காக்கும் கடவுளான* திருமாலான விஷ்ணு சிவ பெருமானின் ஆணையை ஏற்று *தனது அம்சத்தில்* ஒரு ஆண்மகவை பூமியில் *கங்கைக் கரையில்* தோன்றுமாறு செய்தார்.

அதே நேரம், *தேவ தச்சனாக விளங்கிய விஸ்வகர்மா* தனது வம்சத்தினரே உலகை ஆள வேண்டும் என்று விரும்பியதால் சிவ பெருமானிடம் வரம் வேண்டி தவம் இருந்தார். அவர் முன் தோன்றிய ஈசுவரன் அவர் வேண்டியதற்கிணங்க வரம் நல்கும் முன் அவர்களை விடவும் புகழ்மிக்க குலத்தினை தோற்றுவிக்க ஆண் மகன் ஒருவன் கங்கைக் கரையில் தோன்றுவான் என்று தம் சித்தத்தை அறிவுறுத்தினார்.

 

இதைக் கேட்ட விஸ்வகர்மா அந்த ஆண்மகனை அழிக்க ஆயுதம் ஒன்று வேண்ட, சிவ பெருமான் ஒருமுறை மட்டுமே வீசக் கூடிய வாள் ஒன்றை வரமாக அளித்தார்.

 

பேருவகையுடன் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியுடன் பாய்ந்த கங்கை ஆற்றில் பூமி பிழக்க *தங்கமயமான ஏர்க் கலப்பையுடன் ருத்திராட்சம் அணிந்து வெண்ணீறு பூசி சிவாயநம எனும் பஞ்சாட்சரத்தை செபித்துக் கொண்டே திருமாலின் அம்சமாக பெரும் பிரகாசத்துடன் ஆண் மகவு ஒன்று கிரீடத்துடன் தோன்றியது.* தேவர்கள், முனிவர்கள், கந்தவர்கள், கின்னரர்கள், சிவகணங்கள் எல்லாம் பூமாரி பொழிந்தனர்.





தலைசிறந்த மரபின் முதல்வனாக ஆள வந்ததால் *’மரபாளன்’* என்றும், கங்கையிலே பிறந்ததால் *’காங்கேயன்’* என்றும் *’கங்கை குலத்தவர்’* என்றும், பூமி தேவி பெற்றெடுத்ததால் *’பூதேவி புத்திரன்’* என்றும் பெயர் பெற்றார்.

 

உடனே அதுகண்டு வெகுண்டு எழுந்த விஸ்வகர்மா பெரும் வேகத்துடன் தான் வரமாகப் பெற்ற வாளை வீசினார். வாள் கிரீடத்தில் பட்டு கிரீடம் மட்டும் கீழே விழுந்தது. மரபாளன் தலை தப்பியது. அதனால் மரபாளரின் மக்கள் முடிசூடுவதில்லை என்றும் ஆனால் *முடி சூட்டும் உரிமை உடையோர்* என விஸ்வகர்மாவுக்கு வாக்கு கொடுத்தார். தன் தவறை உணர்ந்த விஸ்வகர்மா தனது மக்கள் மரபாளரின் மக்களின் ஆணையை ஏற்று வழிவழியாக அவர்களுக்கு *வேண்டிய கருவிகள் செய்து கொடுப்பார்கள்* என வாக்கு கொடுத்தார்.

 

ஈசுவரனின் ஆணையினால் *போதாயன முனிவர்* கங்கைக் கரைக்கு வந்து மரபாளனை தேவ லோகத்திற்கு அழைத்துச் சென்று அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார். பின் *தேவேந்திரனின் மகளையும் குபேரனின் மகளையும் அவருக்கும் மணம் முடித்து வைக்கின்றனர்.* இவர்களின் வழியில் *48,000 வேளாள குடிகள்*  தோன்றி பாரெங்கும் உழவு செழிக்க வைக்கின்றனர். *’நற்குடி நாற்பத்தெண்ணாயிரவர்’*, *’நாற்பத்தெண்ணாயிர கோத்திரவர்’* எனப் பெயர் பெற்றனர் வேளாளர்.

*உழவு, பசு காத்தல், வணிகம்* என்னும் மூன்று வைசியத் தொழிலுக்கும் உரியதால் *முத்தொழிலர்* என்றும் முறையே *பூபாலர், கோபாலர், தனபாலர்* என்னும் பெயர் பெற்று *மேழிக் கொடி, குயில் கொடி, சிங்கக் கொடி* ஆகியவற்றை உரிமையாகப் பெற்றனர்.



 

பாரெங்கும் பரவி தமக்குக் கீழ் உள்ள *18 குடிகளுக்கும்* படியளந்து, நீதி செலுத்தி, நியாயம் புகட்டி தலைமை ஏற்று வாழ்ந்து வரலாயினர்.

 

இவர்கள் காலப்போக்கில் தாம் வாழும் *நாடுகளுக்கு ஏற்பவும் பண்பாட்டு நிலைகளாலும்* வெவ்வேறு பெயர் பெற்றனர். *கொங்க வேளாளர், பால வேளாளர், சோழிய வேளாளர், பாண்டிய வேளாளர், தொண்டை மண்டல வேளாளர், துளுவ வேளாளர், காரைக்காட்டு வேளாளர்(கார்காத்தார்), ஆறுநாட்டு வேளாளர், நாஞ்சில் வேளாளர், சைவ வேளாளர்* என பல வகையினர் ஆயினர்.

 

(ஸ்ரீ கிருஷ்ணரின் அண்ணன் ஆன ஸ்ரீ பால ராமரின் கையில் ஏர்கலப்பை உள்ள படம்)

 

நாடு-நிலம், பழக்க-வழக்கம், பண்பாடு, சீர்முறைகளின்* வேறுபாடுகளால் இவர்கள் பலவகைகளாக பிரிந்திருப்பதால் வேளாளர்களில் ஒரு பிரிவினர் பிற பிரிவினருடன் திருமணம் செய்து கொள்வதில்லை.



 

பெரும்பான்மையானோர் *கவுண்டர், முதலி, பிள்ளை* எனப் புகழ்மிக்க பட்டங்களைப் பெற்று விளங்கினர். ஆங்காங்கே தேவர், செட்டி, உடையார், அரையன் முதலிய பட்டங்களுடனும் விளங்கினர்.

*குறிப்பு:* வேட்டுவ/குறும்ப/படையாச்சி கவுண்டர்கள், செங்குந்த/கைக்கோள முதலியார்கள், இல்லத்துப் பிள்ளைகள், முக்குலத்து கள்ளர்-மறவர்-அகம்படிய தேவர்கள், பார்க்கவ குல உடையார்கள் வேறு. அவர்கள் வேளாளர் அல்ல. பட்டங்களை வைத்துக் குழம்ப வேண்டாம்.

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

website
mp3songs,videos: https://www.vocayya.com/

FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/

TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews

Email – tnvocnews@gmail.com

* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************

எழுத்தாளர் 

காளிமுத்து  வெள்ளாள  கவுண்டர் 

மேலும் தொடர்புகளுக்கு 9629908758

2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *